Jump to content

எங்க ஊர் முதலாளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

எங்க ஊர் முதலாளி

D10_BEADA-_CDBA-4599-_A42_A-9_CD47_AA667 

ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது.

 முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக் கொள்ளும். அந்த விசயத்தில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உடல் உதவி செய்வதில் முதலாளி ஒரு கண்ணன்.

 நகரத்தின் பெரிய கட்டிடமே முதலாளிக்குத்தான் சொந்தம். இலங்கை வங்கி, யாழ் கூட்டுறவு ஸ்தாபனம், குமார் அச்சகம்… என்று பல கடைகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை அந்தக் கட்டிடத்திலேயே முதலாளியும் தன் பங்குக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துடன் சேர்ந்து  வடக்குப் பக்கமாக இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அந்தக் கடைகளை அகற்றி, அதன் நிலத்தை வாங்கி தன் கட்டிடத்துக்கு மேலும் அழகூட்ட முதலாளி விரும்பினார். 

 அந்தக் கடைகளில் ஒன்று யுனைற்ரெட் ஸ்ரோஸ்(புத்தகக் கடை), மற்றது ஜெமினி பன்ஸி பலஸ். இந்த இரண்டு கடைளையும் வல்வெட்டித்துறையைச் சேரந்த அண்ணன் தம்பிகளே நடத்திக் கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையாரோடு நேரடியாக மோத முதலாளிக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியாவது அந்தக் கடைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டார். முதலாளி போட்ட கணக்கு சிக்கலாக இருந்தது. அடிமானங்கள் பல போட்டுப் பார்த்தும் அண்ணனும், தம்பிகளும் அசைந்து கொடுக்கவில்லை. தனது அடியாட்களை விட்டு ‘பீ முட்டி’ அடித்தும் பார்த்தார். பீ முட்டி’ என்றால் சிலருக்கு அது என்ன என்று புருவங்கள் மேலே எழலாம் என்பதால் அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

 அப்பொழுது வாளிக் கக்கூஸ்தான் பரவலாக வீடுகளில் இருந்தன. அப்படியான கக்கூஸ்களில் இருந்து பானை (முட்டி)க்குள் மலங்களை அள்ளி வந்து வேண்டப்படாதவர்கள் வீடுகளுக்கு முன்பாகவோ, கடைகளுக்கு முன்பாகவோ எறிந்து விட்டுப் போவதுதான் ‘பீ முட்டி அடித்தல்’ என்பது.

 பீ முட்டி அடிக்கும் திருவிழா இரண்டு கடைகளுக்கும் முன்னால் ஒவ்வொரு இரவுகளும் நடந்து கொண்டிருந்தன. அண்ணன் தம்பி இருவரும்  சளைக்காமல் கூலிக்கு ஆட்களைப் பிடித்து காலையில் கடை வாசலைத் துப்பரவாக்கி சாம்பிராணி காட்டி தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘போதுமடா சாமி’ என்று ஒதுங்க நினைத்தவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த பிரச்சனை சிறைச்சாலைக்குப் போய் விட்டது.

 முதலாளிக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்தது. அவரின் இந்த தமிழ்ப் பற்றை ஆரம்ப கால போராளிகள் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டார்கள். (சுங்கான்) பத்மநாதன் முதலாளியின் கட்டிடத்துக்கு அருகேதான் றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். அதற்கு அடுத்ததாக இருந்த சிறீமுருகன் மெடிக்கல் ஸ்ரோஸ். அதன் உரிமையாளர், ரெலோ இயக்கத்தின் தலைவர்சிறீசபாரத்தினத்தின் அண்ணன் கந்தசாமி.

 பத்மநாதனும், கந்தசாமியும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தாங்களே கைத்துப்பாக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பொருள் உதவிகள் முதலாளியிடம் இருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் பலமாக இருக்கும் போதே அச்சமில்லாமல் காட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்த போது அன்றைய காலத்தில் ‘மொட்டைக் கடுதாசி’ எழுதிப் போட ஆளில்லாமல் போகுமா? 

 சுங்கான், அவரது கடை ஊழியர் ஒருவர், கந்தசாமி  இவர்களுடன் முதலாளியும் சிஐடி பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர்களாக சிறைச்சாலைக்குப் போனார்கள். அதன்பிறகு புத்தகக் கடைக்கும் பன்ஸிக் கடைக்கும் பீ முட்டி அடிக்கப்படுவது நின்று போனது. 

 செல்வாக்குகளைப் பாவித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர் மாளிகையில் இருந்து முதலாளி வெளியே வந்தார். ‘சிறை சென்று வந்த செம்மல்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே அவருக்கு மாலை போடப் போன அடிவருடிகள், “என்ன முதலாளி இப்பிடி புத்தர் மாதிரி அமைதியாப் போனார் என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

 சிறைக்குப் போய் வந்த பின்னர் எந்தவித அடிதடிகளும் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு பிரபலமான மனிதர்களை தனது கட்டிடத்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டுக்கு வந்த சீர்காழி கோவிந்தராஜனையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரையும்  தன் கட்டிடத்துக்கு கூட்டி வந்து விருந்தளித்தார். இவர் அவருக்கு பருகப் பால் கொடுக்க, அவர் இவரைப் பார்த்து, அமுதும் தேனும் எதற்கு? நீங்கள் அருகினிலே இருக்கையிலேயே எனக்கு” என்று கணீர் குரலில் முதலாளியைப் பார்த்துப் பாட, முதலாளி உள்ளம் உருகிப் போய் நின்றார்.

 தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் இருவரது மரண ஊரவலங்களையும் அவர்களது கட்அவுட்டுகளை வைத்து நகரத்தில் வரலாறு காணாத இறுதி ஊர்வலங்களை நடத்தி எல்லோரையும் வியக்க வைத்தார். 

 „அட முதலாளிக்கு வேறு முகமும் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே என்று பலர் பேசிக் கொண்டார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாத ஒன்று முதலாளியின் மனதுக்குள் இருந்தது.  1977ல் நடக்க இருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவது என்பதே முதலாளியின் மனதில் இருந்த ஆசை.

 சிறைக்குப் போய் வந்திருக்கிறார். தமிழ்தலைவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பலருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறார். போதுமான பணமும் மக்களிடத்திலான அறிமுகமும் நிறையவே இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில் தவறு இல்லைத்தான். அவருக்குத்தான் அந்தமுறை போட்டியிட வாய்ப்பு கூட்டணியில் இருப்பதாக நகரில் பேச்சு இருந்தது. “நீங்கள்தான் எங்களது வேட்பாளர் என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் வாக்குக் கொடுத்திருந்தார். இருவரும் நெருக்கமாகவே இருந்ததார்கள்.

 இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழமையான போட்டியாளர் க.துரைரத்தினத்துக்கே போய்ச் சேர்ந்தது. ஐந்து தடவை போட்டியிட்டு நாலு தடவைகள் வென்று பாராளுமன்றம்  போய் வந்து கொண்டிருந்த க.துரைரத்தினத்தின் மேல் முதலாளிக்கு  மட்டுமல்ல, பலருக்கும் அதிருப்தி இருந்தது.  ஆனால் அதைப் பற்றி கூட்டணித் தலமை கண்டு கொள்ளவில்லை.

 அபிமானிகள்  தந்த ஆலோசனையில் ‘உண்மையே வெல்லும்’ என்று சுயேட்சையாக போட்டியிட முதலாளி முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துவிட்டு நகரத்தில் வடக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தி சிலைக்கு மாலை போட்டு அபிமானிகளோடு ஊர்வலமாக வந்தார். அவர் நடத்திய தேர்தல் கூட்டங்களில் மேடைகளில் கதிரைகள் எதுவுமே கிடையாது. எல்லோரும் மேடைகளில் சப்பாணி போட்டே அமர்ந்தார்கள்.முதலாளியின் பேச்சும், செயலும் பலருக்கு பிடித்துப் போனது. 

 தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலாகப் போட்டியிட்டதாலும், இளைஞர்களிடையே அப்பொழுது இருந்த எழுச்சியும், மேடைகளிலே இரத்தப் பொட்டுகளை புன்னகையுடன் அமிர்தலிங்கம் வாங்கிக் கொண்டிருந்ததாலும், தேர்தலின் முடிவு முதலாளிக்கு முரணாகவே போனது. அந்தத் தேர்தலில் முதலாளியால் 13 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

 தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் என்பது தன்னைவிட பெரிய பெரிய முதலைகள் வாழும் இடம் என்பதை முதலாளி புரிந்து கொண்டார். வியாபாரம், ஆன்மீகம் இரண்டும் தனக்குப் போதும் இனி அரசியலில், அடிதடிகளில் எல்லாம் இறங்க முடியாது என்று ஒதுங்கி இருந்தவரை மீண்டும் பிரச்சினை தேடி வந்தது.

 தனது கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞர்கள் கராட்டி பழகுவதற்கென முதலாளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ரட்ணசோதி என்பவரே அந்த கராட்டி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த ரட்ணசோதிதான் பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கராட்டி சொல்லிக் கொடுத்தவர்.“போராளிகளுக்கு முதலாளியின் கட்டிடத்தில் பயிற்சி நடக்கிறது என யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசியை புலனாய்வுத்துறைக்கு எழுதிப் போட, ஒருநாள் கட்டிடத்தைச் சுற்றி  நிறைய அதிரப்படை. 

 அதில் இருந்து ஒருவாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலும் கட்டிடத்தின் தெற்குப் பக்கமாக இருந்த அச்சகத்தால் அவருக்குப் பிரச்சனை வந்தது. அந்த அச்சகத்தின் உரிமையாளரின் தம்பிதான் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார். ஒரு இரவு அதிரடிப்படை இராணுவத்துடன் வந்து அச்சகத்தை தீ வைத்து முற்றாக அழித்து விட்டுப் போயிற்று. இதற்குள் மாணவர் பேரவை  பகலிலேயே  கட்டிடத்தின் மேற்குப் பக்கமாக இருந்த இலங்கை வங்கியை கொள்ளை அடித்து காவலுக்கு நின்ற ரிசேர்வ் பொலிஸை சுட்டுக் காயப் படுத்திவிட்டும் போனது. 

 கட்டிடத்தின் மேலே கராட்டிப் பிரச்சினை, தெற்கே அச்சகப் பிரச்சினை, மேற்கே வங்கிக் கொள்ளை. முதலாளிக்கு ஒன்று விளங்கிவிட்டது அரசியலும், வியாபாரமும் இனிவரும் காலங்களில் தனக்கு சரிப்பட்டு வராது என்று. அரசியலும், வியாபாரமும் காலை வாரிவிட  அடுத்து அவரது கையில் இருந்தது ஆன்மீகம் மட்டுமே. இவ்வளவு பிரச்சினைகளுக்குள் முதலாளி சிக்குண்டு இருக்கையில் அவரது மகன் போராட்டக்குழுவில் போய் சேர்ந்து விட்டான்.

 இந்திய அமைதிப்படை  முற்று முழுதாக நகரத்தை ஆக்கிரமித்து இருந்த பொழுது, சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்களோடு அவர்கள் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தொடர்பில் முதலாளியும் இருந்தார். முதலாளி இந்தியப்படைக்கு, போராளிகளைப் பற்றி தகவல்கள் கொடுக்கிறார் என்று யாரோ புண்ணியவான் கதையைக் கிளப்பிவிட முதலாளியின் நிலை கவலைக்கிடமாகிப் போனது. வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். 

 முதலாளிக்கு வேண்டிய ஒருவர் காலமாகிப் போன பொழுது தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து, அந்த மரண வீட்டுக்குப் போனார். அந்த மரண வீட்டுக்கு அவரது மகன் சைக்கிளில் வந்தான். போராடப் போன மகன் நீண்ட நாட்களுக்குப் பின் தன்னை வந்து சந்தித்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி.

 “அப்பா உங்களோடை கதைக்கோணும். வாங்கோ என்று சைக்கிளில் முதலாளியை ஏறச் சொன்னான்.

 “போட்டு இப்ப வந்திடுறன் என்று முதலாளி சொல்லிப் போட்டு போனதால் உடலத்தை எடுக்காமல் மரணவீட்டில் முதலாளிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.  

 “என்ன போனவரை இன்னும் காணேல்லை என்று காத்திருந்தவர்களுக்கு சற்று நேரத்துக்குப் பின் ஒரு செய்தி வந்தது,

 “முதலாளி செத்துப் போனார்

 ஏற்கெனவே தோண்டியிருந்த கிடங்குக்குள் படுக்கச் சொல்லிவிட்டு, அவரை அவரது மகனே சுட்டான் என்று ஒரு கதையும், மகன் கூட்டிக் கொண்டு போனது மட்டும்தான், முதலாளியைச் சுட்டது  வேறொரு போராளி என்றும் இரண்டு கதைகள் ஊருக்குள் வந்தன.

 முதலாளி முதலாளி என்று மரியாதையாக இந்தப் பத்தியில் நான் எழுதியதால் அவரது பெயரை இங்கே நான்  விழிக்கவில்லை. தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகாவிட்டாலும் தனது பெயருக்கு முன்னால் MP என்ற எழுத்துக்களைக் கொண்ட அவரது பெயர் மு.பொ.வீரவாகு. 

 அவரைப் பார்க்க  விரும்பினால் இங்கே போய்ப் பாருங்கள். 

http://www.uharam.com/2018/01/19.html

 

கவி அருணாசலம்

01.05.2018

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970´களில்  நடந்த உண்மைச்  சம்பவங்களை மறக்காமல், ஒரு கோர்வையாக எழுதியுள்ளீர்கள்.
யாராக இருக்கும்.. என்று மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு,  விடைதேடி... தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த போது  இறுதில்  அவரின் பெயரை பார்த்து....  கேள்விப் பட்ட  பெயராக இருந்தது. கதையின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2018 at 3:36 PM, colomban said:

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Colombian நான் கராட்டி விளையாட்டுப் பக்கம்  போனதேயில்லை.

குட்டிமணிக்கு கராட்டி தெரியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது

ஒருவரை ஒருவர் தாக்கும் போது வாயில் இருந்து  சிலேளைகளில்  உதிரும் வார்த்தைகள் பீமுட்டியைவிட நாத்தமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகு கட்டடம், யுனைரெட் புத்தகசாலை எல்லாம் நன்றாகத் தெரிந்த இடங்கள். ஆனால் வீரவாகுவின் முடிவு இப்படி நடந்தது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்ல பழைய காய் போல ஊர்ல நடந்த அத்தனை கொசிப்புக்களும் தெரிந்திருக்கு. எனக்கு நீங்கள் பெண்ணாக இருப்பியங்களோ என்று ஒரு சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகுவின் கதையை முழுமையாகத்தெரியாது ஆனால் அவருடைய மரணம் டொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதன் உண்மைத்தன்மை தெரியாது, இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்ததிற்காகவே அவர் கொல்லபட்டதாகவும் , இலங்கை இந்திய ஒப்பந்த்தின் பின்னர் புலிகளும் அரச படையினரும் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றநிலையில் பரஸ்பரம் சந்த்தித்துக்கொள்ளும் ஒருநிகழ்வில் சிங்களத்தளபதி கொடுத்த தகவலின் அடிப்படையிலே புலிகளுக்கு தெரியவந்த்தாகவும் அதுவரை அவர் புலிகளின் ஆள் என்றநில்யிலேயே கருதப்பட்டதாகவும் ஒரு கருத்துநிலவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, கந்தப்பு said:

முதலாளியின் மகன் இப்பொழுது எங்கே

ஏதோ ஒரு வெளிநாட்டில் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறுயாராவது கூப்பிட்டால் வீரபாகு வரமாட்டார் என்பதாலேயே மகனை கூட்டிவர சொன்னதாக கதை அடிபட்டது,

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

சேர்மன் நடராஜாவுக்கு இந்த ஆண்டு நூறாண்டு. ஏதும் நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன் மீரா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.