Jump to content

ஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு


Recommended Posts

ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு


 

 

one-minute-story

 

கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. 

கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இவனும் வேண்டாம் என்று ஆள்மாற்றினால், மாதத்தில் பாதி நாட்கள் பேப்பர் போடாமல் தொந்தரவு.

இப்படிப்பல கஷ்டங்களை அனுபவித்துபின் தானே காலையில் கடைக்குச்சென்று பேப்பர் வாங்கத் தீர்மானித்து வாங்கிப்பழகியும் இருந்தார்.

சில வருடங்களாகப் வாங்கி வந்த பேப்பர் கைகளில் கிடைத்தும் சிரமமாகித்தான் போய்விட்டது. ரிடையர் ஆகி வீட்டில்தானே இருக்கிறாய், நாங்கள் ஆபீஸ் போவதற்குள் படித்துவிட்டுத்தருகிறோம் என்று இரண்டு பிள்ளைகள் அடுத்து அவர்கள் மனைவிகள் என்று ரூல்படி பேப்பர் கைமாறி, பத்துமணிக்கு மேல்தான் அவர் கைகளில் கிடைக்கிறது. பேப்பர் பார்க்காமல் உறிஞ்சப்படும் காபி ருசிப்பதே இல்லை.

ஆனால் அவர் பேப்பர் வாங்கப்போகும் போது பக்கத்து வீட்டின் வாசலில் பேப்பர் கிடப்பதைத் தினமும் பார்க்கிறார். திரும்பி வரும்போது தொண்ணூறு வயதான தாத்தா பேப்பர் படித்தபடி வாசலில் இருப்பதையும் தினமும் பார்க்கிறார்.
அவர்கள் வீட்டிலும் ஆபீஸ் போகும் தாத்தாவின் பிள்ளைகள், பேரன்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் காலையில் பேப்பருடன் அமரும் தாத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குத்தான் பேப்பருடன் உள்ளே செல்வார்.
லேசாகப் பொறாமையாகத்தான் இருந்தது.

அந்தக் கிழவரைப்போல் தனக்கும் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்திருந்தால் இப்படி காலையில் பேப்பருக்கு ஏங்கத் தேவை இல்லாதிருந்திருக்கும்.
எப்படி இப்படி அவர்கள் வீட்டில் மட்டும். அவருக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
இன்று போய் கேட்டுவிடுவது என்ற தீர்மானத்தோடு மெதுவாக அவர்கள் வீட்டு கலிங்பெல்லை அழுத்தினார்.

வாசல் வராண்டாவில் எப்போதும் போல் பெரியவர் கைகளில் பேப்பருடன்.
" நமஸ்காரம், பக்கத்துவீட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். தினம் பார்கறோம் பேசமுடிகிறதில்லை. இன்றைக்கு ஞாயிறு எல்லோரும் லிஷேர்லியா இருப்பீங்க..அதான் வந்தேன்." பேச்சு தொடர்ந்தது.கடைசியாகச் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

" உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். என் வீட்டில் நான் ரிடையர் ஆனதாலே எல்லோரும் படித்து முடிச்சு பின் தான் காலை பேப்பர் என் கைக்கு வரும். உங்க வீட்டிலே காலையிலிருந்து மதியம் வரை வாசலில் உள்ள உங்க அப்பா கையிலேயே பேப்பர் பார்க்கிறேன். வாசலில் ஒரு பேப்பர் மட்டும்தான் கிடக்கு...நீங்க யாரும் பேப்பர் படிச்சு பழக்கமில்லையோ...??"
சிரித்துக்கொண்டே பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்.
" அப்பா என்ன படிக்கிறார் என்று பார்த்துவிட்டு வாங்க"
கணேசன் பெரியவர் அருகில் சென்றார்.
" நமஸ்காரம். பேப்பர் படிக்கிறீங்கபோல....என்ன செய்தி.."
அவர் ஹெட்லைன்ஸ் படித்துச்சொன்ன செய்தி ஒரு வாரத்திற்கு முன் வந்த செய்தி.
குழப்பத்தோடு விழித்தார்.
" இங்கே வேண்டாம்...உள்ளே வாங்க..."
மேலும் குழம்பி உள்ளே சென்றார்.
" சார், அப்பாவுக்கு எதுவும் நினைவில் இருக்காது. டிமென்ஷியா. ஆனால் காலையில் முதலில் தான் தான் பேப்பர் படிக்கவேண்டும் என்ற பழக்கம் மட்டும் மறக்கவில்லை. அதனால் கைகளில் கிடைக்கும் ஏதோ ஒரு பேப்பரை கொடுத்துவிடுவோம். அதைப்படிப்பார் ஆனால் எதுவும் நினைவில் இருக்காது. நாங்கள்
எல்லோரும் அபீஸ் போன பின்பு இன்றைய பேப்பரை என் மனைவி கொடுப்பா. அதையும் படிப்பார் இதைத்தான் நான் காலையிலேயே படிச்சுட்டேனே என்று சொல்லிக்கொண்டு....வேற என்ன சார் செய்யறது?"

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பேப்பர் வழக்கல்ல, பே(ய்)ப்பர் வழக்கு,ஏய்ப்பர் வழக்கு......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.