Jump to content

பலியாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பலியாடுகள்

வா. மானிகண்டன்

பொதுவாக இன்றைய தலைமுறையினர் சமநிலையில் இருக்க முடிவதில்லை என்று புலம்புவது வாடிக்கைதான். (Work-Life imbalance) கடந்த வருடம் எனக்கு அப்படியொரு சூழல் உருவானது. வேலை மீது வேலையாகக் குவியும். நம் மீதான அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றும். அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ மின்னஞ்சல் வந்திருக்கும். பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது இது புது வேலையாக இருக்கும். அலுவலகத்துக்குச் சென்றவுடன் 'எப்போ முடிச்சு தருவ?' என்று நாள் குறிக்கச் சொல்வார்கள்.'அது என்னன்னே புரியல' என்று சொன்னால் 'மேனேஜ்மண்ட்டுக்கு கொடுத்தாகணும்' என்பார்கள். இரண்டு வாரம் ஆகும் என்றால் 'எதுக்கு அவ்வளவு நாள்? வெள்ளிக்கிழமைன்னு குறிச்சுக்குறேன்' என்பார்கள். சரியென்று சொன்னாலும் வம்பு; முடியாதென்றாலும் வம்பு. இப்படியான அழுத்தம்தான் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும். குடும்பம், குழந்தை என்பதெல்லாம் ஓரங்கட்டிக் கிடைக்கும். பெரும்பாலும் வேலை குறித்தான நினைப்பே ஓடிக் கொண்டிருக்கும். கோவிலுக்கு நேர்ந்துவிட்ட பலியாடாய் திரிந்து கொண்டிருப்போம்.

 

வேலை என்பது நாம் வாழ்வதற்கான ஒரு காரணி. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. வேலை இல்லையென்றால் கஷ்டம்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இந்த வேலை இல்லையென்றாலும் கூட நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும். முதலில் இந்தத் தெளிவு வேண்டும். 

 

'என் குடும்பம் சொகுசா இருந்து பழகிடுச்சு' 'என் பையனுக்கு நல்ல ஸ்கூல்ல இடம் வேணும்' - நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய அழுத்தங்கள் நம்மை அலுவலகங்களில் அடிமையாக்கி வைத்திருக்கின்றன. 'ரேட்டிங் குறைச்சுடுவான்' 'வேலையை விட்டு தூக்கிடுவான்' என்று நடுங்குகிறோம். போனால் போகட்டும். நம்முடைய அம்மாவும் அப்பாவும் நமக்கு எதைக் கொடுத்தார்களோ அதைவிடவும் ஒரேயொரு படி அதிகமாக நம் பிள்ளைகளுக்கு கொடுத்தால் போதும். அதானிகளுடனும் அம்பானிகளுடனும் போட்டியிடத் தேவையில்லை.  இதை மனதில் நிறுத்திக் கொண்டால் போதும். 

 

அறிவுரையாக இதைச் சொல்லவில்லை. ஆனால் வேலை செய்வதற்காக மட்டுமே நாம் பிறப்பெடுக்கவில்லை. அதைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள, நாம் செய்ய எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன.

 

ஆயிரம் வேலைகள் இருந்தாலும் மண்ணுக்கும் நமக்குமான தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அது அறுபடும் போதுதான் எதையோ இழந்துவிட்ட உணர்வு உண்டாகும். பயணிக்க முடியவில்லையென்றால் தினசரி உள்ளூர்க்காரர்கள் இரண்டு பேரிடமாவது பேசிவிட வேண்டும். அலைபேசி, ஸ்கைப், வாட்ஸாப் என்று எவ்வளவோ வந்துவிட்டன. என்ன பேசுவது? வெட்டி நியாயம்தான். இன்றைக்கு திமுகக்காரர்களை அழைத்து 'போராட்டம் எப்படி இருந்துச்சு' என்று கேட்டால்,  எடப்பாடி அணியினரை அழைத்து 'அமைச்சர் எப்போங்க வர்றாரு' என்று கேட்க வேண்டியதுதான். நம் ஊருடனான தொடர்ச்சியான தொடர்பு அவசியம். இப்படியான ஓர் உறவை நம் மண்ணுடன் உருவாக்கிக் கொண்டால் 'ஊரை மிஸ் செய்கிறேன்' என்ற உணர்வே உண்டாகாது. அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான் தேவைப்படும். பதினைந்து நிமிடங்களை ஒதுக்க முடியாதா? 

 

நாம் சமூகப் பிராணிகள். சக மனிதர்கள்தான் நம் பாரங்களை இறக்கி வைக்க சரியான சுமைதாங்கிகள். வேறு எப்படியும் நம்முடைய சுமைகளை இறக்கி வைப்பது சாத்தியமில்லை. பிரச்சினையை பிரச்சினையாகவே அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை. வெறுமனே பேசினால் போதும். எதையாவது பேசலாம். பலூனிலிருந்து காற்று இறங்குவது போல அழுத்தம் குறையும். 

 

இன்னொரு முக்கியமான விவகாரம்- உடல்நலம். இதில் கோட்டை விட்டுவிடுகிற ஆட்கள் அதிகம். கண்டதையும் தின்பது, அசிரத்தையாக இருப்பது என சாவகாசமாக விட்டுவிட்டு அகப்பட்டுவிடுகிறார்கள். 'எப்படி அவ்வளவு அசால்ட்டா இருந்தான்' என்று கேட்பார்கள். 'நீங்களும் நானும் அசால்ட்டா இல்லையா?' என்றால் பதில் இருக்காது. புகை, குடி, நேரங்கெட்ட நேரம் தூக்கம், மன அழுத்தம் என்று நம் சோலியை முடிக்கும் சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. 

 

முப்பதுகளைத் தாண்டியவுடன் நம் உடலில் சில வித்தியாசங்களை உணர முடியும். அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்தால் மூச்சு வாங்கும். இதுவரையிலும் இல்லாத படபடப்பு எட்டிப் பார்க்கும். அயர்ச்சி, உடல்வலி, அசதி என்பதெல்லாம் அறிமுகமாகும். ஜீரண சக்தி குறைவது உள்ளிட்ட சில விஷயங்களை நுட்பமாக கவனித்தாலே நம் உடலில் மெல்ல பிரச்சினைகள் உண்டாகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். 'வரும் போது பார்த்துக்கலாம்' என்று இருந்தால் மொத்தமாக வந்துவிடும். 

 

சர்க்கரை, ரத்தம் அழுத்தம் உள்ளிட்ட முழுமையான உடற்பரிசோதனை, மருத்துவர்களின் ஆலோசனை உள்ளிட்டவற்றை வருடம் ஒரு முறையாவது செய்து கொள்ளவது உசிதம் . தினசரி நாற்பது நிமிடங்களாவது நடக்கச் சொல்கிறார்கள். நிறையத் தண்ணீர் அருந்தச் சொல்கிறார்கள். அளவோடு உண்ணச்  சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரை மணி நேரமாவது எது குறித்தும் கவலைப்படாமல் மனதை நிறுத்தி வைத்துப் பழக்க வேண்டும்.  எந்நேரம் பார்த்தாலும் மனதை போட்டு அலட்டிக் கொண்டேயிருந்தால் அது என்னத்துக்கு ஆகும்?

 

முப்பத்தைத் தாண்டியவுடன் கவனத்தோடு இருந்து கொள்ளலாம். அதையும் மீறி வெள்ளம் நம் தலைக்கு மேலாகப் போனால் விதி. ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் கவனமேயில்லாமல் இருந்து ஏமாந்து போனால் நம் குடும்பத்துக்கு எதிராக நாமே செய்யும் சதிதான். குடும்பம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பரை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். வீட்டுக்கு வந்திருந்தார். இன்னமும் இரண்டு மூன்று பேர்கள் உடனிருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறார். அவராகச் செய்யவில்லை. மனம் அப்படிப் பழகிக் கிடக்கிறது. அவரை உதாரணத்துக்காகச் சொல்கிறேன். பெரும்பாலானவர்கள் அப்படிதான். குடும்பத்தோடு இருக்கும் போதும் அப்படித்தானே இருக்கும்?

 

பேசுவதற்கு மட்டுமே செல்போன். எப்பொழுதாவதுதான் வாட்ஸாப். லேப்டாப்பில் மட்டும்தான் ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் என்பதையெல்லாம் ஒரு விதியாகவே வகுத்துக் கொள்ளலாம். நம்முடைய நேரத்தை நாம்தான் நேர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்படி நேர்த்தி செய்தால்தான் முதலாளிகள் உறிஞ்சிய நேரத்தைத் தவிர மிச்சமிருக்கும் நேரத்தை நமக்கும், நம் நலனுக்கும், குடும்பத்துக்கும், வாழ்கிற சமூகத்துக்கும் கொடுக்க முடியும். பொறுமையாக யோசித்துப் பார்த்தல் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை மட்டும் ஒழுங்கு செய்தால் போதும். அந்த இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் மனம் வேலையை விட்டு விலகினால் நிறையச் செய்துவிட முடியும். அப்படி எந்தவிதமான நேர ஒழுங்குமில்லாமால் நம் கவனத்தையும் நேரத்தையும் லேப்டாப்புக்கும் செல்போனுக்கும் முதலாளிக்கும் அடமானம் நம் சமநிலை குழையத்தான் செய்யும். இந்தச் சமநிலை குழைவுதான் நம் இழப்புகளின் முதல்படி. 

 

http://www.nisaptham.com/2018/04/blog-post_92.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் அப்பட்டமான உண்மைகள்..... கண்டவிடயங்களில் எல்லாம் தலையைக் குடுத்து அல்லோலகல்லோலப்படக் கூடாது......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

நான் நினைக்கின்றேன் அதிகமாய் தமிழ் ஆட்கள் தான்  எந்த நேரமும் வேலை,வேலை என்று ஓடுவது


அநேகமான சனங்கள் கடையில சாமான்களை வாங்கி விட்டு பே[pay] பண்ணும் வரிசையில் நிற்கும் போதும்,சாமான்களை கசியர் பேக்[pack]  பண்ணும் போதும்ம் போனை நோண்டிட்டு இருக்கிறது அல்லது யாரோடும் போனில அலம்பிட்டு இருக்கிறது...காடடைப் போடடால் பின்[pin] நம்பர் மறந்து போய் முழுசுறது...பின்னுக்கு நிற்கும் ஆட்களை பற்றி  ஒரு கவலையும் இல்லை ?

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு வருமானம் என்பது எப்பவும் பணம் தான் என்று நினைக்கிறார்கள்.பணத்தை தவிரவும் வேறு இன்பங்கள் உண்டு.அதுவும் ஒரு வருமானம் தான் என்று உணர்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.