Jump to content

பரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்


Recommended Posts

பரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்

 
29244160_10156269531068330_3596950662753026048_n.jpg

கைதடியில்  சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் சந்திரலிங்கம் இராசம்மா. இவர் கைநாடி பிடித்துப் பார்த்து நாட்டு வைத்தியம் செய்வதில் சிறந்து விளங்குகின்றார். 90 வயதில் தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தனது பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து வருகின்றார். தனது இந்த சேவைக்காகவே ஆசிரியப்பணியை இடைநிறுத்திவிட்டு மக்களுக்கு தொண்டாற்றி வருகின்றார். எந்த நெருக்கடி வந்தாலும் தனது பணியை இடையறாது செய்து வருகின்றார்.

நவீன விஞ்ஞான வளர்ச்சி துரித கதியில் முன்னேறி வருகின்றது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விடயம் இன்று வரைக்கும் அழியாது இருக்கின்றது என்பது எம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்தச் சேவையை நான்காவது சந்ததியாக தனது பிள்ளைகளும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது அவரது ஆசையாகும். அவ்வாறே அவரது பிள்ளைகளும் தொடர முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர் பல வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார். கைநாடி பிடித்தே என்ன நோய் என்பதைக்கண்டு பிடித்து சிகிச்சையளித்து வருகின்றார். அதாவது வாதரோகம்இ சர்மரோகம்இ சுழுக்குஇ சர்வாங்கஇ பாலரோகம்இ கண்நோய்இ வலிப்புஇ சுவாசரோகம்.மூலரோகம்இ மஞ்சற்காமாலைஇ மாங்கம்இ காக்கைவலிஇ பீனிசரோகம்இ வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்.
 
29261036_10156269531443330_2547176942403059712_n.jpg

சந்திரலிங்கம் இராசம்மா சொல்வதைக் கேட்போம். முள்ளியவளையில் நான் வசித்து வருகின்றேன். எனக்கு இப்பொழுது 90 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் நான் தனியாகவே இருந்து சமைத்து சாப்பிட்டு எனது வேலைகளைச் செய்து வருகின்றேன். நான்  55வருடங்களாக பாரம்பரிய சிகிச்சை முறையான கைநாடி வைத்தியம் செய்து வருகின்றேன். எனக்கு முதல் எனது இரண்டு சந்ததியினர் இந்த சேவையை செய்து வந்தார்கள். மூன்றாவது சந்ததியாக நான் தொடர்ந்து செய்து வருகின்றேன். எனது பேரனார் செய்து அதற்குப் பின்னர் எனது தகப்பனார் செய்து வந்தார். அவர் இறந்த பின்னர் நான் எனது ஆசிரியப்பணியையும் இடையில் விட்டிட்டு இதில் ஆர்வமுள்ளதாலும் பரம்பரையாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் செய்து வருகின்றேன். எனக்குப் பின்னர் என்னுடைய பிள்ளைகள் இந்த சேவையை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதில் எனது பிள்ளைகளும் ஆர்வமாக இருந்து எனக்கு ஒத்தாசைகள் செய்து தருகிறார்கள். பழைய ஏடுகளை வைத்து படித்தே நாம் இந்த சிகிச்சை முறைகளைச் செய்து வருகின்றோம். மூலிகைகளையும்இ தாவர இலைகளையும் இ வேர்கள்இ தண்டுகள்இ காய்இ பூ இவற்றின் மூலமே இதற்கான மருந்துகளைத் தயாரிக்கின்றோம். பழைய முறைப்படியே நான் மருந்துகளை தயாரித்து வருகின்றேன். வவுனியாவிற்கு எனது பிள்ளைகள் சென்றுதான் மூலிகைகள் வாங்கி தருகின்றார்கள். தாவர இலைகள்இ வேர்இ தண்டுகள்இ கிழங்கு வகைகளை நான் அயலில் தேடி எடுத்து வருவேன். தாமரைக்கிழங்கு சொந்தக்கார பெடியள் பிடுங்கி தருவினம். சிகிச்சைக்கு மருந்தாக தூள் வகைகள்இ கூட்டுக்குளிசைஇ எண்ணெய் போன்றவற்றையே வழங்குகின்றேன். மருந்துகளை கையாலை உரலில் இடித்து மண் சட்டியிலை வெள்ளைத்துணி போட்டு அரித்தெடுக்கிறனான். எண்ணெய் காய்ச்சிறதும் மண் சட்டியிலைதான்.
 
29257697_10156269531203330_8231714433815019520_n.jpg

தற்போதைய நவீன மருத்துவ உலகத்திலும் எனது சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. அன்று எவ்வாறு சிகிச்சை அளித்தனோ அவ்வாறே இன்று செய்து வருகின்றேன். தூர இடங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றார்கள். நிறையப்பேர் பரம்பரையாகவே என்னிடம் தான் வைத்தியம் செய்கிறார்கள். இந்த வைத்திய முறையால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த மருந்துகளை நானே தயாரிப்பதனால் எனது சுவாசத்தில் இவை கலப்பதனால் எனக்கு இந்த வயதிலும் எந்த நோய் நோயுமின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றேன். நான் வைத்தியசாலைப் பக்கம் போய் அறியேன். பழைய ஏடுகளில் (வாகடம்) கற்றதையும் அனுபவத்தையும் வைத்தே சிகிச்சை செய்வதனால் இன்றும் எனது வைத்தியத்துறையில் நின்று நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கின்றது.

எனது பணியினைப் பாராட்டி முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தினரால் பண்பாட்டு விழாவின்போது பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்கள். இதுவரை காலமும் பதிவுகள் எதுவும் செய்யாமலே எனது சேவையை செய்து வந்தேன். தற்பொழுதுதான் பதிவிற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். நான் அயல் வீடுஇ உறவினர் வீடுகளுக்குச் சென்று பொழுதைப் போக்குவதில்லை. எனது பொழுதுபோக்கே வைத்தியப் பணிதான். இதை ஒரு சேவையாகவே செய்து வருகின்றேன். நான் இவ்வாறு எனது பணியைச் செய்து நானே எனது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வது மிகவும் சந்தோசமான ஒரு விடயமாகும்.
 
29261383_10156269531533330_5066852139762974720_n.jpg

இறுதி யுத்தத்தின் போது எனது வீடு சொத்துக்கள் அழிந்து விட்டன. தற்போது ஒழுங்கான ஒரு வீடு எனக்கு இல்லை. மருந்து தயாரிப்பதற்கான பொருட்கள் இல்லை. அதனால் நான் பெரிய சிரமத்தை எதிர்கொள்கின்றேன். இருப்பதை வைத்தே எனது சேவையை தொடர்கின்றேன். நான் பணத்திற்காக இந்த சேவையை செய்யவில்லை. அவர்கள் தரும் பணத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆங்கில வைத்தியம் என்றால் எங்கட சனம் விழுந்தடிச்சு நிறையக் காசுகள் கொட்டி வைத்தியம் செய்யுங்கள். இப்படியான இடங்களுக்கு வருகில் 100ரூபா அல்லது 50ரூபாவோடதான் வருங்கள். என்ன செய்யிறது தாறதை வாங்கிக்கொண்டு மருந்துகள் கொடுக்கிறனான். மூலிகைகளின் விலையும் இப்ப கூடிக்கொண்டு போகுது. வவுனியாவிற்கு போய்த்தானே மூலிகைகள் வாங்கி வாறது. அதுகளாலை செலவு கூடத்தான். அதற்காக எனது சேவையை என்னால் கைவிட முடியாது. எனது இறுதி மூச்சு வரை இந்தப் பணிதொடர்ந்தவண்ணம் இருக்கும். கைநாடி பிடித்தே வரும் நோயளர்களுனக்கு என்ன நோய் என்று கண்டுபிடித்துச் சொல்வேன். அதற்கு சிகிச்சையும் அளிப்பேன். கைநாடி பார்க்கிறது விடியத்தான் பார்க்கவேணும். அதுவும் வெறும் வயிற்றோட வரணும். அப்படி இல்லையென்றால் அடுத்தநாள் விடிய வரச்சொல்லித்தான் பார்ப்பேன். வீட்டிலை மட்டுமல்ல வரமுடியாது படுக்கையிலை கிடக்கிற நோயாளர்கள் என்றால் யாரும் வந்து கூட்டிட்டு போனால் போய் பார்த்து சிகிச்சையளிப்பேன். என்னிடம் வைத்தியம் செய்பவர்கள் தொடர்ந்து தமது நோய்க்கு என்னிடமே சிகிச்சை பெற்று பயனடைகின்றார்கள். இன்றும் மேலும் மேலும் வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. அறிந்து அறிந்து தூர இடங்களிலிருந்தும் வருகின்றார்கள். கௌரவிப்புக்கள் எல்லாம் எனக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது என்கின்றார்.
 
29249844_10156269531318330_5990735485289365504_n.jpg

இந்த அம்மாவின் செயற்பாடுகள் வயது ஒரு சேவைக்கோ ஆர்வத்திற்கோ ஒரு தடையல்ல. மனமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மற்றறையது அரச உத்தியோகம்தான் வேண்டும் என்று படித்து பட்டம் பெற்றவர்கள் சோம்பேறியாக எந்த முயற்சியில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால் அவர் தனது அரச சேவையை கூட இந்த சேவைக்காக அர்பணித்திருக்கின்றார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தொடரவேண்டும் என வேண்டுகின்றோம்.

http://www.nimirvu.org/2018/03/blog-post_31.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.