Jump to content

மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் 


Recommended Posts

மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் 

 
Iranaitheevu1.jpg?resize=800%2C533
 
இருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அங்குள்ள செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து மீள்குடியேறுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள்.
 
மீள்குடியேற்றத்திற்கான அவர்களுடைய போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம், முழங்காவில், பூனகரி ஆகிய பிரதேசங்களின் ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு வழியாக கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில், யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற ஏ 32 பிரதான வீதிக்கருகில் உள்ள இரணைமாதாநகர் என்ற கிராமத்தில் இந்தப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
 
இரண்டு சிறிய தீவுகளைக் கொண்ட இரணைதீவு வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. இரட்டைத் தீவுகளைக் கொண்டதனால் முன்னோர்கள் இதற்கு இரணைதீவு என்ற பெயரைச் சூட்டியிருப்பதாக ஊர் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். இரணைமாதாநகர மீன்பிடித்துறையில் இருந்து மேற்குப் புறமாக அரை மணித்தியால படகுப் பயணத் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளது.பூலோக வரைபடத்தில் இரணைதீவு வடக்கு என்றும், இரணைதீவு தெற்கு என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரணைதீவை சிறுதீவு பெருந்தீவு என்று ஊர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
 
 Iranaitheevu2.jpg?resize=800%2C533
மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பூர்வீகமாக இங்கு மக்கள் வசித்துள்ளார்கள். யுத்த மோதல்கள் காரணமாக 1992 ஆம் ஆண்டு முழுமையாக இவர்கள் இடம்பெயர்ந்தபோது 230 ஆக இருந்த குடும்பங்கள் கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் 430 ஆக உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இரணைதீவின் பெருந்தீவில் 142 காணித்துண்டுகளும் சிறுதீவில் 35 காணித்துண்டுகளும் அங்க வசித்த மக்களுக்கு 1982 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துக்கான ஆவணங்களே அவர்களுடைய மீள்குடியேற்ற கோரிக்கைக்கான எழுத்து வடிவிலான ஆதாரங்கள்.
 
கரையில் நிறைந்துள்ள பவளப்பாறைகள் இரணைதீவின் வற்றாத கடல்வளத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. மீன்பிடியும், கரைசார்ந்த சிறு தொழில்களும், மந்தை வளர்ப்பும், இரணைதீவின் வாழ்வுக்கு ஆதாரமானவை. இந்தத் தொழில்களுடன், தென்னைகளும் ஏனைய வான்பயிர்களும் இரணைதீவு மக்களின் வாழ்க்கையை சுயநிறைவுடையதாக்கி இருந்தன.
 
பெருநிலப்பரப்புக்கான இயந்திரப்படகின் அரை மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட கடல்வழிப் பயணத் தாமதத்தைத் தவிர்த்து, அனைத்துத் தேவைகளையும் இங்குள்ள மக்களுக்குப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாடசாலை, வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம் மட்டுமல்லாமல், பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றும்கூட இங்கு செயற்பட்டு வந்துள்ளது.
பாக்குநீரிணையின் ஆழ் கடல் தீவாகிய இரணைதீவில் குடிநீர் வளம் நிறைந்துள்ள போதிலும், அது அங்கு வசித்த மக்களின் தேவையை முழுமையாகப் போதுமானதாக இல்லை.
 
குடிநீர்ப்பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக மழைநீரைச் சேமித்து வைப்பதற்காக இங்குள்ள பிரதான ஆலயத்தின் வெளிவிறாந்தைப் பகுதியில் ந்pலத்தடித் தொட்டிகள் சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேவாலயம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலப் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆலயத்தின் அருகில் 1886 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட வெளிச்சவீட்டுப் பாணியிலான காவல் கோபுரம் இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
 
இரணைதீவில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றதையடுத்து, அங்கு கடற்படையினர் நிலைகொண்டனர். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு செட்டம்பர் மாதம் ஆரம்பமாகிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்போது இந்த மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. மாறாக இங்கு நிலைகொண்டிருந்த கடற்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவுக்குள் செல்வதை முற்றாகத் தடை செய்திருந்தார்கள்.
 
சொந்தத் தீவில் இருந்து இடம்யெர்ந்து முடிவின்றி தொடர்ந்த யுத்தச் சூழல் காரணமாக இடத்துக்கு இடம் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்து, அங்கிருந்து இராணுவத்தினரால் வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்குப் பதிலாகத் தற்காலிகமாக இரணைமாதாநகர் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆயினும் தமது சொந்த மண்ணைச் சென்று பார்ப்பதற்கு இயலாதவர்களாக இருந்த மக்கள் பெரும் துயரமடைந்திருந்தார்கள்.
Iranaitheevu3.jpg?resize=800%2C533
தமது பகுதிக்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பூனகரி பிரதேச செயலாளரிடமும், கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் சொந்த மண்ணில் தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். இரணைதீவு கடற்படையின் பொறுப்பில் இருப்பதனால், அந்த அதிகாரிகளினால் இந்த மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
 
இதனால், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்று அமைச்சு மட்டத்தில் தமது கோரிக்கையை மக்கள் முன்வைத்தார்கள். கடிதங்கள் அனுப்பப்பட்டன. மகஜர்கள் கையளிக்கப்பட்டன. வேண்டுகோள்கள் பல்வேறு வழிகளிலும் முன்வைக்கப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இரணைமாதாநகரில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பூனகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி அரச செயலகம் என்று விரிவடைந்து கொழும்பையும் எட்டிப்பார்த்தது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேறவில்லை. ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்ற கோரிக்கைக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை.
Iranaitheevu4.jpg?resize=800%2C533
 
இதனால் இரணைதீவு மக்களின் மீள்குடியேற்ற கோரிக்கைக்கான போராட்டம் மண் மீட்புப் போராட்டமாக விரிவடைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது, இந்த மக்களின் சுயஎழுச்சிப் போராட்டத்திற்கு அருட்தந்தையர்களும், ஆலயப் பங்கு நிர்வாகமும், வேறு சில பொது அமைப்புக்களும் துணை புரிந்தனவே தவிர, அரசியல் ரீதியான ஆதரவு அவர்களுக்குக் கிட்டவில்லை. அவர்களுடைய மீள்குடியேற்றக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளினாலும், அரசியல் கட்சிகளினாலும் அரசுக்கு, அழுத்தங்கள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என்று அந்த மக்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இருந்த போதிலும் ஒரு வருடத்தை எட்டியுள்ள தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக தமது போராட்டத்தின் 359 ஆவது நாளாகிய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி சுமார் 50 படகுகளில் ஏறிய அந்த மக்கள், வெள்ளைக் கொடிகளை ஏந்திய வண்ணம், இரணைதீவில் சென்று இறங்கினார்கள். அவர்களுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டவர்களும் சென்றிருந்தார்கள்.
 
முன் அனுமதியின்றி, அத்துமீறிச் செல்லும் தங்களை அங்குள்ள கடற்படையினர் கரை இறங்க அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கரை இறங்கினாலும், அங்கு தங்கி இருக்க விடாமல் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ற அச்சமும் இருந்தது. ஆயினும், கடற்படையினர் கரை இறங்கிய மக்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது திருப்பி அனுப்பவோ முயற்சிக்கவில்லை.
 
 
சுமுகமான முறையில் நடந்து கொண்ட படையினர், அந்த மக்களுடைய வருகையின் நோக்கம் என்ன என வினவினார்கள்.
 
இரணைதீவு தங்களுக்குச் சொந்தமானது. தாங்கள் பூர்வீகமாக அங்கு வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீள்குடியேற்ற அனுமதிக்காத காரணத்தினால் தாங்களே மீள்குடியேறுவதற்காக வந்திருப்பதாக அந்த மக்கள் கடற்படையினரிடம் தெரிவித்தார்கள். இருப்பினும், மீள்குடியேறுவதற்கு மேல் அதிகாரிகளின் அனுமதி அவசியம் என கூறிய படை அதிகாரிகள், அது குறித்து தமது மேலிடத்திற்கு அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார்கள். அதேநேரம், அங்கு தங்குவதற்கு அவர்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
 
இருப்பினும் அங்குள்ள செபமாலைமாதா தேவாலயத்தைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்படை அதிகாரிகள், புனரமைப்புப் பணிகளுக்கு அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Iranaitheevu5.jpg?resize=800%2C533
தாங்கள் பல வருடங்களின் பின்னர் தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியிருப்பதாகவும், தாங்கள் தமது ஆலயத்தில் தங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்த மக்கள், தாங்களே தமது ஆலயத்தைப் புனரமைத்துக் கொள்ள முடியும் எனக் கூறி தங்களை அங்கு தொழில் செய்வதற்கும், மீள்குடியேறுவதற்கும் அனுமதித்தால் போதும் என்றும் கூறினர். இருப்பினும் காணிகளில் மீள்குடியேறுவதற்கு உயரதிகாரிகளின் அனுமதி அவசியம் என்று கூறிய படை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.
 
அலங்கோலமாகக் கிடந்த ஆலயம் செய்யப்பட்டதையடுத்து. பங்குத் தந்தையும், ஏனைய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்ட திருப்பலிப் பூசையில் உணர்வுபூர்வமாக அந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.
  • Iranaitheevu6.jpg?resize=800%2C533
 
எந்தவிதமான தடைகளும் பிரச்சினைகளுமின்றி தமது தீவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு வழிசெய்த இறைவனை வாய்விட்டு இறைஞ்சிய அந்த மக்களின் அழு குரல்கள் ஆலய மண்டபத்தை நிறைத்து சுவார்களில் எதிரொலித்து அருகில் உள்ள கடல் வெளியில் கலந்தன. அந்த நேரம் ஆலயத்தில் குழுமியிருந்த அனைவரும் உள்ளம் கசிந்து உணர்வு மயமாகி மெய்சிலிர்த்திருந்தனர்.
 
அதன் பின்னர் பலரும் தமது காணிகளையும் வீடுகளின் நிலைகைளையும் பார்ப்பதற்காகச் சென்றபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் பிரவேசிப்பதற்குக் கடற்படையினர் அனுமதிக்கவில்லை. ஆயினும் அடுத்தடுத்த தினங்களில் மக்கள் தமது காடுகள் அடர்ந்திருந்த தமது காணிகளையும் அழிந்து பாழடைந்து கிடந்த தமது வீடுகள் பாடசாலை, வைத்தியசாலை, அருட்சகோதரிகளின் விடுதி, மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் போன்றவற்றையும் விளையாட்டு மைதானம், அங்குள்ள தென்னந்தோட்டத்தின் ஒரு பகுதி என பலவற்றையும் எவ்விதத் தடையுமின்றி பார்வையிடக் கூடியதாக இருந்தது.
Iranaitheevu7.jpg?resize=800%2C533
முதல் நாள் இரவு, பதட்டமான மன நிலையில் ஒருவித அச்சம் நிலவிய போதிலும், இறைவனின் நிழலில் இருக்கின்றோம் என்ற ஆறுதல் அந்த மக்களை அரவணைத்திருந்தது. மறுநாள் அதிகாலையிலேயே ஆண்கள் தொழிலுக்காகக் கடலில் சென்றனர். பெண்கள் கரையில் மட்டி பொறுக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இரண்டாம் நாள் அந்த மக்கள் மனதில் திருப்தியும், மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. இருப்பினும் தங்களுடைய காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் வரையில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்ற திடமான மன உறுதியோடு காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். தமது இந்த முடிவு குறித்து கடற்படை அதிகாரிகளுக்கும் அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தனர்.
 
அதேவேளை, தமது சொந்தத் தீவுக்குத் திரும்பியுள்ள தங்களை வந்து பார்வையிட வேண்டும். தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த மக்கள் பூனகரி பிரதேச செயலாளருக்கும் கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைத்து, அதற்கான பதில் நடவடிக்கையையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாக அவர்களது நிலைமையைப் பார்வையிடுவதற்காக இரணைதீவுக்குச் சென்றிருந்த மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய கே.எஸ்.ரட்னவேலிடம் இரணைதீவு மக்கள் தெரிவித்தனர்.
 
ஆனால் அவர்களுடைய எதிர்பார்;ப்பு நிறைவேறவில்லை. எந்த அதிகாரியும் அவர்களைச் சந்திப்பதற்கு முன்வரவில்லை என்று ஊர் முக்கியஸ்தராகிய அமிர்தநாதன் அந்தோனி தெரிவித்தார்.
 
இரணைதீவுக்குப் பேரணியாக அந்த ஊர் மக்கள் சென்றிருந்த இரண்டாவது நாள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் அவருடைய உதவியாளர் டொமினிக் ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு குழுவாக நாங்கள் அந்தத் தீவுப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தோம்.
 
  • Iranaitheevu8.jpg?resize=800%2C533Iranaitheevu9.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/77674/

Link to comment
Share on other sites

மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் 02

 

– பி.மாணிக்கவாசகம்…

Iranaitheevu-manic1.jpg?resize=800%2C533

முதல் நாளன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இரண்டாம் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று அந்த மக்களைச் சந்தித்து தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இந்த மகக்ளின் போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதுடன், அவர்களுக்கான உதவிகளையும் செய்ததைப் போன்று அந்த மக்கள் மீள்குடியேற்றப்படும் வரையில் தாங்கள் தொடர்ந்தும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கஜேந்திரன் தெரிவித்தார்.

 

இதேவேளை, இரணைதீவுக்குச் சென்ற ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அந்த மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண உணவுப் பொருட்களை வழங்கியிருந்தார்.

சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேலுடன் மனம் திறந்து உரையாடிய ஊர் மக்கள், தங்களது பழைய ஊர் வாழ்க்கையை நினைவுகூர்ந்தனர். அத்துடன் காடாகிக் கிடக்கின்ற தமது குடியிருப்புக்களையும், அழிந்து சிதைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் தமது வீடுகளின் எச்சங்களையும் அவர்கள் எங்களுக்குச் சுற்றிக்காட்டினர்.

செபமாலை மாதா ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள சிதைந்த கட்டிடங்களைக் கொண்ட பாடசாலையை அண்மித்ததாக கடற்கரையோரமாகச் செல்கின்ற பற்றைகள் வளர்ந்த வீதியொன்று மட்டுமே ஆட்கள் நடமாடக் கூடியதாக உள்ளது. ஏனைய இடங்கள் அனைத்தும் மரண்களும் செடிகளும் ஓங்கி வளர்ந்து வனாந்தரமாகவே காட்சியளிக்கின்றன. சிலருடைய வீடுகளுடன் இருந்த கிணறுகளும்கூட சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. ஆடு மாடு கோழி வளர்ப்பதில் அந்த ஊர் மக்கள் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். மந்தைகளுக்குக் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக ஊர் மனைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே சிறிய மோட்டைகள் எனப்படும் நீர்த்தேக்க நிலைகளையும் அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

அடர்ந்து வளர்ந்த மரங்களிடையே இலந்தைப்பழ மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. அந்த மரங்களில் பெருமளவில் இலந்தைப் பழங்கள் கனிந்திருந்தன. மக்கள் இடம்யெயர்வதற்கு முன்னர் சிறிய அளவிலேயே இலந்தை மரங்கள் காணப்பட்டதாகவும், இடப்பெயர்வின் பின்னர் இலந்தை மரங்கள் பல்கிப் பெருகியிருப்பதாகவும் ஊர்வாசிகள் தெரிவித்தனர்.

Iranaitheevu-manic6.jpg?resize=800%2C533

ஊர்ப்பெரியவர்களில் அமிர்தநாதன் அந்தோனியும் ஒருவர். அவருக்கு 67 வயது. முதிர்ந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகமாகக் காணப்படுகின்றார்.

‘இரணைதீவிலதான் பிறந்தனான். என்னுடைய அப்பா அம்மாவும் இங்கதான் பிறந்தவை. என்னுடைய அப்பாவோட அப்பாகூடி இங்கதான் பிறந்து வளர்ந்தவர். அதெல்லாம் எங்களுக்கு வடிவா தெரியும். இப்படியெல்லாம் இருந்துதான் நாங்கள் 92 ஆம் ஆண்டு இங்க இருந்து இடம்பெயர்ந்து போனநாங்கள்’ என தன்னைப் பற்றி அந்தோனி கூறினார்.

‘எங்களுக்கு முக்கிய தொழில் மீன்பிடிதான். அதை வச்சுக்கொண்டு ஆடு, மாடு, கோழி யெல்லாம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மேயவிட்டு வளர்க்கலாம். அதுக்கு காவல் போட வேண்டியதில்ல. ஆனால் இப்ப நிலைமை அப்படியில்ல. அப்படி ஆடு, மாடு, கோழி வளர்க்க முயற்சித்தாலும் இங்க பெருகி இருக்கிற நாய்கள் விடாது. நூற்றி ஐம்பதுக்கும் மேல நாய்கள் மட்டும் இங்க இப்ப இருக்குது. அவ்வளவு நாய்களையும் இங்க இருந்து வெளியில கடத்த வேணும். அல்லது உரிய ஆட்கள் வந்து அதுகள அப்புறப்படுத்த வேணும். ஏனெண்டா இப்ப பாருங்க மாடுகள் தாராளமா நிற்குது. ஆனால் கன்றுகள் இல்லை. சின்ன பசுக்கன்றுகள் இல்லை.

மாடுகள் கண்டு போட்ட உடனேயே ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்துக்குள்ள நாய்கள் வந்து அந்த கண்டுகள பிடிச்சுக் குதறி கொன்று போடுது. ஒரு மாடு கண்டுபோட்டதெண்டால் அதைச் சுற்றி பத்து நாய்கள் நிக்கும். கண்டுகள் தப்ப ஏலாது. அப்ப பெரிய மாடுகள் இருக்குதே தவிர, மாடு உற்பத்தியாக வழியில்லை. இப்ப இங்க நாங்கள் ஆடு வளர்க்கிறதெண்டால் வெளியில இருந்து கொண்டு வந்துவிட்டா நாய்கள் விடாது. இப்படி பல பிரச்சினைகள் இருக்கு. அந்தப் பிரச்சினைகள அரசாங்கம் எங்களுக்கு நிவர்த்தி செய்ய வேணும்’ என்றார் அந்தோனி.

மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படாத போதிலும், தேவாலயத்தில் தங்கி, அருகில் உள்ள பாடசாலையின் இடிந்த கட்டிடத்தில்; பொது சமையல் செய்கின்ற அந்த மக்கள் அங்கிருந்து திரும்பிப் போகப் போவதில்லை என உறுதியாகக் கூறுகின்றார்கள்.

Iranaitheevu-manic2.jpg?resize=800%2C533

அதேவேளை, தாங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவு சென்றே இப்போது குடிநீர் பெற வேண்டியிருப்பதனால், குடிநீரை எடுத்து வருவதற்காக இரு சக்கர உழவு இயந்திரம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இயந்திரத்தை அரசாங்க அதிகாரிகளோ, பொது நிறுவனங்களோ அல்லது தனியாராவது வழங்கி உதவ முன்வர வேண்டும் என்றும் அந்த மக்கள் கோருகின்றனர்.

மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிகக் கொட்டில்களும் சமையல் வசதிகள் உட்பட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றார்கள்.

மூன்று நான்கு வீடுகளில் மாத்திரமே கடற்படையினர் தங்கியிருக்கின்றனர். அங்குள்ள பொது விளையாட்டு மைதானம் மற்றும் அதனைச் சார்ந்த இடங்களும் கடற்படையினரின் பாவனையில் இருப்பதாகத் தெரிவி;க்கப்படுகின்றது.

‘என்னுடைய வீட்டில் நேவி இப்பவும் இருக்குது. பக்கத்தில உள்ள அண்ணருடைய வீடு, எங்கட மாமாவின்ர வீட்டிலயும் நேவி நிரந்தரமா இருக்குது. நேவி இருக்கிறதால இந்த வீடுகள் சேதமடையவில்லை. நல்லா இருக்கு. நாங்கள் எங்களுடைய வீடுகளில போய் நிரந்தரமா வசிக்க வேணும் எண்டுதான் இங்க வந்திருக்கிறம். ஆனால் நேவி வீடுகள விடேல்ல. ஒரு நாலு ஏக்கர் நிலத்திலதான் அவர்கள் இருக்கினம். அதைத்தவிர மற்ற இடங்கள் எல்லாம் சும்மாதான் கிடக்கு. எங்கட வீடுகள விட்டா நாங்க அங்கபோய் நிரந்தரமா குடியிருக்க முடியும். குடியிருந்து கொண்டு எங்கட தொழில்கள செய்ய முடியும். அக்கரையில இருக்கிற பிள்ளைகள் நேரம் கிடைக்கும்போது எங்கள வந்து பார்த்திட்டு திரும்பிப் போகலாம்’ என்று இரணைதீவின் நிலைமைகள் குறித்து அந்தோனி விபரித்தார்.

Iranaitheevu-manic3.jpg?resize=800%2C533

இரணைதீவைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதி கடற்பரப்பில் மீன்பிடிப்பதை அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையினர் முதலில் தடைசெய்திருந்தனர். இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டு மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மீள்குடியேற்றத்திற்காக அங்கு சென்று தங்கியிருப்பவர்கள் அந்தத் தீவுப் பகுதியில் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சில இடங்களில் வெளிப்பிரதேசங்களில் இருந்து அத்துமீறி வருகின்ற தடைசெய்யப்பட்ட வகையில் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இருந்த போதிலும் பல வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்தப் பிரதேசத்திற்குத் திரும்பியுள்ள இரணைதீவு மக்கள் அங்கு தங்கியிருக்கவும், தொழில் செய்யவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையடுத்து ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர்.

ஆண்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றுள்ள அதேவேளை, மீனவ பெண்களும் கரையோர தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றார்கள். கடலோரத்தில் சிப்பி பொறுக்குதல் அவற்றில் முக்கியமானதாகும். அதேநேரம் கடலோரத்தில் இயற்கையாக வளரும் தாவரங்களில் இருந்தும் உணiவுப் பெற்றுக்கொள்வதாக மீனவப் பெண் ஒருவர் கூறுகின்றார்.

‘மீள் அரிசி என்று ஒன்றிருக்கு. வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் கடும் வெப்பத்தில் கடலோரத்தில் புல்லுகள் எல்லாம் பட்டிரும். அப்படி பட்டுப்போன புல்லுகளின் அடியில ஒருவiயான அரிசி இருக்கும். அதை எடுத்து ஒடியல் மா மாதிரி மாவாக்கி தேங்காப்பூவும் சீனியும் போட்டு சாப்பிடுவோம். அதுதான் எங்கட காலைச்சாப்பாடு’ என்றார் அந்தப் பெண்.

அது மட்டுமல்ல. தாழைக்கிழங்கையும் அவர்கள் உணவாகப் பயன்படுத்துவார்கள். அது பற்றியும் அந்தப் பெண் விபரித்தார்.

Iranaitheevu-manic4.jpg?resize=800%2C533

‘கடலோரத்தில் இருக்கின்ற தாழையில் விளையிற கிழங்கைக் கொண்டு வந்து தோலை உரிச்சுப் போட்டு காய விடுவம். காய்ஞ்ச பிறகு அந்த கிழங்கை மாவாக்கி சாப்பிடுவம். அந்த மாவை சும்மா சாப்பிடுறதில்ல. நண்டு, திருக்கை இதுகள தண்ணீர்விட்டு அவிச்சு அதில அந்த மாவைப் போட்டு கிண்டிட்டு, களி மாதிரி சாப்பிடுவம். இது ரெண்டுமே போஷாக்கான சாப்பாடு. அதைத்தான் நாங்கள் இடம்பெயர முன்னம் இங்க சாப்பிட்டம். ஆனால் இடம்பெயர்ந்து நாங்கள் அங்க போனோம். இது மாதிரியான சாப்பாடு எங்களுக்குக் கிடைக்கேல்ல. அங்க நாங்கள் கூலித் தொழில்தான் செய்தனாங்கள். கூலி வேலை செய்தாத்தான் சாப்பாடு.

இல்லாட்டி கஸ்டம்தான் இருவத்தாறு வருஷங்களுக்குப் பிறகு எங்கள் கடலோரத்தில சிப்பி பொறுக்கவும் கரையோரத் தொழில் செய்யவும் எங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இப்ப நாங்கள் எங்கட மண்ணில சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறம். அந்த உணர்வு எங்களுக்கு நிம்மதிய தந்திருக்கு. மகிழ்ச்சியாகவும் இருக்கு என்று விபரித்தார் அந்தப் பெண்.

கடல் வளமும் நில வளமும் நிறைந்த இரணைதீவு வாழ்க்கை இயற்கையோடு ஒட்டிய மனதுக்கு இசைவான வாழ்க்கையாக அந்த மக்களுக்கு அமைந்திருந்தது. அந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அந்த வாழ்க்கைக்காக அவர்கள் பெருநிலப்பரப்பில் இரணைமாதாநகரில் ஆரம்பித்த மண் மீட்புப் போராட்டம் பாக்குநீரிணைக் கடலில் இரணை தீவின் செபமாலைமாதா ஆலயத்தில் இப்போது தொடர்கின்றது.

இந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், தமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்காக சுய எழுச்சி பெற்று இந்த மக்கள் இங்கு வந்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு நிகழ்வாகும் என வர்ணித்தார்.

‘தமது பூர்வீக இடத்திற்கு வந்துள்ள இந்த மக்கள் திரும்பிச் செல்வதற்காக வரவில்லை. இந்த மக்களுடைய வீடுகள் அனைத்தும் அழிந்து கிடக்கின்றன. அவர்களுடைய தேவாலயங்கள், பாடசாலை, வைத்;தியசாலை, மீனவர் கூட்டுறவுச் சங்கம் என்று எல்லாமே பேரழிவுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஓர் ஊர் மனை இருந்ததற்கான அடையாளமே இல்லாத வகையில் அங்கு பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இங்கு பயன்தருகின்ற தென்னை மரங்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. ஆனால் அந்த மரங்கள் இயற்கையாக அழியவில்லை. வலிந்து அழிக்கப்பட்டதாகவே தெரிகின்றது. ஆயினும் அந்த மக்கள் மனம் தளரவில்லை. தங்களுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதற்காகவே வந்துள்ளார்கள். அதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள்.

Iranaitheevu-manic5.jpg?resize=800%2C533

பழமைவாய்ந்த ஆலயத்தில் தங்கியுள்ள இந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பல இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கும் அரசும் அரச அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த மக்களின் மீள்குடியேற்ற கனவு விரைவில் நனவாக நிறைவேற வேண்டும். அதற்கு நல்லுள்ளம் படைத்த மக்களினதும் வெளிநாடுகளில் உள்ளவர்களினதும் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்க வேண்டும்’ என செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் குறி;ப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்களாகின்றன. யுத்த வடுக்களை ஆற்றி மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நல்லுறவையும் வளர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அந்தச் செயற்பாடுகள் கடந்த ஒன்பது வருடங்களாகத் தொடர்கின்றன. ஆயினும் மறுபுறத்தில், தமது பாரம்பரிய வாழ்விடத்தில் சென்று குடியேறுவதற்கான மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இரணைதீவு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அந்த மக்களுடைய போராட்டம் நியாயமானது. அடிப்படை உரிமை சார்ந்தது. அதனை அரசு தொடர்ந்தும் உதாசீனம் செய்து கொண்டிருக்க முடியாது. யுத்தம் காரணமாக வலிந்து இடம்பெயரச் செய்த இரணைதீவு மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்கு வசதியாக அங்கு நிலவுகின்ற இராணுவ மயமான சூழல் அகற்றப்பட வேண்டும். மக்கள் நிம்மதியாகத் தமது சொந்தக் காணிகளில் மீளவும் குடியேறி வாழ்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாமதியாமல் முன்னெடுக்க அரசு முன்வர வேண்டும்.

http://globaltamilnews.net/2018/78008/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.