Jump to content

ஆடைகளும் நிர்வாணங்களும்


Recommended Posts

ஆடைகளும் நிர்வாணங்களும்
 

ஒரு கதை சொல்லவா?  

‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.  

இப்போது, தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஆசிரியை, என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

இந்த விடயத்தில், தமிழர் சமூகத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இது தொடர்பில், தமிழ் ஊடகங்கள் எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பதை ஊகிக்க உங்களால் முடிகிறதா?  

சீருடை  

இலங்கையிலுள்ள அரச தொழில்களில் சிலவற்றுக்கு மட்டுமே சீருடைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொலிஸ், முப்படை, தாதியர், கலால் உத்தியோகத்தர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள், சீருடைகளை அணிந்தே ஆகவேண்டும். 

image_07383b1c77.jpg

மதம், கலாசார அடையாளங்களுக்கு ஏற்றவாறு இந்தத் தொழில்களுக்கான சீருடைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மேற்படி தொழில்களை மேற்கொள்கின்றவர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.  

ஆனால், இலங்கையில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கென எவ்விதமான சீருடைகளையும் அரசு இதுவரை நிர்ணயிக்கவில்லை. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஆசிரியர்களுக்கான ஒழுக்கக் கோவையில், ‘சீரான ஆடைகளை ஆசிரியர்கள் அணிய வேண்டும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சீரான’ என்பதற்குரிய வரையறை என்ன என்பது தொடர்பில், விளக்கங்கள் எவையுமில்லை.  

தாய்ச் சட்டம்  

இந்த இடத்தில், நமது நாட்டின் தாய்ச் சட்டமான அரசமைப்பின் மூன்றாவது அத்தியாயம் அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது.  

அதில் 14(உ) பிரிவு, ‘ஒவ்வொரு பிரஜையும் தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ, நம்பிக்கையையோ வழிபாட்டிலும் உபசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கு உரித்துடையவராவார்’ என்று கூறுகிறது. அதேபோன்று, 14(ஊ) பிரிவில், ‘தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து, தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரம், ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், அவர்களுக்கு விருப்பமான, ‘ஹபாயா’ எனும் ஆடையை அணிந்து செல்வதற்கு, அந்தக் கல்லூரியின் நிர்வாகம் தடை விதித்ததால், எழுந்த பிரச்சினைகள் குறித்து அறிவோம்.   

முஸ்லிம் ஆசிரியைகள் ‘ஹபாயா’ அணிவதற்கு எதிராக, சண்முகா கல்லூரி சமூகத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதும், அதைத் தொடர்ந்து, அங்கு கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியர்களும், தற்காலிகமாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டமையும் அறிந்தவைகளாகும்.   

இந்த விவகாரத்தில் பல்வேறு விதமான அபிப்பிராயங்களும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இருந்தபோதும், இது தொடர்பாக நீதி மற்றும் நியாயம் என்கிற மதிப்புக்குரிய விடயங்கள் இருக்கின்றமை குறித்து மறந்து விடலாகாது.   

 சமூக நல்லிணக்கம்  

சமூக நல்லிணக்கம் என்கிற வாசகமொன்று குறித்து, அநேகமாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் அதை உச்சரிக்கின்றோமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.  

 ‘வேறுபாடுகளைக் கடந்து ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்து கொள்வது, ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது, ஓர் இனத்தை மற்றோர் இனம் அனுசரித்துச் செல்வது, சமூக நல்லிணக்கமாகும்’ என்று கூறப்படுகிறது.   

‘ஏதேனும் பன்மைத்துவ சூழலில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை மதித்தல், ஒன்றாகக் கூடி வாழ்தல், தாம் விரும்பும் கருத்துகள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஏனையவர்களுடன் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மையுடன் செயற்படுதல் சமூக நல்லிணக்கமாகும்’ என்கிற வரைவிலக்கணமொன்றும் உள்ளது.  

‘ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது’ என்கின்ற அம்சம் இங்கு முக்கியமானதாகும். அதுவும் இலங்கை போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டில், மற்றைய சமூகத்தின் செயற்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல், நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.  

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும், பொது நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகின்றன. எனவே, அங்கு எந்தவொரு சமூகத்தவரின் மதத்தையோ, கலாசாரத்தையோ உயர்த்திப் பிடிக்க முடியாது. 

முஸ்லிம் பாடசாலையொன்றில் கற்பிக்கும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரை, ‘ஹபாயா’ உடுத்த வேண்டும் என்று, அந்தப் பாடசாலையின் நிருவாகம் வற்புறுத்துவது எத்தனை அநீதியோ, அதேபோன்றதொரு செயற்பாடுதான் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஆசிரியர்களைச் சேலை உடுத்துமாறு, அந்தப் பாடசாலையின் நிர்வாகம் வற்புறுத்தியமையுமாகும்.   

சண்முகா இந்துக் கல்லூரிக்குள் முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் ‘ஹபாயா’ அணிந்து செல்கின்றதாலோ, முஸ்லிம் பாடசாலைக்குள் தமிழர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சேலையுடுத்திக் கொண்டு செல்கின்றமையாலோ, சம்பந்தப்பட்டோரின் கலாசாரங்களில் என்னதான் சீரழிவுகள் ஏற்பட்டு விடப்போகின்றன?   

அடுத்த சமூகத்தவரின் செயற்பாடுகளை சகித்துக் கொண்டு, அவற்றை அனுமதிப்பதில்தான் சமூக நல்லிணக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக, நம்மில் கணிசமானோர் உள்ளனர்.   

சிங்கள பாடசாலைகளில் ‘ஹபாயா’  

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள, கிறிஸ்தவ பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், தாம் விரும்பியவாறு ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான், கடமைக்குச் செல்கின்றனர் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.   

அதேபோன்று, முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசியர்களும், அவர்களின் விருப்பத்துக்குரிய ஆடை வகையான சேலையை, அணிந்து கொண்டு செல்வதற்கு எவ்வித தடைகளுமில்லை.  

குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம், சென் ஜோசப் கல்லூரி, வித்தியாலோக சிங்கள வித்தியாலயம் மற்றும் கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயம் உள்ளிட்ட, முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத மாற்று இனத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில், கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியைகள், ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான் செல்கின்றனர்.   

அவர்களின் ஆடைகளுக்கு அங்கு எவ்வித எதிர்ப்புகளுமில்லை. அதிலும், கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் பௌத்த மதகுருவாக இருந்து கொண்டே, முஸ்லிம்களின் ‘ஹபாயா’ ஆடையைத் தமது பாடசாலையில் அனுமதித்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்டி ஆகவேண்டும்.  

மொட்டைத் தலையும் முழங்காலும்  

இந்த விவகாரத்தில் ‘ஹபாயா’ என்கிற ஆடை பற்றிய விமர்சனங்களை சிலர் முன்வைத்துப் பேசுகின்றமை, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும்.  

 ‘ஹபாயா’ ஆடை என்பது, அரேபியக் கலாசாரத்துக்கு உரியதாகும் என்றும், அந்த ஆடை முறைமை, பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் இந்த விவகாரத்தை வைத்து, சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதிலும், முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இந்த விடயத்தில் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறது.   

‘ஹபாயா’ என்கிற ஆடை தேவையா இல்லையா என்பதை, அதை அணிகின்றவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, வெளியிலிருந்து யாரும் அதை முடிவு செய்ய முடியாது.  

இன்னொருபுறம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கலாசாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டு, அவர்களின் ‘ஷேட்’, ‘ட்ரவுசர்ஸ்’, ‘கோட்’ போன்ற ஆடைகளை அணிந்து அழகு பார்க்கும் போது, முஸ்லிம்கள் தமக்கு மிகவும் நெருக்கத்துக்குரிய அரேபிய கலாசாரத்தின் ஆடை முறைமையொன்றைப் பின்பற்றுவதில் குற்றங்கள் எவையும் இருந்து விடவும் முடியாது.  

இன்னொருபுறம், சேலையைக் கூட இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு, முஸ்லிம் பெண்கள் அணிய முடியும் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.   

இலங்கையில் ‘ஹபாயா’ எனும் ஆடை வகை அறிமுகமாவதற்கு முன்னர், சேலைதான் முஸ்லிம்களின் ஆடையாக இருந்தது. தற்காலத்திலும், முஸ்லிம் பெண்களில் கணிசமானவர்கள் சேலை அணிகின்றனர்.   
முஸ்லிம் பெண் ஆசிரியரொருவர், சேலையணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்ல விரும்பினால், அதைத் தாராளமாக அவர் நிறைவேற்ற முடியும்.  

ஆக, முஸ்லிம் பெண்கள் ‘ஹபாயா’ அணிவதா, சேலை அணிவதா என்பது, இங்கு பிரச்சினையான விவகாரமல்ல. ‘சல்வார் கமீஸ்’ என்கிற ஆடைகளையும் முஸ்லிம் பெண்கள், இலங்கையில் அணிகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

 ஆனால், “இந்த ஆடையைத்தான் நீ அணிய வேண்டும்” அல்லது “இந்த ஆடைகளை நீ அணியக் கூடாது” என்று, யாரும் யாருக்கும் நியாயத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவுகளை வழங்க முடியாது.  

ஆடைகள் பற்றிய வரையறை  

ஆடைகள் தொடர்பான வரையறைகள் மற்றும் உத்தரவுகளைச் சில இடங்களில் பேண வேண்டியுள்ளமை குறித்தும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் ஆண்கள் நுழையும்போது, மேலாடைகளைக் களைய வேண்டும் என்பது கண்டிப்பாகும்.   

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைந்த போது, மேலாடைகளைக் களைந்திருந்தார்கள். 

இந்தச் சமய மரபை இந்துக்கள் அல்லாதோரும் மீறியதில்லை. காரணம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இந்து மதத்தினருக்குச் சொந்தமானது. அங்கு பேணப்படும் நடைமுறைகளை, மாற்று மதத்தினர் அனுசரிப்பது அவர்களை மதிப்பதாக அமையும்.   

ஆனால், இதேபோன்றதொரு பிரத்தியேக செயற்பாட்டை, அரச பாடசாலையொன்றில் நடைமுறைப்படுத்த முடியாது. கோவில்களுக்குள்ளும், பள்ளிவாசல்களுக்குள்ளும், தேவாலயங்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் நடைமுறையில் இருக்கின்ற செயற்பாடுகளை, அரச பாடசாலைகளான பொது நிறுவனங்களுக்குள் கட்டாயப்படுத்தி அமுல்படுத்த நினைப்பது சட்ட விரோதமானதாகும்.  

பழைய நினைவு  

1990ஆம் ஆண்டின் முற்பகுதியில், நடந்த சம்பவமொன்று இங்கு நினைவுக்கு வருகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களைக் கொண்ட இளைஞர் முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. 

முஸ்லிம், சிங்களம், தமிழர் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஏராளமானோர் அந்த முகாமில் கலந்து கொண்டனர். தமிழர்கள்தான் அங்கு குறைவானவர்களாக இருந்தனர்.   

அது கந்தசஷ்டி விரத காலமாகும். முகாமில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள், தமக்கு மச்சம் - மாமிசம் கலக்காத உணவுகள் தேவையென்பதைத் தெரிவித்தனர். 

இதையடுத்து, முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் அனைவரும் இணைந்து, முகாமுக்குப் பொறுப்பான இளைஞர் சேவை உத்தியோகத்தரைச் சந்தித்து,  முகாமில் இருந்த எல்லோருக்கும் சேர்த்து மச்சம் - மாமிசமற்ற, மரக்கறி உணவைத் தயார் செய்து தருமாறு கேட்டோம். இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்காக அவ்வாறு நடந்து கொண்டமையை முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் பெருமையாக நினைத்தார்கள். அந்த நிகழ்வு மறக்க முடியாததாகும்.  

முட்டாள்களின் செயற்பாடு  

ஆனால், இப்போது இந்த மனநிலை ஏன் கணிசமானளவு இல்லாமல் போய் விட்டது என்பது கேள்விக்குரியதாகும். 

மக்களின் மூளைகளுக்குள் இனவாதச் சிந்தனைகள் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு விட்டன. இன்னொருபுறம், இனவாதச் செயற்பாடுகள் அனைத்துக்குப் பின்னாலும், அரசியல்வாதிகள் ஏதொவொரு முகத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.  

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ‘ஹபாயா’ பிரச்சினை உருவானமையை அடுத்து, அந்தப் பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திலும், அதைக் கண்டித்து முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களிலும் இனவாதக் கருத்துகளும், அடுத்த சமூகத்தவரை அவமானப்படுத்துகின்ற சுலோகங்களும் காணப்பட்டமை வெட்கக்கேடானதாகும்.  

‘ஹபாயாவா?’ ‘சேலையா?’ சிறந்த ஆடை என்கிற ‘லூசுத்தனமான’ வாதத்தை முன்வைத்து, தமிழர் அடையாளத்தைக் கொண்ட சிலர், யாரோ முஸ்லிம் பெண்களின் படங்களைப் ‘பேஸ்புக்கில்’ காண்பித்து, அசிங்கமாக எழுதித் தள்ளுகின்றனர்.   

இன்னொருபுறம், முஸ்லிம் பெயர்களுடன் ‘பேஸ்புக்கில்’ செயற்படுகின்ற சிலர், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படத்துக்கு ஆங்காங்கே வட்டமிட்டு, அடையாளப்படுத்தி அந்தப் பிள்ளை தொடர்பில் அருவெறுப்பாக எழுதியிருக்கின்றனர்.   

எல்லா சமூகங்களிலும் இப்படிச் செயற்படுகின்ற முட்டாள்கள் இருக்கின்றார்கள். ஒரு சிறிய நெருப்புப் பொ‌றியைக் காட்டுத் தீயாக இவர்கள் மாற்றி விடுவார்கள். 

எனவே, உணர்வுபூர்வமான விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்கள் இவை குறித்தெல்லாம், ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும்.  

இன்னொருபுறம், முட்டாள்கள் கும்பலாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக, படித்தவர்களும் சேர்ந்து, அவர்களுடன் ஓடவும் கூடாது; ஓடிவிடவும் முடியாது.   

இன்னுமொரு முப்பது ஆண்டுகளுக்கு சந்தோஷங்களைத் தொலைத்து விட்டு, ஓடுவதற்கான வல்லமை, நம்மில் எவருக்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா?  

இந்த விவகாரத்தில் ஆடைகள் பற்றிப் பேசுகின்றவர்களில் அதிகமானோர், தம்மை நிர்வாணப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை நினைக்க வெட்கமாக உள்ளது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆடைகளும்-நிர்வாணங்களும்/91-215204

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இன்னோரு திரியில் ஆதார மூல விடயங்களுடன் சொன்னேனே...

அகதியாக, வாழவந்த நாட்டிலேயே.... அந்த நாட்டு வெள்ளையர்கள் தமது பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போர்க் சோசஜ்.... பாடசாலை உணவில் சேர்க்கப் பட கூடாது என கோரி போராடடம் நடத்தும் கூட்டம் இங்கிலாந்திலேயே இருக்கும் போது....

பிரச்சனை கையில் எடுக்க ஞானசேர சேரர் வந்த பின்னர் தான்.... கொஞ்சம் வாலை சுருட்டுகிறார்கள் என கேள்வி. 

Link to comment
Share on other sites

அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்
 
 

திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.   

ஆனால், சமூக வலைத்தளங்களுக்கே உரித்தான பாணியில், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், ஒரு கட்டத்தில் இனவெறுப்பு ரீதியிலும், மற்றைய தரப்பின் கருத்துகளைச் செவிமடுக்காமல் போவதிலும் காணப்படுகிறது. துருவப்பட்டுப் போயுள்ள நாட்டில், சமூக வலைத்தளங்கள் தான், உச்சநிலைத் துருவப்படுத்தப்பட்ட இடங்களாக இருக்கின்றன. எனவே, தமது பகுதி நபர்களின் அங்கிகாரத்தையும் “விருப்பு”களையும் பெறுவதற்காக, கடும்போக்குக் கருத்துகள் பகிரப்படுவதைக் காணக்கூடியாக இருக்கிறது.   
ஒருபக்கமாக, “தமிழ்ப் பாடசாலையென்றால், அதன் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, சேலை தான் அணிய வேண்டும்” என்று ஒரு பகுதி சொல்கிறது. மறுபக்கமாக, “அபாயா என்பது எமது கலாசாரம். அதை அணிந்து தான் தீர வேண்டும்” என்று, மறுபகுதி சொல்கிறது. இவற்றுக்கிடையில் சிக்கி, யதார்த்தமும் மிதவாதமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.   

இலங்கையின் பெரும்பான்மையான பாடசாலைகளில், ஆசிரியைகள் சேலையையும், ஆண் ஆசிரியர்கள் மேலைத்தேய உடையும் அணிவது தான் வழக்கமானது. ஆனால், முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள ஆசிரியைகள், அபாயா அல்லது ஹிஜாப் அணிவதொன்றும் புதிதானதும் கிடையாது.   

இப்போது எழுந்திருக்கும் பிரச்சினையெல்லாம், முஸ்லிம் பாடசாலை என்று அறியப்படாத தமிழ்மொழி மூலமான பாடசாலையில், ஆசிரியையொருவர் அபாயா அணிவதற்கு முயன்றாரெனவும், அம்முயற்சி தடுக்கப்பட்டதெனவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.   

அவ்வாசிரியை அபாயா அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், இப்பாடசாலைகளிலுள்ள முஸ்லிம் ஆசிரியைகள், இதற்கு முன்னர் அபாயா அணிவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். ஆகவே, புதிய பழக்கமொன்றை உட்புகுத்துவதற்கு இவ்வாசிரியை முயல்கிறார் என்பது, அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.   

இது தொடர்பாக ஆராய்ந்த போது, முஸ்லிம் ஆசிரியைகளில் பெரும்பாலானோர், சேலை அணிந்து, மேலதிகமாக தலையை மூடியும் இருப்பது தான் வழக்கமென்பதை அறிய முடிந்தது. எனவே, “இதுவரையில் இல்லாத வழக்கம்” என்பதை, ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.   

ஆனால், இதுவரையில் இல்லாத வழக்கம் என்பது, அபாயாவை ஒருவர் அணிவதற்கான உரிமையைத் தடுப்பதற்கு வலிதான காரணமா என்று கேட்டால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது. இதற்கு முதல் அவ்வாறான பழக்கம் இல்லையென்பதற்காக, ஏனைய பாடசாலைகளில் ஆசிரியைகள் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட ஓர் ஆடையை அணிவதற்கு, பெண்ணொருவருக்கு உரிமை மறுக்கப்படுதல் என்பது, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று கிடையாது. ஆகவே, அக்காரணத்தை, வலிதானதொரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது.   

இவ்வாறான “நொண்டிச் சாட்டுகள்” குறித்த விமர்சனங்களை முன்வைக்கும் போது, அபாயாவை ஆதரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக, சமூக ஊடக வலையமைப்புகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இது தான், இருப்பதில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.   

அபாயாவையும் அதன் அரசியலையும் எதிர்த்துக் கொண்டே, அபாயா அணிவதற்கான உரிமைக்காகக் குரல்கொடுப்பதென்பது, சாத்தியமான ஒன்று தான். அபாயாவை முற்றுமுழுதாக எதிர்த்துக் கொண்டே, அதை அணிவதற்கான உரிமைக்கு முற்றுமுழுதான ஆதரவை வழங்கலாம் என்பதை, எம்மில் பலர் புரிந்துகொள்வதில்லை.   

வோல்ட்டையர் கூறியதாகப் பரவலாகக் கூறப்படும், ஆனால் எவெலின் பீட்ரிஸ் ஹோல் எழுதினாரென ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும், “நீங்கள் சொல்வதை நான் நிராகரிக்கிறேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமைக்காக, என்னுடைய மரணம் வரை போராடுவேன்” என்ற கருத்தைத் தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்து அல்லது பண்பாட்டைக் கூட, சொல்வதற்கோ அல்லது பின்பற்றுவதற்கோ உரிய உரிமையை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு செய்வது தான், உண்மையான ஜனநாயகப் பண்பாகும்.   

அபாயா என்பது ஆணாதிக்கத்தின் அடையாளம் என்று சொல்லிக் கொண்டே, அதை அணிய வேண்டாம் என்ற முடிவை நாங்களே எடுப்போம் என்பது, ஆபத்தான, இரட்டை நிலைப்பாடு. அபாயாவை, பெண்களிடத்தில் திணிக்கும் பண்பாட்டுக்கும், அணிய வேண்டாம் எனத் திணிக்கும் பண்பாட்டுக்கும் இடையில், பெரிதளவுக்கு வித்தியாசங்கள் இல்லை என்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.   

முன்வைக்கப்படுகின்ற இன்னொரு விமர்சனமாக, அபாயா என்பது, இலங்கைப் பண்பாட்டில், இதற்கு முன்னைய காலங்களில் பெரிதளவுக்கு இல்லாத ஒன்று எனவும், அண்மைக்காலமாகத் தான் பரப்பப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது என்பதுவும் காணப்படுகிறது. இது, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துத் தான்.   

சவூதி அரேபியா பின்பற்றும் இஸ்லாத்தின் வடிவத்தை, உலகம் முழுவதும் பரப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பது, சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படுகின்ற ஒரு விமர்சனமாக இருக்கிறது. வஹாபிஸம் என்று சொல்லப்படுகின்ற இவ்வகை, இஸ்லாத்தின் கடும்போக்கு வடிவமாகக் கருதப்படுகிறது. இதில் தான், அபாயா அணிவதென்பது கட்டாயமானதாகக் கருதப்படுகிறது.   

ஓரளவுக்குத் தாராளவாத அல்லது முற்போக்குவாத மக்களைக் கொண்டிருந்த இலங்கையின் முஸ்லிம் சமூகம், இஸ்லாத்தின் கடும்போக்கு வடிவத்தின் சில வடிவங்களைப் பின்பற்றுவதென்பது, நிச்சயமாகவே ஆரோக்கியமான ஒரு விடயம் கிடையாது. ஈரானில் இடம்பெற்ற “இஸ்லாமியப் புரட்சி”யின் பின்பும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தின் பின்பும், அங்கிருந்த மக்களின், குறிப்பாக பெண்களின் நடை, உடை, பாவனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, தெளிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இம்மாற்றம் குறித்த கலந்துரையாடல்கள் அவசியமானவை.   

ஆனால் முஸ்லிம்களல்லாதோர், இது தொடர்பான முடிவுகளை எடுத்தலென்பது, ஆரோக்கியமானது கிடையாது. இது தொடர்பான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதும், கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதும் தான், இதில் செய்யக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது. மாறாக, இவ்விடயம் தொடர்பான முடிவொன்றை எடுத்து, அதைத் திணிப்பதென்பது, எந்த வகையிலும் சரியான ஒன்று கிடையாது.   

உலகின் பல்வேறு சமுதாயங்களின் பண்பாட்டு மாற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் போது, முடிவாகக் கிடைக்கின்ற ஒரே ஒரு விடயம் தான் இருக்கிறது: மாற்றங்கள், உள்ளிருந்து ஏற்பட வேண்டும்; மாறாக, வெளியிலிருந்து திணிக்கப்படும் மாற்றங்கள், ஆரோக்கியமானவையாக அமைவது கிடையாது.   

மறுபக்கமாக, அபாயாவை நியாயப்படுத்தும் சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக இருந்தது. “பெண்கள், விரும்பித் தான் அணிகிறார்கள்” என்பது, பொதுவான கருத்தாக இருந்தது. இவ்வாறான நியாயப்படுத்தல்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் முன்வைக்கப்படுகின்றவையாகத் தான் இருக்கின்றன.   

ஆனால், உலகம் முழுவதிலும் இடம்பெறும் விடயங்களை ஆராய்வோருக்கு, இக்கருத்தின் உண்மையற்ற தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். “அபாயா/ஹிஜாப் அணிய மறுத்த பெண்ணை, வெட்டி/அடித்துக் கொன்றார் தந்தை/சகோதரன்” போன்ற வகையறாச் செய்திகளை, கிட்டத்தட்ட தினசரி பார்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சில நாட்களுக்கு முன்னரும் கூட, இளம் பெண்ணொருவரின் தலையை மூடும் துணி, அவரது தலையை முழுமையாக மூடியிருக்கவில்லை எனத் தெரிவித்து, ஈரானின் “நன்னெறிப் பொலிஸ்” பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், அப்பெண்ணைத் தாக்கும் காணொளி வெளியாகியிருந்தது. இது, ஈரானிலும் உலகிலும், பெண்களின் ஆடைத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்களை, மீளவும் ஆரம்பித்திருக்கிறது.   

எனவே, “அனைத்துப் பெண்களும், அபாயாவை விரும்பித் தான் அணிகிறார்கள்” என்பது, அப்பட்டமான பொய்யாகும். ஒரு குறிப்பிட்ட பிரிவினர், விரும்பி அணிவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் மறுபக்கமாக, இன்னொரு தரப்பினர், நேரடியான அச்சுறுத்தல்கள் காரணமாக அணிகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதேபோல், “அபாயா அணியாவிட்டால், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவோம்” என்ற அச்சத்தின் காரணமாக, அபாயா அணிவோரும் இருக்கின்றனர்.   
இந்த மூன்று பிரிவினரில், விரும்பி அணியும் பிரிவினர், அபாயாவை அணிவதற்கான உரிமைக்காகப் போராடும் அதேவேளையில், அடுத்த இரு பிரிவினரும், தாங்கள் விரும்பும் ஆடையை அணிவதற்கான உரிமையை அடைவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காகப் போராட வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் இருக்கிறது.   

அபாயாவை எதிர்ப்பதில் மாத்திரம் ஈடுபடுவதோ அல்லது அபாயாவை ஆதரிப்பதில் ஈடுபடுவதோ, எந்தவிதத்திலும் நேர்மையான செயற்பாடாக இருக்காது என்பதை, இவை தொடர்பான விவாதங்களில் பங்குபற்றுவோர் புரிந்துகொள்வது, இது தொடர்பான விவாதத்தை, ஆரோக்கியமாகவும் முன்னேற்றத்தை நோக்கியதாகவும் கொண்டுசெல்வதற்கு வசதியாக இருக்கும். மாறாக, வெறுமனே விருப்புகளையும் வெறுப்புகளையும் முன்கொண்டு செல்வதற்காக இவ்விவாதத்தை நடத்துவதை விட, அதை நடத்தாமலிருப்பதே, அபாயா அணியும் பெண்களுக்குச் செய்கின்ற உதவியாக இருக்கும் என்பதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அபாயாக்களும்-உரிமைகளும்-யதார்த்தங்களும்/91-214992

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:
ஆடைகளும் நிர்வாணங்களும்
 

ஒரு கதை சொல்லவா?  

‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.  

இப்போது, தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஆசிரியை, என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

இந்த விடயத்தில், தமிழர் சமூகத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இது தொடர்பில், தமிழ் ஊடகங்கள் எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பதை ஊகிக்க உங்களால் முடிகிறதா?  

சீருடை  

இலங்கையிலுள்ள அரச தொழில்களில் சிலவற்றுக்கு மட்டுமே சீருடைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொலிஸ், முப்படை, தாதியர், கலால் உத்தியோகத்தர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள், சீருடைகளை அணிந்தே ஆகவேண்டும். 

image_07383b1c77.jpg

மதம், கலாசார அடையாளங்களுக்கு ஏற்றவாறு இந்தத் தொழில்களுக்கான சீருடைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மேற்படி தொழில்களை மேற்கொள்கின்றவர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.  

ஆனால், இலங்கையில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கென எவ்விதமான சீருடைகளையும் அரசு இதுவரை நிர்ணயிக்கவில்லை. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஆசிரியர்களுக்கான ஒழுக்கக் கோவையில், ‘சீரான ஆடைகளை ஆசிரியர்கள் அணிய வேண்டும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சீரான’ என்பதற்குரிய வரையறை என்ன என்பது தொடர்பில், விளக்கங்கள் எவையுமில்லை.  

தாய்ச் சட்டம்  

இந்த இடத்தில், நமது நாட்டின் தாய்ச் சட்டமான அரசமைப்பின் மூன்றாவது அத்தியாயம் அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது.  

அதில் 14(உ) பிரிவு, ‘ஒவ்வொரு பிரஜையும் தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ, நம்பிக்கையையோ வழிபாட்டிலும் உபசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கு உரித்துடையவராவார்’ என்று கூறுகிறது. அதேபோன்று, 14(ஊ) பிரிவில், ‘தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து, தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரம், ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், அவர்களுக்கு விருப்பமான, ‘ஹபாயா’ எனும் ஆடையை அணிந்து செல்வதற்கு, அந்தக் கல்லூரியின் நிர்வாகம் தடை விதித்ததால், எழுந்த பிரச்சினைகள் குறித்து அறிவோம்.   

முஸ்லிம் ஆசிரியைகள் ‘ஹபாயா’ அணிவதற்கு எதிராக, சண்முகா கல்லூரி சமூகத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதும், அதைத் தொடர்ந்து, அங்கு கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியர்களும், தற்காலிகமாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டமையும் அறிந்தவைகளாகும்.   

இந்த விவகாரத்தில் பல்வேறு விதமான அபிப்பிராயங்களும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இருந்தபோதும், இது தொடர்பாக நீதி மற்றும் நியாயம் என்கிற மதிப்புக்குரிய விடயங்கள் இருக்கின்றமை குறித்து மறந்து விடலாகாது.   

 சமூக நல்லிணக்கம்  

சமூக நல்லிணக்கம் என்கிற வாசகமொன்று குறித்து, அநேகமாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் அதை உச்சரிக்கின்றோமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.  

 ‘வேறுபாடுகளைக் கடந்து ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்து கொள்வது, ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது, ஓர் இனத்தை மற்றோர் இனம் அனுசரித்துச் செல்வது, சமூக நல்லிணக்கமாகும்’ என்று கூறப்படுகிறது.   

‘ஏதேனும் பன்மைத்துவ சூழலில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை மதித்தல், ஒன்றாகக் கூடி வாழ்தல், தாம் விரும்பும் கருத்துகள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஏனையவர்களுடன் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மையுடன் செயற்படுதல் சமூக நல்லிணக்கமாகும்’ என்கிற வரைவிலக்கணமொன்றும் உள்ளது.  

‘ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது’ என்கின்ற அம்சம் இங்கு முக்கியமானதாகும். அதுவும் இலங்கை போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டில், மற்றைய சமூகத்தின் செயற்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல், நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.  

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும், பொது நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகின்றன. எனவே, அங்கு எந்தவொரு சமூகத்தவரின் மதத்தையோ, கலாசாரத்தையோ உயர்த்திப் பிடிக்க முடியாது. 

முஸ்லிம் பாடசாலையொன்றில் கற்பிக்கும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரை, ‘ஹபாயா’ உடுத்த வேண்டும் என்று, அந்தப் பாடசாலையின் நிருவாகம் வற்புறுத்துவது எத்தனை அநீதியோ, அதேபோன்றதொரு செயற்பாடுதான் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஆசிரியர்களைச் சேலை உடுத்துமாறு, அந்தப் பாடசாலையின் நிர்வாகம் வற்புறுத்தியமையுமாகும்.   

சண்முகா இந்துக் கல்லூரிக்குள் முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் ‘ஹபாயா’ அணிந்து செல்கின்றதாலோ, முஸ்லிம் பாடசாலைக்குள் தமிழர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சேலையுடுத்திக் கொண்டு செல்கின்றமையாலோ, சம்பந்தப்பட்டோரின் கலாசாரங்களில் என்னதான் சீரழிவுகள் ஏற்பட்டு விடப்போகின்றன?   

அடுத்த சமூகத்தவரின் செயற்பாடுகளை சகித்துக் கொண்டு, அவற்றை அனுமதிப்பதில்தான் சமூக நல்லிணக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக, நம்மில் கணிசமானோர் உள்ளனர்.   

சிங்கள பாடசாலைகளில் ‘ஹபாயா’  

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள, கிறிஸ்தவ பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், தாம் விரும்பியவாறு ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான், கடமைக்குச் செல்கின்றனர் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.   

அதேபோன்று, முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசியர்களும், அவர்களின் விருப்பத்துக்குரிய ஆடை வகையான சேலையை, அணிந்து கொண்டு செல்வதற்கு எவ்வித தடைகளுமில்லை.  

குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம், சென் ஜோசப் கல்லூரி, வித்தியாலோக சிங்கள வித்தியாலயம் மற்றும் கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயம் உள்ளிட்ட, முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத மாற்று இனத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில், கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியைகள், ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான் செல்கின்றனர்.   

அவர்களின் ஆடைகளுக்கு அங்கு எவ்வித எதிர்ப்புகளுமில்லை. அதிலும், கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் பௌத்த மதகுருவாக இருந்து கொண்டே, முஸ்லிம்களின் ‘ஹபாயா’ ஆடையைத் தமது பாடசாலையில் அனுமதித்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்டி ஆகவேண்டும்.  

மொட்டைத் தலையும் முழங்காலும்  

இந்த விவகாரத்தில் ‘ஹபாயா’ என்கிற ஆடை பற்றிய விமர்சனங்களை சிலர் முன்வைத்துப் பேசுகின்றமை, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும்.  

 ‘ஹபாயா’ ஆடை என்பது, அரேபியக் கலாசாரத்துக்கு உரியதாகும் என்றும், அந்த ஆடை முறைமை, பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் இந்த விவகாரத்தை வைத்து, சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதிலும், முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இந்த விடயத்தில் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறது.   

‘ஹபாயா’ என்கிற ஆடை தேவையா இல்லையா என்பதை, அதை அணிகின்றவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, வெளியிலிருந்து யாரும் அதை முடிவு செய்ய முடியாது.  

இன்னொருபுறம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கலாசாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டு, அவர்களின் ‘ஷேட்’, ‘ட்ரவுசர்ஸ்’, ‘கோட்’ போன்ற ஆடைகளை அணிந்து அழகு பார்க்கும் போது, முஸ்லிம்கள் தமக்கு மிகவும் நெருக்கத்துக்குரிய அரேபிய கலாசாரத்தின் ஆடை முறைமையொன்றைப் பின்பற்றுவதில் குற்றங்கள் எவையும் இருந்து விடவும் முடியாது.  

இன்னொருபுறம், சேலையைக் கூட இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு, முஸ்லிம் பெண்கள் அணிய முடியும் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.   

இலங்கையில் ‘ஹபாயா’ எனும் ஆடை வகை அறிமுகமாவதற்கு முன்னர், சேலைதான் முஸ்லிம்களின் ஆடையாக இருந்தது. தற்காலத்திலும், முஸ்லிம் பெண்களில் கணிசமானவர்கள் சேலை அணிகின்றனர்.   
முஸ்லிம் பெண் ஆசிரியரொருவர், சேலையணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்ல விரும்பினால், அதைத் தாராளமாக அவர் நிறைவேற்ற முடியும்.  

ஆக, முஸ்லிம் பெண்கள் ‘ஹபாயா’ அணிவதா, சேலை அணிவதா என்பது, இங்கு பிரச்சினையான விவகாரமல்ல. ‘சல்வார் கமீஸ்’ என்கிற ஆடைகளையும் முஸ்லிம் பெண்கள், இலங்கையில் அணிகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

 ஆனால், “இந்த ஆடையைத்தான் நீ அணிய வேண்டும்” அல்லது “இந்த ஆடைகளை நீ அணியக் கூடாது” என்று, யாரும் யாருக்கும் நியாயத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவுகளை வழங்க முடியாது.  

ஆடைகள் பற்றிய வரையறை  

ஆடைகள் தொடர்பான வரையறைகள் மற்றும் உத்தரவுகளைச் சில இடங்களில் பேண வேண்டியுள்ளமை குறித்தும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் ஆண்கள் நுழையும்போது, மேலாடைகளைக் களைய வேண்டும் என்பது கண்டிப்பாகும்.   

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைந்த போது, மேலாடைகளைக் களைந்திருந்தார்கள். 

இந்தச் சமய மரபை இந்துக்கள் அல்லாதோரும் மீறியதில்லை. காரணம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இந்து மதத்தினருக்குச் சொந்தமானது. அங்கு பேணப்படும் நடைமுறைகளை, மாற்று மதத்தினர் அனுசரிப்பது அவர்களை மதிப்பதாக அமையும்.   

ஆனால், இதேபோன்றதொரு பிரத்தியேக செயற்பாட்டை, அரச பாடசாலையொன்றில் நடைமுறைப்படுத்த முடியாது. கோவில்களுக்குள்ளும், பள்ளிவாசல்களுக்குள்ளும், தேவாலயங்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் நடைமுறையில் இருக்கின்ற செயற்பாடுகளை, அரச பாடசாலைகளான பொது நிறுவனங்களுக்குள் கட்டாயப்படுத்தி அமுல்படுத்த நினைப்பது சட்ட விரோதமானதாகும்.  

பழைய நினைவு  

1990ஆம் ஆண்டின் முற்பகுதியில், நடந்த சம்பவமொன்று இங்கு நினைவுக்கு வருகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களைக் கொண்ட இளைஞர் முகாம் ஒன்று நடாத்தப்பட்டது. 

முஸ்லிம், சிங்களம், தமிழர் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஏராளமானோர் அந்த முகாமில் கலந்து கொண்டனர். தமிழர்கள்தான் அங்கு குறைவானவர்களாக இருந்தனர்.   

அது கந்தசஷ்டி விரத காலமாகும். முகாமில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள், தமக்கு மச்சம் - மாமிசம் கலக்காத உணவுகள் தேவையென்பதைத் தெரிவித்தனர். 

இதையடுத்து, முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் அனைவரும் இணைந்து, முகாமுக்குப் பொறுப்பான இளைஞர் சேவை உத்தியோகத்தரைச் சந்தித்து,  முகாமில் இருந்த எல்லோருக்கும் சேர்த்து மச்சம் - மாமிசமற்ற, மரக்கறி உணவைத் தயார் செய்து தருமாறு கேட்டோம். இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்காக அவ்வாறு நடந்து கொண்டமையை முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் பெருமையாக நினைத்தார்கள். அந்த நிகழ்வு மறக்க முடியாததாகும்.  

முட்டாள்களின் செயற்பாடு  

ஆனால், இப்போது இந்த மனநிலை ஏன் கணிசமானளவு இல்லாமல் போய் விட்டது என்பது கேள்விக்குரியதாகும். 

மக்களின் மூளைகளுக்குள் இனவாதச் சிந்தனைகள் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு விட்டன. இன்னொருபுறம், இனவாதச் செயற்பாடுகள் அனைத்துக்குப் பின்னாலும், அரசியல்வாதிகள் ஏதொவொரு முகத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.  

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ‘ஹபாயா’ பிரச்சினை உருவானமையை அடுத்து, அந்தப் பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திலும், அதைக் கண்டித்து முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களிலும் இனவாதக் கருத்துகளும், அடுத்த சமூகத்தவரை அவமானப்படுத்துகின்ற சுலோகங்களும் காணப்பட்டமை வெட்கக்கேடானதாகும்.  

‘ஹபாயாவா?’ ‘சேலையா?’ சிறந்த ஆடை என்கிற ‘லூசுத்தனமான’ வாதத்தை முன்வைத்து, தமிழர் அடையாளத்தைக் கொண்ட சிலர், யாரோ முஸ்லிம் பெண்களின் படங்களைப் ‘பேஸ்புக்கில்’ காண்பித்து, அசிங்கமாக எழுதித் தள்ளுகின்றனர்.   

இன்னொருபுறம், முஸ்லிம் பெயர்களுடன் ‘பேஸ்புக்கில்’ செயற்படுகின்ற சிலர், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படத்துக்கு ஆங்காங்கே வட்டமிட்டு, அடையாளப்படுத்தி அந்தப் பிள்ளை தொடர்பில் அருவெறுப்பாக எழுதியிருக்கின்றனர்.   

எல்லா சமூகங்களிலும் இப்படிச் செயற்படுகின்ற முட்டாள்கள் இருக்கின்றார்கள். ஒரு சிறிய நெருப்புப் பொ‌றியைக் காட்டுத் தீயாக இவர்கள் மாற்றி விடுவார்கள். 

எனவே, உணர்வுபூர்வமான விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்கள் இவை குறித்தெல்லாம், ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும்.  

இன்னொருபுறம், முட்டாள்கள் கும்பலாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக, படித்தவர்களும் சேர்ந்து, அவர்களுடன் ஓடவும் கூடாது; ஓடிவிடவும் முடியாது.   

இன்னுமொரு முப்பது ஆண்டுகளுக்கு சந்தோஷங்களைத் தொலைத்து விட்டு, ஓடுவதற்கான வல்லமை, நம்மில் எவருக்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா?  

இந்த விவகாரத்தில் ஆடைகள் பற்றிப் பேசுகின்றவர்களில் அதிகமானோர், தம்மை நிர்வாணப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை நினைக்க வெட்கமாக உள்ளது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆடைகளும்-நிர்வாணங்களும்/91-215204

எது மாதிரியான ஆடை உடுத்துவது என்பது அவரவர் விருப்பம், அது செல்லும் இடங்களைப் பொருத்து அமையவேண்டும். என் பார்வையில் நாகரிகமான உடையணிவது என்பதே சரியானது,  கல்வி நிலையம்/மருத்துவமனை/நீதிமன்றம் போன்ற பொதுவிடங்களில் மதம் அல்லது சமூக சார்ந்த அமலாக்கத்தைத் திணிப்பது தவறானது. இதில் இசுலாம், கிறித்துவம் அல்லது இந்து போன்ற மதம் சார்ந்த திணிப்புகள் அறவே கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கல்லூரி முன்பு தனியாருடையதாக இருந்து அரசு பொறுப்பேற்று கொண்டது, இந்து அல்லது சைவ பாரம்பரிய கல்லூரியாகவே பேணப்பட்டது. புதிய ஆசிரியராக பணிக்கு வந்த இஸ்லாமிய சகோதரிக்கு இது சம்பந்தமாக தெளிவுபடுத்தியபோது, தனக்கு சிறிது கால அவகாசம் தருமாறு கூறிவிட்டு, தொடர்ந்து ஹபாயா அணிந்து வந்தது மட்டுமல்லாமல் ஏனைய இஸ்லாமிய சகோதரிகளையும் ஹபாயா அணிய தூண்டியுள்ளார். அதிபர் கண்டித்தபோது அவருடைய கணவரை மூலமாக அச்சுறுத்தியுள்ளார், இதன் பின்னரே கல்லூரி சமூகம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல் இன மக்கள் வாழும் இலங்கையில் எதிர்கால சமுதாயமாகிய மாணவர்களுக்கு சக இனத்தவரது மதம் கலாச்சாரம் என்பவற்றை மதித்து வாழ கற்றுக்கொடுத்து முன்னோடியாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டிய கல்விக்கூடங்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் கேலிக்கிடமானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலையை இலங்கையில் மூவினத்தினரும் உடுத்துகினம்...முஸ்லீம் மார்க்க பாடசாலையில் தமிழ் ஆசிரியை சேலை உடுத்திப் போவது தப்பில்லை. விபூதி,சந்தன பொட்டு வைச்சுப் போனால் தான் தப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. முஸ்லீம் பாடசாலையில் வாத்திமார் வேட்டி கட்டிக் கொண்டு போய் படிப்பிக்க விடுவினமா? 

    சின்னதாய்  வீட்டுக் கொடுக்கப் போய் தான் தமிழன் எல்லாம் இழந்து நிற்கிறான் 
     

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.