Jump to content

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’


Recommended Posts

மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.  

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது

காதலரிடையே 'பிரிவும்பிரிதல் நிமித்தமும்ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.

 

 குறுந்தொகைப் பாடல்  எண் - 27

 ஆசிரியர் - வெள்ளிவீதியார்

 திணை - பாலைத்திணை

 தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

 தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்துமனதில் துயரம் குடிகொண்டதோடுபொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

 ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமக் கவினே’’

 

கலம் – பால் கறக்கும் பாத்திரம்நல் ஆன் – நல்ல பசு

தீம் பால் – சுவையான பால்உக்காங்கு – சிந்துதல்/விழுதல்

என்னைக்கும் – என் ``க்கும் – காதலன்

பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது

உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்திதலை – தேமல்

அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)

மாமை – மாந்தளிர் நிறம்கவின் – அழகு 

 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானதுஅதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல்பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல்வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்துஇடையும் நிறம் வெளிறிமேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.

 

தள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறள் காமத்துப்பாலில் "தலைவனைப் பிரிந்து என் மேனி பொலிவிழந்து போகிறதே !" என தலைவி வருந்தும் குறட்பாக்கள் உண்டு. எடுத்துக்காட்டாக 

"கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்லியல் வாடிய தோள்" - உறுப்பு நலன் அழிதல்.

எனினும் "அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " எனும் பொருளில் நான் அறிந்த வரை இல்லை - பிரிவுத் துயரில் எந்தவொரு தலைவிக்கும் தோன்றும் இயற்கையான உணர்வுதான் என்ற போதிலும். வீணாகும் வனப்பு, நிலத்தில் வீழும் நல்லாவின் தீம்பால் எனும் உவமை அருமை. இன்னும் சொல்லுங்கள் , அருள்மொழிவர்மன் !

Link to comment
Share on other sites

  • 7 months later...

அருமையான பாடல். ஆனால் இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளின் பொருள்  மிகவும் ஆழமானவை... அந்தரமானவை. 

"பசலை இனிஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே’’

இந்த வரிகளில் மூன்று தமிழ் சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள் கொள்ளுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இந்தப் பாடலின் சுவை/பொருள் வேறாகும்.

பசலை - பெண் உடல் மெலியும்போது ஏற்படும் நிற மாறுபாடு.
திதிலை - பெண் உடல் விரியும்போது ஏற்படும் நிற மாறுபாடு (கருவுற்ற பெண்களின் அடிவயிற்றில், அல்குலில் உருவாவது)
அல்குல் - பெண்குறி மேடு.
தீம்பால் என்பது... சீம்பால் அல்லது கன்று ஈன்ற உடன் சுரக்கும் முதல் பால் என்று கொள்ள வேண்டும்.

இப்பொழுது படியுங்கள் அதன் பொருளை......
நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலை , அதன் கன்றும் உண்ணாமல் , கலத்தையும் சேராமல் நிலம் உண்பது போல், எனது மேனி வனப்பு எனக்கும் உதவாமல் எனது தலைவனுக்கும் உதவாமல், உவகையால் வளர்ந்து விரிந்த மாந்தளிர் நிற அல்குலை தேமல் தின்று விடுகிறது.

ஜெயமோகன் இதுபற்றி விரிவாக ஒரு பதிவே இட்டுள்ளார். பதிவு இங்கே

Link to comment
Share on other sites

On 1/2/2019 at 1:35 PM, ஆதித்ய இளம்பிறையன் said:

அருமையான பாடல். ஆனால் இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளின் பொருள்  மிகவும் ஆழமானவை... அந்தரமானவை. 

"பசலை இனிஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே’’

இந்த வரிகளில் மூன்று தமிழ் சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள் கொள்ளுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இந்தப் பாடலின் சுவை/பொருள் வேறாகும்.

பசலை - பெண் உடல் மெலியும்போது ஏற்படும் நிற மாறுபாடு.
திதிலை - பெண் உடல் விரியும்போது ஏற்படும் நிற மாறுபாடு (கருவுற்ற பெண்களின் அடிவயிற்றில், அல்குலில் உருவாவது)
அல்குல் - பெண்குறி மேடு.
தீம்பால் என்பது... சீம்பால் அல்லது கன்று ஈன்ற உடன் சுரக்கும் முதல் பால் என்று கொள்ள வேண்டும்.

இப்பொழுது படியுங்கள் அதன் பொருளை......
நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலை , அதன் கன்றும் உண்ணாமல் , கலத்தையும் சேராமல் நிலம் உண்பது போல், எனது மேனி வனப்பு எனக்கும் உதவாமல் எனது தலைவனுக்கும் உதவாமல், உவகையால் வளர்ந்து விரிந்த மாந்தளிர் நிற அல்குலை தேமல் தின்று விடுகிறது.

ஜெயமோகன் இதுபற்றி விரிவாக ஒரு பதிவே இட்டுள்ளார். பதிவு இங்கே

@ ஆதித்த இளம்பிறையன், தாங்கள் அளித்த விளக்கம் மிகச்சிறப்பு.

நண்பர் குறிப்பிட்ட இணைப்பை வாசித்தேன், ஆயினும் "தீம்" என்ற சொல் பொதுவாக 'இனிமையான' என்பதைக் குறிப்பதாகவே நினைக்கிறேன் (இங்கு சுவையாக என்பது பொருந்தும்), "சீம்பால்" என்பதில் ஐயமுள்ளது. வேறு ஏதேனும் குறிப்போ அல்லது விளக்கமளித்தால் இன்னும் தெளிவாகும்.

அல்குல் என்ற சொல்லின் பொருளைப் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட பொருள் சரியாகயிருக்கும்.

சீனுவிற்கு ஜெ அளித்த விளக்கம் சிறப்பு. 'காமத்தைப்பேசும்போது அவர்கள் எப்போதுமே நாலுபேர் நடுவே சொல்லத்தக்க பொருளைத்தான் தேடிக்கண்டடைந்தனர்'.

Link to comment
Share on other sites

On 5/10/2018 at 2:35 PM, சுப.சோமசுந்தரம் said:

திருக்குறள் காமத்துப்பாலில் "தலைவனைப் பிரிந்து என் மேனி பொலிவிழந்து போகிறதே !" என தலைவி வருந்தும் குறட்பாக்கள் உண்டு. எடுத்துக்காட்டாக 

"கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்லியல் வாடிய தோள்" - உறுப்பு நலன் அழிதல்.

எனினும் "அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " எனும் பொருளில் நான் அறிந்த வரை இல்லை - பிரிவுத் துயரில் எந்தவொரு தலைவிக்கும் தோன்றும் இயற்கையான உணர்வுதான் என்ற போதிலும். வீணாகும் வனப்பு, நிலத்தில் வீழும் நல்லாவின் தீம்பால் எனும் உவமை அருமை. இன்னும் சொல்லுங்கள் , அருள்மொழிவர்மன் !

@ சுப. சோமசுந்தரம், தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

"அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " - என்பது சரியான பொருளாகவே தெரிகிறது.

நண்பர் மேற்குறிப்பிட்ட குறளின் பொருள் இப்பாடலுடன் ஒத்துப்போகிறது.

"காதலன் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலால்' தோள்கள் வாடின; தொடிகள் (கைவளை) கழன்றன என்று தலைவி இங்கு கூறுகிறாள்.

 காதலனைப் பிரிந்திருப்பது அவ்வளவு கொடுமையா 🤔? -  அனுபவமுள்ள யாழ் நண்பர்கள் யாராவது விளக்கமளிக்க முன்வர வேண்டும் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அருள்மொழிவர்மன் said:

@ சுப. சோமசுந்தரம், தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

"அவர்க்கும் உதவாது எனக்கும் உதவாது வீணாகிறதே ! " - என்பது சரியான பொருளாகவே தெரிகிறது.

நண்பர் மேற்குறிப்பிட்ட குறளின் பொருள் இப்பாடலுடன் ஒத்துப்போகிறது.

"காதலன் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலால்' தோள்கள் வாடின; தொடிகள் (கைவளை) கழன்றன என்று தலைவி இங்கு கூறுகிறாள்.

 காதலனைப் பிரிந்திருப்பது அவ்வளவு கொடுமையா 🤔? -  அனுபவமுள்ள யாழ் நண்பர்கள் யாராவது விளக்கமளிக்க முன்வர வேண்டும் !!!

குறுந்தொகைப் பாடலுக்கு நீங்கள் கூறிய பொருளிலிருந்து நான் மாறுபடவில்லை. 'இருவருக்கும் பயனில்லாமல் வீணாகிறதே' என்ற பொருளில் வேறு எங்கும் (குறளில் கூட) நான் பார்த்ததில்லை. அந்த வகையில்‌ அப்பாடல் என் சிறிய வாசிப்புக்கு எட்டிய வரையில் தனித்துவமானது என்று கூற விழைந்தேன். தங்கள் கவனத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.