Jump to content

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!

கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது? 

இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள். 

இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.

கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

கனடா அரசு உலகின் பல பாகங்களிலிருந்தும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உதவியுள்ளது. அதற்காக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து , அனைவராலும் நன்கு அறியப்பட்ட யுத்தச்சூழல் நிலவிய நாடுகளிலிருந்து வந்த அகதிகள் விடயத்தில்  சிரியா அகதிகளை ஏற்றுக்கொண்டதைப்போல் , அனைவரையும் அகதியாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கு அவ்விதமான சூழல் நிலவிய காலகட்டத்தில் . ஒவ்வொருவரையும் தனித்தனியாக அகதியென்று நிரூபி என்று கேட்டது சரியானதாகத் தெரியவில்லை. தற்போது , யுத்தம் முடிவடைந்த சூழலில் வருபவர்களை வேண்டுமானால் அவ்விதம் கேட்கலாம். ஆனால் அன்று யுத்தம் கனன்று எரிந்து கொண்டிருந்த சூழலில் வந்தவர்களை அவ்விதமாகக் கேட்டிருக்கத்தேவையில்லை. அக்காலகட்டத்தில் தமிழர் நலன்களைப் பேணுவதாகப் பீற்றிக்கொள்ளும் தமிழர் அமைப்புகள் அரசைத் தம் அரசியல் பலத்தை வைத்து இவ்விதமானதொரு கோரிக்கையினைச் செவிமடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்க வேண்டுமல்லவா? இவ்விதம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைப்பாதுகாப்பதற்குரிய , ஆதரவளிப்பதற்குரிய  செயற்திட்டங்களைச் செயற்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?  இவை இல்லாதபடியால் தானே அண்மையில் 'டொராண்டோவில்' தொடர் கொலையாளியான புரூஸ் மக் ஆர்தரின் கைகளிலகப்பட்டுச் சமூகத்திலிருந்தே ஒதுங்கி, யாராலும் கைவிடப்பட்ட நிலையில், MV Sun Sea கப்பலில்  வந்திறங்கி அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கிருஷ்ண குமார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அகதி மரணமாக வேண்டியேற்பட்டது? இவர் மறைவின் பின்னரே இவரது நிலை அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது. ஒரினச்சேர்க்கையானவரான புரூஸ் மக் ஆர்தர் அவ்விதமானவர்கள் பலரைப்படுகொலை செய்து ,தான் செய்து வந்த  'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளில்  வீட்டுத்தோட்டங்களில் தான் நிறுவிய பூக்கன்றுச் சட்டிகளில் அவர்களின் உடல்களைத் துண்டுகளாக்கி மண்ணோடு மண்ணாகப் புதைத்து மறைத்து வந்திருக்கின்றார். அவ்விதமாகப்படுகொலை செய்யப்பட்டவர்களில் எட்டாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கிருஷ்ணகுமார்  கனகரத்தினம். ஆனால் இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்லர். எவ்விதம் இவர் புரூஸ் மக் ஆர்தரின் கைகளில் அகப்பட்டார் என்று இக்கொலைகளை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவேளை கிருஷ்ணகுமார் கனகரத்தினம் புரூஸ் மக் ஆர்தர் செய்து வந்துகொண்டிருந்த 'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளுக்கு உதவுமொரு தொழிலாளியாக வேலை பார்த்திருக்கக் கூடும். அவரது நிலையை புரூஸ் மக் ஆர்தர் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும். இக்கோணத்திலும் காவல் துறையினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்?

கிருஷ்ணகுமார் கனகரத்தினம் இங்குள்ள தமிழர் அமைப்புகளை, ஊடகங்களை இனியாவது விழிப்புற வைக்க வேண்டும். வாக்குக் கேட்டு உங்களை நாடும் தமிழ் அரசியல்வாதிகள் உங்களிடம் வரும்போது கேளுங்கள்: "அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட மக்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளை இதுவரை எடுத்தீர்கள்?"

கேளுங்கள் மக்களே! கேளுங்கள்! பதில் கூற வேண்டிய தார்மீகக் கடமை இதற்காகவே அரச நிதி பெறும் இவ்வமைப்புகளுக்கு , ஊடகங்களுக்கு உண்டு? இனியாவது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படும் அகதிகள் விடயத்தில் அவர்கள் நலன்களைப்பொறுப்பேற்கும் வகையில் தமது செயற் திட்டங்களை வகுத்துத் தமிழர் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் செயற்படட்டும்.


கிருஷ்ணகுமார் கனகரத்தித்தின் மரணம் பற்றி சிபிசி தொலைக்காட்சி நிலைச் செய்திப்பிரிவால் வெளியிடப்பட்ட செய்தி இது. இதனை அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478

அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.

37 வயதான கனகரத்தினத்தின் இறப்பு, முன்பே திட்டமிடப்பட்டு வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையென (first-degree murder) புரூஸ் மக்ஆதர் மேல் இன்று காலை குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேறு ஏழு ஆண்களின் இறப்புத் தொடர்பாக, இந்தத் தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப்பதாகக் ஏற்கனவே  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்று கொலைகளைச் செய்ததாகக் குற்றங்கள்சுமத்தப்பட்டிருக்கின்றன.  

ரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Mallory Crescentஇல், தரைத் தோற்றத்தை அழகுபடுத்துவராக மக்ஆதர் வேலைசெய்த ஒரு வீட்டுத் தோட்டத்தில், பூக்கன்றுகள் நடும் சட்டியொன்றில் (garden planter) கனகரத்தினத்தின் இறந்த உடலைக் கண்டெடுத்ததாக இந்த வழக்கின் முக்கிய புலன்விசாரணையாளரான Det.-Sgt. Hank Idsinga செய்தியாளர் செய்திமாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

"அவரைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக உள்ளது," என CBC செய்திகளுக்கு, T. பிரணவன் கூறினார். "இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம் அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம்."

2010 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மாதப் பயணத்தின் பின்னர், தாய்லாந்திலிருந்து B.C. கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த, 492 அடைக்கலம் தேடிய இலங்கையர்களில் இருவராக பிரணவனும் கனகரத்தினமும் இருந்தார்கள்.

அந்தப் பயணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல் காரணமாக அகதி அந்தஸ்தைக் கோரினார்கள், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் அவர்களில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.

கனகரத்தினத்தைத் தான் சந்தித்திருந்ததாக CBC செய்திகளுக்குக் கூறிய, அந்தச் சரக்குக் கப்பலில் வந்திருந்தவர்களின் அகதிக் கோரிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வன்கூவர் குடிவரவுச் சட்டத்தரணிகளில் ஒருவரான Gabriel Chand, கனகரத்தினத்தை "நல்ல மனிதர்," எனப் பல தடவைகள் விபரிக்கிறார், ஆனால் கனகரத்தினத்தின் வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.   

"மென்மையாகப் பேசும் ஒருவராக அவர் இருந்தார்," என்கிறார் அவர். "ஒப்பீட்டளவில் அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார்." MV Sun Sea கப்பலில் பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகத் தான் அனுதாபப்பட்டதாகக் கூறும் Chand, அதேநேரத்தில், கனகரத்தினத்தின் அனுபவத்தைப் பற்றிக் "குறிப்பாகத்" தான் கவலையடைந்ததை நினைவுகொள்கிறார்.

"அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார், அதன்பின்னர் இப்படியொரு முடிவு அவருக்கு வந்திருப்பது மிகவும் கொடுமையானது", என்றார் அவர்.

கனகரத்தினமும் தானும் தங்களுடைய சகோதரர்களைப் போரில் இழந்திருந்ததாகவும், தங்களுடைய அனுபவங்களைத் தாங்கள் அந்தக் கப்பலில் பகிர்ந்துகொண்டிருந்ததாகவும் பிரணவன் கூறினார். கனடாவுக்கு வந்தபின்னர் தாங்கள் அதிகம் கதைக்கவில்லை என்றும், ஆனால், கனகரத்தினம் பற்றிய Facebook பதிவொன்றைக் கடந்த வருடம் தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

"உறவினர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற படங்களை Facebookஇல் நான் பார்த்தேன், எனவே, அவர் ஒளிந்திருக்கக்கூடுமென எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்", என்கிறார் பிரணவன்.  "உண்மையிலேயே நான் மிகவும் வருந்துகிறேன்."

கனகரத்தினத்தின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் ஒளிந்திருக்கக் கூடுமென எனத் தான் நினைத்ததாகக் கூறுகிறார் பிரணவன் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை

Idsinga இன் கருத்துப்படி கனகரத்தினத்தை ரொறன்ரோவில் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அத்துடன் அவரின் இறப்புக்கு முதல் அவர் ஸ்காபோரோவில் வாழ்ந்தார்.

2015 செப்ரெம்பர் ஆரம்பப் பகுதிக்கும் டிசம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறையினர் நம்புகின்றனர். Selim Esen, 44, Abdulbasir Faizi, 44, Majeed Kayhan, 58, Andrew Kinsman, 49, Dean Lisowick, 47, Soroush Mahmudi, 50, ஸ்கந்தராஜ் நவரத்தினம், 40 ஆகியோரையும் கொலைசெய்ததாக மக்ஆதர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிழல்படம் ஒன்றிலிருந்து கனகரத்தினத்தை புலன்விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். வழமைக்கு மாறன ஒரு நடவடிக்கையாக கனகரத்தினத்தின் இறந்த உடலின் படமொன்றைக் காவல்துறையினர் வெளியிட்டனர். அவர் யாரென அறிந்துகொள்வதற்கான "கடைசி நடவடிக்கை" என இதை Idsinga விபரிக்கின்றார்.

மக்ஆதரின் மின்கணினியின், பல தடவைகள் அணுகப்படும் தரவுகளை விரைவில் பெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்திலிருந்து (cache) அந்தப் படம் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் CBC ரொறன்ரோவுக்கு கூறியிருந்தனர். அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கு Idsinga மறுத்துவிட்டார். கடந்த வாரம் அந்த மனிதரை அடையாளம் கண்டுவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். வாரவிடுமுறை நாட்களை குடும்ப நபர்களைத் தொடர்புகொள்வதில் தாங்கள் செலவிட்டதாகவும் அவர்களில் பலர் இந்த நாட்டில் இல்லையெனவும் Idsinga குறிப்பிட்டார்,

மக்ஆதருடன் கனகரத்தினத்துக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும், பலியாக்கப்பட்ட ஏனையவர்களில் அனேகமானவர்களுக்குத் தொடர்பிருக்கும் Gay Village (ஓரினச் சேர்க்கையுள்ளவர்கள் வதியும் இடம்) உடன் அவரைத் தொடர்புபடுத்தும் ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் Idsinga கூறுகிறார்.

"இந்த வழக்குடன் தொடர்பாக நாங்கள் அறிந்திருந்த ஏனையவர்களின் விபரங்களுடன் அவர் சரியாகப் பொருந்தவில்லை," என்றார் Idsinga.

மக்ஆதரை எப்படிக் கனகரத்தினம் சந்தித்திருப்பார் என்பது பற்றி அவருக்கு "எதுவும் தெரியாது" எனினும், MV Sun Seaஇல் கனடாவுக்கு வந்தவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமாகவிருந்தது என்று CBC செய்திகளுக்குப் பிரணவன் கூறினார்.

"கனடாவுக்குள் நுழைந்தபோது எங்களுக்கொரு பிரகாசமான எதிர்காலத்தைக் கனடா தருமென நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நேரத்தில் கனடா எங்களைப் பெரிதாக வரவேற்கவில்லை. அதைப் பற்றி உண்மையிலேயே நாங்கள் வருத்தமும் கவலையும் அடைகிறோம்," என்று பிரணவன் கூறினார்.

இதன் ஆங்கில வடிவம்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-serial-killer-bruce-mcarthur-s-latest-victim-came-to-canada-on-mv-sun-sea-to-protect-his-life-1.4622216??

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4515:2018-04-28-13-08-52&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய அகதிகளைபோல கனடா ஏன் இலங்கை அகதிகளை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு விடை இலகு..

சிரியபோரில் அகப்பட்ட மக்கள் ஒன்று அங்கே வாழ்ந்தார்கள்,அல்லது இறந்தார்கள், அல்லது உலகின் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்,

மற்றையது மேற்குலகத்தின் பரம வைரியான ரஷ்யாவின் ஆதிக்கம் சிரியாவில் இருந்ததும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு ஒரு காரணம்..

ஆனால் இலங்கை அகதிகள் என்று சொல்லப்படுவோர் இறுதியுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில்கூட

கல்யாணம் கட்ட கொழும்புக்கு போனார்கள், கண்டி நுவரெலியா என்று தேனிலவு சுற்றுலாவுக்கு போனார்கள்...

புலம்பெயர்ந்த நாடுகளில்கூட அந்த காலகட்டத்தில் பார்ட்டிகள்,விழாக்கள் என்று அலைந்தவர்களும்..

 2009 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அஜீஸ்சா ரவியா வெல்லுவார்கள் என்று அறிய வீடியோகடையில் சிடி வாங்க அலைந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்....

முடிவாக சொல்லபோனால்,  ஓர் ஆண்டில் இலங்கையில் உயிராபத்து அங்கே தமிழர்களால் வாழமுடியாது என்று சொல்லி அகதிதஞ்சம் கேட்பவர்கள் தொகையைவிட...

அதே ஆண்டில் கனடா மற்றும் மேற்குலக பாஸ்போட்டுகளுடன்  இலங்கை நோக்கி களியாட்ட நிகழ்வுகளுக்கு புறப்பட்டு சென்றவர்கள்/செல்பவர்களின் தொகை அதிகம்..

அப்புறம் எந்த வகையில் கனடா பிரதமர் இலங்கை அகதிகளை போய் விமான நிலையத்தில் வரவேற்பார்?

போனா...இலங்கைக்கு ஜாலியா கிளம்பி செல்பவர்களுக்கும் ஒரு ஹாய் சொல்லவேணெடி வருமே.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2018 at 7:47 AM, கிருபன் said:

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!

கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது? 

இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள். 

இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.

கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

கனடா அரசு உலகின் பல பாகங்களிலிருந்தும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உதவியுள்ளது. அதற்காக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து , அனைவராலும் நன்கு அறியப்பட்ட யுத்தச்சூழல் நிலவிய நாடுகளிலிருந்து வந்த அகதிகள் விடயத்தில்  சிரியா அகதிகளை ஏற்றுக்கொண்டதைப்போல் , அனைவரையும் அகதியாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கு அவ்விதமான சூழல் நிலவிய காலகட்டத்தில் . ஒவ்வொருவரையும் தனித்தனியாக அகதியென்று நிரூபி என்று கேட்டது சரியானதாகத் தெரியவில்லை. தற்போது , யுத்தம் முடிவடைந்த சூழலில் வருபவர்களை வேண்டுமானால் அவ்விதம் கேட்கலாம். ஆனால் அன்று யுத்தம் கனன்று எரிந்து கொண்டிருந்த சூழலில் வந்தவர்களை அவ்விதமாகக் கேட்டிருக்கத்தேவையில்லை. அக்காலகட்டத்தில் தமிழர் நலன்களைப் பேணுவதாகப் பீற்றிக்கொள்ளும் தமிழர் அமைப்புகள் அரசைத் தம் அரசியல் பலத்தை வைத்து இவ்விதமானதொரு கோரிக்கையினைச் செவிமடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்க வேண்டுமல்லவா? இவ்விதம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைப்பாதுகாப்பதற்குரிய , ஆதரவளிப்பதற்குரிய  செயற்திட்டங்களைச் செயற்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?  இவை இல்லாதபடியால் தானே அண்மையில் 'டொராண்டோவில்' தொடர் கொலையாளியான புரூஸ் மக் ஆர்தரின் கைகளிலகப்பட்டுச் சமூகத்திலிருந்தே ஒதுங்கி, யாராலும் கைவிடப்பட்ட நிலையில், MV Sun Sea கப்பலில்  வந்திறங்கி அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கிருஷ்ண குமார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அகதி மரணமாக வேண்டியேற்பட்டது? இவர் மறைவின் பின்னரே இவரது நிலை அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது. ஒரினச்சேர்க்கையானவரான புரூஸ் மக் ஆர்தர் அவ்விதமானவர்கள் பலரைப்படுகொலை செய்து ,தான் செய்து வந்த  'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளில்  வீட்டுத்தோட்டங்களில் தான் நிறுவிய பூக்கன்றுச் சட்டிகளில் அவர்களின் உடல்களைத் துண்டுகளாக்கி மண்ணோடு மண்ணாகப் புதைத்து மறைத்து வந்திருக்கின்றார். அவ்விதமாகப்படுகொலை செய்யப்பட்டவர்களில் எட்டாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கிருஷ்ணகுமார்  கனகரத்தினம். ஆனால் இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்லர். எவ்விதம் இவர் புரூஸ் மக் ஆர்தரின் கைகளில் அகப்பட்டார் என்று இக்கொலைகளை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவேளை கிருஷ்ணகுமார் கனகரத்தினம் புரூஸ் மக் ஆர்தர் செய்து வந்துகொண்டிருந்த 'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளுக்கு உதவுமொரு தொழிலாளியாக வேலை பார்த்திருக்கக் கூடும். அவரது நிலையை புரூஸ் மக் ஆர்தர் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும். இக்கோணத்திலும் காவல் துறையினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்?

கிருஷ்ணகுமார் கனகரத்தினம் இங்குள்ள தமிழர் அமைப்புகளை, ஊடகங்களை இனியாவது விழிப்புற வைக்க வேண்டும். வாக்குக் கேட்டு உங்களை நாடும் தமிழ் அரசியல்வாதிகள் உங்களிடம் வரும்போது கேளுங்கள்: "அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட மக்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளை இதுவரை எடுத்தீர்கள்?"

கேளுங்கள் மக்களே! கேளுங்கள்! பதில் கூற வேண்டிய தார்மீகக் கடமை இதற்காகவே அரச நிதி பெறும் இவ்வமைப்புகளுக்கு , ஊடகங்களுக்கு உண்டு? இனியாவது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படும் அகதிகள் விடயத்தில் அவர்கள் நலன்களைப்பொறுப்பேற்கும் வகையில் தமது செயற் திட்டங்களை வகுத்துத் தமிழர் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் செயற்படட்டும்.


கிருஷ்ணகுமார் கனகரத்தித்தின் மரணம் பற்றி சிபிசி தொலைக்காட்சி நிலைச் செய்திப்பிரிவால் வெளியிடப்பட்ட செய்தி இது. இதனை அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478

அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.

37 வயதான கனகரத்தினத்தின் இறப்பு, முன்பே திட்டமிடப்பட்டு வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையென (first-degree murder) புரூஸ் மக்ஆதர் மேல் இன்று காலை குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேறு ஏழு ஆண்களின் இறப்புத் தொடர்பாக, இந்தத் தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப்பதாகக் ஏற்கனவே  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்று கொலைகளைச் செய்ததாகக் குற்றங்கள்சுமத்தப்பட்டிருக்கின்றன.  

ரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Mallory Crescentஇல், தரைத் தோற்றத்தை அழகுபடுத்துவராக மக்ஆதர் வேலைசெய்த ஒரு வீட்டுத் தோட்டத்தில், பூக்கன்றுகள் நடும் சட்டியொன்றில் (garden planter) கனகரத்தினத்தின் இறந்த உடலைக் கண்டெடுத்ததாக இந்த வழக்கின் முக்கிய புலன்விசாரணையாளரான Det.-Sgt. Hank Idsinga செய்தியாளர் செய்திமாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

"அவரைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக உள்ளது," என CBC செய்திகளுக்கு, T. பிரணவன் கூறினார். "இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம் அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம்."

2010 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மாதப் பயணத்தின் பின்னர், தாய்லாந்திலிருந்து B.C. கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த, 492 அடைக்கலம் தேடிய இலங்கையர்களில் இருவராக பிரணவனும் கனகரத்தினமும் இருந்தார்கள்.

அந்தப் பயணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல் காரணமாக அகதி அந்தஸ்தைக் கோரினார்கள், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் அவர்களில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.

கனகரத்தினத்தைத் தான் சந்தித்திருந்ததாக CBC செய்திகளுக்குக் கூறிய, அந்தச் சரக்குக் கப்பலில் வந்திருந்தவர்களின் அகதிக் கோரிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வன்கூவர் குடிவரவுச் சட்டத்தரணிகளில் ஒருவரான Gabriel Chand, கனகரத்தினத்தை "நல்ல மனிதர்," எனப் பல தடவைகள் விபரிக்கிறார், ஆனால் கனகரத்தினத்தின் வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.   

"மென்மையாகப் பேசும் ஒருவராக அவர் இருந்தார்," என்கிறார் அவர். "ஒப்பீட்டளவில் அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார்." MV Sun Sea கப்பலில் பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகத் தான் அனுதாபப்பட்டதாகக் கூறும் Chand, அதேநேரத்தில், கனகரத்தினத்தின் அனுபவத்தைப் பற்றிக் "குறிப்பாகத்" தான் கவலையடைந்ததை நினைவுகொள்கிறார்.

"அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார், அதன்பின்னர் இப்படியொரு முடிவு அவருக்கு வந்திருப்பது மிகவும் கொடுமையானது", என்றார் அவர்.

கனகரத்தினமும் தானும் தங்களுடைய சகோதரர்களைப் போரில் இழந்திருந்ததாகவும், தங்களுடைய அனுபவங்களைத் தாங்கள் அந்தக் கப்பலில் பகிர்ந்துகொண்டிருந்ததாகவும் பிரணவன் கூறினார். கனடாவுக்கு வந்தபின்னர் தாங்கள் அதிகம் கதைக்கவில்லை என்றும், ஆனால், கனகரத்தினம் பற்றிய Facebook பதிவொன்றைக் கடந்த வருடம் தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

"உறவினர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற படங்களை Facebookஇல் நான் பார்த்தேன், எனவே, அவர் ஒளிந்திருக்கக்கூடுமென எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்", என்கிறார் பிரணவன்.  "உண்மையிலேயே நான் மிகவும் வருந்துகிறேன்."

கனகரத்தினத்தின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் ஒளிந்திருக்கக் கூடுமென எனத் தான் நினைத்ததாகக் கூறுகிறார் பிரணவன் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை

Idsinga இன் கருத்துப்படி கனகரத்தினத்தை ரொறன்ரோவில் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அத்துடன் அவரின் இறப்புக்கு முதல் அவர் ஸ்காபோரோவில் வாழ்ந்தார்.

2015 செப்ரெம்பர் ஆரம்பப் பகுதிக்கும் டிசம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறையினர் நம்புகின்றனர். Selim Esen, 44, Abdulbasir Faizi, 44, Majeed Kayhan, 58, Andrew Kinsman, 49, Dean Lisowick, 47, Soroush Mahmudi, 50, ஸ்கந்தராஜ் நவரத்தினம், 40 ஆகியோரையும் கொலைசெய்ததாக மக்ஆதர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிழல்படம் ஒன்றிலிருந்து கனகரத்தினத்தை புலன்விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். வழமைக்கு மாறன ஒரு நடவடிக்கையாக கனகரத்தினத்தின் இறந்த உடலின் படமொன்றைக் காவல்துறையினர் வெளியிட்டனர். அவர் யாரென அறிந்துகொள்வதற்கான "கடைசி நடவடிக்கை" என இதை Idsinga விபரிக்கின்றார்.

மக்ஆதரின் மின்கணினியின், பல தடவைகள் அணுகப்படும் தரவுகளை விரைவில் பெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்திலிருந்து (cache) அந்தப் படம் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் CBC ரொறன்ரோவுக்கு கூறியிருந்தனர். அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கு Idsinga மறுத்துவிட்டார். கடந்த வாரம் அந்த மனிதரை அடையாளம் கண்டுவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். வாரவிடுமுறை நாட்களை குடும்ப நபர்களைத் தொடர்புகொள்வதில் தாங்கள் செலவிட்டதாகவும் அவர்களில் பலர் இந்த நாட்டில் இல்லையெனவும் Idsinga குறிப்பிட்டார்,

மக்ஆதருடன் கனகரத்தினத்துக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும், பலியாக்கப்பட்ட ஏனையவர்களில் அனேகமானவர்களுக்குத் தொடர்பிருக்கும் Gay Village (ஓரினச் சேர்க்கையுள்ளவர்கள் வதியும் இடம்) உடன் அவரைத் தொடர்புபடுத்தும் ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் Idsinga கூறுகிறார்.

"இந்த வழக்குடன் தொடர்பாக நாங்கள் அறிந்திருந்த ஏனையவர்களின் விபரங்களுடன் அவர் சரியாகப் பொருந்தவில்லை," என்றார் Idsinga.

மக்ஆதரை எப்படிக் கனகரத்தினம் சந்தித்திருப்பார் என்பது பற்றி அவருக்கு "எதுவும் தெரியாது" எனினும், MV Sun Seaஇல் கனடாவுக்கு வந்தவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமாகவிருந்தது என்று CBC செய்திகளுக்குப் பிரணவன் கூறினார்.

"கனடாவுக்குள் நுழைந்தபோது எங்களுக்கொரு பிரகாசமான எதிர்காலத்தைக் கனடா தருமென நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நேரத்தில் கனடா எங்களைப் பெரிதாக வரவேற்கவில்லை. அதைப் பற்றி உண்மையிலேயே நாங்கள் வருத்தமும் கவலையும் அடைகிறோம்," என்று பிரணவன் கூறினார்.

இதன் ஆங்கில வடிவம்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-serial-killer-bruce-mcarthur-s-latest-victim-came-to-canada-on-mv-sun-sea-to-protect-his-life-1.4622216??

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4515:2018-04-28-13-08-52&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46

கொஞ்சம் பொறுங்கோ... இப்ப தான் GoFundMe create பண்ணிட்டு நினைவேந்தல் வைத்தார்கள்.  Fund சேர்ந்ததும் பாருங்கோ எவ்வளவு விரைவாகவும் விவேகமாகவும் செயல் படுவார்கள் என்று. 

Link to comment
Share on other sites

கனடா அரசு உட்பட மேற்கு நாடுகள் புலிகளுக்கு எதிராக நேரடியாகவும், முதுகில் குத்தியும் செயற்பட்டன. புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஈழத்தமிழ் மக்களை வெத்திலை வைத்து வரவேற்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

சிரியாவில்  மேற்கு நாடுகளால்  ரஸ்யா/சிரியா இராணுவத்துக்கு ஏட்டிக்கு போட்டியாக மேற்கு நாடுகளும் சிரிய மக்களை கொன்று குவித்து வருகின்றனர். அத்தோடு தமது புதிய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாகவும் பாவிக்கிறார்கள். வெளியுலகுக்கு நல்லவர்களாக தங்களை காட்ட மேற்கு நாடுகள் எப்போதும் தயங்குவதில்லை.

தமது  தேவைகளை பொறுத்து  வெத்திலை வைத்து வரவேற்பதா அல்லது  தாமரை இலையில் தண்ணீராக விடுவதா என்பதை மேற்கு நாடுகள் தீர்மானிக்கின்றன. பாரபட்சம் காட்டுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.