Jump to content

அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள்


Recommended Posts

அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள்

 

தஞ்சம் மறுக்­கப்­பட்டும் பயண வழியில் சிக்­கியும்  அவ­தி­யுறும் தமிழ் அக­தி­களின் அவலம்
‘வீர­கே­சரி’ வாச­கர்­க­ளுக்­காக விசே­ட­மாக எழு­தப்­பட்ட இந்த ஆய்வில், தஞ்சம் கோரும் நோக்­குடன் புறப்­பட்டு, வேண்­டிய நாட்­டிற்குப் போய்ச்­சேர முடி­யாமல் இடை வழி­களில் சிக்­குண்டு அவ­லத்தில் வாழும் பல ஆயிரம் தமிழ் அக­திகள் பற்­றியும் பல நாடு­களில் அகதி தஞ்சம் கோரி மறுக்­கப்­பட்ட நிலை­யிலும் வாழும் தமி­ழர்கள் நிலை பற்­றியும் சர்­வ­தேச சட்­டங்­க­ளின்­படி எவ்­வாறு தஞ்சம் கோரு­வது என்­பது பற்­றியும் இலங்கைத் தமிழ் அக­திகள் தற்­போது தஞ்சம் கோரிச்­செல்லும் முக்­கிய நாடான அவுஸ்­தி­ரே­லியா பற்­றியும் மற்­றைய நாடு­களில் தஞ்சம் பற்­றியும், இறு­தி­யாக இலங்கைத் தமி­ழர்கள் தற்­போது உள்ள சூழலில் அர­சியல் தஞ்சம் கோர­மு­டி­யுமா என்ற கேள்­விக்கும் விடை­காண முயற்­சித்­துள்­ளது.

ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களின் ஆசை வார்த்­தை­களை நம்பி பெரும்­தொகைப் பணத்தை இழந்து பல்­வேறு நாடு­களில் தடுப்பு முகாம்­க­ளிலும், சிறை­க­ளிலும், அக­திகள் முகாம்­க­ளிலும் பல இன்­னல்­க­ளுக்கு ஆளாகிக் கொண்­டி­ருக்கும் இலங்கைத் தமி­ழர்கள் பற்­றிய கரி­சனை மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­கி­றது.

ஐ.ஓ.எம்.எனப்­ப­டு­கின்ற சர்­வ­தேச குடி­யே­றி­களின் விவ­கா­ரங்­களில் புள்­ளி­வி­ப­ரங்­களை வெளி­யி­டு­கின்ற நிறு­வனம் அண்­மையில் இலங்கைத் தமி­ழர்கள் அறு­ப­துக்கும் மேற்­பட்ட உலக நாடு­களில் வாழ்­கின்­றார்கள் என தகவல் வெளி­யிட்­டுள்­ளது. தமிழர் குடி­யே­றிய முக்­கிய நாடு­க­ளான அவுஸ்­தி­ரே­லியா அமெ­ரிக்கா, கனடா,ஐக்­கிய இராச்­சியம் உட்­பட ஐரோப்­பிய நாடு­களைத் தவிர்ந்த, பல ஆபி­ரிக்க, ஆசிய நாடு­க­ளிலும் இலங்கைத் தமி­ழர்கள் வாழ்­கின்­றார்கள். இவர்­களில் முப்­ப­துக்கு மேற்­பட்ட நாடு­களில் தமி­ழர்கள் தஞ்சம் கோரி அங்கு செல்­ல­வில்லை. மாறாக தாங்கள் போய்ச்­சே­ர­வேண்­டிய வேறு ஒரு நாட்­டுக்குச் செல்லும் வழியில், நாடு­களின் எல்­லை­களில், இறங்கு அல்­லது ஏறு துறை­களில் தடுக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­ட­வர்­களும் ஆட்­க­டத்தல்காரர்­க­ளினால் இடை­வ­ழியில் கைவி­டப்­பட்­ட­வர்­களும் அடங்குவர்.

தாங்கள் போய்ச் சேர­வேண்­டிய நாட்­டுக்குச் செல்ல முடி­யா­மலும், இலங்­கைக்குத் திரும்பிச் செல்ல முடி­யா­மலும் வாழ்ந்­து­வரும் தமி­ழர்கள் ஏராளம். கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக தமி­ழர்கள் நாட்டை விட்டு அக­தி­க­ளாக வேறு நாடு­க­ளுக்குச் செல்­வது தொடர்ந்த வண்ணம் இருக்­கி­றது. அண்­மைய வரு­டங்­களில் அவுஸ்­தி­ரே­லியா நாட்­டுக்கு அழைத்து செல்­வ­தாகக் கூறி, ஆள்­க­டத்­தல்­கா­ரர்­க­ளினால் ஆழ் கடல்­களில் பாது­காப்பு இல்­லாத பட­கு­களில் கைவி­டப்­பட்டு மூழ்­கி­ய­வர்­களும் ஏராளம்.

பல்­வேறு நாடு­களில் தஞ்சம் கோரி நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலையில் முகாம்­க­ளிலும் தனியார் இருப்­பி­டங்­க­ளிலும் அவல நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­வர்கள் பல ஆயிரம். தங்கள் உற­வுகள் எங்கு இருக்­கி­றார்கள் என்று தெரி­யாமல் அவர்­களைத் தேடி ஏங்கும் பல­ருக்கு அவர்கள் உயி­ரோடு இல்லை என்­ப­து­கூட தெரி­யாமல் இருக்கும் கொடிய அவலம் பல வரு­டங்­க­ளாகத் தொட­ரு­கி­றது. இவர்­களின் வாழ்­வியல் பற்­றிய உண்மை நிலை­மையை இந்த ஆய்வு ஆராய்­கின்­றது.

தஞ்சம் கோரு­வதும் சர்­வ­தேச

சட்ட நிய­தி­களும்

ஒரு­வ­ருக்கு தனது நாட்டில் ஏதா­வது கார­ணத்­திற்­காக உயிர் ஆபத்து இருக்­கின்­றது என அவர் நம்­பினால், அந்த நாட்டை விட்டு வெளி­யேறி, அந்த நாட்டின் எல்­லையைக் கடந்து வேறு ஒரு நாட்டில், அந்த நாடு தனக்கு பாது­காப்­பா­ன­தாக இருக்கும் என அவர் நம்­பினால் அந்த நாட்டில் அவர் தஞ்சம் என்று சொல்­லப்­ப­டு­கின்ற அடைக்­கலம் அல்­லது பாது­காப்பை அவர் தேடு­வ­தற்கு அவ­ருக்கு உரிமை உள்­ளது என ஐக்­கிய நாடுகள் சபை அக­திகள் சாசனம் உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் சபை அக­திகள் சாசனம் என்­பது 1956 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த சாச­னத்தில் ஒருவர் தஞ்சம் கோரு­வ­தற்­கு­ரிய கார­ணங்கள் எவை­யாக இருக்க வேண்டும் என்று வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி பின்­வரும் வரை­வி­லக்­கணம் அகதி அதா­வது அகதி தஞ்சம் கோரும் உரிமை உடை­யவர் என அக­திகள் சாசனம் கூறு­கின்­றது.

“ஒருவர், தனது நாட்டில் தான் சேர்ந்­தி­ருக்­கின்ற சமூக இனத்தைச் சேர்ந்­தவர், அல்­லது அவர் பேசு­கின்ற மொழி அல்­லது அவர் சார்ந்­தி­ருக்­கின்ற சமயம் அல்­லது அவ­ரது அர­சியல் சித்­தாந்தம் கார­ண­மாக அவர் துன்­பு­றுத்­தப்­பட்டு உயிர்க்கு பாது­காப்­புக்கு உத­வத்தான் இல்லை என்று நம்பும் பட்­சத்தில் அவர் தஞ்சம் கோரு­வ­தற்கு தகு­தி­யா­னவர் ஆவர்”

இந்த அடிப்­ப­டையில் இலங்கைத் தமிழர் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான நாடொன்றில் அடைக்­கலம் புகு­வ­தற்கு உரித்து உடை­ய­வர்கள் என்­பதை இந்த சாச­னத்தில் கையொப்பம் இட்டு ஏற்­றுக்­கொண்ட எல்லா நாடு­களும் கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக உறுதி செய்­துள்­ளன. இலங்கை தமிழ் தஞ்சம் கோரு­ப­வர்­களை ஏற்றுக் கொள்­கின்­றன. இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் இந்த சாச­னத்தில் கையொப்பம் இட்டு ஏற்­றுக்­கொள்­ளா­வி­டினும் அந்த நாடுகள் தமிழ் அக­தி­களை மனி­தா­பி­மான முறையில் தங்கள் நாடு­களில் தங்க வைத்து பரா­ம­ரிக்­கின்­றன. இரண்­டா­வது மகா யுத்­தத்­தின்­போது அக­தி­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு இந்த அக­திகள் சாச­னத்தை உலக நாடுகள் உரு­வாக்­கி­னாலும், இன்­றைய கால­கட்­டத்தில் உலக நாடு­களில் இருந்து பாது­காப்பைத் தேடி ஓடும் மக்­களின் எண்­ணிக்­கையை சமா­ளிக்க முடி­யாமல் இந்த நாடு­களே திண்­டா­டு­கின்­றன. அக­தி­களின் வருகை, குடி­வ­ரவு என்­பன பல அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களில் அர­சியல் பிரச்­சி­னை­யாக மாறி. தேர்தல் மேடை­களில் ஒரு அர­சியல் பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது மாத்­தி­ர­மன்றி, நாட்டு மக்­களின் வெறுப்­பையும் சம்­பா­தித்­துள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தமிழ் அக­திகள்

அவுஸ்­தி­ரே­லியா நாடா­னது அக­திகள் சாச­னத்தை ஏற்­றுக்­கொண்டு தங்கள் நாட்­டுக்கு வரும் தஞ்சம் கோரு­வோரை அர­வ­ணைத்து அவர்­க­ளுக்கு அவர்­களின் தஞ்ச கோரிக்­கை­களை பரி­சீ­லனை செய்து, அவர்­க­ளுக்கு பாது­காப்பு அளிக்க வேண்­டிய கடப்­பாடு உள்­ளது. ஆனால் அண்­மைய கால­மாக இலங்கைத் தமிழ் அக­தி­களின் மீது காட்டி வரும் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு எதி­ரான வகை­யி­லான அணுகுமுறை­களை பல மனித உரிமை நிறு­வ­னங்கள் விமர்­சித்­துள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய அர­சா­னது அக­திகள் வரு­கையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல வெளிப்­ப­டை­யான உத்­தி­க­ளையும் ரக­சி­ய­மான முறையில் பல வழி முறை­க­ளையும் கையாள்­கின்­றது. அவுஸ்­தி­ரே­லியா நாட்­டுக்குச் செல்லும் வழி­களில் உள்ள அண்­டைய நாடு­க­ளான இந்­தோ­னே­சியா, தாய்­லாந்­து­போன்ற நாடு­க­ளுடன் சேர்ந்து அக­தி­களை இடை­வ­ழியில் மறித்து அவர்­களை அவுஸ்­தி­ரே­லியா எல்­லைக்குள் வர­வி­டாமல் தடுக்கும் நட­வ­டிக்­கையை கையாள்­கின்­றது. இவ்­வாறு இடை மறிக்­கப்­பட்­ட­வர்கள் சுமார் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் இந்­தோ­னே­சியா நாட்டு முகாம்­களில் சுமார் ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக வாழ்ந்து வரு­கின்­றார்கள். இவர்­களுள் ஐக்­கிய நாட்டு அக­தி­க­ளுக்­கான முகவர் (யு.என்.எச்.சீ.ஆர்) ஆத­ரவைப் பெற்று அக­தி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வர்­களும் அடங்குவர்.

இந்­தோ­னே­சியா நாட்டில் இருந்து அக­தி­களை ஏற்­றுக்­கொள்ளும் நாடு­க­ளுக்கு மறு­வாழ்வு திட்­டத்தின் மூலம் அந்த நாடுகள் அவர்­களை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். தமிழ் அக­திகள் விவ­கா­ரத்தில் அந்த நாடுகள் அச­மந்த போக்கை கொண்­ட­ன­வாக இருக்­கின்­றன. அதனால் அவர்கள் தொடர்ந்தும் அவல நிலையில் இந்­தோ­னே­சி­யாவில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களில் சுமார் நூற்­றுக்கும் மேற்­பட்­ட­வர்­களை அவர்­க­ளது தஞ்ச கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலை­யிலும் மேலும் சுமார் இரு­நூற்­றுக்கும் மேற்­பட்­ட­வர்­க­ளது விண்­ணப்­பங்­களை பரி­சீ­ல­னை­யிலும் அகதி முகவர் நிலையம் வைத்­தி­ருக்­கின்­றது. நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை இந்­தோ­னே­சியா அரசு இலங்­கைக்கு பல­வந்­த­மாக அனுப்பும் நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து இருக்­கின்­றது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தில் பத்­தொன்­பது இலங்­கையர் இந்­தோ­னே­சி­யாவில் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­க­ளுக்கு இருப்­பிட விசா எடுத்துத் தரு­வ­தாகக் கூறி, ஆட்கடத்தல் முக­வர்­க­ளினால் ஏமாற்­றப்­பட்டு அங்கு சென்­றுள்­ளார்கள். இவர்கள் சுற்­றுலா விசா­வில்தான் அங்கு வந்­தார்கள் என்­பது அவர்கள் கைது செய்­யப்­ப­டும்­வரை அவர்­க­ளுக்குத் தெரி­யாது. பெரு­ம­ளவு பணத்தை இழந்த இவர்கள், தங்­களை இந்­தோ­னே­சி­யாவில் இருந்­த­படி, அங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா நாட்­டிற்கு செல்ல முடியும் என ஆசை வார்த்தை காட்டி ஏமாற்­றப்­பட்­டார்கள் என்­பது விசா­ர­ணையின் பின்­புதான் தெரி­ய­ வந்­தது.

அதே­வேளை அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு செல்­லு­கின்ற வழியில் அங்கு செல்ல முடி­யாமல், ஆட்­க­டத்தல் காரர்­க­ளினால் மலே­சியா, தாய்­லாந்து, ஜப்பான் போன்ற நாடு­களில் கைவி­டப்­பட்­ட­வர்கள் வேறு­வ­ழி­யின்றி அந்த நாடு­களில் தஞ்சம் கோரி விண்­ணப்­பிக்க வேண்­டிய கட்­டா­யத்­திற்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். தாய்­லாந்து, மலே­சியா, ஜப்பான் போன்ற நாடு­களில் தஞ்­சம்­கோரி நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களும், தங்­களின் கோரிக்­கை­களுக்கான முடி­வு­க­ளையும் காத்­தி­ருப்­போரின் எண்­ணிக்கை 2016 டிசம்பர் வரை 4000 மாக இருக்­கின்­றது. அந்த நாடு­க­ளிலும் சுமார் 1200 பேர் தங்­க­ளது அகதி தஞ்சம் கோரும் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்டு பல­வந்­த­மான நாடு கடத்­தலை எதிர்­நோக்கி வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

அவுஸ்­தி­ரே­லியா அரசு தனது நாட்டு எல்­லைக்குள் வந்து சேர்ந்த தஞ்சம் கோரி நிரா­க­ரிக்­கப்­பட்ட தமிழ் அக­திகள் இந்த ஆண்டு முற்­ப­கு­தியில் 800 ஆக இருந்­தது. அத்­துடன் இது­வரை எந்­த­வித முடி­வு­க­ளையும் எடுக்­கா­த­வ­கையில் சுமார் 2300 விண்­ணப்­பங்கள் இருக்­கின்­றன. கடந்த வருட ஆரம்­பத்தில் இலங்கை தமிழ் அக­திகள் பன்­னி­ரெண்டு பேரை ஏற்­றிய படகு ஒன்று அவுஸ்­தி­ரே­லியா நாட்டு எல்­லைக்குள் இருக்கும் கோக்கஸ் எனப்­படும் தீவை சென்­ற­டைந்­த­போது அதனைத் தடுத்து அதில் இருந்த அக­திகள் படகில் இருந்து பஸ் ஒன்றின் மூலம் கொண்டு செல்­லப்­பட்டு கொழும்­புக்கு பல­வந்­த­மாக நாடு கடத்­திய சம்­பவம், அக­தி­க­ளுக்கு கடமை புரியும் அரச, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் விமர்­ச­னத்­தையும், கண்­ட­னத்­தையும் அவுஸ்­தி­ரே­லிய ஆளும் கட்சி பெற்­றி­ருந்­தது.

நாடு கடத்­தப்­படும் அக­தி­களை கொழும்பு விமான நிலை­யத்தில் வைத்து இலங்கை புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­வது பற்றி பர­வ­லாக செய்­திகள் வெளி­வந்­ததை அடுத்து அவுஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மாக நாடு கடத்­து­வதை நிறுத்தி இருந்­தது. இந்த வருட ஆரம்­பத்தில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்த இலங்கைப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து நாடு கடத்­தப்­படும் எவ­ரையும் கைது செய்­வதோ அல்­லது அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குகள் தாக்கல் செய்­வ­தில்லை என்ற உறு­தி­மொ­ழியை அந்­த­நாட்டு அர­சுக்கு வழங்­கி­யதைத் தொடர்ந்து இப்­போது அவுஸ்­தி­ரே­லியா நாடு கடத்­து­வதை ஆரம்­பித்­துள்­ளது.

அவுஸ்­தி­ரே­லியா அரசு தனது நாட்டு எல்­லைக்குள் சட்ட விரோ­த­மாக வரு­ப­வர்­களை ஏற்­று­க்கொள்­ளாது என்றும் உட­ன­டி­யாக திருப்பி அனுப்­பப்­ப­டு­வார்கள் என்றும் பல்­வேறு வழி­களில் பணச்­செ­ல­வுகள் செய்து விளம்­ப­ரங்­களை மக்­க­ளுக்கு விழிப்­பூட்டும் நோக்கில் முன் எடுத்­தாலும், ஆட்­க­டத்தல் பேர்­வ­ழி­களின் பொய்­யான உறுதி மொழி­களை நம்பி, ஏமாந்து தங்­க­ளு­டைய பெருமளவி­லான பணத்­தையும் இழந்து அவ­லத்­துக்குள் தள்­ளப்­படும் சம்­ப­வங்கள் இப்­போதும் இடம் பெறு­கின்­றன. முக்­கி­ய­மாக இந்­தி­யாவில் முகாம்­களில் வாழ்­கின்ற தமிழ் அக­திகள் ஆட்­க­டத்தல்காரர்­களின் ஆசை வார்த்­தை­களை நம்பி தங்­க­ளது சேமிப்­புக்­க­ளையும், கடன் பெற்றும் பணத்தை இழந்து நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளதை நேரில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. தமிழ்நாட்டு கியூ பிரிவு போன்ற பாது­காப்பு சூழ­லையும் தாண்டி, பட­கு­களில் சென்­ற­வர்கள் ஆட்­கடத்­தல்­கா­ரர்­க­ளினால் நடுக்­க­டலில் தவிக்க விட்­டுச்­செல்­கின்ற சம்­ப­வங்­களும் இடம் பெறத்தான் செய்­கின்­றன.

அவுஸ்­தி­ரே­லிய அரசு, தனது நாட்­டிற்குள் வரு­வ­தற்கு முன்­னமே அக­தி­களைத் தடுக்கும் செயற்­பாட்டில் ஓர­ளவு வெற்­றி­கண்­டுள்­ளது. ‘அவுஸ்­தி­ரே­லிய அரசு இலங்­கையில் இருந்து சட்ட விரோ­த­மாக தனது நாட்­டிற்குள் வரு­வோரை, இலங்கை, இந்­திய கடற்­ப­ரப்­பிற்குள் இருந்து பயணம் தொட­ராமல் தடுக்கும் முயற்­சியில் வெற்றி கண்­டுள்­ளது என்றே கூற வேண்டும். அந்த அரசின் தகவல் படி 2013 ஆம் ஆண்­டுக்குப் பின்பு எவரும் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா நாட்­டிற்குள் வர­வில்லை என கூறு­கின்­றது.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் அண்டை நாடான பப்­புவா நியூ­கி­னி­யாவில் உள்ள மனுஷ தீவில், அந்த நாட்டின் ஆத­ர­வுடன் அக­தி­களை முகாம்­களில் தங்­க­வைக்கும் நடை­மு­றையை பல வரு­டங்­க­ளாகச் செயற்­ப­டுத்­தி­வந்­தது. இந்த அக­தி­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக பெரும் அளவில் பணமும் செலவு செய்­யப்­பட்­டது. இந்த முகாம்கள் பற்றி சர்­வ­தேச அக­தி­களின் நலனைப் பேணும் அமைப்­புகள் பல்­வேறு விம­ர்ச­னங்­களைச் செய்து வந்­தன. இந்த நிலையில் அந்த நாட்டின் உயர்­நீ­தி­மன்றம் இந்த முகாம்­களை மூடும்­படி உத்­த­ரவு பிறப்­பித்­ததால் அந்த முகாம்கள் மூடப்­பட்­டன.

இலங்­கையைச் சேர்ந்த தமிழ் அக­திகள் உட்­பட அறு­நூறு ஆண்கள் இந்த முகாமில் இருந்­தார்கள். கடந்த ஆண்டு அக்­டோபர் மாதத்தில் முப்­பத்­தி­ரண்டு வய­தான தமிழ் அகதி தற்­கொலை செய்து கொண்டார். இந்த முகாம் ஆரம்­பித்து இது ஆறா­வது தற்­கொலை­யாகும்.

 (தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-25#page-4

Link to comment
Share on other sites

அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள்

 

(நேற்றைய தொடர்ச்சி)
தஞ்சம் மறுக்­கப்­பட்டும் பயண வழியில் சிக்­கியும் அவ­தி­யுறும் தமிழ் அக­தி­களின் அவலம்
இந்­தி­யாவில் தமிழ்நாட்டில் உள்ள முகாம்­க­ளுக்கு வெளியில் வாழ்ந்து வரும் தமிழ் அக­தி­களைக் குறி வைத்து ஆள்­க­டத்தல் காரர்கள் தங்கள் வலைக்குள் சிக்க வைத்து கேரளா கரை­யோரப் பகு­தி­களில் உள்ள மீன்­பிடி வள்­ளங்­களைப் பாவித்து அவர்­களை ஏற்­றிக்­கொண்டு அங்­கி­ருந்து மாலை­தீவு வழி­யாக இந்­தோ­னே­சியா கரை­யோர பகு­தி­களில் செல்லும் போது அவர்கள் தடுக்­கப்­பட்டு முகாம்­களில் அடைக்­கப்­ப­டு­கி­றார்கள். சில சந்­தர்ப்­பங்­களில் கேரளா கரை­யோர பகு­தியில் இவர்­களின் பட­குகள் தடுக்­கப்­பட்டு திருப்பி விடப்­படும் சம்­ப­வங்­களும் இடம்பெற்­றுள்­ளன.  

அவுஸ்­தி­ரே­லிய நாட்­டுக்கு பய­ணத்தை ஆரம்­பித்­த­வர்கள் பலர் கடலில் மூழ்­கிய சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. கடத்தல்காரர்­க­ளினால் அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்கள் பலர் காணாமல் போன­தா­கவும் அறி­யக்­கி­டக்­கின்­றது.

2012 ஆம் ஆண்டு வட­ப­கு­தியைச் சேர்ந்த ஒரு குடும்­பஸ்தர் ஆள்­க­டத்­தல்­கா­ரர்­களின் உத­வி­யுடன் அவுஸ்­தி­ரே­லி­யாவை போய்ச் சேர்ந்து விட்டார். தன்­னு­டைய மனை­வி­யையும் ஒன்­பது வயது பெண் சிறு­மி­யையும் தன்­னிடம் அழைத்து வரும்­படி கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஏற்­பாடு செய்­தி­ருந்தார். அதன்­படி அவர்­களும் பட­கு­களில் ஏற்­றப்­பட்­டார்கள். ஆனால், அவர்கள் இன்று வரை அங்கு போய்ச் சேர­வில்லை. அவர்­களைத் தேடும் அவலம் தொடர்­கி­றது.

இந்­தி­யாவில் இருந்து அவுஸ்­தி­ரே­லியா நாட்­டுக்குள் வரும் அக­தி­களை இந்­திய கடற்­க­ரை­யோ­ரங்­களில் தடுப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா அரசும் இந்­திய அரசும் கூட்­டாகச் சேர்ந்து இந்த ஆண்டு மே மாதம் அளவில் ஒப்­பந்­தங்­களைச் செய்து கொண்­டன.

அவுஸ்­தி­ரே­லியா அரசு அண்­மையில் தஞ்சம் கோரு­வ­தற்­காக அந்த நாட்­டுக்குள் புகுந்­த­வர்­க­ளுக்கு தஞ்சம் கோரும் விண்­ணப்­பத்தை சமர்­ப்பிப்­ப­தற்­கான காலக்­கெடு­வொன்றை கடந்த 2007 அக்­டோபர் மாதம் 30 ஆம் திகதி என விதித்­தி­ருந்­தது. இவ்­வா­றாக காலக்­கெடு விதிப்­பது உலக வர­லாற்றில் விசித்­தி­ர­மா­னது என பல்­வேறு மனித உரிமை அமைப்­பு­களும் அந்த நாட்டில் பணி­பு­ரியும் சட்ட வல்­லு­நர்­களும் விம­ர்சனம் செய்திருந்­தார்கள். அவுஸ்­தி­ரே­லிய அரசோ அதனைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. இந்த காலக்­கெடு திக­திக்கு முன்பு விண்­ணப்பம் செய்­யா­த­வர்­களின் கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது என்றும் அவ்­வா­றா­ன­வர்கள் நாடு கடத்­தப்­ப­டு­வார்கள் எனவும் அறி­வித்­தது. தஞ்சம் கோரும் ஒரு­வரின் விண்­ணப்­பத்தை பரிசீ­லனை செய்­யாமல் அவரை நாடு கடத்­து­வது என்­பது அவுஸ்­தி­ரே­லியா நாடா­னது கையெ­ழுத்­திட்டு ஒப்­புக்­கொண்ட ஐக்­கிய நாடுகள் அக­திகள் சாச­னத்­திற்கு எதி­ரா­னது என கண்­ட­னங்கள் வெளி­யி­டப்­பட்­டன. இந்த நடை­மு­றையின் பிர­காரம் சர்­வ­தே­சத்தின் மனி­தா­பி­­மான கடப்­பா­டுக்கு முழுக்­குப்­போட்ட முத­லா­வது நாடு அவுஸ்­தி­ரே­லியா என்றும் இதனை மற்­று­மொரு உதா­ர­ண­மாக எந்த ஒரு நாடும் மேற்­கொள்­ளக்­கூ­டாது என பல சர்­வ­தேச நிறு­வ­னங்கள் கேட்­டுக்­கொண்­டுள்­ளன. 2017 டிசம்பர் மாதத்தில் இந்த காலக்­கெ­டு­வுக்கு முன் விண்­ணப்பம் செய்­யாத இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்­தப்­பட்டார். இவ்­வாறு நாடு கடத்­தப்­பட்­டமை அவுஸ்­தி­ரே­லியா அர­சாங்­கத்தின் முத­லா­வது நட­வ­டிக்­கை­யாகும்.

இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளினால் ஒப்­பிட அளவு பட­கு­மூலம் செல்லும் தமிழ் அக­தி­களின் எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தாலும் இது­வரை அவுஸ்­தி­ரே­லியா நாட்­டிலும் அதன் அண்டை நாடு­க­ளிலும் தஞ்­சம்­கோரி நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலை­யிலும் இது­வரை தங்­க­ளு­டைய விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­ப­டாமல் இருப்­ப­வர்­களின் எதிர்­காலம் அவுஸ்­தி­ரே­லி­யாவின் நிரந்­தர குடி­ய­மர்­வுக்கு நிச்­ச­ய­மற்­ற­தா­கவே உள்­ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெ­ரிக்க நாடு­களில் தமிழ் அக­திகள் இலங்­கை­யிலும், இந்­தி­யா­வி­லி­ருந்தும் கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக ஐரோப்­பிய நாடு­க­ளான முக்­கி­ய­மாக ஐக்­கிய ராச்­சியம், பிரான்ஸ், ஜெர்­மனி, சுவிஸ் போன்ற நாடு­க­ளுக்கும் கனடா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கும் தமிழ் அகதி தஞ்சம் கோரும் எதிர்­பார்ப்­புடன் பய­ணத்தை ஆரம்­பித்­த­வர்­களை உல­கத்தில் எந்த நாடு­களில் விமான இறங்­கு­து­றைகள் இருக்­கின்­ற­னவோ அங்­கெல்லாம் ஆள்­க­டத்தல் காரர்­க­ளினால் அழைத்­துச்­செல்­லப்­பட்டு பல­ஆ­யிரம் பேர் பல்­வேறு நாடு­களில் தடுக்­கப்­பட்டு அந்த நாடு­களில் வாழ வேண்­டிய கட்­டா­யத்­திற்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

தெற்கு அமெ­ரிக்கா நாடு­களில் அகப்­பட்டுக் கொண்ட பல தமிழ் இளை­ஞர்கள் போதைப்­பொ­ருட்கள் கடத்தும் கூலி­க­ளாக வலிந்து மாற்­றப்­பட்டு இப்­போது கூட பலர் நாட்­டுக்கு நாடு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றனர். வட பகு­தியைச் சேர்ந்த சில இளை­ஞர்கள் இவ்­வாறு ஆக்­கப்­பட்ட நிலையில் தங்­க­ளுக்குக் கிடைக்­கக்­கூ­டிய சந்­தர்ப்­பத்தைப் பாவித்து தங்கள் உற­வு­க­ளுக்கு தொலை­பேசி அழைப்­பு­களைச் செய்­கி­றார்கள். இவர்­க­ளினால் உரை­யாட முடி­ய­வில்லை. ஆனால், தொலை­பேசி இலக்­கங்­களை பரி­சீ­லனை செய்து பார்க்கும் போது வெவ்­வேறு காலங்­களில் தென் அமெ­ரிக்­காவில் உள்ள வெவ்­வேறு நாடு­களின் தொலை­பேசி அழைப்­பு­க­ளாகத் தெரி­கின்­றன. இதன் மூலம் இவர்கள் தங்கள் உற­வு­க­ளுக்கு தாங்கள் உயி­ருடன் இருப்­பதை உறுதி செய்­யவே இவ்­வாறு செய்­கி­றார்கள் என ஊகிக்க முடி­கின்­றது.

 பல நாடு­களில் ஆள் கடத்தல்காரர்­க­ளினால் போதைப்பொருட்கள் கடத்­து­வ­தற்கு அப்­பா­வி­யான பலர் அவர்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே அவர்­களின் பொதி­களில் மறைக்­கப்­பட்டு ஏறு அல்­லது இறங்கு துறை­களில் கைதுசெய்­யப்­பட்டு சாகும்­வரை சிறை­வாசம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஐரோப்­பிய நாடு­களில் முக்­கி­ய­மாக ஐக்­கி­ய­இ­ராச்­சியம், பிரான்ஸ், ஜெர்­மனி போன்ற நாடு­களில் கடத்தி வரப்­பட்­ட­வர்கள் கடத்­தல்­கா­ரர்­களின் பண கொடுப்­ப­ன­வு­களைக் கொடுப்­ப­தற்­காக கடத்­தல்­கா­ரர்­களின் ஆலோ­சனை, பயிற்சி, ஆத­ரவு என்­ப­வற்­றுடன் கடன் அட்­டை­களைப் பாவித்து சட்ட விரோ­த­மாக வங்­கி­களில் பணம் திருடும் வழி­களைக் கையாண்­டார்கள். இவர்­களில் பலர் கண்டு பிடிக்­கப்­பட்டு, கைது செய்­யப்­பட்டு, சிறை வைக்­கப்­பட்டு பின் நாடு கடத்­தப்­பட்டும் இருக்­கி­றார்கள். இந்தத் தொழிலில் ஈடு­பட்டு கோட்டை விட்­ட­வர்­களும் இருக்­கின்­றார்கள். கோடீஸ்­வ­ரர்­களும் இருக்­கின்­றார்கள்.

பல இளம்­பெண்கள் தங்கள் பய­ணத்­தின்­போது கடத்தல்காரர்­களின் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளா­கிய சம்­ப­வங்கள் பல பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையில் இருந்து இளம்­பெண்கள், திரு­மணம் ஆகி­ய­வர்­களும் , திரு­மணம் ஆகா­த­வர்­களும் ஐரோப்­பிய நாடு ஒன்­றுக்கு அழைத்துச் செல்­வ­தாக ஏற்றுக் கொண்டால் கடத்தல் செய்­பவர் தனது அந்த நாட்­டுக்­கு­ரிய கட­வுச்­சீட்டைப் பாவித்து கூட்­டிச்­செல்லும் பெண்ணை தனது மனை­வி­யாக திருட்­டு­மு­றையில் கட­வுச்­சீட்டு ஒன்றை தயா­ரித்து தனது மனை­வியை அழைத்து செல்லும் பாங்கில் பயணம் செய்­ய­வேண்டும். இத்­த­ரு­ணத்தில் அந்த பெண்ணின் அச்­சத்­தையும் அநா­த­ர­வான நிலை­யையும் தனக்குச் சாத­க­மான முறையில் பாவித்­துக்­கொண்ட கடத்­தல்­காரர் அந்தப் பெண்ணை அல்லது பெண்களை பல­வந்­த­மாக பாலியல் துன்­பு­றுத்­தலுக்குள்­ளாக்கிய பல சம்­ப­வங்கள் இடம்பெற்­றி­ருக்­கின்­றன. இவ்­வா­றான பெண்கள் வெளியில் சொல்­லவும் முடி­யாமல் வேத­னையை அனு­ப­விக்­கின்­றார்கள்.

ரஷ்­யாவில் உள்ள பல விடு­தி­களில் இலங்கை இளம் பெண்கள் விப­சார தொழிலில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு அவர்கள் வேறு வழி­யில்­லாமல் அந்தத் தொழி­லையே தங்கள் வாழ்­வா­த­ாரத்­துக்கு செய்­ய­வேண்­டிய கட்­டா­யத்­திற்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு அவலநிலைக்குத் தள்­ளப்­பட்டு வாழ்ந்­து­வரும் பல­ரது உற­வு­க­ளுக்கு இவர்­க­ளது இந்த சோகக்­கதை தெரி­யாது. சிலர் ரஷ்­யாவில் தொழில் செய்­கி­றார்கள் என்றும் நல்­ல­ப­டி­யாக வாழ்­கி­றார்கள் என்ற ஒரு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

கடத்தல்காரர்­க­ளினால் அழைத்துச் செல்­லப்­படும் பெரு­வா­ரி­யான ஆட்­க­ளுக்கு அவர்­களின் சொந்தக் கடவுச்சீட்டு திருட்டுத்தன­மான முறையில் செய்­யப்­பட்டு சில வேளை­களில் அடை­யா­ளங்­க­ளையே மாற்­றியும் செய்­வதால் அவர்­க­ளினால் திரும்­பவும் இலங்­கைக்குச் செல்ல முடி­யாத நிலையில் அவ­தி­யுற்ற நிலையில் இருக்­கி­றார்கள். சட்ட விரோ­த­மான பிர­யாண பத்­தி­ரங்­களைப் பாவித்துச் சென்­ற­வர்கள் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­படும் போதும் அல்­லது தாங்­க­ளா­கவே திரும்பி வந்­தாலும் அவர்கள் குடி­வ­ரவு மற்றும் குற்றத் தடுப்புப் பிரி­வி­னரின் கைது­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­ய­நிலை ஏற்­ப­டு­வ­தினால் பல்­வேறு துன்­பங்­க­ளுக்கு மத்­தியில் அந்த நாடு­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். சில நாடு­களில் சுமார் பத்து முதல் பதி­னைந்து வருட கால­மாக தலை­ம­றை­வா­க வாழ்ந்து வரும் நிலையும் பல­ருக்கு இருக்­கின்­றது.

1983ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கைத் தமி­ழர்கள் அர­சியல் தஞ்சம் கோரி பல நாடு­களில் சென்­றி­ருந்­தாலும் எந்­த­வொரு நாடும் இலங்கைத் தமிழ் அக­திகள் விட­யத்தில் ஒரு பொது­வான கொள்கை அடிப்­ப­டையில் அகதி அந்­தஸ்து வழங்கி ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. தமி­ழர்கள் அகதி தஞ்சம் கோரு­வ­தற்கு உரித்து உடை­ய­வர்கள் என்­பதில் பல நாடுகள் கொள்­கையைக் கொண்­டி­ருந்­தாலும் தஞ்­சம்­கோரும் தமி­ழர்கள் எல்­லோ­ருக்கும் அடைக்­கலம் வழங்க வேண்டும் என்ற அணு­கு­மு­றையில் இருக்­க­வில்லை. இதனால், வெவ்­வேறு நாடுகள் வெவ்­வேறு வகை­யான அணு­கு­மு­றையை கையாண்­டன. ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய அகதித் தஞ்சம் கோரும் விண்­ணப்­பங்­களை அவர்­களின் பாதிக்­கப்­பட்ட அல்­லது அவர்­களின் உயிர் ஆபத்­துக்­கான உண்மை நிலை­யினை ஆராய்ந்து அகதி அந்­தஸ்து வழங்க வேண்­டி­ய­வர்­க­ளுக்கு மாத்­திரம் இருப்­பிட அனு­மதி வழங்கும் நடை­முறை கையா­ளப்­பட்­டது.

ஐக்­கிய இராச்­சியம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் தமிழ் அக­தி­களின் விண்­ணப்­பங்­களை பரி­சீ­லனை செய்­வதில் ஒன்­றான கொள்­கையை கைக்­கொண்­டாலும் லண்டன் வெஸ்ட்­மி­னிஸ்டர் அர­சா­னது இலங்கைத் தமிழ் தஞ்சம் கோரு­வோரின் விண்­ணப்­பங்­களை அதிக மனி­தா­பி­மான அணு­கு­மு­றையில் கையாண்­டது. தனிப்­பட்ட ஒவ்­வொரு விண்­ணப்­பத்­தையும் தனி­யான தகுதி அடிப்­ப­டையில் விசா­ரித்து ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­வர்­க­ளுக்கு சகல உரி­மை­க­ளையும் வழங்கி நிரந்­த­ர­மாக வாழ்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது. நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாகத் திருப்பி அனுப்பும் நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை.

ஐக்­கிய இராச்­சி­யத்தின் குடி­வ­ரவு இலா­கா­வினால் வெளி­யி­டப்­பட்ட ஒரு புள்­ளி­விவ­ரத்­தின்­படி 1983 முதல் 2003 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இலங்கை தஞ்சம் கோரும் 51,000 விண்­ணப்­பங்­களில் இருந்து சுமார் 29 ஆயிரம் பேரின் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நிலையில் இருந்­தன. இலங்­கையின் அர­சியல் சூழ்­நிலை இவர்கள் நாடு திரும்பும் சூழல் ஏற்­பட்­ட­வுடன் அவர்­களை நாடு­க­டத்தும் எதிர்­பார்ப்­புடன் அதி­கா­ரிகள் இருந்­தார்கள். ஆனால், இலங்­கையின் போர் நிலைமை நீடித்து போகும் போது இவர்கள் நீண்ட நாட்கள் அந்த நாட்டில் வாழ்ந்து விட்­டார்கள் என்ற அடிப்­ப­டையில் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு நிரந்­த­ர­மாக வாழ்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­டாது.

இதேபோன்று மற்­றைய ஐரோப்­பிய நாடு­களில் முக்­கி­ய­மாக பிரான்ஸ், ஜெர்­மனி ஆகி­ய­வற்­றிலும் பல ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களின் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­க­ப்பட்ட நிலையில் இருந்­தாலும், இலங்­கையின் நீண்டு கொண்டு போன யுத்தம் காலக்­கி­ர­மத்தில் அந்த நாடு­களில் நிரந்­த­ர­மாகத் தங்­கு­வ­தற்கு வழி­வ­குத்­தது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்த பின்பு தமிழ் தஞ்சம் கோரு­வோரின் விண்­ணப்­பங்­களை பரி­சீ­லிப்­பதில் பொது­வாக எல்லா நாடு­க­ளுமே மாற்­றங்­களை கொண்டு வந்­தன. நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள் நாடு­க­டத்­து­கின்ற அணுகு முறையை கையாள ஆரம்­பித்­தார்கள். இதன்­படி கடந்த 2016 ஆம் வருட டிசம்பர் மாத இறு­தி­வரை தமிழ் தஞ்சம் வழங்­கிய முக்­கிய நாடு­களில் மொத்­த­மாக சுமார் ஏழு ஆயி­ரத்­துக்கு மேற்­பட்டோர் நிரா­க­ரிக்­கப்­பட்டும் சுமார் 14 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்­களின் விண்­ணப்­பங்­களை பரி­சீ­லனை செய்­யா­மலும் வைத்­தி­ருப்­பது அண்­மைய புள்ளி விப­ரங்­களில் இருந்து அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்த புள்ளி விவ­ரத்­தின்­படி முக்­கிய சில நாடு­களில் நிரா­க­ரிக்­கப்­பட்ட மற்றும் பரி­சீல­னைக்கு காத்­தி­ருப்­போரின் எண்­ணிக்கை பற்­றிய அட்­ட­வணை இங்கு தரப்­ப­டு­கின்­றது.

1zqbkh5.jpg

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-26#page-4

 (தொடரும்)

Link to comment
Share on other sites

அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள்: தஞ்சம் மறுக்­கப்­பட்டும் பயண வழியில் சிக்­கியும் அவ­தி­யுறும் தமிழ் அக­தி­களின் அவலம்

 

இலங்கை தமி­ழர்கள் தற்­போதும் தஞ்சம் கோர முடி­யுமா? 

இலங்­கையில் போர் முடிந்­துள்ள நிலையில் தமி­ழர்கள் வெளி­நா­டு­களில் தஞ்சம் கோர முடி­யுமா என்ற கேள்வி இப்­போது பர­வ­லாகக் கேட்­கப்­ப­டு­கின்­றது. இந்த கேள்­விக்கு ஒரே வார்த்­தையில் பதில் சொல்­வ­தானால் ஆம், தஞ்சம் கோர­மு­டியும் என்று தான் கூற முடியும். தஞ்சம் கோரு­வது ஒரு தனி மனித அடிப்­படை உரிமை. ஆனால் தஞ்சம் தரு­வதா அல்­லது மறுப்­பதா என்­பது அந்த நாட்டைப் பொறுத்­தது. ஒரு நாட்டில் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர் அந்த நாட்­டிற்கு வெளியில் இருந்து தஞ்சம் கோரி விண்­ணப்­பிப்­பது கடி­ன­மா­ன­தாகும். ஏதோ வழியில் அந்த நாட்டின் எல்­லைக்குள் சென்ற பின்பு அந்த நாட்டில் தஞ்சம் கோரு­வ­துதான் சிறந்த வழி­மு­றை­யாகும். சில நாடு­களில் இறங்கு துறை­களில் வந்து இறங்­கி­ய­வுடன் தஞ்சம் கோர வேண்டும் என்ற விதி முறை­களை வைத்­தி­ருந்­தாலும் அது பாது­காப்­பா­ன­தாக இருக்க முடி­யாது. எனவே, நாட்­டிற்குள் அனு­ம­திக்கக் கூடிய விசாக்­களை முதலில் பெற்­றுக்­கொண்டு பின் ஒரு சட்டத் துறை­யா­ளரின் ஆலோ­சனை பெற்­றுக்­கொண்டு தஞ்­சம்­கோரி விண்­ணப்பம் செய்­வது பாது­காப்­பா­ன­தாக அமையும்.

இலங்கை தமிழ் தஞ்சம் கோரு­ப­வர்­களை பொறுத்­த­வரை எந்த ஒரு நாடும் தமி­ழர்­க­ளுக்கு அந்த நாட்டில் உயிர் ஆபத்து உள்­ளது என்­பதால் ஒட்­டு­மொத்த தமி­ழர்­களும் அகதி அந்­தஸ்து பெறு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்கள் என ஒரு பொது­வான கொள்கை அடிப்­ப­டையில் பார்க்­கப்­ப­டாத படி­யினால் ஒவ்­வொ­ருவரி­னதும் தனிப்­பட்ட விண்­ணப்ப அடிப்­ப­டையில் பரி­சீ­லனை செய்து முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. அதே­கொள்கை தற்­போதும் எல்லா நாடு­க­ளிலும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. எனவே, தற்­ச­மயம் அல்­லது எதிர்­கா­லத்­திலும் தமிழ் தஞ்சம் கோருவோர் தங்­க­ளது விண்­ணப்­பங்­களை எந்­த­வொரு நாட்­டிலும் செய்­ய­மு­டியும். ஐக்­கிய நாடு­களின் அக­திகள் சாசன கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய விண்­ணப்­பமும் அதி­கா­ரி­க­ளினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு முடி­வுகள் எடுக்­கப்­பட வேண்டும். இதற்கு மாறாக நடந்தால் அந்த நாட்­டிலோ அல்­லது சர்­வ­தேச மனித உரிமை நீதி­மன்­றிலோ அந்த முடி­வுக்கு எதி­ராக வழக்கு தொடர முடியும்.

உதா­ர­ண­மாக, இலங்­கையில் இருந்து ஒருவர் ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கு சுற்­றுலா விசா ஒன்றைப் பெற்றுச் செல்­கிறார். அவர் அங்கு சேர்ந்த பின்பு அவர் இலங்­கைக்குத் திரும்பிப் போனால் தனது உயி­ருக்கு ஆபத்து என நம்­பினால், அதனை ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிப்­பா­ரானால் அவர் அங்கு தஞ்சம் கோரி விண்­ணப்பம் செய்ய முடியும். ஐக்­கிய இராச்­சி­யத்தின் தஞ்சம் கோருவோர் சட்ட விதி­களின் பிர­காரம் அவரின் தஞ்சக் கோரிக்கை பரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும். அவரின் விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­படும் பட்­சத்தில் அதற்கு எதி­ராக அந்த நாட்டில் உள்ள நீதி­மன்­றங்­களில் ஐக்­கிய இராச்­சிய குடி­வ­ரவு அதி­கா­ரி­களின் முடி­வுக்கு எதி­ராக வழக்கு தொடர அந்­த­நாடு உத்­த­ர­வாதம் அளித்­துள்­ளது. இந்த நடை­முறை பொது­வாக தஞ்சம் வழங்கும் மேற்­கத்­திய நாடு­க­ளிலும் உள்ளது.

இலங்­கையில் போர் முடிந்து விட்ட நிலை­யிலும் போர் காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்த அவ­லங்கள் ஒப்­பீட்­ட­ளவில் குறைந்­தி­ருந்­தாலும் முக்­கி­ய­மாக இளம் வய­தி­னர்­களின் அச்சம் தொடர்ந்து இருப்­ப­தாக பர­வ­லாக தஞ்சம் வழங்கும் நாடு­களில் நம்­பப்­ப­டு­கின்­றது. இதன் அடிப்­ப­டையில் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின்பு தற்­போது வரை கணி­ச­மா­ன­வர்­க­ளுக்கு அகதி தஞ்சம் வழங்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபையின் வெவ்­வேறு அங்­கத்­துவ நிறு­வ­னங்கள் இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை மீறல்­களில் தங்­க­ளது அவ­தா­னிப்­பு­களை, நேர­டி­யாக இலங்­கைக்கு வந்து பரி­சீ­லனை செய்து அறிக்­கை­க­ளாக வெளி­யி­டு­கின்றன. இவ்­வா­றான ஆவ­ணங்­களை தஞ்சம் கோரு­வோ­ருக்குச் சார்­பாக அத்­தாட்­சி­க­ளாக அவர்­க­ளது விண்­ணப்­பங்­களில் இணைக்­கப்­ப­டு­வ­தனால் பல நாடு­களில் தஞ்சக் கோரிக்­கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

முடிவுரை

தஞ்சம் கோரு­வது தனி­ம­னிதன் அடிப்­படை உரிமை என்­ப­தற்­கி­ணங்க, இலங்கைத் தமி­ழர்கள் தஞ்சம் கோரு­வது அவர்­களின் உரிமை. ஆள் கடத்தல் காரர்­களின் ஆசை­வார்த்­தை­களை நம்பி பணத்­தையும் சில வேளை­களில் உயி­ரையும் இழக்க வேண்­டிய சூழ்­நி­லை­களை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். ஆள் கடத்தல்காரர்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அப்­பாவி மக்­களைக் கைவிட்டு, தேவை ஏற்­ப­டும்­போது தலை­ம­றை­வா­கக்­கூ­டிய சாது­ரியம் உள்­ள­வர்கள். அவர்­களைத் தேடிப்­பி­டிப்­பது இல­கு­வான காரியம் இல்லை. முக்­கி­ய­மாக அவுஸ்­தி­ரே­லியா நாட்­டுக்கு அழைத்துச் செல்­வ­தாகக் கூறும் கடத்­தல்­கா­ரர்­களை நம்­பு­வதில் பயன் இல்லை. அவுஸ்­தி­ரே­லியா நாடு தனது முழுக் கத­வு­க­ளையும் அடைத்து விட்­டது. பட­கு­களில் செல்­வோரை தடுப்­பதில் வெற்­றியைக் கண்டு கொண்­டி­ருக்­கி­றது. பல மேலைத்­தேச நாடு­க­ளான கனடா, ஐரோப்­பிய நாடுகள் என்பன தஞ்சம் கோருபவர்களை மனிதாபிமானத்துடன் அணுகும் முறைகளைக் கொண்டுள்ளன.

நாடு கடந்து வச­தி­யான வாழ்க்கை வழி­யொன்றை தேடு­வது சிறப்­பா­னது. அந்த நாடு­களில் காணப்­ப­டு­கின்ற வளங்­களை, வச­தி­களை தமக்­காக்கி, அதில் கிடைக்­கக்­கூடிய நன்­மை­களை இலங்­கை­யிலும், இந்­தி­யா­விலும் வாழ்ந்து வரும் தனது உற­வு­க­ளுக்கும் கிடைக்­கக்­கூ­டி­ய­தாக பல ஆயிரம் இலங்கைத் தமிழ் மக்கள் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவை தொடர வேண்டும். இந்த விவ­கா­ரங்­களில் துறை­சார்ந்த அறி­வு­ரை­க­ளையும், உத­வி­க­ளையும் அளித்து வரும் உள்ளூர், வெளியூர் வாழ் தனிப்­பட்­ட­வர்கள், அமைப்­புக்கள், நிறுவனங்கள் என்பன தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

அதே­வேளை, தற்­போது பல நாடு­களில் தஞ்சம் கோரி மறுக்­கப்­பட்ட நிலை­யிலும், இன்னும் பரி­சீ­லனை செய்­யப்­ப­டாமல் முடி­வு­க­ளுக்கு காத்­தி­ருக்கும் அகதி தஞ்சம் கோரியோர், அந்த நாடு­களில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் மனித உரிமை அமைப்­பு­க­ளுடன் மற்றும் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களை அணுகி, அண்மைக் காலங்­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் வெவ்­வேறு செயற்­பாட்­டா­ளர்கள் இலங்கை தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­களை கிடைக்கச் செய்து, தங்கள் நாட்­டுக்குப் பல­வந்­த­மாகத் திருப்பி அனுப்­பப்­பட்டால் முகம் கொடுக்கக் கூடிய அச்­சங்­களைத் தொடர்­பு­ப­டுத்தி, அந்த நாடு­களின் தஞ்சம் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­க­ளுக்கு அல்­லது நீதி­மன்­றங்­களில் புதிய மனுக்களைச் செய்வது பொருத்த­மாக இருக்கும்.

நாட்டை விட்டு வெளி­யேறி பயணம் செய்­கின்ற வேளையில் இடை­வ­ழியில் தவ­றி­ய­வர்கள், காணாமல் போன­வர்கள் தொடர்­பாக, தங்­களின் உற­வுகள் பற்­றிய தக­வல்­களை அதி­க­ளவு பெற்­றுக்­கொண்டு, சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் காணாமல் போனோரைக் கண்­டு­பி­டிக்கும் பொறுப்பில் உள்­ள­வர்­க­ளுடன் தொடர்பு கொண்டு, அவர்­களைத் தேடு­வது பலன்­த­ரக்­கூ­டி­ய­தாகும். இது ஒரு கடி­ன­மான செயற்­பாடு, ஆனாலும் அய­ராது தொடர்ந்து செஞ்­சி­லுவைச் சங்­கத்­துடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

இறுதியாக, இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் பற்றி இந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ளடக்கப்படவில்லை. அவர்களின் வாழ்வியல் பற்றிய பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மற்றுமொரு தருணத்தில் இந்த ஆய்வு பற்றி வீரகேசரி வாசகர்களுக்கு கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-27#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.