Jump to content

உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை


Recommended Posts

உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை

மலமாற்று அறுவை சிகிச்சை

நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது.

இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின் உடலிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெறுபவரின் சீரண அமைப்புக்குப் பலன் தரும் வகையில் மாற்றுவதே இதன் நோக்கம். இந்த செயல் ஒருவரின் உயிரையே கூட காப்பாற்றலாம்.

நமது உடலின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையேயும் மற்றும் மனித திசுக்களுடனும் தொடர்புக் கொள்ளும் வளமான பகுதியாக மனிதர்களின் குடல் விளங்குகிறது.

ஆக்ஸிஜன் குறைந்து காணப்படும் உங்களது மலக்குடலின் ஆழப்பகுதியானது மழைக்காடுகள் அல்லது பவளப்பாறைகள் போன்று வளம் மிக்க உயிர்சூழலாக உள்ளது.

ஆனால் க்ளாஸ்டிரீடியம் டிஸ்டிசிலை (சி. டிபிசிலி) என்று அழைக்கப்படும் பாக்டீரியம் மலக்குடலை கட்டுப்படுத்தி அதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர் உயிரி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இந்த பாக்டீரியமானது தனது சந்தர்பவாத செயல்பாட்டை தொடங்குகிறது.

மலமாற்று அறுவை சிகிச்சை

ஆண்டிபயாடிக் மருந்துகள் நவீன காலத்தின் அற்புதங்களில் ஒன்றாக இருந்தாலும், அவை நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை ஒரே மாதிரியாக அழிக்கின்றன.

அதாவது, காட்டுத்தீ பரவுவதை போன்று, மலக்குடலிலுள்ள நுண்ணுயிரிகளை இந்த பாக்டீரியம் அழிக்கிறது.

நுண்ணுயிரிகள்

மனித செல்களை விட உங்களது உடலில் அதிக அளவிலான நுண்ணியிரிகள் உள்ளன. அதாவது உங்களது உடலில் 43 சதவீதம்தான் உடல் செல்கள் உள்ளன.

மற்றவை எல்லாம் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒருசெல் நுண்ணுயிரியான ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிரிகளே.

ஒரு மனித ஜீனோமானது (மனித உயிருக்கான முழுமையான மரபீனி குறிப்புத் தொகுதி) 20,000 ஜீன்கள் எனப்படும் மரபீனிக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் நம் உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் அனைத்து மரபீனிகளையும் ஒன்றாக சேர்த்தால், இந்த எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் 20 மில்லியன் நுண்ணுயிர் மரபீனிகளைக் கொண்டதாக இருக்கும். மேலும், இது இரண்டாவது ஜீனோம் என்றும் அறியப்படுகிறது.

மாற்று சிகிச்சை

சி. டிபிசிலி பாக்டீரியத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தினமும் தண்ணீரான மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்று பிடிப்புகள், காய்ச்சல் மற்றும் மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில் அபாயகரமான இந்த நோய்த் தொற்று சமயத்தில் உயிரையும் பறித்துவிடும்.

மலமாற்று அறுவை சிகிச்சை

இதற்கு சிறந்த மருந்தாக ஆன்டிபயாட்டிக்குகள் விளங்குகின்றன.

இந்த சிகிச்சை முறைக்கு மாற்றாக உள்ளதுதான் மல மாற்று சிகிச்சை. அதாவது, நல்ல உடல்நிலையிலுள்ள ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு நோய்ப் பாதித்த மற்றொருவரின் உடலில் வைக்கப்படும்.

நோயாளியின் உறவினருடைய குடலிலுள்ள நுண்ணுயிரிகள் அவரை ஒத்து காணப்படும் என்பதால் பெரும்பாலும் அவரது மலமே எடுத்துக்கொள்ளப்படும்.

"மாதிரி" எடுக்கப்பட்டவுடன், அதனுடன் தண்ணீர் கலக்கப்படும். சில சமயங்களில் கைகளால் அல்லது வீட்டில் பயன்படுத்தப்படும் மிக்ஸரால் மலம் உடைக்கப்படும்.

உடலில் தேவையான இடத்தில் மலத்தை பொருத்த இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வாய் வழியாக அல்லது மலக்குடல் வழியாக.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள, பசிஃபிக் நார்த்வெஸ்ட் தேசிய ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் நிபுணர் ஜேனட் ஜேன்சன், மலமாற்று சிகிச்சை தீர்வு தரும் என்று நிரூபிக்க முயற்சிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

நாள்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக 27 கிலோ எடை குறைந்திருந்தார் 61 வயதான பெண் ஒருவர்.

"நோய்த் தொற்று காரணமாக உயிரிழக்கும் அபாயத்தில் இருந்தார். எந்த ஆன்டிபயாடிக்கும் பலனளிக்கவில்லை" என்கிறார் மருத்துவர் ஜேன்சன்.

அவரது கணவரின் உடலில் இருந்து மலம் எடுக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு மலமாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை வெற்றி பெற்றது மிகவும் ஆச்சரியம் அளித்ததாக பிபிசியிடம் பேசிய ஜேன்சன் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு பின், அவரது குடல் இயக்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி குணமடைந்தார்.

மலமாற்று அறுவை சிகிச்சை

90 சதவீதம், இந்த சிகிச்சை வெற்றி பெறும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சி.டிஃபிசிலிக்கான சிகிச்சையைக் கடந்து மருத்துவத்துறையில் மலமாற்று சிகிச்சைக்கு அர்த்தமுள்ள ஏதேனும் ஒன்று உள்ளதா?

நீங்கள் நினைத்துப் பார்க்கும் எந்த ஒரு நோய்களிலும், நம் மனித மற்றும் நுண்ணியிரியல் செல்கள் இடையிலான தொடர்பு ஆராயப்படுகிறது.

அழற்சி குடல் நோய், நீரிழிவு நோய், பார்கின்சன் மற்றும் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற நோய்களுக்கும், புற்றுநோய் மருந்துகள் வேலை செய்கிறதா என்பதற்கும் நுண்ணியிரிகளுக்கும் தொடர்பு உள்ளது.

ஆனால், மலமாற்று சிகிச்சையால் திட்டமிடப்படாத விளைவுகள் ஏற்படும் என்பதையே இது குறிக்கிறது.

தன் மகளிடம் இருந்து மலமாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் 16 கிலோ உடல் எடை கூடினார் என்று 2015ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இதே போல, அபாயகரமான நோயை ஏற்படுத்தும் நுண்ணியிர்கள் பரிமாற்றப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.

https://www.bbc.com/tamil/science-43857214

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.