Jump to content

வடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா


Recommended Posts

வடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா

இந்த வார இறுதியில் வடகொரியா- தென் கொரியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதையடுத்து இருநாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி நிறுவப்பட்ட பிரம்மாண்ட ஒலிபெருக்கி மூலம் தாம் செய்துவந்த பிரசாரத்தை நிறுத்தியுள்ளது தென் கொரியா.

தென்கொரியாவில் ஒலிபெருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எல்லையில் டஜன் கணக்கிலான ஒலிபெருக்கிகளை தென் கொரியா வைத்துள்ளது. கொரியாவின் பாப் இசை பாடல்கள் முதல் வட கொரியா மீதான விமர்சன செய்திகள் வரை அதில் ஒலிபரப்பப்படும். எல்லையில் உள்ள மக்களோடு வட கொரிய ராணுவ வீரர்களும் இந்த ஒலிபரப்பை கேட்கின்றனர்.

வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதையடுத்து எல்லையில் ஒலிபெருக்கி மூலமான ஒலிபரப்பை நிறுத்துவதன் மூலம் இருதரப்பிலும் சுமூகமான நிலை ஏற்படும் என சோல் கூறியுள்ளது.

வட கொரியாவும் எல்லையில் சொந்தமாக ஒலிபெருக்கிகளை வைத்துள்ளது. தென் கொரியா மற்றும் அதன் கூட்டணிகள் மீதான விமர்சனங்கள் அதில் ஒலிபரப்பப்படும். வட கொரியாவும் தென்கொரியாவைப் போலவே ஒலிபரப்பை நிறுத்துமா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை.

அதிக சத்தத்தில் எல்லையில் பிரசாரம் ஒலிபரப்பப்படுவது திங்கள் காலையன்று நிறுத்தப்பட்டுள்ளது என தென் கொரியா தெரிவித்துள்ளது . '' இரு கொரிய நாடுகளுக்கு இடையே ராணுவ பதற்றங்களை குறைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு அமைதியான சூழ்நிலையில் நடப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என செய்தி தொடர்பாளர் சோய் ஹோய் -ஹியுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

''இந்த முடிவு இரு நாடுகளும் தங்களுக்கு இடையே மேற்கொள்ளும் விமர்சனப் பிரசாரங்களை நிறுத்தவும், அமைதியை உருவாக்கவும் உதவும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வார இறுதியில் அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதாகவும் அணு சோதனை தளத்தை மூடப்போவதாகவும் வடகொரியா தெரிவித்தது. வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதற்கு வட கொரியா தயாராகிவருவதையடுத்து இந்த ஆச்சரியமான அறிவிப்பு வெளிவந்தது.

'' கொரிய தீபகற்பத்தில் முழுமையாக அணு ஆயுத ஒழிப்பு செய்வதை நோக்கி எடுக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க முடிவு'' என தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இதனை வருணித்துள்ளார்.

தென்கொரியாவில் ஒலிபெருக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES/POOL

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அடுத்த வெள்ளியன்று தென் கொரிய அதிபர் மூனை சமாதான கிராமமான பன்முன்ஜோமில் சந்திக்கவுள்ளார். ஒரு தசாப்தத்துக்கு பிறகு கொரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் முதல் மாநாடு இது.

வரும் ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கிம் சந்திக்கவுள்ளார். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான தற்போதைய அதிபர்களுக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பாக இந்நிகழ்வு இருக்கும்.

கொரியப் போருக்கு பிறகு தென் கொரியாவின் பிரசார ஒலிபரப்பு தொடங்கப்பட்டு சில முறை நிறுத்தப்பட்டுள்ளது. வட கொரியா ராணுவ வீரர்கள் தங்களது தலைவர்கள் தங்களை தவறாக வழிநடத்துகிறார்களா என சந்தேகிக்க, ஒலிபெருக்கி வைக்கும் யோசனையை தென் கொரியா நடைமுறைக்கு கொண்டு வந்தது.

கொரிய தீபகற்பத்தில் இரு நாடுகளின் உறவில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து இந்த ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டதும் குறைக்கப்பட்டதும் உண்டு. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை முடிவின்படி 2004-ல் முன்னதாக ஒலிபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் 2015-ல் ராணுவ மயமற்ற மண்டலத்தில் வட கொரியாவின் கன்னி வெடிகளால் இரண்டு தென் கொரிய ராணுவ வீரர்கள் கடுமையாக காயமடைந்ததை அடுத்து தென் கொரியா மீண்டும் பிரசார ஒலிபரப்பை தொடங்கியது. 2015-ல் மீண்டும் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது எனினும் 2016-ல் வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை செய்ததைதையடுத்து மீண்டும் ஒலிபரப்பு துவக்கப்பட்டது.

தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டுக்குப் பிறகு மீண்டும் தென்கொரியா ஒலிபரப்பைத் தொடங்குமா என்பது குறித்து ஏதும் கூறப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-43866276

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.