Jump to content

கூகிள் பற்றி சுவையான தகவல்கள்


Recommended Posts

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்த࠮?ன் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

நன்றி தினமணிக்கதிர்

Link to comment
Share on other sites

நானும் இப்படியொரு இடத்தை தான் தேடி கொண்டு இருந்தனான் அங்கே தான் வேலைக்கு போக போறேன்

Link to comment
Share on other sites

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்க࠮?்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

கூகிளை நம்பித்தான் இன்று எல்லாமே குறிப்பாக மாணவர்கள்.

கூகிளின் முகப்புபக்கம் தனியே ஒரு சேர்ச் பொக்சை மட்டும்தான் கொண்டு இருக்கிறது. சாதாரண தளங்களுக்குரிய எந்த அமைப்பும் இல்லை. மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அப்படி அப்பக்கம் இருப்பதற்கான காரணம் தெரியுமா? உண்மையில் அப்போது அவர்களுக்கு வெப் இணைய பக்கங்களை அழகுற வடிவமைக்க தெரியாதாம். அதனால் அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் பின்னர் அதனையே ஒரு ஸ்ரான்டாட்டாக விட்டுவிட்டார்கள்.

நானும் இப்படியொரு இடத்தை தான் தேடி கொண்டு இருந்தனான் அங்கே தான் வேலைக்கு போக போறேன்

சிட்னியில ஒரு கூகிள் ஓபிஸ் இருக்குது. ரை பண்ணுங்க.:lol:

Link to comment
Share on other sites

சிட்னியில ஒரு கூகிள் ஓபிஸ் இருக்குது. ரை பண்ணுங்க.:unsure:

ஆமாம் நாளைக்கே டிரை பண்ணுகிறேன்

:lol:

Link to comment
Share on other sites

ஆமாம் நாளைக்கே டிரை பண்ணுகிறேன்

:unsure:

என்ன ஒப்பீஸ் கிளீன் பண்ணுற வேலைக்கா :lol:

Link to comment
Share on other sites

என்ன ஒப்பீஸ் கிளீன் பண்ணுற வேலைக்கா :lol:

அது உமக்கு டிரை பண்ணுறன்

:unsure:

Link to comment
Share on other sites

கூகிளில் வானவில் என்று தேடிப் பார்த்தேன், நம்ம யாழ் வானவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

புல்லரித்துப் போனேன்.

Link to comment
Share on other sites

கூகிளில் வானவில் என்று தேடிப் பார்த்தேன், நம்ம யாழ் வானவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

புல்லரித்துப் போனேன்.

:(:unsure::):lol:

Link to comment
Share on other sites

கூகிள்

கூகிள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் நிறுவனம் இதுவே கூகிள் தேடுபொறியைப் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 5, 700 பேர்வரை பணிபுரிகின்றனர்.

கூகிள் சேவைகள் யாவும் வழங்கிப் பண்ணைகளிலேயே en:Server farm இயங்குகின்றன. இவை மலிவான ஆயிரக்கணக்கான கணினிகளில் சற்றே பளு குறைக்கப் பட்ட லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகின்றன. இந்த நிறுவனமானது கணினிகளின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறாத போதும் 2005ஆம் ஆண்டில் 100, 000 லினக்ஸ் கணினிகள் மூலம் இயங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

சரித்திரம்

[தொகு] ஆரம்பம்

1996 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆய்வு முயற்சியாக லாரி பேஜ் (en:Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (en:Sergey Brin கலாநிதிப் (டாக்டர்) படிப்பிற்காக கலிபோர்னியா ஸ்ராண்ட்போட் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப் பட்டது. இது அப்போதிருந்த தேடுபொறிகளைப் போலல்லாது எத்தனை முறை தேடும் சொல்லானது அப்பக்கதிலிருகின்றது என்று கருதாமல் தேடுபொறியானது இணையப் பக்கதிற்கான தொடர்புகளை ஆராயவேண்டும் என்று கருதி ஆய்வுகளில் ஈடுபட்டனர். இது ஆரம்பத்தில் பக்ரப் ("BackRub") என்றழைக்கப் பட்டது ஏனெனில் இது எத்தனை பக்கங்கள் இந்த இணையப் பக்கங்களை இணைகின்றத என்பது கணக்கெடுக்கப் பட்டது.

கூடுதலான இணைப்புள்ள பக்கமே கூடுதலான பொருத்தாமான பக்கம் தேடல் முடிவுகளில் இதைப் பிரயோகிக்கலாம் என்ற நம்பிக்கையில் தமது கலாநிதி (டாக்டர்) ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்தனர். பேஜ் மற்றும் பிறின் ஆய்வுகளே கூகிள் தேடுபொறியின் அடிக்கல்லாக அமைந்தது. ஆரம்பத்தில் கூகிள் தேடுபொறியானது google.stanford.edu. google.com டொமைன் ஆனது செப்டம்பர் 14, 1997 இல் பதிவு செய்யப்பட்டு கூகிள் செப்டம்பர் 7, 1998 இல் ஒன்றிணைக்கப் பட்ட நிறுவனமாக நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிடத்தில் உருவாகியது. சண் மைக்ரோசிஸ்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆண்டியின் 1 இலட்சம் அமெரிக்க டாலர் உதவியுடன் மொத்த முதலீடு 1.1 மில்லியனிற்கு அளவில் இருந்தது

கூகிள் பற்றி விக்கிபீடியாவில் சுட்டது :P

Link to comment
Share on other sites

கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆளுமைகளை எவ்வாறு சேர்த்துக் கொள்கின்றதென ஆராய்வோம். கூகிளின் மொத்த நடவடிக்கைகளிலும் புதுமை, விவேகம் என்பன காணப்படுவது தனது நிறுவனத்திற்கு மனித வளங்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் காணப்படாமலில்லை.

கீழுள்ள நிழற்படத்தினைப் பற்றி அறிவீர்களா? சற்று சிந்தியுங்கள்

f_billboardlam_e10f692.jpg

குறித்த நிழற்படத்தில் உள்ள விளம்பரப் பலகையில் காணப்படும் ஆங்கில எழுத்துக்கள் வருமாறு:

{first 10-digit prime found in consecutive digits of e}.com

இது கூகிள் நிறுவனத்திற்கு விவேகமான, திறமை வாய்ந்த கணினி பொறியியலாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, கலிபோர்னியாவின் வீதியொன்றின் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையாகும். இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது…???

ஆராய்ச்சிக்கான கேள்வி. இந்த விளம்பரப் பலகையானது, கணிதப்புதிர் ஒன்றினையே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. இங்கு e என்பதனால் சொல்லப்படுவது இயற்கை மடக்கையின் அடி எண்ணொன்றாகும். இந்த மடக்கை எண்ணின் பெறுமானம் 2.71828 ஆக அமையும். இந்த எழுத்தின் கணித நிலையை துல்லியமாக அறிந்திட இங்கே செல்லுங்கள். ஆக, இந்தப் புதிருக்கு மிகச் சரியான விடையைக் கண்டுபிடித்து அந்த இலக்கங்களை இணைய உலாவியில் இணைய முகவரியாக டைப் செய்ய, அது இந்தப் புதிரினை விடச் சங்கீரணமான கணிதப் புதிரினைக் கொண்ட இணையத் தளத்திற்கு அழைத்துச் செல்லுமாம். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான விடைகளை வழங்குபவர் கூகிள் எனும் புதுமைகளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம். புதுமையான சிந்தனை.

அது சரி மேலுள்ள கணிதப் புதிருக்கு நீங்கள் விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? முயற்சி செய்யலாமே.. உங்களால் முடியாவிட்டாலும் இணையத்தில் தேடியாவது விடையைப் பெறலாமே…!

உலகத்திலுள்ள பலரும் இப்புதிரினை விடுவிக்க நிறைய பிரயர்த்தனங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதனை இந்த தளத்திற்க்குசெல்வதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் காட்டும் புதுமை அந்த நிறுவனத்தின் அத்தனை வருவிளைவுகள், நடவடிக்கைகள் என்பனவற்றிலும் காணப்படுகின்றன என்பதனை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

Link to comment
Share on other sites

கூகுள் ஆண்டவர் இல்லையென்றால் மென்பொருள்துறையில் ஒரு நாளை ஓட்டுவது கூட கடினமாகிவிடும். அப்படி நான் உபயோகிப்பது இல்லை என்று கதை விடுபவர்கள் யாரும் இந்த குறிப்புகளை வாசிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க கூகுளையே கடவுளாக பூஜிப்பவர்களுக்க்கான மற்றொரு பக்தனின் காணிக்கையாக.

1. இது அல்லது அது

தேடலின் போது சில சமயம் இது அல்லது அது எது இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை அடிக்கடி ஏற்படும். எ.காட்டாக சூர்யா மற்றும் ஜோதிகா யாருடைய பேர் இருந்தாலும் அந்த முகவரிகள் தேவை என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Google Search: சூர்யா OR ஜோதிகா

“சூர்யா ஜோதிகா” என்று தேட கொடுத்தால் இருவர் பெயர் இருக்கும் முகவரிகள் மட்டும் கிடைக்கும்.

2. அங்க என்ன நேரம்?

உலகில் சில முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் என்ன என்பதை அறிய மிக எளிதாக ஒரு வசதி உள்ளது.

Google Search: “Time in Bangalore”

என்று கொடுத்தால் போது. சென்னையை இந்த தேடலில் காணவில்லை.

3. கணக்கில் சிங்கம்

நமக்கு தான் இப்ப எல்லாம் 1 + 1 என்பதற்கு கூட கணிப்பான் தேவை படுகின்றது. கூகிள் இன்னும் வாழ்வை சோம்பல் படுத்த ஒரு வசதி கொடுத்துள்ளது. எப்படி?

Google Search: 123 * 1234

என்று கொடுத்து பாருங்கள்

4. வலைதளத்தில் மட்டும் எப்படி தேடுவது?

உங்களுக்கு ஒரு வலைதளத்தில் ஏதாவது ஒரு வார்த்தை தேடவேண்டும். உதாரணத்திற்கு திண்ணை வலைதளத்தில் இருக்கும் ஜெயமோகன் பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன வார்த்தை தேடவேண்டுமோ அதை கொடுத்துவிட்டு, அந்த வலைதளத்தில் முகவரியை Site:<வலைத்தள முகவரி> என கொடுத்தால் நமக்கு தேவையான பக்கங்கள் மட்டும் கிடைக்கும்

Google Search: “வானவில்” site:yarl.com

5.கோப்புகள் மட்டும்

கோப்புகளுக்குள் தேடவும் கூகுளில் வசதியுள்ளது. கோப்புகள் மட்டும் தேவை என்றால்

filetype:pdf,doc,ppt என்று தரலாம். அந்த கோப்புகள் மட்டும் கிடைக்கும். (குகிள் 101KB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பட்டியலிடுகின்றது என ஒரு வதந்தி உள்ளது)

Google Search: தமிழ் filetype:doc

(இந்த தேடலில் நான்கு விடை மட்டும் வருகின்றது)

6. எண் விளையாட்டு.

பல சமயங்களில் வருடங்கள் அல்லது எண்கள் சரியாக தெரியாது. 1990ல் இருந்து 2000 வரை ஏதோ ஒரு ஆண்டு அல்லது 10ல் இருந்து 25 வரை இருக்கும், ஆனால் சரியாக எந்த எண் என்று தெரியாது, இது போல பயங்கர இக்கட்டான் நிலையில் எப்படி கூகிள் ஆண்டவரிடம் கோரிக்கை வைப்பது, வைக்கும் விதத்தில் கோரிக்கை வைத்தால் பலன் கிட்டும்.

அதற்கு 1900..2000 என கொடுக்க வேண்டும்.

Google Search: இந்தியா 1945..1948

6.1 சில சமயம் 10க்கு மேல் அல்லது 10க்கு கீழ் என்று மட்டும் தெரியும், அப்பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

10.. (பத்திற்கு மேல் தேட)

..10 (பத்திற்கு கீழ் எண்களை தேட)

7. தவிர்க்க முடியாத வார்த்தைகள்

கூளிள் தேடலில் மொத்தம் 32 வார்த்தைகளை கொடுத்து தேடலாம். முன்னர் பத்து வார்த்தைகள் மட்டுமே தேடிவந்தது. இந்த முப்பத்தி இரண்டில் சில வார்த்தைகள் மிக அவசியமாக நமக்கு தோன்றலாம். அந்த வார்த்தைகளை மிக அவசியம் தேவை என்று நமக்கு தோன்று அப்போது அந்த வார்த்தைகளை உள்ளே போட்டு தேடினால் பலன் கிடைக்கும்

Google Search : இந்தியா வெற்றி

பல தேடும் போது இந்தியா + வெற்றி என தேடுவதை பார்த்துள்ளேன். கூகிள் தேடுஇயந்தரத்தில் ஒவ்வொரு வார்த்தை நடுவிலும் AND தானாக சேர்த்துக்கொள்ளும். ஆனவே + போட வேண்டிய அவசியம் இல்லை

8. பதிலை தேடுங்கள்.கேள்விகளை அல்ல..

ஒரு சின்ன விடயத்தை மனிதில் வைத்துக்கொண்டால் கூகிள் தேடலில் கை தேர்ந்தவாராகிவிடலாம். கூகிள் பதில்களில் இருந்து தான் தேடுகின்றது, ஆகவே பதில்களை மட்டுமோ தேடல் சொற்களில் வைக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் தேடுவது போல தமிழிலும் தேட ஆரம்பியுங்கள். தேட தேட தான் பல பக்கங்கள் வலைதலைங்கள் கூகுளுக்குள் பட்டியலிடப்படும். தமிழில் ஒருங்கிறியில் (Unicode) பக்கங்கள் மட்டுமே தேடப்படுகின்றது.

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க..

நன்றி : google.com

Link to comment
Share on other sites

கூகிள்பிளெக்ஸ் (Googleplex) என்பது கலிபோர்னியாவிலுள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமைஇடத்தின் பெயர்.இங்கே அங்கிருந்து சில படங்கள்.

f_googleplex0m_0b1db1f.jpg

f_googleplex0m_fae913c.jpg

f_googleplex0m_9a36bf9.jpg

f_googleplex0m_4f56958.jpg

f_googleplex0m_518c768.jpg

f_googleplex0m_dd0bb29.jpg

f_googleplex0m_023a89d.jpg

f_googleplex0m_6e17e4a.jpg

f_googleplex0m_6492278.jpg

Link to comment
Share on other sites

நல்ல தகவல்கள் வானவில். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ( கொப்பி பேஸ்ட்பண்ணல்ல ரைப்பண்ணியிருக்கேன்:))

Link to comment
Share on other sites

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

வானவில் .. மிக்க நன்றி.. சுவையான ஆனால் பிரயோசனமான தகவலைத் தந்ததிற்கு நன்றி

:lol:

Link to comment
Share on other sites

கூகிள் - காப்புரிமை வழக்கு

பெல்சியம் நாட்டு பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய மொழி செய்திகளை, கூகிள் தனது தேடு பொறி தளத்திலும், செய்தி திரட்டியிலும் வெளியிட்டமைக்காக, அந்நாடு கூகிளுக்கெதிராக காப்புரிமை மீறல் வழக்கை துவங்கியிருந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு கூகிளுக்கு சாதகமாக அமையவில்லை. தலைப்புச் செய்திகளை மட்டுமே கூகிள் வெளியிடுவதாகவும், முழு செய்திகளையும் வாசிக்க குறிப்பிட்ட செய்திதளங்களுக்கு தகுந்த சுட்டிகள் தந்திருப்பதாகவும் கூகிள் செய்த வாதம் பலிக்காமல் போனது.

வழக்கின் தீர்ப்பின்படி கூகிள் தனது திரட்டி சேவையை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் $32500 அமெரிக்க டாலர்களை அபராதமாக் செலுத்த வேண்டும்.

வழக்கின் முடிவு கூகிளுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதிப்பு அந்த செய்தி நிறுவனங்களுக்கே பெரும்பான்மையாக இருக்கும் என்று வலை அறிஞர்கள் கருதுகிறார்கள். பெரும் நிறுவனங்கள் கூகிள் தேடு பொறி முடிவுகளில் தங்கள் நிறுவனம் முதலிடம் வருவதற்கு விளம்பரம் செய்வதற்கு பல அயிரங்களை செலவு செய்யும் இந்த காலகட்டதில் இவ்வழக்கு சற்றே விசித்திரமானதாகும்.

இவ்வழக்கின் முடிவு கூகிள், MSN, யாஹூ போன்ற நிறுவனங்களுடன் நின்றுவிடுவதில்லை. DIGG, DELICIOUS போன்ற திரட்டி சேவைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்மணம், தமிழ் ப்ளாக்ஸ், தேன்கூடு போன்ற திரட்டி சேவைகளும் தங்கள் காப்புரிமையை தூசுதட்டவேண்டியது அவசியம்.

us tamils

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தேடிக் கிடைப்பதில்லை டியனன்மென் சதுக்கம்!

சென்ற வாரம், உலகத்தின் மிகப் பெரிய இணையத் தேடியான கூகுள் இரு விசயங்களுக்காக அதிகமாக விவாதிக்கப்பட்டது.

1. அமெரிக்க அரசின் ஓர் உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.

2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது.

1. அமெரிக்க அரசின் ஒரு உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.

அமெரிக்க அரசு (அரசுசார் நிறுவனம்), முன்னணி தேடிகளான கூகுள் (Google), யாகூ (Yahoo) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், அதன் பயனாளர்கள் உபயோகப்படுத்திய 1 மில்லியன் தேடல் வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியது. அந்த வார்த்தைகள், எம்மாதிரியான விசயங்களுக்காக (முக்கியமாக போர்னோகிராபி) அமெரிக்க மக்களால் தேடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன் என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு யாகூ அரசு கேட்பதை கொடுக்க ஒப்புக்கொண்டது. ஆனால் கூகுள் மட்டும், "இது பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் விசயம்", எனக் கூறி கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளது. "இன்று என்ன என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது எனக் கேட்கப்படும். இன்னும் சில நாட்கள் கழித்து, யார் யார் என்ன என்ன தேடினார்கள்? அந்த விபரங்கள் வேண்டும் எனக் கேட்டால் அதையும் கொடுக்க வேண்டிய நிலை வரும்" எனவும் வாதிடப்பட்டது.

பொதுவாக அனைத்து தேடிகளும், அவற்றிற்கு வரும் தேடல் வார்த்தைகளை (Search Queries) சேமித்து வைப்பது வழக்கம். கூகுளும் அவ்வாறே செய்து வந்துள்ளது. அரசு, இது சம்பந்தமாக ஏதேனும் கொள்கை வகுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக தேடிய விசயங்கள் கூட இன்னும் அழிக்கப்படாமல் கூகுளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது பற்றி, சமீபத்தில் வந்த "The Google Story" என்ற புத்தகத்தின் "Porn Cookie Guy" (பக்கம் 165-ல்) அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த புத்தகம் பற்றி எழுத வேண்டும் என பல வாரங்களாக நினைத்திருந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். புத்தகம் சுமார் தான்)

"Computer users searching for pornography online may be mistaken in concluding that they are viewing it anonymously and privately. Google maintains electronic records of all searches, which can be traced back to specific computers. If someone has a Gmail account or has regiastered for any other Google Service, the firm's electronic records could be used to trace porn searches to specific individuals.

Not suprisingly, both Google and its biggest competitior, Yahoo, profit handsomely by selling sex related ads. Pornography, withing limits, is protected by the First Amendment in thw U.S. In countries where online pornography is banned, including Germany and India, Google and Yahoo abide by statutes."

அதாவது ஒவ்வொரு முறையும் கூகுள் தேடி உபயோகிக்கப்படும் போதும், தேடுபவரின் IP Address-ம், தேடக் கொடுத்த வார்த்தைகளும் சேமிக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு, தேடுபவரை சுலபமாக அடையாளம் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், Gmail-ம் இன்ன பிற சேவைகளும் (Google Services)-ம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை இன்னும் சுலபமாக்குகிறது. மேலும் இந்தத் தகவல்கள் என்றுமே அழிக்கப்படுவதில்லை.

இதுவே, இப்போது கூகுளுக்கும், அதன் பயனாளர்களுக்கும் வினையாக அமைந்துள்ளது. கூகுளுக்கு இது எப்படி சிக்கலாக அமைய முடியும்? அரசு கேட்கும் விபரங்களைக் கொடுத்தால், கூகுளின் மீதான நம்பகத்தன்மை பயனாளர்களிடம் குறைந்துவிடும். ஒரு வேளை கொடுக்க மறுப்பது நம்பகத்தன்மை உயர்த்துவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம். (இது என்னுடைய யூகம் மட்டுமே)

வழக்கில் வெற்றிபெற்றால், நல்ல பெயர் கிடைக்கும். தோல்வியுற்றால், மக்களுக்கு உண்மையாக இருப்பதற்கு பாடுபட்டதற்காக மக்களிடம் மதிப்பு கூடும்.

எதற்காக கூகுள் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டும்? அவ்வாறு செய்வதால் தானே சிக்கல்?. அரசு கேட்கும் போது, சுலபமாக "எங்களிடம் அந்த தகவல் இல்லை", என சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "இருக்கிறது. ஆனால் தர இயலாது." எனக் கூறுவது வீண் வேலை தான். அப்படியென்றால் அவர்கள் அந்தத் தகவல்களை வைத்து என்ன தான் செய்கிறார்கள்?

இப்போது எட்வெர்ட் என்ற அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர், இது போல தனிநபர் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு சேமித்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஒரு வேளை அவரும் வில்லங்கமாக கூகுள் தேடியை உபயோகப்படுத்தியிருப்போரோ? யார் கண்டது புஷ் கூட உபயோகப்படுத்தியிருக்கலாம்.

2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது

கூகுளின் சீனத் தளத்திற்கு (google.cn), சீன அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. "கூகுள் தேடி, விடைகளை பயனாளர்களுக்குக் கொடுக்கும் போது, சில விடைகளை (சீனா, தைவான் அரசியல், புரட்சி சார்புடைய மற்றும் இன்ன பிற விசயங்களை) பகுத்து கொடுக்கவேண்டும்", என்பது அந்த கட்டுபாடு. இதற்கு கூகுளும், அனைவரும் ஆச்சர்யப்படும்படியாக, ஒப்புக்கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலர் அந்த நிறுவனத்தின் இரட்டை வேடத்தை எதிர்த்தும், இன்னும் பலர் அதன் வியாபாரத் தந்திரத்தை ஆதரித்தும் பேசிவருகின்றனர். இது தான் ஒரு பன்னாட்டு தேடி நிறுவனத்தின், முதல் முழுமையான சீனத் தளம். மற்ற முன்னணி நிறுவனங்களான யாகுவும், மைக்ரோசாப்ட்-ம் கூட இன்னும் முழுமையான சீனப் பதிப்பினை ஆரம்பிக்காத நிலையில், கூகுளின் முயற்சி அதன் சந்தை பங்கினை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

கூகுள் google.com-ல் tiananmen square என்று தேடினால் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். அவற்றில் குறிப்பிடத்தக்கது விக்கிபீடியாவினுடையது. (விக்கிபீடியாவும், பிளாக்ஸ்பாட்டும் சீனாவில் முழுமையாக தடைசெய்யப்பட்ட தளங்கள்)

அதே சமயத்தில் www.google.cn என்ற தளத்தில் தேடினால் உங்களுக்கு அந்த சம்பவம் தொடர்பாக எந்த சுட்டியும் கிடைக்காது. இன்னும் விரிவாக 'tiananmen square 1989' என்றோ அல்லது 'Tiananmen Square' என்றோ கொடுத்தாலும், அது சம்பந்தமாக சுட்டிகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், சீன மக்களால் அந்த தளத்தினை பார்வையிட முடியாது. உபயம் சீன இணைய சேவை நிறுவனங்கள் (ISP).

இதே போல நீங்கள் images.google.com லும், images.google.cn லும் தேடி வித்தியாசத்தை அறியலாம்.

இப்போது கூகுள், சீனா அரசின் உத்தரவுக்குக் கட்டுபட்டு இம்மாதிரியான விசயங்களை பகுக்கிறது. நாளைக்கே, "யார் யார் 'புரட்சி', 'தைவான்' என தேடியது? அந்த விபரங்களைக் கொடுங்கள்", எனக் கேட்டால் கூகுள் என்ன செய்யும்", என சிலர் கேட்கிறார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையாளரின் விபரத்தை (ஒரு யாகூ மின்னஞ்சல் முகவரியை ஆதாராமாக கொண்டு), யாகூ நிறுவனம் அரசுக்குக் கொடுத்தது. அந்தத் தகவலை வைத்து, சீன அரசு அந்த பத்திரிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் விதித்தது.

ஆனால் சில சீனர்கள், "இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல; இந்த தடைகள் பெரிய மாறுதலையும் உண்டு செய்யப்போவதில்லை. எங்களுக்குத் தேவையான விசயங்களை Google.com-லோ அல்லது மின்னஞ்சலிலோ பெற்றுக்கொள்வோம். விக்கிபீடியா போன்ற தளங்கள், எந்த தேடியின் வழியாகச் சென்றாலும் தடை செய்ய்ப்பட்டுள்ளன. என்ன தான் கூகுள் பகுக்காத விடையை (தளத்தின் முகவரியைக்) கொடுத்தாலும் அந்த தளங்கள் முற்றிலுமாக சீனா இணைய நிறுவனங்களால் (ISP's DNS) தடைசெய்யப்பட்டுள்ளன. ஆதலால் ஒரு வித்தியாசமும் இல்லை", என்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று ஒரு சீனர்,

"சீனா ஒன்றும் அனைவரும் நினைப்பது போல் மோசமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் சரியாகிவிடும். அமெரிக்கர்கள் தங்களுக்கு தான் பேச்சுரிமை இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். நீங்கள் பேசுவதை கேட்க யாருமே தயாராக இல்லையெனும் போது, பேச்சுரிமை இருந்து என்ன பயன்? சில கோடீஸ்வரர்கள் தான் (பத்திரிக்கை, டி.வி அதிபர்கள்) அமெரிக்க ஜனாதிபதியை நிர்ணயம் செய்கிறார்கள்"

என்கிறார்.

'I think those Americans think they have freedom of speech, but it's useless if when you talk nobody listens to you because a certain group of billionnaires control the media and trick the democratic process every 4 years.'

*****************************

நன்றி தடாகம் வலைப்பதிவு

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கூகிள் எர்த் இணையதளத்தை பார்வையிடுபவர்கள் அவர்கள் விரும்பிப் பார்க்கும் இடத்தில் உள்ள இயற்கையான ஒலியையும் விரைவில் கேட்கும் வசதி அறிமுகமாகவுள்ளது.

பிரேசிலின் மழைக்காடுகள் முதல் ஆர்ட்டிக்கின் ஐஸ் தகடுகள் வரை பல்வேறு இடங்களை கூகிள் எர்த் இணைய தளத்தில் பார்க்கும் போது அங்கே உள்ள இயற்கையான ஒலியையும் கேட்டு மகிழலாம்.

உலகத்தை உயிரோட்டத்துடன் இணைய தளத்திற்குள் கொண்டு வருவதே தங்கள் நோக்கம் என்று, இதற்கான மென்பொருளை உருவாக்கியுள்ள கலிபோர்னியாவில் உள்ள ஒய்ல்ட் சான்க்சுவரி நிறுவனத்தை சேர்ந்த பெர்னி கிராசே தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்கள் விரும்பிப் பார்க்கும் இடத்தில் தற்போது ஏற்படும் ஒலிகளை மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ந்தப் பகுதியில் இயற்கையாக ஒலித்த சத்தங்களையும் கேட்டு மகிழும் வசதி இதில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இம்மாதம் 29ம் தேதி தனது புதிய மென்பொருளை அவர்அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமது மென்பொருளில் உள்ள சப்தங்கள் மிகவும் துல்லியமாக நேரம், தேதி மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவற்றுடன் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

msn.co.in

Link to comment
Share on other sites

அப்ப கட்டுநாயக்காவைப் பாத்தா, விமானச் சத்தத்தோட குண்டு வெடிக்கிற சத்தமும் கேக்குமா? :o:rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவையான பலனுள்ள்ள தகவல்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அப்ப கட்டுநாயக்காவைப் பாத்தா, விமானச் சத்தத்தோட குண்டு வெடிக்கிற சத்தமும் கேக்குமா? :blink::blink::blink:

ஐரோப்பிய நாடுகளில் சில அமெரிக்கா கனடா போன்றவற்றில்தான் அப்படி வரும்

சுவையான பலனுள்ள்ள தகவல்கள்

நன்றி

நன்றி நன்பரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.