Jump to content

இந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :


Recommended Posts

இந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :

Pakistan-Sri-Lanka.jpg?resize=259%2C194
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

பாகிஸ்தானின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன், சுகாதாரம் வீடமைப்பு, சுற்றுலா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் ,லங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

 

மேலும் அதிவேகப் பாதை நிர்மாணம் மற்றும் பெற்றோலிய வளத்துறையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் உலகின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றினை இலங்கையில் நிர்மாணித்தல் தொடர்பாகவும் சுற்றுலா நகரங்கள் இரண்டினையும் குறைந்த செலவிலான புதிய வீடமைப்பு பகுதிகளை நிர்மாணித்தல் தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் மலிக் சமரவிக்கிர, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் மற்றும் நிதி அமைச்சினதும் இலங்கை முதலீட்டு சபையினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இச்சந்தர்ப்பத்தில் பங்குபற்றினர்.

http://globaltamilnews.net/2018/76168/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாட்டு மக்கள் வருமையின் கொடுமையில் ஆனால் பக்கத்து நாட்டில அபிவிருத்தி செய்யினமாம் ....என்னடாப்பா உங்கன்ட் அரசியல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களன்.. எப்பவுமே... ஈழத்தீவில்.. தமிழ் அரசுகளை வீழ்த்த.. அந்நியரிடம் சரண்புகப் போய் மொத்த நாட்டையும் இழப்பதுதான்.. அவனின் வரலாற்றுப் பழக்கம். அதையே இப்பவும் செய்துக்கிட்டு இருக்கிறார்கள்.

போர்த்துக்கேயர்... காலத்திற்கு முன்பிருந்து.. இப்ப வரைக்கும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.