Jump to content

துர்சலை


Recommended Posts

துர்சலை - கணேசகுமாரன்

ஓவியங்கள் : செந்தில்

 

ரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு
கொண்டிருந்தது.

‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி.

துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன்னாள். ‘‘ஆமாம். நான் இன்று இரவுநீராடல்கூடப் புரியப் போவதில்லை’’ குரலில் கிளர்ந்த அலட்சியப் பெருமூச்சுக்கு தடாகத்தினை ஒட்டி வளர்ந்திருந்த மரமொன்றிலிருந்து மலர் உதிர்ந்தது. உடன் அப்பிரதேசமெங்கும் சுவாசம் நிறைக்கும் பரிமளமொன்று எழுந்து அலைந்தது. இடைப்பகுதியை இறுக்கியிருந்த வெண்ணிற ஆடையைச் சற்றே நெகிழ்த்தினாள் துர்சலை.

90p1_1522063131.jpg

‘‘இதென்ன அரசகுலத்தில் இல்லாத புது வழக்கம். இளவரசி இப்படி நடந்து கொண்டால், குழைத்த சந்தனமும் தயாரான அகிற்பொடியும் தங்கள் ஜீவனை மறந்தல்லவா போகும்?’’ என்றாள் மாதங்கி. அப்போது அவளின் வலதுகரம் துர்சலையின் தோள் தொட்டபடியிருந்தது.

‘‘துரதிருஷ்டமான விதிபோலும். சந்தனத்துக்கும் அகிற்பொடிக்கும் கவலைப்படுபவர்கள், அதன் ஆயுளை அனுபவிப்பர்களின் மனநிலையை ஏனோ புரிந்துகொள்வதில்லை’’ - துர்சலையின் இமைக்கா விழிகள் நனைந்த முழு நிலவை உற்று நோக்கிக்கொண்டிருந்தன.

‘‘என்ன துர்சலை... சில நாள்களாகப் புதிரின் வழியே நடமாடிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ ஆச்சர்யமானாலும் வினாவில் துயரம் ஒளிந்திருந்தது.

‘‘என் அந்தரங்க வடு அறிந்தவள் நீதானே மாதங்கி. உனக்குமா எனது வாதை புரியவில்லை. அஸ்தினாபுரமோ, காண்டவப் பிரஸ்தமோ மாறினாலும் மாறாதது இந்தச் சாபம்தானே...’’
90p3_1522063169.jpg
குழப்பமாகப் புருவம் நெறித்த மாதங்கியின் நுதலிலிருந்து காய்ந்த சந்தனம் உதிர்ந்தது. ‘‘உங்களுக்கென்ன வருத்தம். நூறு சகோதரர்களுக்கும் ஒரே சகோதரி என்ற கொடுப்பினை யாருக்கு வாய்க்கும் துர்சலை? இது முன்ஜென்மப் புண்ணியம்.’’

அவசரமாக மறுத்தாள். ‘‘இல்லை மாதங்கி. இது இப்பிறவிச் சாபம். நூறு பேர்களுக்குப் பிறகான மிச்சம்தானே நான். என் மூத்த குடிமகள் வானதி வழி வந்த சாபம்தான் என் நாழிகைகளில் எந்தவோர் ஆடவனும் இடம் பெறாமல் போனான்போலும்’’ துர்சலையிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டு, அணிந்திருந்த ஆடையைக் கருக்கியது.

‘‘புதிராக வாழ்கிறேன் மாதங்கி. கண்களை மூடினால் ஏதாவது ஒரு குறுநில மன்னனை வெல்ல களத்தில் வாள் பிடித்து நிற்பதுபோன்ற காட்சிதான் வருகிறது. இரவுறக்கத்தில் வரும் கனவுகள் உன்னிடம்கூடச் சொல்ல முடியாதவை மாதங்கி’’ - கண்ணீர் திரண்டு வழிந்து கனவைப் பேசியது. ‘‘அது ஓர் அழகிய நந்தவனம். மலர்களின் அளவோ அங்கிருக்கும் மலர்ச்செடிகளையே மறைத்தபடி மிகப் பெரியதாகவும் நுரையீரல் ஆழம் சென்று படியும் பரிமளத்துடனும் வீற்றிருக்கின்றன. இப்போதுகூட என் நாசியில் உறங்கிக்கொண்டிருக்கிறது அம்மலர்களின் நறுமணம். மெல்லிய துகில் அணிந்து நந்தவனத்தின் ஊடே நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு மலருக்குப் பின்னால் ஓர் ஆடவன் மறைவது கண்களுக்குத் தெரிகிறது. எனக்குள் ஓர் உற்சாகம். அவனைத் தேடி அலைகிறேன். மிக அகலமான தோள்கள், பின்புறத்திலிருந்து பார்க்கும்போதே திரண்ட அவன் புஜங்களும் இறுகிய மார்பின் ஓரங்களும் தெரிந்து தெரிந்து மறைகின்றன. பரந்த முதுகைத் தழுவியபடி நீண்ட கறுஞ்சிகை. காற்றில் ஆட ஆட மலரின் மணம் என்னை அவனை நோக்கித் தள்ளுகிறது. வானமே புதிதாய் ஒரு வண்ணத்தில் கிடந்ததுபோல் ஒரு நினைவு. என்ன ஓர் ஆச்சர்யம். அவனை நான் நெருங்க நெருங்க அவன் விட்டு விலகித் தூரம் செல்கிறான். என் பார்வையில் படுவதெல்லாம் அவன் சிகையும் அது அலையாடும் விதமும். நான் அவனை நோக்கி ஓடத் தொடங்குகிறேன். என்னுடம்பில் வியர்வை அரும்பத் தொடங்குகிறது. காற்றில் மிதந்த மணத்தை மாற்றுகிறது, என் வியர்வையிலிருந்து வெளிப்படும் கற்பூரம் கரைந்த காமத்தின் மணம், அத்தனை வெப்பமாய் நந்தவனத்தையே எரிக்கும் மணம் அது. ஒரு நிலையில் கண்ணீர் திரள அவனை நோக்கி விரைகிறேன். கரங்களில் அவன் சருமத்தினை உணரும் வேளை, என் விரல் வழி காமம் வழிவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனைத் தொட்டுத் தழுவி அவன் பின்னங்கழுத்தில் என்னிதழ் பதிக்கிறேன். முகம் காணும் ஆவலில் என்னிதழ்கள் துடிக்க அவனை என் பக்கம் வளைக்கிறேன். அந்த முகம்... அந்த முகம்...’’ வழியும் கண்ணீருடன் துர்சலை போராடிக்கொண்டிருந்தாள்.

90p2_1522063154.jpg

நெற்றியில் அரும்பித் துளிர்த்த அவளின் வியர்வைத் துளிகளைத் தன் ஆடையால் ஒற்றித் துடைத்த மாதங்கி, ‘‘துர்சலை...துர்சலை...’’ என்று தோள் அசைத்தாள்.

இமைகளைத் திறந்த துர்சலை, ‘‘அது என் சகோதரன் மகாபாகு’’ என்றாள். ‘‘எங்கு நோக்கினும் ஆடவர்கள். ஆனால், அத்தனை பேரும் என் சகோதரர்கள் என்றால், எனக்கான ஆடவனை எப்படி நான் கற்பனைகொள்வது?’’ துர்சலையின் சொற்கள் வறண்டு வெளிப்பட்டன.

‘‘சற்றே எழுந்து வாருங்கள். தடாகம் சுற்றி வரலாம்’’ - மாதங்கியின் கைப்பிடித்து எழுந்த துர்சலை, இடையிலிருந்து தளர்த்தியிருந்த ஆடையைச் சிறு முடிச்சிட்டு இறுக்கினாள். நடந்தவாறு பேசினாள்.

‘‘ஒவ்வொரு சுயம்வரத்திலும் இதுதான் நடக்கிறது. எல்லா ஆண்களும் இப்படி என் சகோதரர்களில் எவரையாவது நினைவில் கொண்டுவந்தால், எனக்கென்று எவரை நான் உணர்வது. ஆழி நடுவில் நெடுந்தாகத்துடன் கடற்பயணம் மேற்கொள்பளின் நிலைமையடி எனக்கு.’’ தடாகம் அருகில் வந்ததும் நின்று நிமிர்ந்து வான் நோக்கினாள். முழுநிலவு நாள். கூடுதலாய் வெண்ணிற ஒளியில் ஆடையொன்றைப் போர்த்திக் கிடந்ததுபோல் ஆகாயம். ‘‘துளி முகிலற்ற ஆகாயம், விண்மீன்கள் கொண்டு சமநிலைப்படுத்திக்கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் இல்லா வெற்று ஆகாயம் நான். வானதி, அம்பை வழியின் சாபம்தானே என் தந்தையின் பிறப்பு. ஈருடல்கள் ஒற்றைக் காமத்தில் கூடிக் களித்து அதன்வழி பிறப்பதுதானே இன்பமும் சிசுவும். இங்கு எந்தப் பெண்ணிற்கு அது சீராக வாய்த்தது. மனமுவந்து தன்னுடல் ஈந்திருக்கும் கூடலில் கண் மூடியிருக்க மாட்டாள் என் முதுகிழவி. கர்ப்பம் கண் மூட என் தந்தைக்குக் காட்சிகள் மூடப்பட்டன. நியாயமாக அவள் தன் சுவாசத்தைத்தானே மூடியிருக்க வேண்டும். அப்போதே எல்லாம் மாறிவிட்டது. அது நூற்று ஒன்றாக என் சிரசில் படிய வேண்டுமென்பது விதி’’ - மேல் வரிசைப் பற்களால் உதடு கடித்து அழுகையை அடக்கினாள் துர்சலை.

மாதங்கியின் வலதுகரம் துர்சலையின் இடது உள்ளங்கையை இறுகப் பிடித்தது. ‘‘என் உலகம் ஆண்கள் நிறைந்ததாயிருக்கிறது. ஆனால், நான் எந்த ஆணுடனும் இல்லை. என் கனவில் நான் மட்டுமே இருக்கிறேன். முத்தம் என்றால் எப்படியிருக்குமென்று எம் குலப் பெண்கள் எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாதங்கி. நான் மட்டும் விதிவிலக்கா?’’ பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த ஆடையின் இடை முடிச்சை நீக்கினாள். நெகிழ்ந்த ஆடை குவியலாக அவள் காலடியில் விழுந்தது.

துர்சலையின் மார்புகளின் திரட்சியினைக் கவனித்தவாறே மாதங்கி தன் கரம் நீட்ட... அதைப் பற்றியபடி தடாகப் படியில் கால் வைத்தாள் துர்சலை. ‘‘முன்னிரவு நாழிகை கடந்துவிட்டது துர்சலை’’ என்றாள் மாதங்கி.

‘‘என்னுடலுக்கு இந்நீர்தான் இப்போதைக்கான ஆண் மாதங்கி. எத்தனை சுதந்திரமாய் என் வெப்பம் தீண்டுகிறது. நீருக்குள்ளிருக்கும் கணம்தான் நான் முழுமையான பெண்ணாக என்னை உணர்கிறேன். நீ சந்தனம் கொண்டுவா. நான் என்னுடலுடன் பேசிவிட்டு வருகிறேன்’’ அடுத்த படியில் கால்வைத்தவள், நிர்வாணமாக நீருக்குள் மூழ்கினாள். நிலா உடைந்து உடைந்து ஒன்று சேர்ந்துகொண்டிருந்தது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
    • இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம்.  நன்றி  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.