Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 இழப்பு 

 

கணவன் / மனைவி    இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ?

https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது  யாரும் பேச  விரும்புவதில்லை. . அது வரும் போது  பார்த்து   கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால்   எப்படி தாங்கி கொள்வது ...? 

Link to comment
Share on other sites

மனித மனம் என்பது இழப்பு வரும் வரைக்கும் அதை தாங்க முடியாது என நினைத்து பயந்து கொண்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு இழப்பு வந்த பின் அதை தாங்க / துயரத்தில் இருந்து கடந்து போக தன்னை தயார் படுத்தி விடும். Time heals என்பார்கள். காலம் எல்லா துயரங்களையும் கடந்து போக செய்து விடும்.

இப்படியான பொது தன்மையில் இருந்து விலகி  ஒரு இழப்பின் பின் மனம் பேதலித்து போகின்றவர்களும் உண்டு. மனம் ஒரு புள்ளியில் நிலைத்து நின்று அசைய மறுத்து வேதனை படுகின்றவர்களையும் கண்டுள்ளேன்.

ஒரு பிள்ளை ஷெல் அடியில் இருந்தமையால் என் நெருங்கிய உறவு ஒருவர் இன்றும் சற்று மனம் பேதலித்த நிலையில் தான் உள்ளார். அதே நேரம் சுனாமியில் தன்  4 பிள்ளைகளையும் இழந்த தாய் ஒருவருக்கு இப்போது  (சுனாமியின் பின்) இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வருகின்றனர்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் இறந்தால் மனைவி பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன் என்பார்...அதெல்லாம் ஒரு சாட்டு...ஒரு சிலரைத் தவிர யாருமே யாருக்காவும் சாக விரும்புவதில்லை...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் அருகில் இருக்கும்போது அவற்றின் அருமை பெருமை தெரிவதில்லை. அது கணவன் / மனைவி உறவுகளுக்கும் பொருந்தும்......! நல்லதொரு பகிர்வு சகோதரி......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான நதியில் திடீரென வெள்ளம் வருவது போல எனது குடும்பத்திலும் எனது கணவரின் இழப்பு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஆறு மாதங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரை நாம் இழந்து விட்டோம். பிள்ளைகள் உயர் படசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் எனக்கு வங்கி அட்டைகூட அடிக்கத் தெரியாது. அப்பொழுதுதான் கார் ஓடக் கற்றுக்கொண்டிருந்தேன்.அந்த வேளையில் என் மனவேதனையைவிட பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். (அடிக்கடி தனியாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை இடுகாடு என்று சென்று வந்தது வேறுகதை.) ஆனாலும் வீட்டில் திருமணம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளின் போது மனதை வேதனை பிசைவதுண்டு. இருந்தும் நான் இல்லாமல் அவர் இருந்து தனியாக கஸ்ரப்படுவதை விட அவர் இல்லாமல் நான் கஸ்ரப் பட்டாலும் பரவயில்லை என மனதைத் தேற்றிக்  கொள்வேன். உண்மையிலேயே யாழ் இணையமும் என் கவலையை மறக்க மருந்தாக இருந்தது.இருக்கிறது. இழப்பைப் பற்றி எழுதி உணரவைக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.