Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது..


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது..

Jaffna-university1.jpg?resize=600%2C450

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு ஏற்பட்திருந்த தடை, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியுள்ளது.

வன்னி இறுதிப் போரின்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உறவுகள் உட்பட, முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர்வதற்கு, நினைவாலயமொன்றை அமைக்க, பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.

இதற்கமைய, இதற்கான பணிகளை பல்கலைக்கழக வளாக முன்றலில், கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும், அந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்புரையையடுத்து, தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்கலைகழக நிர்வாக உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே, பல்கலைக்கழகத்தில், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது, போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும், அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும், உயர்மட்டத்தினரால், மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில், வியாழக்கிழமை (19) தொடக்கம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவாலயம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் மே 18ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் மாணவர்களால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/76000/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.