Jump to content

இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி


Recommended Posts

இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

 

 
 

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  14 வீரர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வீரர்கள் திடீரென மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , குறித்த பயிற்சி வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வவுனியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/32723

 

 

சுவாச பிரச்சனை காரணமாக இராணுவத்தினர் வைத்திய சாலையில்…

vavunia-hospitol.jpg?resize=640%2C427

 

சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பம்பைமடு இராணுவ முகாமில் இன்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர். அத்துடன் மேலும் பல இராணுவத்தினருக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/2018/75997/

Link to comment
Share on other sites

பயிற்சி முகாமில் மயங்கிய 19 சிறிலங்கா படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடம்

 

Sri-Lanka-army-sniper-300x200.jpgவவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடும் வெயிலுக்கு மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட நீரிழப்பினாலேயே அவர்கள் பாதிக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பம்பைமடுவில் உள்ள 61-1 பிரிகேட்டின் கீழ் உள்ள பற்றாலியன் பயிற்சி பாடசாலையில் இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது.

25 ஆவது இலகு காலாட்படையைச் சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட படையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அடுத்தடுத்து படையினர் மயங்கி விழுந்தனர்.

முதலுதவிச் சிகிச்சைகளுக்குப் பின்னர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19 படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஏனையோரின் உடல் நிலை தேறியுள்ளதாகவும் வவுனியா மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அனைத்துப் படையினரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பாடசாலை 10 ஆண்டுகளாக செயற்படுவதாகவும், இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வவுனியா மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனை வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதற்கு நிர்வாகமும் இராணுவமும் தடை போட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/04/23/news/30528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.