Jump to content

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார்.!


Recommended Posts

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார்.!

 

 
 

நேர்­கண்­டவர் : ரொபட் அன்­டனி 

 

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில்  சுதந்­திரக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்டால் அவர் நிச்­சயம்  தோல்­வி­ய­டை­வார். அவ­ரினால்   வெற்­றி­பெற முடி­யாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனா­தி­ப­திக்கு  ஆத­ர­­வ­ளித்­தாலும்  சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவை அவர் இழந்­து­விட்டார்  என்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்­து­சென்ற சுதந்­தி­ரக்­கட்­சியின்  16 எம்.பி.க்களில் முக்­கி­யஸ்­த­ரான தயா­சிறி  ஜய­சே­கர தெரி­வித்தார். 

வீர­கே­சரி  நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே   அவர் இதனை குறிப்­பிட்டார்.  

செவ்­வியின்  முழு விபரம்  வரு­மாறு:

Q: தீர்க்­க­மான இந்த அர­சியல் சூழலில் நீங்கள் 16 பேரும் அமைச்சுப் பத­வியை துறந்­து­விட்டு என்ன செய்­து­கொண்­டி ருக்­கின்­றீர்கள்?

A:  அமைச்சுப் பத­வியை விட்டு வில­கிய நாங்கள் வாக­னங்கள் அனைத்­தையும் ஒப்­ப­டைத்­து­விட்டு வெளியே வந்­தி­ருக்­கின்றோம். அடுத்­த­தாக மே மாதம் 8ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்வு  நடை­பெ­ற­வுள்­ளது.  அந்த சந்­தர்ப்­பத்தில்   எதிர்க்­கட்­சியில் உட்­கா­ரு­வ­தற்கு  தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். அதற்­கான ஏற்­பா­டு­களை தற்­போது செய்து வரு­கின்றோம். 

Q:பர­ப­ரப்­பான வகையில் பேச்­சு­வார்த் தைகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­கின்­றதே?

A: எதிர்­கால அர­சியல் செயற்­பா­டு­களில்  எவ்­வாறு  செயற்­ப­டு­வது என்­பது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். எதிர்க்­கட்­சியில் சென்று  எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது குறித்து ஆராய்ந்து வரு­கின்றோம். அது­ தொ­டர்­பா­கவே பல சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

Q: பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந் தா­னந்த அளுத்­க­மகே பிணையில் வெளியில் வந்­த­போது நீங்­களும்  டிலான் பெரே­ராவும் ஏன் அங்கு சென்­றீர்கள்?

A:அங்கு செல்­ல­வேண்­டிய ஒரு கடமை எனக்கு இருந்­தது.  நான் ஊழல் மற்றும் மோச­டிக்கு எதி­ரா­னவன்.  எனினும்  இந்த மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தொடர்புபடுத்­தப்­பட்­டுள்ள சம்­ப­வத்தில் அவர் நிர­ப­ராதி என்­பது எனக்குத் தெரியும். முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் என்ற வகையில் நான் இத­னைக்­கூ­று­கின்றேன். நான் பத­விக்கு வந்­ததும் இது­தொ­டர்பில் தேடிப்­பார்த்தேன். நான் அவ்­வாறு தேடிப்­பார்த்­த­போது  அதில் மஹிந்­தா­னந்த அளுத்­கமகே தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது.  எனவே நான் அந்த இடத்­திற்கு  செல்­ல­வேண்­டிய தேவை  முன்னாள் அமைச்சர்  என்ற வகையில் எனக்கு இருந்­தது. 

Q:மே 8 ஆம் திகதி சுதந்­தி­ரக்­கட்சி என் ற­வ­கையில் 16 பேரும் எதிர்க்­கட்­சியில் அமர்­வீர்­களா? அல்­லது கூட்டு எதி­ர­ணி யுடன் இணைந்து கொள்­வீர்­களா?

A: நாங்கள்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி என்ற வகை­யி­லேயே எதிர்க்­கட்­சியில் அமர்வோம். வேறு கட்­சி­க­ளுடன் இணைந்து ­கொள்ளும் நோக்கம் எங்­க­ளுக்­கில்லை.  ஆனால் இந்­தக்­கூட்டு எதி­ர­ணியில் உள்ள 54 பேரும்   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்­த­வர்­க­ளே­யாவர்.  எனவே பல்­வேறு விட­யங்­களில் அவர்­க­ளுடன்  இணைந்து பய­ணிப்போம்.   சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளா­கவே செயற்­ப­டுவோம். 

Q: தேசிய அர­சாங்கம் தோல்வி அடைந் து­விட்­ட­தாக கூறு­கின்­றீர்கள். அதற்கு என்ன காரணம்?

A: அதற்கு பல  ஆழ­மான  கார­ணங்கள் உள்­ளன. முத­லா­வ­தாக தேசிய அர­சாங்கம் தொடர்பில் இரண்டு கட்­சி­க­ளிலும் அங்கம் வகிக்கும் பல­ருக்கு புரிந்­து­ணர்வு இல்­லாமல் இருந்­தது. இது பிரச்­சி­னைக்கு முதல் கார­ண­மாக இருந்­தது.  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி .தேசிய  அர­சாங்­கத்தை  எப்­போதும் ஆக்­கி­ர­மித்­துக்­கொண்டே செயற்­பட்­டது.  தம்­முடன்  மற்­று­மொரு கட்சி இணைந்து  ஆட்சி நடத்­து­கின்­றது என்­பதை ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி மறந்­து­விட்­டது.   முழு­மை­யாக  பொரு­ளா­தா­ரத்தை  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியே  கையாண்­டது. அர­சாங்­கத்தின் அனைத்து செயற்­பா­டு­க­ளையும்  ஐ.தே.க.வே கொண்டு சென்­றது.  இதன்­போது தீர்­மானம் எடுக்கும் சந்­தர்ப்­பங்­களில்  பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.  இதனால் தேசிய அர­சாங்கம்  மக்கள் மத்­தியில்   செல்­வாக்கை இழந்­தது. தற்­போ­தைய நெருக்­க­டிக்கு இதுவே காரணம்.

Q: தயா­சிறி ஜய­சே­கர   தேசிய அர­சாங் கத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந் தாரா?

A:  இதன் முக்­கி­யத்­து­வத்தை நான் உணர்ந்­தி­ருந்தேன்.  ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் கௌரவம் அளிக்­கு­மாறு  நான்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யிடம் கோரினேன். வர­லாற்றில் முதல் தட­வை­யாக   ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து  தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. ஆனால் அதன் முக்­கி­யத்­து­வத்தை ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி உண­ர­வில்லை. தமது அர­சாங்­கத்தில்  சுதந்­தி­ரக்­கட்சி தொங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவே கரு­தினர். சந்­தர்ப்­பத்தை நாங்கள் பறித்­துக்­கொண்­ட­தாக எண்­ணினர்.  அவர்கள் ஜனா­தி­ப­தியை தெரி­வு­செய்யும்  ஒரு பங்­க­ளிப்பை செய்­தனர்.  எனினும் 2015 ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில்  யாருக்கும் பெரும்­பான்மை பலம் கிடைக்­க­வில்லை. அவர்­க­ளுக்கு 106 ஆச­னங்­களே கிடைத்­தன. அப்­போது அவர்கள் தமிழ்த்தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்­சித்­தனர். ஆனால் அது முடி­ய­வில்லை.  அத­னால்தான் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தனர்.  அவ்­வாறு அமைக்­கப்­பட்ட அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் கிடைத்­தது. ஆனால் அந்த அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தற்­கான அர்ப்­ப­ணிப்பு அந்த அர­சாங்­கத்­திடம் இருக்­க­வில்லை.  தம்­முடன் இணைந்து செயற்­ப­ட­வரும் தரப்­பி­னரை  அர­வ­ணைக்க   ஐ.தே.க.விற்கு தெரி­ய­வில்லை.  

Q:அப்­ப­டி­யானால் மூன்று வரு­டங்கள் எவ் வாறு பய­ணித்­தீர்கள்?

A: பல போராட்­டங்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யி­லேயே  இப் பய­ணத்தைத் தொடர்ந்தோம். அத­னால்தான் அர­சாங்கம் நெருக்­க­டியை  சந்­தித்­தது.  

Q: நீங்கள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச ராக இருந்­தீர்கள். உங்­க­ளாலும் சுதந்­தி ர­மாக செயற்­பட முடி­யாமல் இருந்­ததா?

A:பொய்க்குற்­றச்­சாட்டை முன்­வைக்­கக்­கூ­டாது.  எனக்கு எந்­த­வி­த­மான  பிரச்­சி­னையும் இருக்­க­வில்லை.  எனது அமைச்சு  விட­யத்தில் யாரும் தலை­யீடு  செய்­ய­வில்லை.  எனினும்  ஏனைய அமைச்­சர்கள் விட­யத்தில் பல பிரச்­சி­னைகள் இருந்­தன. பெற்­றோ­லிய அமைச்சு, துறை­முக அமைச்சு என்­ப­வற்றில்  பல பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­பட்­டன. அப்­போது நாங்கள் விரக்தி அடைந்தோம்.  ஐ.தே.க.வுடன் இது தொடர்பில் பேசினோம். அமைச்­ச­ரவையில் பேசினோம். ஆனால் ஒன்றும் நடக்­க­வில்லை. இதன் விளை­வா­கவே மக்கள்  அர­சாங்­கத்தை விட்டு வில­கினர். 

Q: பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை யில்லாப் பிரே­ரணை எங்கு தொடங்கி  எங்கு முடிந்­தது. 

A:முதலில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் இருந்தே வந்­தது. முதன்­மு­த­லாக பாலித்த ரங்கே பண்­டா­ரவே  இது­கு­றித்து பேசினார்.  அதன் பின்னர் எமது தரப்­பிலும்  கூட்டு எதி­ரணி தரப்­பிலும் இது குறித்து பேசப்­பட்­டது.  அதனை அடுத்து கூட்டு எதி­ரணி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை முன்­வைத்­தது. அதில் எமது  கட்­சியில் நால்­வரும் கைச்­சாத்­திட்­டனர்.  ஆனால் இறு­தி­யாக நடந்த  விட­யத்­துடன்  இது  பின்­ன­டைவை சந்­தித்­தது.  அதா­வது தமிழ் கூட்­ட­மைப்பு பிர­த­ம­ருக்கு ஆத­ரவு அளிப்­ப­தாக கூறி­யதால் அனைத்தும் பிழைத்­து­விட்­டன. 

Q: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட யத்தில் ஜனா­தி­பதி என்ன நிலைப்­பாட்டில் இருந்தார். ?

A:ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் உண்­மையில்  எந்­தப்­பக்­கத்­தையும் எடுக்­க­வில்லை. இது அவரின் அர­சாங்கம், அடுத்­த­தாக  அவர் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர், இந்த கார­ணங்­க­ளினால் அவர்  அப்­பா­வி­யா­கவே இருந்தார். ஆரம்­பத்தில் பிர­த­மரை நீக்­கி­விட்டு ஐ.தே.க.வின் புதிய பிர­த­மரை  நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொட­ரவே ஜனா­தி­பதி விரும்­பினார். அது முடி­ய­வில்லை. அதன்­பின்­னர்தான் நெருக்­கடி தொடங்­கி­யது.  

Q:சுதந்­தி­ரக்­கட்­சியில் 16 பேர் பிர­த­மரை எதிர்த்­தனர். 23 பேர் நடு­நிலை வகித் தனர்.  இந்தத்  தீர்­மானம் எவ்­வாறு எடுக்­கப்­பட்­டது.?

A:அந்த நாட்­களில்  நான் இலங்­கையில் இருக்­க­வில்லை.  ஆரம்­பத்­தி­லி­ருந்து நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை   ஆத­ரிப்­ப­தா­கவே சுதந்­தி­ரக்­கட்சி தீர்­மா­னித்­தி­ருந்­தது.  41 பேரும் இந்தத் தீர்­மா­னத்தை  எடுத்­தி­ருந்­தனர். 

Q:இது ஜனா­தி­ப­திக்கு  தெரி­யுமா?

A: ஜனா­தி­ப­திக்கு இது  தெரியும்.  முதலில்  சுதந்­தி­ரக்­கட்­சியின் 41 பேரும் பிர­த­ம­ரிடம் சென்று  பதவி வில­கு­மாறு கோரினோம். அவர் அதனை மறுத்­து­விட்டார்.  இதன்­மூலம் சுதந்­தி­ரக்­கட்­சியின் 41 பேரும் பிர­த­ம­ருக்கு எதி­ரா­கவே இருந்­தனர்.  எவ்­வா­றெ­னினும் 4ஆம் திகதி காலை மஹிந்த அம­ர­வீ­ரவின் இல்­லத்தில் ஒரு  கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது. அதில் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளிப்­பது என்று முடி­வு­செய்­யப்­பட்­டது. அந்­தக்­கூட்­டத்தில் ஒரு சிலர் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.  

Q:இதில் மஹிந்த அம­ர­வீர கலந்­து­கொண்­டாரா?

A:அவர் இல்­லத்­தில்தான் சந்­திப்பு நடந்­தது. 

Q: அவ­ரது இல்­லத்தில் சந்­திப்பு நடந்­தி­ருக் கலாம். ஆனால் மஹிந்த அம­ர­வீர அதில் கலந்­து­கொண்­டாரா என்­பதே எனது கேள்வி?

A:மஹிந்த அம­ர­வீர கலந்­து­கொண்டார்.   எனினும்  அந்­தக்­கூட்­டத்தில் ஒரு­சிலர் கலந்­து­கொள்­ள­வில்லை.  குறிப்­பாக மஹிந்த சம­ர­சிங்க, விஜித்   விஜ­ய­முனி சொய்சா போன்றோர் கலந்­து­கொள்­ள­வில்லை.  அவர்கள் தெரிந்தும்   இந்­தக்­கூட்­டத்­திற்கு வர­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பது என்று மஹிந்த அம­ர­வீர இல்­லத்தில் வைத்து முடி­வெ­டுத்தோம். அதன்­பின்னர்  நாம் கூட்­டத்தை முடித்­து­விட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு சென்­று­விட்டோம். எனினும் இறு­தியில் 16 பேர் மட்­டுமே பிர­த­மரை எதிர்த்­தனர் எஞ்­சியோர் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

Q:அப்­ப­டி­யாயின் இறுதி முடிவு  எப்போது எடுக்­கப்­பட்­டது? வீதியில் இருந்து எடுக்­கப்­பட்­டி­ருக்­குமோ? 

A: சில­வேளை இருக்­கலாம். 

Q: சரி மஹிந்த அம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற கூட்­டத்தின் போது பிர­த­மரை  எதிர்ப்­ப­தாக மஹிந்த அம­ர­வீர கூறி னாரா?

A:ஆம் அவர் கூறினார்.  ஆனால் இறுதி முடிவு எம்­மையும் குழப்­பத்தில் ஆழ்த்­தி­யது. 

Q:சுதந்­தி­ரக்­கட்­சி மற்றும் ஐக்­கிய  மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செயலா­ளர்­க ளுடன் உங்­க­ளுக்கு இருக்கும் பிரச் சினை என்ன?

A:ஒரு பிரச்­சி­னையும் இல்லை.  சுதந்­தி­ரக்­கட்­சியை  கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின்  சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லாளர் பத­வியை எமது  இந்த 16 பேரில் ஒரு­வ­ருக்கு வழங்­க­வேண்டும். அதனை நாம் பொறுப்­பேற்று  சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டி­யெ­ழுப்­புவோம். அப்­போது கூட்டு எதி­ர­ணியும் எம்­மோடு இணைந்­து­கொள்ளும்.  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யையும் நாம் கட்­டி­யெ­ழுப்­பிக்­கொள்ள முடியும். எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் பத­வி­யையும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லாளர் பத­வி­யையும் எம்­மிடம் தந்­து­வி­டுங்கள்.  இல்­லா­விடின் சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் ஒரு கிளை­யாக மாறி­விடும். 

Q: இது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு அறி வித்­தீர்­களா?

A: ஜனா­தி­பதிக்கு இது தொடர்பில் மிகத்  தெளி­வாக அறி­வித்­தி­ருக்­கின்றோம்.  

Q: அதற்கு ஜனா­தி­பதி என்ன கூறினார்?

A:  அவர் அதற்கு சாத­க­மா­கவே பதி­ல­ளித்தார். லண்டன் செல்­வ­தற்கு முன்னர் சாத­க­மாக பதி­ல­ளித்தார். வந்த பின்னர் அவர் சரி­யான முடிவு எடுப்பார் என நம்­பு­கிறோம். 

Q:சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லா­ளரும்   ஐ.ம.சு.மு.வின் செய­லா­ளரும் வெளியே வந்து உங்­க­ளுடன் செயற்­ப­டலாம் அல் லவா?

A:  அவ்­வாறு செயற்­ப­டலாம். ஆனால் அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். மக்கள் தற்­போதே எம்­மை­விட்டு செல்ல ஆரம்­பித்­து­விட்­டனர்.   அத­னால்தான்  சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­க­வேண்டும். ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி கூட்­ட­மைப்­புடன் இணைந்து அர­சாங்­கத்தை நடத்­தட்டும். ஐ.தே.க.விற்கு  இப்­போது கூட்­ட­மைப்­பையும் சேர்த்து 122 ஆச­னங்கள் உள்­ளன. எனவே  அவர்கள் அர­சாங்கம் அமைக்­கலாம். 

Q:  துமிந்த  திஸா­நா­யக்­கவும் மஹிந்த  அம­ர­வீ­ரவும் செய­லாளர் பத­வி­க­ளி­லி ருந்து வில­க­வேண்டும் என்று கூறு­கின் றீர்­களா?

A:பெரும்­பான்மை  கோரிக்கை அவ்­வாறே இருக்­கி­றது.  இதில் ஒரு­வரை நம்­பலாம்.  மற்­று­மொ­ரு­வரை நம்­பவே முடி­யாது. 

Q: நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற் க­டிக்­கப்­படும் என்று இறு­தியில் தெரிந் து­விட்­டது. எனவே இறுதி நேரத்தில்  உங்கள் அணு­கு­மு­றையை வித்­தி­யா­ச­மாக செய்­தி ருக்­க­லாமே?

A: 3 ஆம் திகதி இரவு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  தோற்­க­டிக்­கப்­படும் என புரிந்­து­கொண்டோம்.  கூட்­ட­மைப்பின் முடி­வு­ட­னேயே நாம்  இதனைப் புரிந்­து­கொண்டோம்.  அதன் பின்னர்  ரங்கே பண்­டார தலை­மை­யி­லான 18 பேருக்கும் முடிவை மாற்­று­மாறு  நாம் கோரினோம்.  கூட்­ட­மைப்­பிலும் ஐந்து பேர் எம்­முடன் இணைந்து  ஆத­ர­வ­ளிக்க  முன்­வந்­தனர்.   பின்னர் அவர்­க­ளி­டமும் வேண்டாம் என்று  கோரினோம்.  எனினும் மனச்­சாட்­சி­யுடன் அர­சியல் செய்­ய­வேண்­டு­மாயின்   தோற்­றாலும் வெற்­றி­பெற்­றாலும் பிர­த­மரை எதிர்க்­க­வேண்டும் என  தீர்­மா­னித்தே    வாக்­க­ளித்தோம். 

Q:பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  சாமர்த் தி­ய­மான திற­மை­யான தலைவர் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

A:ஆம் அதனை ஏற்­றுக்­கொள்­கின்றேன். தனது கதி­ரையைப் பார்த்­துக்­கொள்ள அவர் திற­மை­யா­னவர். நாட்டைப் பாது­காப்பதை விட கதி­ரையைப்­பா­து­காப்­பதில் திற­மை­யா­னவர். 

Q: அவரின் பொறுமை 

A:பொறுமை வேறு; தந்­திரம் வேறு

Q:தற்­போது உங்கள் தலை­வ­ராக மைத்­தி ரி­பால சிறி­சேன இருக்­கிறார். 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில்  உங்கள் தரப்பு வேட்­பாளர் யார்?

A:அதனை தற்­போது கூற முடி­யாது.  பல்­வேறு பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கள மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தைப்­போன்று தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய ஒரு  தலை­வரே எமக்கு  தேவைப்­ப­டு­கிறார்.  அவரை தெரி­வு­செய்­யவே நாங்கள் இப்­போது முயற்சிசெய்­கிறோம். 

Q:  நீங்கள் ஒரு வேட்­பா­ளரை கள­மி­றக்க நிச்­ச­ய­மாக கூட்டு எதி­ர­ணி­யுடன் இணை ய­வேண்டும்.  அப்­ப­டி­யாயின் யதார்த்­த மாக பார்த்தால்  யார் வேட்­பா­ள­ராக வருவார்?

A: இன்னும்  நாங்கள் யாரையும் முடிவு செய்­ய­வில்லை. பல பெயர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.   யாராக இருந்­தாலும் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவைப் பெறு­ப­வ­ராக அவர் இருக்­க­வேண்டும். 

Q:உங்கள் சுதந்­தி­ரக்­கட்­சியில் ஒரு­சிலர்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வர வேண்டும் எனக் கூறு­கின்­றனர்? இதற்கு உங்கள் பதில் என்ன?

A:அது  இதற்­குப்­பின்னர்  ஒரு செல்­லு­ப­டி­யான விட­ய­மாக இருக்­காது.   தற்­போ­தைய நிலை­மையில் அது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது. கூட்டு எதி­ர­ணியும் நாங்­களும் இணைந்தே இந்த முடிவு எடுக்­க ­வேண்டும். அவ்­வாறு அனை­வரும் ஒன்­றி­ணைந்து அவரை அழைத்தால் ஓர­ளவு சாத்­தி­ய­மா­கலாம். ஆனால் பொது­வாக தற்­போது பெரும்­பான்மை மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிரா­க­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டனர். 

Q: உங்­களின் நிலைப்­பாடு என்ன?

A:எனக்குப் பிரச்­சினை இல்லை.  எனது கட்சித் தலைவர் என்ற  ரீதியில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து பய­ணிக்­கலாம். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   யாரை  கள­மி­றக்­கு­வது என்­பதை பேசியே தீர்­மா­னிக்­க­வேண்டும். 

Q: கூட்டு எதி­ரணி பக்­கத்தில்  முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பெயர் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. ? அவ்­வா­றான ஒரு நிலைமை  வந்தால்  என்ன செய்­வீர்கள்?

A:அது தொடர்பில் இன்னும் கூற முடி­யாது.  பஷில் ராஜ­ப­க்ஷவின் பெயரும் கூறப்­ப­டு­கி­றது.  இன்னும் ஒரு சிலரின் பெயர்­களும் உள்­ளன.  ஆனால் இங்கு மூன்று விட­யங்­களை பார்க்­க­வேண்டும், சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை  பெறக்­கூ­டி­ய­வ­ராக ஜனா­தி­பதி வேட்­பாளர் இருக்­க­வேண்டும். 

Q: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பெற­மு­டியும் அல்­லவா?

A:தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை விரும்­பு­கின்­றனர்.  சிங்­கள மக்­களின் பாரிய எதிர்ப்பு அவ­ருக்கு  இருக்­கின்­றது. 

Q: கோத்­த­பாய மற்றும்  பஷில் ராஜ­பக்ஷ  தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன?

A:அது­தொ­டர்பில் தற்­போது கூற முடி­யாது. 

Q: ஆனால் நீங்கள் 16 பேரும் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர்  போன்ற விட­யங்­களை  அடிப்­ப­டை­யாகக் கொண்டு  அந்த இலக்கின்  அடிப்­ப­டை­யி­லேயே   உங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தாக நான் கூறு­கிறேன்.  இது சரியா?

A:தற்­போ­தைய நிலை­மை­களை வைத்தே நாங்கள் இந்த  முடிவை எடுத்தோம்.  எதிர்­கா­லத்தில் செயற்­ப­டு­வது என்­பதை  மே 8ஆம்  திக­தியே தீர்­மா­னிப்போம். 

Q: ஏதோ ஒரு­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வந்தால் என்ன நடக்கும்?

A:அவரால் வெற்­றி­பெற முடி­யாது. சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவு அவ­ருக்கு கிடைக்­காது. 

Q: அவர் கடந்த தேர்­தலில் 62 இலட்சம் வாக்­கு­களைப் பெற்­றவர். 

A:அது அன்­றைய  நிலைமை  இன்று அந்த நிலைமை மாறி­விட்­டது.  அன்று வாக்­க­ளித்த மக்­களும் இன்று விமர்­சிக்­கின்­றனர்.  அதற்கு  அவரை மட்டும் குறை­கூற முடி­யாது.  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி அமைத்­த­மையே இதற்கு காரணம்.  கடந்த மூன்று வரு­டங்­களில் அவர் பணி­யாற்­று­வ­தற்கு ஐ.தே.. க.இட­ம­ளிக்­க­வில்லை.  அவரை  சிறைப்­ப­டுத்­தியே வைத்­தி­ருந்­தனர்.  அது­மட்­டு­மன்றி அவர்   ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை பத­வியை எடுத்­தி­ருக்­கக்­கூ­டாது. அது ஒரு தவ­றான தீர்­மா­ன­மாகும். அவர் நல்­ல­நோக்­கத்­து­ட­னேயே அதனை  செய்தார்.  அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்சி சாராத ஒரு தலை­வ­ராக இருந்­தி­ருக்­கலாம். அப்­படி செய்­தி­ருந்தால்   சுதந்­தி­ரக்­கட்சி  இன்று நல்ல நிலைக்கு வந்­தி­ருக்கும் ஆனால் மறு­புறம்  ஐ.தே.க.வின் சிறை கைதி­யாக இருந்­தி­ருப்பார்.  அவர்  சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை பத­வியை எடுத்­தி­ருக்­கா­விடின் நாங்கள் சுதந்­தி­ரக்­கட்சி  என்ற  ரீதியில்   பாரிய பய­ணத்தை  சென்­றி­ருப்போம் கட்சி பிள­வு­பட்­டி­ருக்­காது.  இதற்கு மக்­களும்  பொறுப்­புக்­கூ­ற­வேண்டும்.  ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை  வெற்­றி­பெறச் செய்த மக்கள் அதன் பின்னர் நடை­பெற்ற   பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யாருக்கும் வெற்­றியை கொடுக்­க­வில்லை. அந்தத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு   மக்கள் அதி­கா­ரத்தை வழங்­கி­யி­ருக்­கலாம்.    எந்­தக்­கட்­சிக்­கட்­சிக்கும் அதி­காரம் கிடைக்­க­வில்லை. இதனால் தான் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.  

Q:எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டுமா?

A:எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  கொண்­டு­வந்து அவரை   நீக்­க­வேண்டும் என நான் விரும்­ப­வில்லை. எமது பலத்தை  பாரா­ளு­மன்­றத்தில் காட்டி நாம் அந்த பத­வியை பெற்­றுக்­கொள்­ளலாம்.  வர­லாற்றில்  அவ்­வாறு நடை­பெற்­ற­தாக இல்லை. 

Q: அர­சியல் தீர்வை எதிர்­பார்த்து   எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக  தென்­னி­லங்கை  அர­சாங்­கத்­திற்கு பாரிய ஆத­ரவை வழங்­கினார்.  ஆனால் அவ­ரது முயற்­சியும் வீணா­கி­விட்­டதா?

A:இந்த இடத்தில்  தமிழ் கூட்­ட­மைப்பும்   பாரிய சிக்­க­லுக்குள் இருக்­கின்­றது. வடக்கில் இன்று பல  கட்­சிகள்  பல­ம­டைந்து வரு­கின்­றன. கஜேந்­தி­ர­குமார், விக்­கி­னேஸ்­வரன், புலம்­பெயர் தமி­ழர்­களின் பிடிக்குள் கூட்­ட­மைப்பு சிக்­கி­யுள்­ளது.  மக்கள்   கூட்­ட­மைப்பு   தென்­னி­லங்கை அர­சாங்­கத்­துடன் செயற்­பட்டு அர­சியல் தீர்வைக் கொண்­டு­வரும் என நம்­பு­கின்­றனர். ஆனால் அதுவும் தற்­போது நெருக்­க­டி­யான நிலை­மைக்கு வந்­து­விட்­டது. இறு­தியில் தற்­போது 10 விட­யங்கள் தொடர்பில் கூட்­ட­மைப்பு ஐ.தே.க.வுடன் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளது.  ஆனால் அதில் உள்ள பல விட­யங்கள்   பிர­தமர் ஊடாக செய்­து­கொள்ள முடி­யா­தவை.  பல விட­யங்கள்  ஜனா­தி­ப­தியின்  கீழ் வரு­கின்­றன.  எப்­ப­டி­யி­ருப்­பினும் கூட்­ட­மைப்பு  பிர­தமர் ரணி­லு­ட­னேயே இருக்­கின்­றது. என்­பது தெளி­வா­கின்­றது. அவர்கள் ரணி­லையே  நம்­பு­கின்­றனர்.  ஆனால் தெற்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  நம்­பிக்­கை­யான தலைவர் அல்ல அத­னால்தான்  கூட்­ட­மைப்பும் ஐ.தே.க.வும் இணை­யட்டும் என்று  நாங்கள் கூறுகின்றோம்.  அப்போது கூட்டமைப்பு, ஐ.தே.க. என்ற இரண்டு கட்சிகளும் இல்லாமல் போய்விடும்.  அப்போது வடக்கு, கிழக்கில் புதிய அமைப்பு உருவாகும்.  அந்த அமைப்புக்களுடன் நாங்கள் பேசி  தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.  கூட்டமைப்பு  இன்று  ஐ.தே.க.வின் கைபொம்மையாக உள்ளது. 

Q:இந்த ஆட்சிக்காலப்பகுதியில்   அரசியல் தீர்வு சாத்தியமில்லையா?

A:சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.  அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் மறைந்துபோய்விட்டன.  இதற்கு கூட்டமைப்பு மட்டும் பொறுப்புக்கூறவேண்டும் என்று கூறவேண்டும். இதற்கு தெற்கிலும்  சில இனவாத அமைப்புக்களும் பொறுப்புக்கூறவேண்டும். கூட்டமைப்பு  சிங்கள மக்களின் உணர்வைப்  புரிந்துகொள்ளாமல்  செயற்பட்டது.   அவர்கள் தங்கள் மக்களை வெற்றிகொள்வதற்காக சமஷ்டியைப் பெற முடியும் எனக்கூறினர்.  ஆனால் கொழும்பில் வந்து வேறுவகையில் பேசினாலும்  தென்னிலங்கை மக்கள் மத்தியில் சந்தேகம் வலுவடைந்தது. ஆனால் சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தோம். அதாவது பொலிஸ்  மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி  13 ஆவது திருத்தத்தை  முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். ஆனால் ஒற்றையாட்சியில் மாற்றம் வரக்கூடாது. இதுவே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால்  அந்த எமது  யோசனையை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளவில்லை.   கூட்டமைப்பு எம்மை புரிந்துகொள்ளாமல்  சுதந்திரக்கட்சிக்கு கௌரமளிக்காமல் பிரதமர் ரணில் கைபொம்மையாக மாறினர். அதுதான் எமக்குள்ள  கவலையாகும்.  அவர்கள்  ஜனாதிபதியின் மனதை வெல்ல முயற்சித்திருக்கலாம்.மாறாக  ரணில்  பக்கமே அவர்கள் சார்ந்திருக்கின்றார்கள். 

Q:நீங்கள் சுதந்திரக்கட்சியிலிருந்து ஐ.தே.க.விற்கு சென்றீர்கள். பின்னர் ஐ.தே.க.வில் இருந்து சுதந்திரக்கட்சிக்கு   சென்றீர்கள். உங்கள் முடிவு சரியானதா?

A:நான் எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தித்தே முடிவெடுத்தேன் அதனால் தான் சஜித் பிரேமதாஸவை தலைவராக்கவேண்டும் என்று போராடினோம். ஆனால் அவர்  இறுதியில் ரணிலுடன்  இணைந்துகொண்டார்.  அவர்  அதனை முதலில் கூறியிருந்தால்  நாங்கள் அவருக்காக போராடியிருக்கமாட்டோம். எப்படியிருப்பினும் தற்போது நாங்கள் சுதந்திரக்கட்சியுடன் பயணிக்கின்றோம். 

http://www.virakesari.lk/article/32717

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.