Jump to content

அர­சி­யலில் பாரிய திருப்பம் ஏற்­படும் சாத்­தியம்: புதிய அமைச்­ச­ரவை மாற்றம் இம்­மாத இறு­தியில்


Recommended Posts

அர­சி­யலில் பாரிய திருப்பம் ஏற்­படும் சாத்­தியம்: புதிய அமைச்­ச­ரவை மாற்றம் இம்­மாத இறு­தியில்

01-eeff32f35864c1276edddbcadeea8b3fd6ca3329.jpg

 

ஆர்.யசி

அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணை அர­சாங்க உடன்­ப­டிக்கை ஒன்றை இம்­மாத இறு­திக்குள் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­துடன் புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்­களும் நிக­ழ­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று நாடு திரும்பும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­க்குள்ளும் தேசிய அர­சாங்­கத்துக்குள்ளும் முக்­கிய மாற்­றங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பாரிய நெருக்­க­டிகள் எழுந்­துள்ள நிலையில் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு திட்­டங்கள் குறித்து ஆராய விசேட குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் வாக்­க­ளித்த 16 உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­று­வ­தாக கூறி­யுள்­ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை மீளவும் கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுக்க கொள்­கை­யொன்­றினை வகுக்­கு­மாறு ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். இந்­நி­லையில் தேசிய அர­சாங்­க­மாக தொடர்ந்தும் பய­ணிக்­கவும், வெற்­றி­ட­மா­கி­யுள்ள அமைச்­சுப்­ப­த­வி­களை நிரப்பி புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.  

அர­சியல் திருப்­பங்கள்

பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாட்டில் பங்­கேற்க லண்டன் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று நாடு திரும்­பு­கின்ற நிலையில் இலங்கை அர­சி­யலில் பாரிய திருப்­பங்கள் ஏற்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­குள்ளும் தேசிய அர­சாங்­கத்தின் நகர்­வு­க­ளிலும் மாற்­றங்­களை செய்ய ஜனா­தி­பதி தயா­ரா­கி­யுள்ளார். நாளை திங்­கட்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் விசேட மத்­தி­ய­குழுக் கூட்டம் கூட­வுள்­ளது. இந்த கூட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணியின் 16 உறுப்­பி­னர்­களும் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது எதி­ர­ணியில் அமர அனு­ம­தி­யினை கோர­வுள்­ளனர். அதேபோல் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வி­க­ளிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை இம்­மாத இறு­தியில்.

இந்­நி­லையில் தேசிய அர­சாங்­க­மாக முன்­னெ­டுத்து அடுத்த இரண்டு ஆண்­டு­களை கொண்­டு­செல்ல ஐக்­கிய தேசியக் கட்சி- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் யோச­னை­களை முன்­வைக்க அமைச்சர் காலா­நிதி சரத் அமு­னு­கம தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உடன்­ப­டிக்கை தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

மஹிந்த அம­ர­வீர

தேசிய அர­சாங்­கத்தின் புதிய உடன்­ப­டிக்கை குறித்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர கூறு­கையில், ஜனா­தி­பதி வெளி­நாட்டு விஜ­யத்தை முன்­னெ­டுக்க முன்னர் கலா­நிதி சரத் அமு­னு­கம உள்­ளிட்ட ஐவர் அடங்­கிய குழு­வொன்றை நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்ல உரிய வேலைத்­திட்டம் ஒன்­றினை உரு­வாக்கக் கூறினார். புதிய உடன்­ப­டிக்கை ஒன்­றினை செய்­து­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் கொண்­டு­செல்ல ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்ளார். ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் விரைவில் இந்த உடன்­ப­டிக்கை நடை­மு­றைக்கு வரும். இம்­மாத இறு­திக்குள் (27-28) ஐக்­கிய தேசியக் கட்சி -ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்த தேசிய அர­சங்­கத்தின் புதிய உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும் எனக் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெறும்.

அதேபோல் புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்­களும் இடம்­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 6 அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் பதவி நீங்­கி­யுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு பதி­லாக தற்­கா­லிக அமைச்­சர்­களை நிய­மித்­துள்ள போதிலும் இம்­மாத இறு­திக்குள் புதிய அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்­புகள் இடம்­பெ­ற­வுள்­ளன. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் இரா­ஜாங்க அமைச்­ச­ர­க­ளாக செயற்­படும் ருவான் விஜ­ய­வர்­தன, பாலித ரங்கே பண்­டார, வசந்த சேனா­நா­யக ஆகி­யோ­ருக்கும், முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கும் அமைச்சரவை அமைச்சுக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கவும் இருக்கின்ற அமைச்சுக்களில் சில மாற்றங்களை செய்யவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக ஊடக அமைச்சு, வெளிவிவகாரம், உயர்கல்வி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி, நிதி ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-04-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.