Jump to content

மனம் - தேவகாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

மனம்

தேவகாந்தன்
 
 
‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’
 
விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது.
‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள்.
 
மூன்று நாட்களுக்கு முதல் பள்ளி லொக்கரில் வைத்த அனூஷனின் ஜாக்கெற் அன்றைக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை அவள் கொஞ்சம்கூட பட்டுக்கொள்ளவில்லையென அவருக்குத் தெரிந்தது. அதில் சிறிது நியாயமிருப்பதாக இராஜலிங்கம் எண்ணினார். அந்த ஆண்டில்மட்டும் அனூஷனின் இரண்டு ஜாக்கெற்றுக்கள் காணாமல் போயிருக்கின்றன. திரும்பக் கிடைத்திருந்தாலும் அது மூன்றாவது சம்பவம்.
 
அனூஷனுக்கு இட்ட கட்டளையின் பின்னாலிருந்த ஆனந்தியின் தீர்மானத்தையா அவரும் அது விஷயத்தில் கொண்டுவிடப் போகிறார்? ‘கறுவல்களெல்லாம் கள்ளக் கூட்டம்!’
 
அவருக்கு யோசிக்கவேண்டி இருந்தது.
 
ஜுலையில் கிடைத்த விடுமுறைப் பணத்தில் ஆனந்தி அனூஷனுக்கு விலை சிறிது கூடிய ஜாக்கெற் ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தாள். 
செப்ரெம்பரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியபோது, காலம் கோடையெனினும் காலத்துக்கு முன்னதாகவே அந்த ஆண்டில் கோடையும் பனியும் இடைமாறும் காலமான இலையுதிர் காலத்தின் குளிர் ஆரம்பித்திருந்தது. வடதுருவத்திலிருந்து அடித்து வந்த காற்றால் குளிர் மண்டிப்போனது. கதகதத்துக்கொண்டிருந்த கட்டிடங்கள், தருக்கள், வீதிகள், நீர்நிலைகளெல்லாம் குளிரேறத் தொடங்கிவிட்டிருந்தன. பல வீடுகளில் கணப்பிகளை போடத் துவங்கிவிட்டிருந்தார்கள்.
 
அனூஷன் அந்த புதிய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போயிருந்தான்.
 
வீட்டிலிருந்து பள்ளிக்கு பத்து நிமிஷ நடைதான்.
 
மூன்றரை மணிக்கு விடுகிற பள்ளியிலிருந்து ஆனந்தி வேலை முடிந்து நான்கு மணியளவில் திரும்பியிருந்தும், அனூஷன் வரவில்லை. அப்போதும் ஆனந்தி வழக்கம்போல் தந்தையிடம்தான் கேட்டாள், ‘அப்பா, ஒருக்கா அனூஷனைப் போய்ப் பாத்துக்கொண்டு வந்திடுங்கோவன்’ என்று.
 
 
இராஜலிங்கம் வெளிக்கிட்டுக்கொண்டிருக்க அனூஷன் வீடு வந்துசேர்ந்தான். ஆனந்தி தாமதத்துக்கு காரணம் கேட்டபோது, அனூஷன் கண்கலங்க நின்று ஜாக்கெற் தொலைந்துபோன விஷயத்தைக் கூறினான். 
‘காலங்காத்தால அஞ்சு மணிக்கு எழும்பி ஓடி நான் பக்டரியில முறிஞ்சு உழைச்ச காசு…’ என்று ஆனந்தி வயிறெரிந்ததோடு அன்றைக்கு விஷயம் முடிந்திருந்தது. 
 
சனி, ஞாயிறான பள்ளியற்ற நாட்கள் கழிய திங்கட்கிழமை காலையில் அனூஷனும் தன் பழைய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போனான். 
 
அன்றைக்குத்தான் புதிய ஜாக்கெற் திரும்பக் கிடைத்திருந்தது. அவர் திருப்தியும், அனூஷன் மகிழ்ச்சியும்பட்ட வேளை, ஆனந்திக்கு கோபம் வந்திருக்கிறது. பள்ளியில் முறையிடவும் அவரிடம் சொல்லிவிட்டாள்.
அதையா அவரும் செய்யப்போகிறார்?  
 
உண்மையில் ஜாக்கெற் தொலைந்த அன்றைக்கேதான் தன் வயிற்றெரிச்சலோடு ஆனந்தி அவருக்குச் சொல்லியிருக்கவேண்டும், பள்ளியிலே சென்று முறைப்பாடு செய்வதுபற்றி. 
 
அந்தத் தொலைவில் ஆனந்தி வயிறெரிய மட்டும்தான் செய்திருக்க முடியுமென்றும் இராஜலிங்கத்துக்கு தெரிந்தது. ஏனெனில் கோபத்தை எறிவதற்கும் ஒருவர் அல்லது ஒன்று தேவைதானே? ஒருவேளை அது நிக்கலஸென்று தெரிந்ததால்தான் அந்தக் கோபமே அவளிடம் வந்ததோவென்றும் அவருக்கு யோசனை தோன்றியது. பொதுவாக கறுப்பின மக்களைப்பற்றி கனடிய ஆசியர்களிடம் அவ்வாறான ஒரு மனநிலை, குழப்பகாரர் கள்ளர்கள் என்பதாக, இருந்து வருவதை அவர் அறிவார். 
 
இராஜலிங்கத்துக்கு அவ்வாறான எண்ணம் இல்லாவிட்டாலும், நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தானென்ற கேள்விமட்டும் விடைதேடி அவரிடத்தில் நின்றுகொண்டிருந்தது.
 
அனூஷன் சாப்பிட்டு வர, இராஜலிங்கம் அவனை அழைத்து ஜாக்கெற் கிடைத்த விபரத்தை விசாரித்தார்.
 
கைகளை ஆட்டியும், கேலியாய் சிரித்தும் கொண்டான அபிநயத்தோடு அன்று மாலையில் நடந்ததைச் சொன்னான் அனூஷன்.
 
பள்ளி முடிய லொக்கருக்கு வந்து தன்னுடைய பையையும் பழைய ஜாக்கெற்றையும் எடுத்துக்கொண்டு அனூஷன் வெளியே வர, முன்னால் போய்க்கொண்டிருக்கிறான் நிக்கலஸ், எந்த ஜாக்கெற்றை அனூஷன் தொலைத்தானோ, அதேபோன்ற ஒன்றை அணிந்துகொண்டு.
அனூஷனுக்கு நெஞ்சு திக்கென்றது. கொஞ்சம் கோபம்கூட வந்தது. 
விரைந்து அவனிடம் போய், ‘நிக்கோ, இந்த ஜாக்கெற்றை நீ எப்போது வாங்கினாய்?’ எனக் கேட்டான்.
 
நிக்கோ கலகலவெனச் சிரித்துவிட்டு, ‘இது நான் வாங்கியதில்லை. இங்கேதான் எறிந்துகிடந்து எடுத்தேன்’ என்றான்.
 
‘போன வெள்ளிக்கிழமை எனது புதிய ஜாக்கெற் லொக்கரில் வைத்திருந்த இடத்தில் காணாமல் போனது.’
 
‘இதுமாதிரியானதா அது?’
 
‘இதுமாதிரியானதேதான்.’
 
‘இதுவேயா அது?’
 
கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘இதுவேதான்’ என்றான் அனூஷன்.
 
நிக்கலஸ் நின்றான். அனூஷனும் நிற்க, அவனது முகத்தை ஏறிட்டு நோக்கினான். அனூஷன் உண்மைதான் சொல்கிறானா என்பதை அறியப்போல் அவனது கண்களை கூர்ந்து கூர்ந்து கவனித்தான்.
தனது இலவசத்தை தட்டிப்பறிக்க அனூஷன் செய்கிற சூழ்ச்சியில்லை அது என்பதைக் கண்டிருப்பான்போல. சிறிதுநேரத்தில் ஜாக்கெற்றைக் கழற்றி அனூஷனிடம் கொடுத்துவிட்டு விறுவிறுவென நடந்தான்.
 
பின்னால் அனூஷன், ‘நன்றி’ என்றான்.
 
திரும்பிப் பாராமலே அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல் கையைத் தூக்கிக் காட்டிவிட்டு சர்வசாதாரணமாய் போய்க்கொண்டிருந்தான் நிக்கலஸ்.
 
பள்ளியில் நிகழ்ந்ததைச் சொல்லிவிட்டு அனூஷன் கணினி மேசையில் சென்று அமர்ந்துகொண்டான்.
 
அனூஷன் விளக்கிய சம்பவத்திலிருந்து நிக்கலஸ் ஒரு வாழ்வியல் உண்மையாய் அவருள் உருவம் கொண்டபடியிருந்தான்.
நிக்கலஸை அவருக்குத் தெரியும். அந்தப் பகுதியிலே குடியிருக்கிற பையன்தான். நல்ல உயரமான கறுப்பு பையன். ஒட்ட வெட்டிய புலுட்டை முடி. எப்போதும் சிரித்தபடியிருக்கிற முகம். பற்கள், கதைக்கும்போதும் பளீரென்று ஒளியடிக்கும். அனூஷனோடு அவரைக் காணுகிறவேளைகளில் ‘ஹாய், தாத்தா’ என்பான். அனூஷனின் வயதுதானிருப்பான். அவனது தாயைக்கூட பள்ளி வருகிற தருணங்களின் அவர் கண்டிருக்கிறார்.
ஒரு நீண்ட ஐந்து வருஷ காலத்தில் கறுப்பின மக்களோடு ஆசிரியப் பணி நிமித்தம் அவர் நைஜீரியாவில் வாழ்ந்திருக்கிறார். அவர்களது வாழ்வும், மனப்போக்குகளும் அதனால் ஓரளவு அவருக்குத் தெரிந்திருந்தன.
 
மனப்போக்கு என எண்ணியபோது நைஜீரியாவில் ஏறக்குறைய இதற்கு நிகராக நடந்த சம்பவமொன்று அவருக்கு உடடனடியாக ஞாபகம்வந்தது.
குரூமி என்கிற ஒரு கட்டையான அகன்ற தோற்றமுடைய ஒரு நடுத்தர வயது விதவைப் பெண், சனி ஞாயிறுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காக அவரதிடத்துக்கு வந்துகொண்டிருந்தாள்.
 
ஒருநாள் அவரது இரண்டு நீலநிற சேர்ட்டுகளில் ஒன்று காணாமலாகியிருப்பது அவரது கவனத்தில் வந்தது. களவு போவதற்கான வாய்ப்புகள் குறைந்த இடம் அது. அவரது உடுப்புகள், படுக்கை விரிப்பு முதலியவற்றை தோய்த்துக்கொடுப்பவள் குரூமிதான். ஆனால் அவளிடம் கேட்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் நேரடியாக அவளிடம் கேட்காமல், அவள் அங்கே நிற்கிறபோது எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தபடியிருந்தார்.
 
அதைக் கண்ட குரூமி கேட்டாள்: ‘என்ன தேடுகிறீர்கள்?’
 
‘இல்லை, எனது நீலச் சேர்ட்டுகளில் ஒன்றைக் காணவில்லை, அதைத்தான் தேடுகிறேன்’ என்றார் அவர்.
 
‘நீலச் சேர்ட்தானே? அதை நான் எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.’
 
‘ஏன்?’
 
‘எனது மகனுக்கு போடுவதற்கு சேர்ட் இல்லை. உங்களிடம் நீலச் சேர்ட்டிலும் இன்னொன்று இருக்கிறதுதானே? அதனால் கொண்டுபோனேன்.’
 
‘அப்போ, உனக்குத் தேவையானால் எதையும் நீ எடுத்துக்கொண்டு போய்விடுவாயா?’
 
‘அதெப்படி முடியும்? உன்னிடம் அது இரண்டாக இருக்கவேண்டும். அப்போதும் எனக்கு அது தேவையானதாக இருக்கவேண்டும்.’
 
குரூமி சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள், தான் நியாயமெதையும் மீறி நடந்துவிடுபவளில்லை என்பதுபோல்.
 
இராஜலிங்கம் யோசித்தார், நிக்கலஸ்கூட அப்போது குரூமிபோல்தான் சிரித்துக்கொண்டு நின்றிருப்பானா என்று.
 
அவரால் தன் அப்போதைய கேள்விக்கு விடையொன்றை அடைய முடிந்தது.
 
குளித்துவிட்டு கீழே வந்த ஆனந்தி, மறுநாள் பள்ளிசென்று நடந்த சம்பவம்பற்றிய முறைப்பாட்டைச் செய்ய மறுபடி அவரிடம் ஞாபகப்படுத்தினாள்.
 
மௌனமாயிருந்த இராஜலிங்கம் சிறிதுநேரத்தில், “வேண்டாம், இந்த விஷயத்தை அப்பிடியே விட்டிடுவம், ஆனந்தி. இதில களவெண்டு எதுவுமிருக்கிறமாதிரி எனக்குத் தெரியேல்லை” என்றார்.
 
“அப்ப?”
 
“மனம்தான். அது ஒவ்வொரு மனிசருக்கும் ஒவ்வொரு வடிவமாய் இருக்கு. வடிவத்துக்கேற்றதாய் அது சிந்திக்குது. நிக்கலஸின்ர மனம் என்ன வடிவங்கொண்டு இருந்துதோ?”
 
ஆனந்தி சிறிதுநேரம் தந்தையைப் பார்த்தபடியே நின்றுவிட்டு எதுவும் சொல்லாமல் மேலே போனாள்.
 
தான் சொன்னதை அவள் புரிந்துகொள்ளவில்லை என்பது அவருக்குத் தெரிந்தது.
 
அவள் நின்ற இடத்தில் அப்போதும் அவள் விட்டுச்சென்ற அதிருப்தியை அவர் கண்டார்.
 
000 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் குரூமி செய்தது தப்புதான்....அவரிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.அவள் எடுத்த சேர்ட் அவரின் ஏதாவதொரு நினைவின் அடையாளமாக கூட இருக்கலாம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையும் நைஜீரியாவில் இருந்தவர் என்டு நினைக்கிறன் :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.