Jump to content

சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்; ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகா


Recommended Posts

சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்; ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகா

இந்த வார கோலிவுட்சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்

இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். இறுதியாக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவிருக்கும் சங்கமித்திரா படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். இதனால் அவரின் தந்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த படமும் பாதியில் தடைப்பட்டு நிற்கிறது. இதனால் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். சின்ன இடைவெளிக்கு பிறகு சென்னை திரும்பிய ஸ்ருதி ஹாசன், ஹிந்தியில் வித்யூத் ஜம்வால் ஹீரோவாக நடிக்கும் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டுள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை விரைவில் வெளியிட திட்டம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை விரைவில் வெளியிட திட்டம்

அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான Baskar the Rascal படத்தின் உரிமையை வாங்கி தமிழில் உருவாக்கியுள்ளனர். மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் கடந்த ஆண்டே முடிவடைந்தது. இதனால் கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அந்த தேதியில் மூன்று பெரிய படங்கள் வெளியானதால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. இதன்பின் இரண்டு ரிலீஸ் தேதிகளை அறிவித்தனர். ஆனால் அந்த தேதிகளிலும் வெளியிட முடியாமல் போனது. இந்த நிலையில் வரும் 27ம் தேதி பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் இணையும் ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி

மீண்டும் இணையும் ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி

ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் மொழி. இந்த படத்தை ராதாமோகன் இயக்கியிருந்தார். மொழி வெளியாகி பத்து ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ராதாமோகன் - ஜோதிகா ஆகியோர் இணைந்துள்ளனர். ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு படத்தை ரீமேக் செய்கின்றனர். இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர். ஆனால் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது "காற்றின் மொழி" என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காற்றின் மொழி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா 36 வயதினிலே படத்தில் குடும்ப தலைவியாகவும், மகளிர் மட்டும் படத்தில் ஆவணப்பட இயக்குனராகவும், நாச்சியாரில் துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து காற்றின் மொழி படத்தில் பகலில் குடும்ப தலைவியாகவும், இரவில் ரேடியோ ஜாக்கியாகவும் (ஆர்.ஜே) நடிக்கவுள்ளார் ஜோதிகா.

மீண்டும் படம் இயக்குகிறார் சேரன்

மீண்டும் படம் இயக்குகிறார் சேரன்

இயக்குனர் சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ஜி.கே எனும் நண்பனின் வாழ்கை. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் இயக்கத்திற்கு சற்று இடைவேளை கொடுத்த சேரன், தற்போது சாய் ராஜ்குமார் இயக்கும் "ராஜாவுக்கு செக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மாறுபட்ட கதை களத்துடன் ராஜாவுக்கு செக் உருவாகிறது. சத்தமில்லாமல் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. யுத்தம் செய், முரண், ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சேரன். அந்த வரிசையில் ராஜாவுக்கு செக் படமும் இடம்பெறும் என்று கூறுகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ஒரு முன்னணி ஹீரோவை வைத்து புது படத்தை இயக்க சேரன் முயற்சி செய்துவருகிறார். இதற்கான ஒரு கதையையும் அவர் தயார் செய்து வைத்துள்ளாராம்.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் வசந்த் ரவியின் புதிய படம்

அடுத்த கட்டத்திற்கு செல்லும் வசந்த் ரவியின் புதிய படம்

ராம் இயக்கத்தில் ஆண்டிரியா நடிப்பில் வெளியான படம் தரமணி. விமர்சன ரீதியாக வெற்றியடைந்த அந்த படத்தில் வசந்த் ரவி என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் அள்ளினார். இந்த நிலையில் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அருண் மாதேஸ்வரன் இயக்கும் புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் வசந்த் ரவி. அதில் வில்லனாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அதேபோல் ஜில் ஜங் ஜக், அவள் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவை கொடுத்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இறுதி சுற்று படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் விரைவில் தொடக்கம்

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் விரைவில் தொடக்கம்

2013இல் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றியடைந்த படம் மூடர் கூடம். நவீன் என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் பண்ணி அதுல ஹீரோவாகவும் நடித்திருந்தார். முதல் படம் விமர்சகர் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றதால் உடனடியாக தன்னுடைய இரண்டாவது படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு வித்தியாசமான கதை தயார் செய்துள்ளார் நவீன். அந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இசையும் அமைக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. ஹீரோவை தவிர மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார்.

எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு

சினிமா

கோலிவுட் சினிமாவில் இருக்கும் இளம் நாயகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி ஆகிய படங்கள் வெற்றியடைந்தன. இந்த படங்களுக்கு பிறகு வெளியான வெள்ளக்காரதுரை, சத்ரியன், நெருப்புடா போன்ற படங்கள் அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தின. இந்த நிலையில் தற்போது "பக்கா" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.எஸ் சூர்யா இயக்கியிருக்கிறார். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக பக்கா எடுக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரவை தவிர, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் ஹீரோயின்களாக நிக்கி கல்ராணியும், பிந்துமாதவியும் நடித்திருக்கின்றனர். பக்கா படத்தின் எல்லா வேலைகளும் முடிந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கின்றனர். பக்கா படம் சரிவில் இருக்கும் விக்ரம் பிரபுவை ஏற்றத்திற்கு கொண்டுவருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

சூர்யா நடிக்கும் படத்தின் திரைப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

சூர்யா நடிக்கும் படத்தின் திரைப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் NGK. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். NGK படத்திற்கான சூட்டிங் முட்டுகாடு பகுதியில் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் அம்பாசமுத்திரம் பகுதியை செட் அமைத்து அதில் முக்கியமான சில காட்சிகளை படமாக்கினர். இதன் பின் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் தொடங்கியதால் NGK படத்தின் சூட்டிங்கை நிறுத்தினர். ஒரு மாத காலமாக நடந்துவந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மீண்டும் NGK சூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இதில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முழு சூட்டிங்கையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு மாத காலம் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் NGK சூட்டிங் முடிய காலதாமதம் ஆகும் என்று தெரிக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-43849866

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியா பாலன் நடித்த படத்தில் ஜோதிகாவா படம்  சொதப்பல்
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.