Jump to content

இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?


Recommended Posts

இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?

SLC Spin Bowling Coach
 

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக  தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து  பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அடுத்த சுழற்பந்து பயிற்சியாளராக வரத் தகுதி கொண்டவர்களின் பட்டியல் ஒன்றினைப் பார்க்கவுள்ளது.

ருவன் கல்பகே

Ruwan Kalpageஇலங்கை அணிக்கான சுழற்பந்து பயிற்சியாளராக வர பல வெளிநாட்டு நபர்களின்  பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்ற போதிலும், இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ருவன் கல்பகே இந்தப் பதவிக்காக தகுதியுடையவர்களில் முக்கியமானர்களில் ஒருவராக உள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையுடன் நீண்ட கால உறவினைப் பேணிவரும் கல்பகே, கடந்த காலங்களில் கிரிக்கெட் அணிகளுக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக, சுழற்பந்து பயிற்சியாளராக மற்றும் கணினியுடன் இணைந்த கிரிக்கெட்  பயிற்றுவிப்பாளராக  பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். அதோடு, சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் அணிக்கு பயிற்சி வழங்கிய போது, ஹதுருசிங்கவின் பயிற்சி குழாத்திலும் கல்பகே இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன்

Muttiah-Muralitharan-3.jpgசுழல் ஜாம்பவானான முரளி, தனது ஓய்வுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புகள் எதனையும் பேணிவராத ஒருவராக இருந்த போதிலும், இலங்கையின் இளம் சுழல் வீரர்கள் அனைவரும் முரளியினை முன்னுதாரணமாக கொண்டே சிறுவயதிலிருந்து  தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

 

பல வெளிநாட்டு அணிகளுக்கு குறுகிய கால இடைவெளிகளில் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் முரளி, தற்போது .பி.எல். தொடரில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சேவை புரிந்து வருகின்றார். இதுதவிர அவுஸ்திரேலிய அணி முரளியினை தமது சுழல்பந்து ஆலோசகராக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கையின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக அதிக தகுதி உள்ளவராக முரளியினை  அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.  

முஸ்தாக் அஹமட்

Mushtaq-Ahmed-1.jpgபாகிஸ்தான் அணியின் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான முஸ்தாக் அஹமட், இலங்கை அணிக்கான சுழற்பந்து பயிற்சியாளராக மாற விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முஸ்தாக் இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சுழல் பந்து பயிற்சியாளராக செயற்பட்ட அனுவபத்தினைக் கொண்டிருக்கின்றார்.

சக்லைன் முஸ்தாக்

Saqlin.jpgதுஸ்ராஎன அழைக்கப்படும் விஷேட வகை சுழல்பந்தினை உலகுக்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு சுழல் நட்சத்திரமான சக்லைன் முஸ்தாக், இலங்கை அணிக்கு சுழல்பந்து பயிற்சியாளராக வரத் தகுதியான மற்றுமொரு நபராவர். 2016ஆம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முஸ்தாக் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், இங்கிலாந்து அணிக்காக அவர் வேலை செய்யும் போது சிறு சிறு இடைவெளிகளில் ஓய்வினை எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது. எனவே, முஸ்தாக் குறித்த இடைவெளிகளில் இலங்கை அணிக்கு கடமையாற்றினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிரோஷன் பண்டாரதிலக்க

TP-21-5.jpgஇலங்கை அணிக்காக  7 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக் கொண்ட இடதுகை சுழல் வீரரான நிரோஷன் பண்டாரதிலக்க, அதன் பின்னர் சுழல் பந்து பயிற்சியாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை கிரிக்கெட் நிருவாகம் உள்நாட்டு நபர் ஒருவருக்கு சுழற்பந்து பயிற்சியாளர் பதவியினை வழங்கும் எனில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் பண்டாரதிலக்க கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நபர்களில் ஒருவராக உள்ளார்.

அஜித் ஏக்கநாயக்க

IMG_0132.jpgமுன்னர் குறிப்பிட்ட பண்டாரதிலக்க போன்ற ஒரு அனுபவத்தினைக் கொண்டிருக்கும் சுழற்பந்து பயிற்சியாளராக அஜித் ஏக்கநாயக்கவும் காணப்படுகின்றார். ஏக்கநாயக்க விளையாடும் காலத்தில் இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் பிரம்மிக்க வைக்கும் விதமான பதிவுகளை காட்டியிருந்த போதிலும், அவருக்கு தேசிய அணிக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 600க்கும் மேலான முதல்தர விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கும் ஏக்கநாயக்க, இலங்கையின் கனிஷ்ட அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டிருக்கின்றார். இலங்கை கிரிக்கெட் சபை, தமது சுழல் பயிற்சியாளர்களுக்கான தேடல் பட்டியலில் இவரையும் இணைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் ஜோஷி

Sunil-Joshi-2.jpgஇந்தியாவினைச் சேர்ந்த முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி, சுழற்பந்து பயிற்றுவிப்புத்துறையில் தேர்ச்சி மிக்க ஒருவர். ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின்  தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த காலப்பகுதியில் இவர் பங்களாதேஷ் அணிக்கான சுழற்பந்து ஆலோசகராக  கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 1996ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான இவர் 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 69 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 110 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக்கொண்ட ஜோஷி 160 போட்டிகளில் ஆடி, மொத்தமாக  615 விக்கெட்டுக்களை சாய்த்திருகின்றார்.

 

கிரிக்கெட் வீரர் என்ற அத்தியாயத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஜோஷி ஹைதராபாத், ஐம்மு காஷ்மீர் மற்றும் அசாம் அணிக்களுக்காக பயிற்சியாளராக கடமையாற்றியதோடு,  2016ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற T20 உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் ஓமான் அணியின் பந்து வீச்சு ஆலோசகராகவும் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.   

டேனியல் வெட்டோரி

Daniel-Vettori.jpgநியூசிலாந்து அணிக்கு மிக வெற்றிகரமாக அமைந்த சுழல் வீரர்களில் ஒருவரான டேனியல் வெட்டோரி, இலங்கை அணியின் சுழல் பந்து பயிற்சியாளருக்கு தகுதியுடைய ஏனைய நபர்களில் ஒருவராக இருக்கின்றார். பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆடும் பிரிஸ்பேன் அணிக்கு 2015ஆம் ஆண்டு முதல் மூன்று வருட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வரும் வெட்டோரி அதன் பின்ன் .பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும், இங்கிலாந்தின் T20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்கும் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தமாகியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் போதியளவு அனுபவத்தினைக் கொண்டிருக்கும் வெட்டோரி இலங்கை அணியில் இணைவது வரப்பிரசாதமாகவே அமையும்.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.