Jump to content

தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்


Recommended Posts

தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்..

vigneswaran.jpg?resize=800%2C444
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள்.

இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழுது அவருடைய அரசியல் போக்கிற்கு எதிராகக் காணப்படுபவருமாகிய சுமந்திரனுக்குக் கூறும் ஒரு பதிலாக அதைச் சுருக்கியது ஏன்? ஒரு திருப்பகரமான தருணத்தில் நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிலை ஏன் இப்படி மிகச் சாதாரனமாகக் கூறிவிட்டு அவர் இந்தியாவிற்குப் போனார்? ஒரு மாற்று அணிக்கான தேவையை அதற்கேயான கனபரிமாணத்தோடும், அடர்த்தியோடும் அவர் விளங்கி வைத்திருக்கவில்லை என்பதனை இது காட்டுகிறதா?

 

மாற்று அணி எனப்படுவது சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ எதிரானது மட்டுமல்ல. அது அதைவிட ஆழமானது. பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் சிந்திய குருதியோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் இதுவரை காலமும் கொடுத்த விலைக்கு ஈடான ஒரு தீர்வைப் பெறுவதற்கு அது மிக அவசியம். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியைப் பெறுவதற்கு அது மிக அவசியம். ஆனால் விக்னேஸ்வரன் அதை சுமந்திரனுக்கு எதிரான ஒரு பதிலாக ஏன் சுருக்கினார்?

சில நாட்களுக்கு முன் ஒரு டயஸ்பொறாத் தமிழர் என்னிடம் கேட்டார். ‘ஒரு மாற்று அணியை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதன் மூலம் விக்னேஸ்வரன் அடுத்த கட்டமாக என்ன செய்வார’? என்று. ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது முன்னெடுத்து வரும் அரசியல் பாதைக்கூடாக தமிழ் மக்களின் இலக்குகளை எப்படி அடையப் போகிறார்? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வல்ல நாடுகளுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை விளக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு நிலமையை ஏற்படுத்தலாம் என்ற பொருள்பட பதில் சொன்னார். அதாவது ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்த மனப்படமே அவரிடம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் ராஜதந்திரப் போர் எனப்படுவது அறநெறிகளின் அடிப்படையில் நிகழ்வது அல்ல. நீதி நியாயங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுவது அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு நலன்சார் சூதாட்டம். அவ்வாறான ஒரு சூதாட்டத்திற்குத் தேவையான நெளிவு சுழிவுடன் கூடிய தலைமைத்துவம் விக்னேஸ்வரனிடம் உண்டா?அவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சுமந்திரனால் உருவாக்கப்பட்டிருக்கும் அணியை அவர் எப்படி எதிர் கொண்டார்?

அதே சமயம் அவருக்கு எதிரான அரசியல் போக்கின் கூர் முனை போலக் காணப்படும் சுமந்திரன் எப்படிச் செயல்படுகிறார்? சுமந்திரன் ஒரு தனிநபர் அல்ல. பிராந்திய மற்றும்மேற்கு நாடுகளின் அபிலாiஷகளின் தமிழ்க்கருவியே அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்தவரும் முதியவருமாகிய சம்பந்தரை விடவும் ஆழம் குறைந்த வேர்களைக் கொண்ட ஒரு சுமந்திரனைக் கருவியாக்கிக் கையாள்வது இலகு என்று மேற்கு நாடுகளும் ஏனைய தரப்புக்களும் நம்புகின்றன. அந்த அடிப்படையில்தான் சுமந்திரனின் அணி எனப்படுவது உள்நாட்டு அளவிலும் அனைத்துலக அளவிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

விக்னேஸ்வரனோடு ஒப்பிடுகையில் சுமந்திரனின் அரசியல் அதிகம் செயல்பூர்வமானதாகக் காணப்படுவது இந்த அடிப்படையில்தான். கூட்டமைப்பின் பிரதானிகளில் பெரும்பாலானவர்கள் சுமந்திரனுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். தம்மைத் தீவிர தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சிலர்கூட சுமந்திரனை வெளிப்படையாகப் பகைப்பதற்குத் தயங்குகிறார்கள். அது மட்டுமல்ல உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் விடயத்தில் அவர்களும் சுமந்திரனின் அதே உத்திகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்நடிப்புச் சுதேசிகளோடு ஒப்பிடுகையில் சுமந்திரன் ஒரு வெளிவாயராகத் தெரிகிறார். தனக்குச் சரியெனப்பட்டதை அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது அவ்வப்போது கூறி வருகிறார். இதனால் ஏற்படக் கூடிய இழப்புக்களையிட்டு அவர் பயப்படவில்லை. இறுதியிலும் இறுதியாக தன்னுடைய எஜமானர்கள் தம்மைப் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறாரோ தெரியவில்லை.

கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் சுமந்திரனை மீறிச் செயற்படுவதற்கு அநேகமாக ஒருவரும் தயாரில்லை. சம்பந்தர் கூட சுமந்திரனை வெளிப்படையாக் கண்டிக்கும் ஒரு நிலமையில்லை. நடந்து முடிந்த உள்ளூரட்சி மன்றத் தேர்தல்களின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரவில் டான் டீ.வியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தேன். அதில் என்னோடு பங்குபற்றிய மற்றொரு அரசியல் விமர்சகர் நிகழ்ச்சி இடைவேளையின் போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர் ஒருவரோடு தொலைபேசியில் உரையாடினார். அதன் போது கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வாக்குச்சரிவைக் குறித்தும் கதைக்கப்பட்டது. இதற்கு சுமந்திரனே பொறுப்பு என்று மேற்படி விமர்சகர் சொன்னபோது அவரோடு உரையாடிய அரசியல் தலைவர் இல்லை சம்பந்தர் தான் பொறுப்பு என்று பதில் சொன்னார். ஏனெனில் சுமந்திரனை கொண்டு வந்தது அவர்தான். சுமந்திரனுடைய நடவடிக்கைகளை பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்தான். ஒரு தலைவராக தன்னுடைய வாரிசை சம்பந்தர் நெறிப்படுத்தத் தவறிவிட்டார். அதன் விளைவே தேர்தல் முடிவுகள் என்ற தொனிப்பட அவர் பதில் சொன்னார்.

சுமந்திரன் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சம்பந்தரின் கண்டுபிடிப்புத்தான். இருவருமே கொழும்பு மையத்திலிருந்து வந்தவர்கள்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது கொழும்பு மையத் தலைவர்களின் ஆதிக்கத்துட் சென்றுவிட்டது. இதில் இணக்க அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரனும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் விக்னேஸ்வரனும் எதிர் எதிராகப் போனமை என்பதும் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான்.சம்பந்தர் களமிறக்கிய இரண்டு தீர்மானகரமான ஆளுமைகள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பி நிற்கின்றன. இதைச் சம்பந்தரின் தோல்வியென்பதா? அல்லது வெற்றியென்பதா? இவ்வாறாக கொழும்பு மையத் தலைவர்களுக்கிடையிலான ஒரு முரண்பாட்டின் விளைவாகவே விக்னேஸ்வரன் மாற்று அணியைக் குறித்தும் வாய் திறந்திருக்கிறார்.

மாறாக வடகிழக்கு மையங்களிலிருந்து செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளும், அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும், அவருக்கு வாக்களித்த மக்களும் அவரை நோக்கி எதிர்பார்ப்போடு கேள்வி கேட்ட போதெல்லாம் உரிய பதிலை வழங்காமல் ரஜனிகாந்தைப் போலப் பதிலளித்து வந்தார். இப்பொழுது சுமந்திரனுக்கு தரப்படும் ஒரு பதிலாக தனது முடிவை அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த முடிவை செயலாக்குவதற்கு அவரிடம் என்னென்ன வேலைத்திட்டங்கள் உண்டு?.

பேரவையை ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பப் போவதாக அவர் கூறி வருகிறார். அந்த மக்கள் இயக்கத்தின் பின்பலத்தோடு ஒரு தேர்தல் அரசியலை அவர் முன்னெடுக்கக்கூடும். அதற்குரிய ஓர் ஐக்கிய முன்னணியை அவர் இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்குக்கூட மாகாணசபையின் காலம் முடியும் வரை காத்திருப்பாராக இருந்தால் சில சமயம் மாற்று அணியெனப்படுவது ஓரணியாகத் திரள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்கப் போவதாக அவர் அறிவிக்குமிடத்து கூட்டமைப்பு அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகவே அவர் காலத்தை மேலும் கடத்துகிறாரா?

ஆனால் அவருடைய எதிரணியோ அதாவது சுமந்திரன் அணியானது தொடக்கதிலிருந்தே செயல்பூர்வ அணியாகத்தான் காணப்படுகிறது. அது முழுக்க முழுக்க நலன்கள் சலுகைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அணியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தொடங்கி உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் வரையிலும் அது மிகப் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. அந்த அணிக்கு அதிகார பலமுண்டு. கொழும்பிலும் அனைத்துலக அளவிலும் பலமான வலைப்பின்னல்களும், ஆதரவுத் தளமும் உண்டு. அனைத்துலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் அதற்கென்று ஒரு நிதித்தளம் உண்டு.

மாகாணசபைக்குள் தனக்கென்று ஓர் ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்பியது போலவேசுமந்திரன் கிராம மட்டத்திலும் உள்ளூராட்சி மன்றங்களில் ஓர் ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்பி வருகிறார். உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான அவருடைய அணுகு முறையானது அம்மன்றங்களில் அவரது ஆதரவுத்தளத்தை பலப்படுத்தியிருக்கிறது. இப்படிப் பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளில் மேலிருந்து கீழாக பலமான ஒரு வலைப்பின்னலை திட்டமிட்டுக் கட்டியெழுப்பிய ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.

அது மட்டுமல்ல ஊடகப்பரப்பிலும் சுமந்திரன் பிரவேசித்திருக்கிறார். ஊடகப்பரப்பிலும் சுமந்திரனுக்கு பலமான பிடியுண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகையின் பின்னணியில் அவர் இருப்பதாக ஊடக வட்டாரங்களில் ஒரு சந்தேகம் உண்டு. கொழும்பிலிருந்து எழுதும் சில பத்தி எழுத்தாளர்கள் அவரை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் போல காணப்படும் இவர்கள் அதே சமயம் விக்னேஸ்வரனை குறி வைத்துத் தாக்குகிறார்கள். இது ஏறக்குறைய கம்பன் கழகத்தின் உத்திதான். யாரை யார் சான்றோர் என்று அழைக்கிறார்கள் என்பதிலிருந்து யாரெல்லாம் சான்றோர் என்பதனை தமிழ் மக்கள் கண்டுபிடிக்கலாம்.
இது தவிர அண்மையில் யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகையின் பின்னணியிலும் சுமந்திரனே இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. காலைக்கதிர் பத்திரிகையில் அரசியல் பத்தி ஒன்று அப்படித்தான் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இரண்டு பலமான ஊடகங்கள் உண்டு. உதயன் பத்திரிகை சரவணபவானுடையது. தமிழ்வின் இணையத்தளம் சிறீதரனின் சகோதரனால் நடத்தப்படுகிறது. இவ்விரு ஊடகங்களும்தான் இதுவரை காலமும் கூட்டமைப்பின் ஊடகப்பலங்காளாகக் காணப்பட்டன. ஆனால் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட எதிரிகளைத் தாக்குவதற்கும் தமது ஊடகங்களைப் பயன்படுத்துவதனால் அவர்களுடைய தனிப்பட்ட எதிரிகளும் ஒரு கட்டத்தில் கட்சியின் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள்.தவிர அண்மைய தேர்தல் முடிவுகளின் பின் உதயன் பத்திரிகை அதன் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்கங்களிலும் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே கட்சிக்கென்றோர் ஊடகம் இருக்க வேண்டும். அது கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதிய சுதந்திரன் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கனடாவிலுள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இதில் முதலிட்டுள்ளார்கள்.

இப்படியாக சுமந்திரன் எல்லாத் தளங்களிலும் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். ஆனால் விக்னேஸ்வரன் அவரளவிற்கு திட்டமிட்டு நிறுவனமயப்பட்டு சிந்திப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனைப் போல ஆதரவு அணிகளைக் கட்டியெழுப்பத் தேவையான தந்திரமோ, தலைமைத்துவமோ விக்னேஸ்வரனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனின் வலைக்கட்டமைப்பானது நலன்கள், சலுகைகளின் அடிப்படையிலானது.அதை இலகுவாகக் கட்டியெழுப்பலாம் ஆனால் விக்னேஸ்வரன் கட்டியெழுப்ப வேண்டியது ஒரு தேசியக் கட்டமைப்பு. கடந்த சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக அவர் கண்டுபிடித்திருக்கக் கூடிய நபர்களை வைத்தே அவர் அதைச் செய்ய வேண்டும். இக்குறுகிய காலப்பகுதிக்குள் ஆட்களை அடையாளங்காணும் அளவிற்கு அவரிடம் தலைமைத்துவப் பண்பு உண்டா?

அவரை நேசிக்கும் மக்களின் ஆதரவுத்தளம்தான் அவருடைய பிரதான பலம். அவருக்காக எழுதும் சில விமர்சனங்களும் கருத்துருவாக்கிகளும் உண்டு. பேரவைக்குள் இவர்களில் ஒரு பகுதியினர் ஓரளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனாலும் சுமந்திரன் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனுக்கிருக்கும் நிறுவனப்பலம் எனப்படுவது போதாது. அவர் தன்னுடைய முடிவை இப்பொழுது மங்கலாகவேனும் அறிவித்திருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவரது எதிரணி ஏற்கெனவே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது.

சுமந்திரன் தனது விருப்பங்களை செயலுருப்படுத்தும் ஒரு தலைவராக மாறி வருகிறார். ஆர்னோல்டை யாழ் மாநகர முதல்வராக்குவது என்று அவர் முடிவெடுத்தார். அந்த முடிவை எதுவிதத்திலோ செயலாக்கினார். இப்பொழுது விக்னேஸ்வரனை அகற்றுவது என்று முடிவெடுத்து விட்டார். அவர் அதைச் செய்வார். கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் அவரை எதிர்த்துக் கேட்க பெரும்பாலானவர்கள் தயாரில்லை. மாவை என்ன செய்ய வேண்டுமென்பதையே சுமந்திரன் முடிவெடுக்கும் ஒரு நிலமைதான் காணப்படுகிறது. கூட்டமைப்பு எனப்படுவது சலுகைகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியாக மாறி விட்டது. விக்னேஸ்வரனுக்கு இனி அதற்குள் இடமிருக்காது. ஒரு மாற்று அணியை விரைவாகக் கட்டியெழுப்புவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை. ஒரு ரஜனிகாந்தைப் போல அவர் இனியும் தளம்பக்கூடாது. அவருக்குள் ஒரு நீதிபதி உண்டு. ஓர் ஆன்மீகவாதி உண்டு. ஒரு குத்துச்சண்டை வீரர் உண்டு. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது அந்த குத்துச்சண்டை வீரன்தான்.

 

 

http://globaltamilnews.net/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.