Jump to content

திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல்


Recommended Posts

திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல்

 

தமிழர் தரப்பு அர­சியல் திசை­மா­றிய பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றதோ என்று எண்ணத் தோன்­றி­யி­ருக்­கின்­றது. தமிழர் தாயகப் பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கிலும் நில­வு­கின்ற அர­சியல் நிலை­மை­களே இவ்­வாறு சிந்­திக்கச் செய்­தி­ருக்­கின்­றன. அர­சி­யலில் சுய அர­சியல் நலன்­களை மாத்­தி­ரமே முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற போக்கு தலை­யெ­டுத்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் படிப்­ப­டி­யாகத் தலை நிமிர்த்­தி­யுள்ள கட்சி அர­சியல் நலன்­பேணும் தன்மை இதற்கு இந்த சுய அர­சியல் நலன்­சார்ந்த செற்­பா­டு­க­ளுக்கு உத்­வேகம் அளித்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

கட்சி அர­சியல் அர­சோச்­சு­கின்ற கார­ணத்­தி­னா­லேயே தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயல் வல்­லமை உள்­ளதோர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மிக்க முடி­யாமல் போயுள்­ளது. அது மட்­டு­மல்­லாமல், தமிழ் மக்­களும். தமிழ் அர­சியல் கட்­சி­களும் ஓர­ணியில் பல­மா­னதோர் அர­சியல் சக்­தி­யாக வளர்ச்சி பெற முடி­யா­மைக்கும் கட்சி அர­சி­யலின் ஆதிக்­கமே முக்­கிய கார­ண­மாகும். 

பல்­வேறு படிப்­பி­னை­களைத் தந்­துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தமிழர் தரப்பு அர­சியல் பிற்­போக்­கான நிலையில் சென்று கொண்­டி­ருப்­பதை உணர்த்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. அதே­வேளை, தமிழர் தரப்பு அர­சியல் திசை­மா­றிய பாதையில் அடி­யெ­டுத்து வைப்­ப­தற்கும் வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது. 

பல்­வேறு அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே, உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் பின்­போ­டப்­பட்டு வந்­தன.  ஆட்­சியில் உள்ள அர­சியல் கட்சி அதி­கா­ரத்தை இழப்­ப­தற்கு இந்தத் தேர்­தல்கள் வழி வகுத்­து­வி­டுமோ என்ற அச்­சத்­தி­னா­லேயே உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­ப­டாமல் காலம் தாழ்த்­தப்­பட்­டன. 

இருப்­பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்­தலைக் கால வரை­ய­றை­யின்றி பிற்­போட்­டதன் மூலம் மக்­க­ளு­டைய அடிப்­படை ஜன­நா­யக உரிமை மறுக்­கப்­பட்­டது என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக எழுத்­தி­ருந்­தது. ஜன­நா­யக அமைப்­புக்­களைச் சார்ந்­தோரும், ஜன­நா­ய­கத்தில் பற்­று­றுதி கொண்ட அர­சி­யல்­வா­தி­க­ளோடு, ஜன­நா­யகம் மற்றும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் இந்த உரிமை மறுப்­புக்கு எதிராகப் போர்க்­கொடி உயர்த்தி இருந்­தார்கள். இந்த அழுத்தம் கார­ண­மா­கவே ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சி பீடம் ஏறிய நல்­லாட்சி அர­சாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­வந்­தது.

தேர்தல் முறை­களில் மாற்றம் கொண்டு வர­வேண்டும் என்­பது இரு­கட்சி இணைந்த இந்த அர­சாங்­கத்தின் முக்­கிய நோக்­க­மாகும். கட்சி அர­சி­யலை வளர்ப்­ப­தற்கும், தனிக்­கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கும் விகி­தா­சாரத் தேர்தல் முறை தடை­யாக இருக்­கின்­றது என்ற கசப்­பான அர­சியல் அனு­ப­வமே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சி­யையும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் தூண்டி இருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், உள்ளூராட்சி சபை­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்தை வழங்கி அவற்றின் தரத்தை உயர்த்­து­வதன் ஊடாக அடி­மட்­டத்தில் இருந்தே கட்சி அர­சியல் நலன்­களை மேம்­ப­டுத்த முடியும் என்ற நோக்­கத்­தையும் இரண்டு கட்­சி­களும் கொண்­டி­ருந்­தன.

அந்த வகையில் தொகுதி அடிப்­ப­டை­யையும், விகி­தா­சார முறை­யையும் கலந்­த­தொரு கலப்புத் தேர்தல் முறைக்­கான திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அத்­துடன், புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பில் உள்ளூராட்சி சபை­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்தை வழங்­கு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தீர்­மானம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­னோ­டி­யாக வெளி­யி­டப்­பட்ட இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரு­வ­தற்கு முன்­ன­தா­கவே திருத்தச் சட்­டத்தின் ஊடாக தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி கலப்புத் தேர்தல் முறை அறி­முகம் செய்­யப்­பட்­டது. இந்த கலப்புத் தேர்தல் முறையின் பரீட்­சார்த்த கள­மா­கவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்­தது. இது கால வரை­யிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லிலும், உள்ளூராட்சி சபை­களின் நிர்­வா­கத்­திலும் அர­சியல் கால் ஊன்­றி­யி­ருக்­க­வில்லை. இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில்  அர­சியல் கலந்­தி­ருந்த போதிலும், அது மேலோட்­ட­மா­கவே இருந்­தது. 

ஆனால், அர­சியல் அந்­தஸ்து வழங்கி, உள்­ளூராட்சி சபை­களை அர­சியல் ரீதி­யாக உயர்த்­து­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால், தொகுதி முறையும் விகி­தா­சார முறையும் கலந்த கலப்புத் தேர்­தலில் அர­சியல் ஆழ­மாகக் கால் ஊன்­றி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே, கிரா­மங்கள் மற்றும் நக­ரங்கள் பட்­ட­ணங்­களில் அடிமட்ட நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்­பான உள்ளூராட்சி சபை­க­ளுக்­கான இந்தத் தேர்தல் தேசிய மட்­டத்தில் தேசிய கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற அதி முக்­கிய தேர்­தலைப் போன்று முக்­கி­யத்துவம் பெற்­றி­ருந்­தது. அந்த வகை­யி­லேயே தேர்தல் கால பரப்­பு­ரைகள் அமைந்­தி­ருந்­தன. 

அந்த பரப்­பு­ரை­களில் சாதா­ரண சிறிய அர­சியல் கட்­சியின் தலைவர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் தொடக்கம் பெரிய அர­சியல் கட்­சிகள் மற்றும் ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் உள்­ளிட்ட அதி­யுயர் அந்­தஸ்தில் உள்­ள­வர்கள் வரை­யி­லான அர­சியல் பிர­மு­கர்கள் இந்த பரப்­பு­ரை­களில் தேசிய மட்­டத்­தி­லான அர­சியல் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருந்­தனர். 

இலங்­கையைப் பொருத்­த­மட்டில், இரண்டு வகை­யான அர­சியல் நிலை­மைகள் நில­வு­கின்­றன. தேசிய மட்­டத்தில் செல்­வாக்கு பெற்­றுள்ள பேரி­ன­வாத அர­சியல் என்­பது ஒன்று. தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அடிப்­படை உரி­மை ­சார்ந்த அர­சியல் என்­பது இரண்­டா­வது. 

தேசிய மட்ட அர­சியல் பேரி­ன­வாத நலன்­க­ளையும், பெரும்­பான்மை இன மக்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி நலன்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது. இது, நாட்டின் தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அடிப்­படை அர­சியல் உரி­மை­களை மீறு­வ­தா­கவும், அவற்றை மறுத்து அந்த இனங்­களை இன, மத ரீதி­யாக அடக்கி ஒடுக்­கு­வ­தையும் உள்­ள­டக்­கி­யி­ருக்­கின்­றது. 

நாடு அந்நி­ய­ரிடம் இருந்து சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக அடக்கி ஒடுக்­கப்­பட்டு வந்­துள்ள தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்­கான அர­சியல், போராட்ட அர­சி­ய­லாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

பேரி­ன­வாத அர­சியல் சக்­தி­களின் சுய கட்சி அர­சியல் நலன்­க­ளுக்கு கலப்பு முறை­யி­லான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வாய்ப்­பாகக் கரு­தப்­பட்­டது. ஆனால், உரி­மை­க­ளுக்­கான தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அர­சி­ய­லுக்கு இது பாத­க­மான நிலை­யையே உரு­வாக்கி இருக்­கின்­றது. இதனை தேசிய சிறு­பான்மை இன அர­சியல் சக்­தி­களும், அர­சியல் கட்­சி­களும் குறிப்­பாக தமிழ் அர­சியல் கட்­சி­களும், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் சரி­யான முறையில் உண­ர­வில்லை என்றே கூற வேண்டும். 

ஏனெனில் அர­சியல் கட்சி நலன்­க­ளுக்­கா­கவும், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கா­கவும் செயற்­ப­டு­கின்ற அர­சியல் கட்­சிகள் தங்­க­ளுக்குள் பேதங்­களை வளர்த்து, போட்டி நிலையில் அர­சியல் செய்­யும்­போது அவற்றின் நோக்­கங்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தில்லை.ஆனால் உரி­மை­க­ளுக்­கான போராட்ட அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ள அர­சியல் கட்­சி­களும் மக்­களும் ஓர­ணியில் ஒன்று திரண்டு செயற்­பட வேண்­டி­யது அடிப்­ப­டையில் அவ­சியம். இந்த ஓரணி அர­சியல் திரட்சி என்­பது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பேரம் பேசு­வ­தற்­கு­ரிய அர­சியல் பலத்தின் ஆணிவேர் என்­பதை மறுக்க முடி­யாது.

கலப்பு முறை­யி­லான உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லா­னது, தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில், அவர்­களின் அர­சியல் தலை­மை­களின் செயல் வல்­ல­மை­யையும் எதிர்­கால அர­சியல் போக்­கையும் சோத­னைக்கு உள்­ளாக்­கிய ஒரு கள­மா­கவே அமைந்­து­விட்­டது. 

தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் அர­சியல் செயற்­பா­டு­களில் ஏற்­பட்ட அதி­ருப்­தியின் கார­ண­மாக புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான நகர்­வுகள் முனைப்புப் பெற்­றி­ருந்த பின்­ன­ணி­யி­லேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடை­பெற்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஸ்தாபகக் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து, புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்கும் முயற்­சிக்கு இந்தத் தேர்தல் சூழல் ஒரு வாய்ப்­பாக அல்­லது அர­சியல் ரீதி­யான ஒரு சந்­தர்ப்­ப­மாக அமைந்­தி­ருந்­தது. 

முன்­ன­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி மற்றும் புதிய அர­சியல் தலை­மையை இலக்­காகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் மக்கள் பேரவை என்­ப­னவும் இந்த புதிய அர­சியல் தலைமை உரு­வாக்­கத்தில் பங்­கேற்­றி­ருந்­தன.ஆயினும் எதிர்­பார்த்த அளவில், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கோ அல்­லது அதன் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சிக்கோ ஈடுகொடுக்­கத்­தக்க வகையில் வலு­வா­னதோர் அர­சியல் தலைமை புதி­தாக உரு­வா­க­வில்லை. 

தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ரவுத் தளத்­திலும், தனக்­கென வகுத்­தி­ருந்த அர­சியல் வியூ­கத்­திலும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தனக்கு இசை­வான அர­சியல் சக்­திகள் மற்றும் பொது அமைப்­புக்­களை இணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய அணியை உரு­வாக்கி தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருந்­தது. 

ஈ.பி.­ஆர்­.எல்.எவ்., தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தேர்தல் சின்­ன­மா­கிய உத­ய­சூ­ரி­யனின் கீழ் தனக்கு இசை­வான அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது அமைப்­புக்­க­ளுடன் தமிழ்த் ­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் தேர்­தலில் குதித்­தி­ருந்­தது.

இது கால வரை­யிலும் உறு­தி­யான கொள்கைப் பிடிப்­போடு தேர்­தல்­க­ளின்­போது பல­மான சச்­தி­யாக வடக்கு, கிழக்கில் பெரு­ம­ளவில் ஒன்று திரண்­டி­ருந்த தமிழ் மக்­களும், தமிழ் அர­சியல் கட்­சி­களைப் போலவே, இந்தத் தேர்­தலில் பிள­வு­பட்ட நிலையில் தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­தி­ருந்­தனர்.தமிழ் அர­சியல் தலை­மை­களின் குறிப்­பாக தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­பி­னதும், அதன் தலை­மை­யி­னதும் ஆளுமை இல்­லாத அர­சியல் செயற்­பா­டு­களே இவ்­வாறு மக்கள் பிள­வு­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தன. 

யுத்­தத்தின் பின்னர், காணி உரி­மைகள், மீள்­கு­டி­யேற்றம், வாழ்க்கை மேம்­பாடு, அவர்­களின் மனித உரி­மைகள், அடிப்­படை அர­சியல் உரி­மைகள் நிலை­நி­றுத்­தப்­பட்டு. அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று மக்கள் எதிர்­பார்த்­தார்கள். ஆனால், இந்த எதிர்­பார்ப்பு அவர்கள் திருப்தி அடை­யத்­தக்க வகையில் நிறை­வே­ற­வில்லை. தமிழ் அர­சியல் தலை­மை­களின் செயற்­பாட்டின் மூலம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏமாற்­றமே மிஞ்­சி­யது. அது மட்­டு­மல்­லாமல் யுத்த காலத்து அடக்­கு­மு­றைகள் மென்­போக்கில் வேறு வேறு வடி­வங்­களில் தொடர்­வ­தனால் அவர்கள் மேலும் மேலும் இன்­னல்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றார்கள். 

இந்த நிலையில் தமது அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை வைப்­பதில் பய­னில்­லையோ என்று சிந்­திக்­கவும், அந்த வகையில் செயற்­ப­டவும் அவர்கள் அர­சியல் ரீதி­யாக நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளார்கள்.உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில் அது வெளிப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் தேசிய மட்­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்ற நிலையில் நடந்து முடி­வுகள் வெளி­யா­கிய பின்னர், தமிழ் அர­சியல் கட்­சிகள் உள்ளூராட்சி சபை­களின் தவி­சாளர் மற்றும் உப தவி­சாளர் பத­வி­க­ளுக்­காக மோதிக்­கொண்ட விதமும், அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக அர­சியல் கட்­சிகள் அணி­சேர்ந்த விதமும், அதனால் எழுந்­தி­ருந்த கருத்து மோதல்கள் குறிப்­பாக வவு­னியா நக­ர­சபை பத­விகள் தொடர்பில் எழுந்­தி­ருந்த வெளிப்­ப­டை­யான மோதல்­களும், தமிழ் மக்கள் தமது அர­சியல் தலை­மைகள் மீது மேலும் அதி­ருப்தி அடை­யவும், இந்தத் தலை­மை­களின் அடுத்­த­டுத்த நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமையும் என்று அர­சியல் ரீதி­யாக சஞ்­சலம் அடை­யவும் செய்­தி­ருக்­கின்­றன. 

தமிழ் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து தமது உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்து பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வழி வகை­களில் ஈடு­பட வேண்டும் என்ற தமிழ் மக்­களின் நீண்­ட­கால எதிர்­பார்ப்பு படிப்­ப­டி­யாகத் தேய்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லுடன் மோச­ம­டைந்­துள்­ள­தையே அவ­தா­னிக்க முடி­கின்­றது. தமிழர் தரப்பின் இந்த அர­சியல் தேய்­வா­னது தமது அர­சியல் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்­கு­வ­தற்கே வழி வகுக்கும் என்று எண்ணி கவலை அடையத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். 

ஆனால் மக்­களின் மன உணர்­வு­களைப் புரிந்து கொள்­ளா­த­வர்­க­ளாக கட்சி அர­சியல் நலன்­க­ளையும், சுய அர­சியல் நலன்­க­ளையும் முதன்­மைப்­ப­டுத்திச் செயற்­ப­டு­வ­தி­லேயே தமிழ் அர­சியல் தலை­மைகள் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­றன. 

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தைத் தொடர்ந்து பத­வியில் நிலைக்கச் செய்­வ­தற்­கான முழு­மை­யான ஆத­ரவை வழங்­கிய தமிழ் மக்­களின் முக்­கிய அர­சியல் சக்­தி­யா­கிய தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­து­ட­னான அந்த அர­சியல் நல்­லு­றவைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்கு நன்­மை­களைப் பெற்­றுக்­கொ­டுக்கத் தவ­றி­விட்­டது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில் ஆட்டம் கண்ட நல்­லாட்சி அர­சாங்கம், எஞ்­சி­யுள்ள தனது ஆட்­சிக்­கா­ல­மா­கிய சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கும் தாக்குப் பிடிக்­குமா என்­பது தெரி­ய­வில்லை. தள்­ளா­டு­கின்ற நிலையில் உள்ள நாட்டின் அர­சியல் நிலைமை ஸ்திர­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. மோச­ம­டைந்து செல்­கின்ற போக்­கையும், யுத்த மோதல்கள் இல்­லாத நிலை­யிலும் மீண்டும் ஓர் இருண்ட யுகத்­திற்குள் பிர­வே­சித்­து­வி­டுமோ என்ற பொது­வா­னதோர் அர­சியல் அச்­சத்­தை­யுமே உணர முடி­கின்­றது. 

இந்த நிலையில் கட்சி அர­சியல் நலன்­க­ளையும், சுய அர­சியல் நலன்­க­ளையும் முதன்­மைப்­ப­டுத்­திய தமிழ் அர­சியல் கட்­சி­களின் போக்கு எதிர்­பார்த்து அச்­ச­ம­டைந்­துள்ள அர­சியல் நிலை­மை­களில் இருந்து தமிழ் மக்­களை எவ்­வாறு காக்கப் போகின்­றன என்­பது தெரி­ய­வில்லை. 

அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, அதன் செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை நல்­கிய சூழ­லில்­கூட, தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­பி­னாலும், அதன் தலை­மை­யி­னாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­ய­வில்லை. அர­சாங்­கமே நிலை­கு­லைந்து நாடு மோச­மான அர­சியல் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் தமிழ் அர­சியல் தலை­மைகள் தங்­க­ளுக்குள் அணி திர­ளாமல் நவக்­கி­ர­கங்­களைப் போன்று ஆளுக்கொரு போக்கும், நேரத்­துக்­கொரு நிலைப்­பாடும் கொண்டு செயற்­ப­டு­வதன் மூலம், அர­சியல் ரீதி­யாகத் திசை­மா­றிய பய­ணத்­தையே கொண்­டி­ருப்­ப­தாக மக்கள் கரு­து­கின்­றார்கள். 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பா­னா­லும்­சரி, மாற்றுத் தலை­மையை நோக்­கிய பய­ணத்தில் அர­சியல் சார்ந்த உறு­தி­யற்ற நிலையில் உள்ள ஏனைய அர­சியல் கட்­சி­க­ளா­னா­லும் ­சரி, முதலில் ஒரு தீர்க்­க­மான அர­சியல் வேலைத்­திட்­டத்தின் கீழ் தங்­க­ளுக்குள் ஒன்­றி­ணைய வேண்டும். அதன் அடிப்­ப­டையில் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து, இரு தரப்­பி­னரும் வலு­வாக அணி திரள வேண்டும். இவை இரண்டும் அடிப்­படை உரிமை சார்ந்த அர­சி­யலைக் கொண்­டுள்ள தேசிய சிறு­பான்மை இன மக்­களின் இருப்­புக்கும், வள­மான எதிர்­கா­லத்தை நோக்­கிய அர­சியல் பய­ணத்­திற்கும் அவ­சியம். 

இவை இரண்­டுமே உள்ளூராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் அற்­றுப்­போ­னதோர் அரசியல் சூழலே காணப்படுகின்றது. தமிழ் அரசியலை எழுச்சி பெறச் செய்வதற்கு யுத்தத்தின் பின்னர் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் உறுதியாக அணி திரண்டிருந்தார்கள். அந்த அணி திரள்வின் சக்தி கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலிலும், தொடர்ந்து பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் அரசியல் வானில் பளிச்சிட்டிருந்தது. 

ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல.கட்சிகளும் பிளவுண்டு கிடக்கின்றன.மக்களும் பிளவுபட்டு காணப்படுகின்றார்கள்.அரசியல் தலைமைகளும், ஆளுமை குறைபாடுகளை வெளிப்படுத்துவனவாகவே காணப்படுகின்றன.இருக்கின்ற தலைமைகள் சீரடைந்தாலும்சரி, புதிய அரசியல் தலைமைகள் உருவாகினாலும் சரி, இரண்டு தளத்தில் அவைகள் கடுமையாக உழைக்க வேண்டிய கடினமான சூழல் இப்போது உருவாகியிருக்கின்றது.

இருக்கின்ற தலைமகள் தங்களுக்கிடையில் காணப்படுகின்ற அரசியல் கசப்புணர்வுகளை மறந்து பரம வைரிகளாகக் கருதுகின்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஓர் அணியில் இணைவார்கள் என்று எதிபார்ப்பதற்கில்லை. அந்த வகையிலேயே அவர்கள் கடும் அரசியல் போக்கில் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை, மக்களின் மனங்களை வென்றெடுக்கக் கூடிய புதிய தலைமைகள் உருவாகுவதற்குரிய சமிக்ஞைகளையோ அல்லது அரசியல் அறிகுறிகளையோ காண முடியவில்லை. எனவே, புதிய அரசியல் தலைமைகள் மக்களுடைய நம்பிக்கைக்குரியவையாக எவ்வாறு உருவாகும் என்பதும் தெரியவில்லை. 

இருக்கின்ற தலைமைகள் ஓரணியில் தற்செயலாக ஒன்றிணைந்துவிட்டாலும், அவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் வலுவானதோர் சக்தியாக அவர்களின் பின்னால் அணிதிரள்வார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. 

இத்தகைய அரசியல் நிலைமையிலேயே தமிழர் தரப்பு அரசியல் சரியான பாதையில் உறுதியான முறையில் பயணத்தைத் தொடராமல் திசைமாறி தடுமாறி நிற்பதைக் காண முடிகின்றது. 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.