Jump to content

மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா?


Recommended Posts

 
 

மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா?

‘‘ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது.

இவை­யெல்­லா­வற்­றை­யும் விட சமூக வலைத்­த­ளங்­க­ளில், ‘‘ இணங்­கிக் கொள்­ளப்­பட்ட விதத்­தில் ஐ. தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் மாற்­றம் செய்­யப்­ப­டாது விடின், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக ஐ. தே. கட்­சி­யா­லேயே நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­டத்­தக்க ஆபத்து நில­வு­கி­றது ’’ என்ற செய்தி பகி­ரப்­பட்டு வந்­த­தை­யும் அவ­தா­னிக்க முடிந்­தது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்பார்ப்பை
நிறைவேற்றியதா?

மேற்­கண்ட செய்தித் தலை­யங்­கங்­கள் சக­ல­வற்­றி­லி­ருந்­தும் எம்­மால் எத­னைக் கிர­கிக்க முடி­கி­றது? மகிந்­த­வின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, நாடா­ளு­மன்­றுக்­குள் பற்ற வைத்த ‘நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம்’ என்ற குண்­டால், அவர்­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட விளை­வு­களை ஏற்­ப­டுத்த முடிந்­ததா? அல்­லா­து வி­டில் அத­னால் எத்­த­கைய பலா­ப­லன் கிட்­டி­யது என்­ப­தையே அவை வௌிப்­ப­டுத்தி நிற்­கின்றன.

கடந்த பெப்­ர­வரி மாதம் 10ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில், தமது எதிர்த்­த­ரப்­பி­னரை மூக்­கின் மேல் விரல் வைத்து ஆச்­ச­ரி­யப்­ப­ட­வைத்து, மகிந்­த­வின் ‘ தாம­ரை­மொட்டு ’ பெரு வெற்­றியை ஈட்­டிக் கொண்­டது. தொகுதி ரீதி­யில் 70 வீதத்­துக்­கும் அதி­க­மான வெற்­றியை மகிந்த அலை­யின் எழுச்­சியை உறு­திப்­ப­டுத்தி தாமரை மொட்­டுத் தரப்பு கைப்­பற்­றிக் கொண்­டது.

அது அந்­தத் தரப்­பின் பரப்­பு­ரைக்­குக் கிடைத்த வெற்றி என்­ப­தை­விட, மகிந்த என்ற அர­சி­யல் பாத்­தி­ரத்தை சுற்­றிச் சூழ்ந்து கைகோர்த்­துச் செயற்­பட்ட பொது­மக்­கள் ஆத­ர­வின் பலா­ப­லன் எனக் கொள்­வதே பொருத்­தம்.

உண்­மை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் பெறு­பே­று­கள் வெளி­யான பின்­னர், ஐ. தே. கட்­சிக்கு இப்­போ­தைய தலை­வ­ருக்­குப் பதி­லாக வேறு தலை­வ­ரொ­ரு­வரே தேவைப்­பட்­டார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் தரப்­பி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளில் பலர் தாம் அர­சி­னின்­றும் வெளி­யே­றி­விட்­டால் தமது அர­சி­யல் எதிர்­கா­லம் நிச்­ச­ய­ மற்­ற­தாக ஆகி­வி­டு­மென்­பதை உணர்ந்து கொண்­ட­னர். மகிந்த தரப்­பின் 45 வீத வாக்­கு­க­ளை­யும், மைத்­திரி தரப்­பின் 13வீத வாக்­கு­க­ளை­யும் ஒன்று சேர்த்­தால் சிறு தேசி­யக் கட்­சி­க­ளது அழுத்­தங்­கள் எது­வு­மின்றி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற இய­லும் என்­பதை உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­போது சம்­பந்­தன் தரப்பு மட்­டு­மன்றி, ஹக்­கீம் மற்­றும் றிசாட் பதி­யு­தீன் தரப்­புக்­க­ளும் குழம்­பிப்­போ­யின.

உள்­ளூ­ராட்­சி முடிவுகளால் பெரும்பாலானோர் ஏமாற்றம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது கட்­சிக்கு பத்து வீதம் வரை­யான வாக்­கு­கள் கிட்­டு­மென்ற எதிர்­பார்ப்­பில் ‘கிரா­மப்­புற ஆத­ரவு ஜே. வி.பிக்கே’ எனக் கூறி­வந்த அனுர திஸ­நா­யக்க, வெறும் 6வீத வாக்­கு­களே கிட்­டி­யமை கண்டு அர­சி­யல் காற்று திசை­மாறி வீசி­யி­ருப்­பதை உணர்ந்து கொண்­டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் முன்­னைய தட­வை­க­ளை­விட இம்­முறை குறைந்த வீத வாக்­கு­களே கிட்­டி­யி­ருந்­தன.

மகிந்­த­வின் தரப்­புத் தவிர்ந்த ஏனைய அர­சி­யல் தரப்­புக்­க­ளுக்­கும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் பார­தூ­ர­மான காயங்­களோ, சிறு காயங்­களோ ஏற்­ப­டுத்­தின என்­பதே யதார்த்­தம்.

மத்­திய அர­சுக்கு எந்த விதத்­தி­ லும் அழுத்­தம் ஏற்­ப­டுத்த இய­லாத உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இத்­த­கைய பெரும் வெற்­றியை பதிவு செய்த மகிந்த, ஏனைய தரப்­புக்­க­ளது அத்­த­கைய பின்­ன­டைவை நாடா­ளு­மன்­றத்­துள் வெளிப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னார். அதன் பலா­ப­லனே தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை.

கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னைச் சேர்ந்த சிலர் மத்­தி­யில், ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெறுமா என்­பது தொடர்­பில் நம்­பிக்­கை­யி­ருக்­க­வில்லை. ரணில் தொடர்ந்­தும் முத­ல­மைச்­சர் பத­வி­யில் தொடர்­வது எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் தமக்கு இலா­ப­க­ர­மாக அமை­யும் என்­பது அந்­தக் குழு­வி­ன­ரது நம்­பிக்­கை­யா­கும்.

ரணிலை நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­னால், எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் ரணி­லைத் தோற்­க­டிப்­பது சிர­ம­மா­ன­தாக ஆகி­வி­டும் என்­பது அவர்களது நம்­பிக்­கை­யா­கும்.

ரணில் அவ­ரது தலைமை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டால், ஐ.தே. கட்­சிக்­கான மக்­கள் அனு­தா­பம் உயர்­வ­டை­யுமா? என்­ப­தற்கு இன்­றைய அர­சி­யல் போக்­குக் குறித்த தெளி­வான பார்­வை­யில்­லா­தவர்கள் ‘ஆம்’ என்றே பதில் அளிப்பர். ஆனால் உண்­மை­யில் ரணில் தமது பத­வியை இழக்க நேர்ந்­தால், ஐ. தே. கட்சி ஆபத்­தில் சிக்­கிக் கொள்­ளும். கட்­சி­யின் தலை­மைத்­து­வம் தொடர்­பான போட்டி உச்­ச­ம­டை­யும்.

ரவி­க­ருணா நாயக, சஜித் பிரே­ம­தாச, நவீன் திஸ­நா­யக ஆகி­யோர் ஐ.தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­துக்­காக வெவ்­வேறு தரப்­புக்­க­ளாகப் பிரிந்து தம்­மி­டையே மோதிக் கொள்­வர். இதில் எந்த வித சந்­தே­க­மும் கிடை­யாது. அத்­த­கைய உட்­கட்­சிப் பூச­லொன்றை உரு­வாக்­கவே மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டார்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தமது பக்­கம் இணைக்க முடிந்­தமை மகிந்­த­வின் வெற்­றியே

தற்­போது ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்டு சில நாள்­கள் கடந்து விட்­டுள்­ளன. 54 உறுப்­பி­னர்­கள் என்ற எண்­ணிக்­கை­யு­டன் இயங்கி வந்த கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பில் மேலும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16 பேரை இணைத்­துக்­கொள்ள முடிந்­தமை மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான தமது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் திட்­டத் தின் மூலம் ஈட்­டிக் கொண்ட முத­ லா­வது வெற்­றி­யா­கும்.

அது 16 பேரை உள்­ளீர்த்­துக் கொண்­ட­து­டன் முடி­வுக்கு வரப்­போ­கும் ஒன்­றல்ல. தற்­போது கூட்டு அர­சி­னின்­றும் சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­று­வது தொடர்­பான பேச்­சுக்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் முன்­னெ­டுக்­கப் பட்டு வரு­கின்­றன. அத்­து­டன் அமைச்­சர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிக்க ஆரம்­பித்து விட்­டுள்­ள­னர்.

ரணி­லுக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் கூட்டு அரசு குலை­யு­மா­னால், அது மகிந்த தரப்­புக்கு பெறு­ம­தி­யா­ன­தொரு வெற்­றி­யல்­லவா? அவ்­வி­தம் ஆகு­மா­னால், அதை­ய­டுத்து நிறு­வப்­ப­டும் ஐ. தே. கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இணைந்த அர­சில் 30க்கும் குறை­வான அமைச்­சர்­க­ளையே நிய­மிக்க இய­லும். அத்­த­கைய நிலை­யில் அமைச்­சுப் பத­வி­களை எதிர்­பார்த்­தி­ருந்து.

அவை கிட்­டா­த­தால் விரக்தி­யு­ றும் ஐ.தே. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு தரப்­பி­னர், அதி­ருப்தி நிலை அடை­யக் கூடும். அதே சம­யம், த. தே. கூட்­ட­மைப்பு கோரி­வ­ரும் உள்­ளக சுய­நிர்­ணய நிர்­வா­ கத்தை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்­புத் திருத்­தத்தை சமர்ப்­பித்து நிறை­வேற்ற ஐ.தே. கட்சி அர­சால் இய­லாது போய்­வி­டும்.

அதே­வேளை மேற்­கு­லக நாடு­கள் மற்­றும் இந்­தி­யா­வின் தூத­ரக வட்­டா­ரங்­கள் எவ்­வா­றா­யி­னும் தேசிய அர­சாங்­கத்­தைத் தொடர்ந் தும் செயற்­பட வைக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் அழுத்­தம் கொடுத்து வரு­ வது தத்­த­மது நாடு­க­ளது பூகோள அர­சி­யல் நலன் சார் தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­ளும் நோக்கிலேயே ஆகும்.

சுதந்­தி­ரக் கட்­சித் தரப்­பி­னர் பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன்
இணை­வ­தன் மூலம் நாடா­ளு­மன்­றில் எதிர்க்­கட்சி அந்­தஸ்­து­டன்
செயற்­பட முடி­யும்

சுதந்­தி­ரக் கட்சி, நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட வேண்­டு­மா­னால், அரச தலை­வர் அர­சில் தனித்­துப் போக நேர்ந்து விடும். ஆனால், அவர் அனா­த­­­ர­வா­ன­வ­ராக, தலைமை அமைச்­ச­ருக்கு அடங்கி நடக்­கும் அரச தலை­வர் பாத்­தி­ரத்­தைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­குப் பதி­லாக, தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் தாம் நடத்தி வரும் அர­சின் பனிப்­போ­ரைத் தீவி­ரப்­ப­டுத்­து­ வார் என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­ப­டு­வ­தென்­ப­தன் அர்த்­தம், அது மகிந்­த­வின் தலை­மை­யி­லான பொது மக்­கள் முன்­ன­ணி­யு­டன் அர­சி­யல் ரீதி­யில் இணைந்து கொள்­வ­தா­கும். அது உட­ன­டி­யாக இடம் பெறாது விட்­டா­லும், காலப் போக்­கில் அவ்­வி­தம் நடந்­தே­யா­கும்.

மைத்­தி­ரி­பால தரப்­பின் 13வீதம் மற்­றும் மகிந்த தரப்­பின் 45 வீதம் என்­ப­வற்றை ஒன்­றி­ணைப்­ப­தன் மூலம் சிறு இன­வா­தக் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டா­மல், புதிய அர­சொன்றை மேற்­கு­றித்த தரப்­பால் உரு­வாக்க வாய்ப்­ப­மை­யும்.

அதே சம­யம் மகிந்­த­வின் ‘தாமரை மொட்டு’ தரப்­பி­ன­ரில் ஒரு சிலர், இத்­த­கைய இணைவை விரும்­பு­வ­தா­கத்­தோன்­ற­வில்லை. சிறு இன­வாத அர­சி­யல் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு வளைந்து கொடுத்துச் செயற்படும் ஒரு அரச நிர்­வா­கமே அவர்­க­ளது எதிர்­பார்ப்­பா­கும். இலங்­கை­யின் அர­சி­யலை ஆட்­டம் காண­வைத்து, நலி­வு­ப­ட­வைக்க இலக்கு வைத்­துள்ள வெளி­நா­டு­க­ளது தூத­ரங்­க­ளது விருப்­ப­மும் அதுவே.

பெப்­ர­வரி 10ஆம் நாளின் மக்­கள் எழுச்­சி­யின் பலா­ப­ல­னாக தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரும் மகிந்த தரப்­பின் முடிவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதில் மகிந்த தோல்­வி­யுற்ற போதி­லும், அர­சி­யல் ரீதி­யில் அது அவ­ருக்கு வெற்­றியே. அந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கார­ண­மா­கவே சுதந்­தி­ரக்­கட்­சி­ யி­லி­ருந்து 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தமது தரப்­புக்கு மகிந்­த­வால் இழுத்­துக்­கொள்ள முடிந்­தது.

தற்­போது மகிந்­த­வின் இந்­தக் கூட்டு எதி­ரணி மேலும் ஒரு­படி முன்­னேறி சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் தமது தரப்­புக்கு இழுத்­துக் கொள்­ளும் முயற்­சி ­யில் தீவிர கவ­னம் செலுத்திச் செயற்­பட வேண்­டும். அதுவே இன்­றைய தமது முக்­கிய முயற்­சி­யா­கக் கொண்டு மகிந்த தரப்பு செயற்­பட வேண்­டும்.

http://newuthayan.com/story/86096.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.