Jump to content

ஆபாசமா - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

ஆபாசமென தமிழ்நாட்டு சஞ்சிகைகள் சில எனது “பாவைக் கூத்து” கவிதையை பிரசுரிக்க முடியாது என்றார்கள். தயவு செய்து இக்கவிதையை வாசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் பிரசுரிக்க விரும்பினால் பிரசுரியுங்கள்.

,
பாவைக் கூத்து
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
அம்ம வாழிய தோழி, 
யார் அவன் என்று வினாக்குறியானாய்
அறிந்திலையோடி?
*
வீட்டுக் காவல் மறந்து 
சந்து பொந்து மரங்களில் எல்லாம்
காலைத் தூக்கி நின்றாடி 
பெட்டை நாய்களுக்கு
மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே
அந்த சீமை நாயின் பேர் இல்லத்து
வம்பனடி அவன். 
போயும் போயும் அவனையா கேட்டாய்?
*
பொம்மலாட்டப் பாவையைபோல்
ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய
இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி.
உன் மழலை அவனை ஆட்டும் நாள் வரை
இனி அவனே உந்தன் பாவைக் கூத்தன்.
*
காலை தோறும் எண்திசை வானிலும்
ஒன்றே போன்ற சிறு வெண் கொக்குகள் 
ஆயிரம் ஆயிரம் பறக்க விடுகிற
கழிக் கரையோர புன்னை மரமினி 
என் துணை ஆகுக.
*
அறம் இல்லாது
ஒரே காதல் சேதியின் ஆயிரம் பிரதி
பலருக்கு அனுப்பும் கைபேசிக் கிளியே
அவனே உனக்குச் சாலவும் பொருத்தம் 
அப்பாலே போ.

2016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆபாசம் இருக்கின்றது??

பிரசுரிக்காமல் விட்டதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு ....
ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டு 
எமக்கு புரியாமல் ஏதும் புதைந்து கிடக்குமுமோ தெரியல்லையே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.