Jump to content

கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?


Recommended Posts

கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா?
 
 

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.   

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டே, அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.  

image_b8ecdaa009.jpg

இரண்டு வார‍ங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறியிருந்தாலும், அதைப் பலரும் நம்பத் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.  

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பை எதிர்த்து, புதியதொரு கட்சியை அல்லது கூட்டணியை ஆரம்பித்துப் போட்டியிடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதியை, ஆசியைப் பெற்றுக் கொள்வதற்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்றிருக்கிறார் என்பது பலரின் சந்தேகம்.  

அந்தச் சந்தேகங்களில் உள்ள நியாயத்தன்மையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.  
கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஜெனீவாவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கிளிநொச்சியில் ஒரு நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், ஊடகவியலாளர் ஒருவர், “ஜெனீவாவுக்கு ஏன் செல்லவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார்.  

அதற்கு முதலமைச்சர், தனக்கு இங்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் தமது சார்பில், அங்கு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்கு, மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்.  

2013ஆம் ஆண்டு விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அமர்வுகள் ஜெனீவாவில் நடந்திருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அவர் ஜெனீவா சென்றதுமில்லை; செல்வதற்கு முயன்றதுமில்லை.  

வேலைப்பளுவை அவர் காரணம் காட்டியிருந்தார். அப்படியானால், ஜெனீவாவுக்குச் செல்பவர்கள் எல்லாம், வேலையில்லாமல் இருப்பவர்களா?   

தமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தான், பலரும் அங்கு சென்று நியாயம் கேட்க முனைகிறார்கள்.  
முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன், கனடாவுக்கும் இலண்டனுக்கும் சென்று வந்திருந்தார். முன்னர் ஓரிரண்டு தடவைகளும், இப்போதும் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கிறார்.   

இதன்போதெல்லாம் அவருக்கு வேலைப்பளு இல்லையா? இம்முறை அவர் இரண்டு வாரங்கள் இந்தியா சென்றிருக்கிறார். ஓய்வெடுப்பதும், விடுமுறையில் வெளிநாடு செல்வதும் தவறு அல்ல; தொடர் பணி, சோர்வைத் தரும். அவர் நிம்மதியைத் தேடி, ஆன்மீகப் பயணம் செல்வது ஒன்றும் தவறு இல்லை.  

ஆனால், ஜெனீவாவுக்கான பயணத்துக்கு அவர் கூறிய காரணம் சரியானது அல்ல; நியாயப்படுத்த முடியாதது. முல்லைத்தீவின் தென்பகுதியில், தமிழர்களின் பூர்வீக நிலங்கள், சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.   

இதையடுத்து, கடந்த 10ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்ற பகுதிகளைப் பார்வையிட்டு, அதற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்துவதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.  

அதற்கமைய, கடந்த 10ஆம் திகதி, அனைத்து உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்குச் சென்றனர். ஆனால், முதலமைச்சர் மட்டும் அங்கு செல்லவில்லை. அவர் அடுத்தநாள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக கொழும்புக்குச் சென்றிருந்தார். வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போது, முதலமைச்சர் அவையில் இருந்தார். அவருக்கு இந்தப் போராட்டம் பற்றியும் தெரிந்திருந்தது. ஆனால், அதை விட்டுவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.  

முல்லைத்தீவு போராட்டத்துக்குச் செல்லாமல், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு சித்திரை விழா, நினைத்த காரியம் நடந்தேற உதவும் திருத்தலங்களில், வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர் புதுடெல்லிக்குச் செல்லக்கூடும் என்றும், அல்லது புதுடெல்லிக்கு நெருக்கமான கொள்கை வகுப்பாளர்களுடன் பேசக் கூடும் என்றும் பரவலான பேச்சுகள் உள்ளன. 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பு அல்லாத ஓர் அணியில் களமிறங்கும் தமது முடிவை, சூசகமாக வெளிப்படுத்தி விட்டு வந்துள்ள அவரை, புதுடெல்லி எவ்வாறு கையாளப் போகிறது என்று பலரும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனை, இந்தியா பெரியளவில் அரவணைத்து வைத்திருந்தது என்று கூற முடியாது. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதி, பல ஆண்டுகளாகி விட்ட போதிலும், புதுடெல்லியில் இருந்து அவருக்கு இன்னமும் அதற்கான அழைப்பு வரவில்லை.  

ஆனாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஒருமுறை அவரைச் சந்தித்திருந்தார். இரண்டாவது முறை கொழும்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தும் அவரைச் சந்தித்திருந்தார். ஆனாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில், அவரைப் புதுடெல்லிக்கு அழைத்துப் பேச, இன்னமும் ‘சவுத் புளொக்’ கொள்கை வகுப்பாளர்கள் தயாராகவில்லை.  

image_f14036434d.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை, புதுடெல்லி தனது தேவைக்கு ஏற்ப கையாளுவதாகப் பரவலாக ஒரு கருத்து உள்ளது. அது எந்தளவு உண்மை என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, புதுடெல்லியின் செல்வாக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்படும் ஒரு தலைமையை, தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கு, இந்தியா துணை போகுமா என்ற கேள்வி இருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு, சரியத் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது சரியா என்று இந்தியா சிந்திக்காமல் இருக்காது.  

ஒருவேளை, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தால், விக்னேஸ்வரன் அமைக்கும் கூட்டணி வெற்றியைப் பெற்றால், அந்தக் கட்டத்தில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து போய் விடுமோ என்றும் புதுடெல்லி கணக்குப் போடும் வாய்ப்புகள் உள்ளன.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரில்லை. எனவே, இந்தியா அவரை ஆதரிக்காமல் தவிர்ப்பதற்கு காரணங்களும் குறைவு தான்.   

ஆனால், அவரைச் சுற்றியுள்ள தரப்பினர் சிலர், இந்தியாவைப் பிடிக்காதவர்கள் என்பது புதுடெல்லிக்குத் தெரியும்.  

இப்படியான நிலையில், இந்தியாவை வெறுக்கும் தரப்பினருடன் அமைத்துக் கொள்ளும் கூட்டணியின் மூலம், விக்னேஸ்வரன் பலம் பெற்றால், அவரைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதில், சிரமங்கள் ஏற்படும் என்றும் கூட, புதுடெல்லி கருதுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விக்னேஸ்வரன் அமைக்கப் போகும் கூட்டணியையும் இந்தியா சமநோக்கில் வைத்திருக்க முயலலாம்.  

இலங்கையில் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் இந்தியா தனியாதிக்கம் செலுத்த விரும்புகிறது. எனவே, தனக்கு நெருங்கிய ஒருவரே அங்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்பும்.  கூட்டமைப்பு செல்வாக்கை இழக்கும் சூழல் ஒன்றை இந்தியா அவதானித்தால், விக்னேஸ்வரனின் பக்கம் அதன் பார்வை திரும்பும். அதேவேளை, விக்னேஸ்வரனுக்கும் கூட இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ஓர் அரசியலை ஆரம்பிக்கும் துணிச்சல் இல்லை. தான் விரும்பாத ஒன்று முன்னெடுக்கப்படுவதை இந்தியா ஒரு போதும் அனுமதியாது என்பது அவருக்குத் தெரியும்.  

எனவே, எப்படியாவது இந்தியாவின் அனுமதியுடன் தான், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தனியானதோர் அணியை ஆரம்பிக்க அவர் முயல்வார்.  

அவ்வாறு ஒரு தனியான அணியை ஆரம்பிக்க முனையும் போது, இந்தியா அவருக்குச் சில நிபந்தனைகளை விதிக்க முற்படலாம். அதாவது, தீவிர கருத்துடையவர்களை அடக்கி வைப்பது, இந்தியச் சார்பு நிலைப்பாட்டை உறுதி செய்வது, இந்தியச் சார்பு நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துடையவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் விடுவது போன்றவற்றில் கவனம் செலுத்த வாய்ப்புகள் உள்ளன.  

அதேவேளை, பூகோள அரசியல் நகர்வுகளுக்கு அமைய, இந்தியாவுக்கு மாற்றான சக்திகளுடனும் தொடர்புகளை வைத்துக் கொள்வது, மாற்றுத் தலைமையை கட்டியெழுப்புவது போன்ற கருத்துகள் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.  

அதில் சீன சார்ப்பு நிலையை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் கூட சிலரால் கூறப்பட்டன. ஆனால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு நிலை கேள்விக்குறி தான்.   

கூட்டமைப்புக்கு மாற்றான ஓர் அரசியல் அணி உருவானாலும், இந்தியச் சார்பு நிலைக்கு வெளியே, மாற்று அரசியல் அணி ஒன்று உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்புக்கு-மாற்றாக-ஓர்-அணியை-இந்தியா-அனுமதிக்குமா/91-214611

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.