Jump to content

பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார்


Recommended Posts

பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார்

queen.jpg?resize=800%2C563

பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுநலவாய கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய 91 வயதான எலிசபெத் மகாராணி பொதுநலவாய கூட்டமைக்கு தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் தலைமை தாங்குவார் எனவும் அவரது தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உறுப்பு நாடுகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே தலைமை பொறுப்புக்கு சார்ள்ஸ் வரமுடியும் என்பதனால் அதற்கான பணிகள் நாளை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

qu.jpg?resize=297%2C170

queen2.jpg?resize=696%2C392queen4.jpg?resize=800%2C357

http://globaltamilnews.net/2018/75695/

Link to comment
Share on other sites

காமன்வெல்த் உச்சிமாநாடு: தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸை நியமிக்க ராணி கோரிக்கை

தனக்கு பிறகு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக தனது மகனான இளவரசர் சார்லஸை நியமிக்க வேண்டுமென காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களை இங்கிலாந்து ராணி கேட்டுக்கொண்டார்.

தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸை நியமிக்க ராணி கோரிக்கைபடத்தின் காப்புரிமைPA

லண்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் நாடுகளின் அரசுத்தலைமை கூட்டத்தை (CHOGM) தொடக்கிவைத்த ராணி, எதிர்காலத்தில் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸ் அமர்வது தனது உண்மையான விருப்பம் என்று கூறினார்.

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவி பாரம்பரியம் சார்ந்தது இல்லையென்பதால், ராணியின் மரணத்துக்கு பிறகு இயல்பாக வேல்ஸ் இளவரசருக்கு இந்த பதவி கிடைக்காது

பக்கிங்ஹம் அரண்மனையில் குழுமியுள்ள 53 நாடுகளின் தலைவர்களும் தாங்கள் வெள்ளிக்கிழமையன்று சந்திக்கும்போது இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இந்த அமைப்பின் தலைவர் சுழற்சி முறையில் தரப்பட வேண்டும் என சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக பிபிசியின் ஜேம்ஸ் லேண்டேல் தெரிவிக்கிறார்.

தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸை நியமிக்க ராணி கோரிக்கைபடத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTREUTERS

முக்கிய பிரமுகர்கள், ராஜ குடும்பத்தினர் மற்றும் பிரதமர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய ராணி, ''எனது இல்லத்துக்கு இந்த கூட்டத்துக்காக வருகை புரிந்துள்ள அனைவரையும் நான் வரவேற்கிறேன்'' என்று வரவேற்றார்.

''உங்களுக்காக பணியாற்றுவது மற்றும் சேவைபுரிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் கெளரவம்'' என்று அவர் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ''எதிர்காலத்திலும் காமன்வெல்த் அமைப்பு ஸ்திரதன்மையோடு செயல்படவேண்டும் என்பதும், தொடர்ந்து இந்த அமைப்பு சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்ற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்'' என்று குறிப்பிட்டார்.

''காமன்வெல்த் அமைப்பு தொடர்பாக எனது தந்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கிவைத்த முக்கிய பணியை வேல்ஸ் இளவரசர் தொடர வேண்டும் என்பதை எதிர்க்களத்தில் முடிவுசெய்யவேண்டும்'' என்று இஞ்சில்நாடு ராணி மேலும் குறிப்பிட்டார்.

காமன்வெல்த்ட நாடுகள் இடையே கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த இரண்டுநாள் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/43833542

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.