Jump to content

நாளிதழ்களில் இன்று: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை நாங்கள் பயன்படுத்தவில்லை - காங்கிரஸ்


Recommended Posts

நாளிதழ்களில் இன்று: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை நாங்கள் பயன்படுத்தவில்லை - காங்கிரஸ்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தவில்லை - காங்கிரஸ்

ஃபேஸ்புக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ள காங்கிரஸ், இது தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுப்பிரிவுத் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி என்பதால் இது போன்ற பல நிறுவனங்கள் கட்சியை அணுகுவது வழக்கமானதுதான் என்றார். காங்கிரஸ் கட்சியிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் எந்த சேவையையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

"அப்போலோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக நான் கூறவில்லை"

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக விசாரணை ஆணையத்தில் நான் கூறவில்லை என்று முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பல்லோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக நான் கூறவில்லைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புதன்கிழமை காலை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் சிலர் பார்த்தனர் என்று தான் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளிவந்ததாக குறிப்பிடும் அவர், எந்த அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று தனக்கு எதுவும் தெரியாது என்றார்.. எந்த அமைச்சரும் ஜெயலலிதாவை பார்த்ததாக தெரியவில்லை என்றுதான் சாட்சியத்தில் கூறி உள்ளதாக ராமமோகனராவ் தெரிவித்தார் என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

Presentational grey line

தி இந்து தமிழ் வெளியிட்டுள்ள கார்டூன்

தி இந்து தமிழ்படத்தின் காப்புரிமைதி இந்து தமிழ் Presentational grey line

ஒரே நாளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நகை விற்பனை

அக்‌ஷய திருதியைக்கு பலரும் தங்கம் வாங்கியதால், தமிழக நகை கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகி உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு அக்‌ஷய திருதியை தினத்தில் தமிழகத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு அக்‌ஷய தினத்தில் ஒரு சவரன் 22 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் தற்போது 23 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி கூறுகிறது.

https://www.bbc.com/tamil/india-43819602

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.