Jump to content

வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!


Recommended Posts

  • வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!
 
 

வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!!

வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GIFT & CRAFT ) சில பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

28870402_190603135048629_65852108476805028870366_190603031715306_48220624286325928870207_190603005048642_31425843662539228795680_190603041715305_81227904665640428795175_190602988381977_41480660424534528685485_190603045048638_18802787795328128685443_190603311715278_81529816366089528661297_190603225048620_69450888593898128660420_190603148381961_60278240734129128576549_190603121715297_82499269140583928870811_190603218381954_781851751155139

http://newuthayan.com/story/85323.html

Link to comment
Share on other sites

வணக்கம் தாய்நாடு...

IBC தமிழ் நிறுவனத்தின் நலிந்தோரை ஊக்குவிக்கும் கைத்தொழில் பேட்டை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன!

எனக்குள்ள கவலையெல்லாம்....வனைந்தவர்களுக்கு வருமானத்தின் பெரும்பகுதி போய்ச் சேர வேண்டும்..என்பதே!

ஊமல் கொட்டைக்குள்ளையும்....எவ்வளவு அழகு புதைந்து போய்க் கிடக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

வேற்று இனத்தவர்களுக்கு அழகியல் பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கும்போது பெரு விருப்போடு வாங்கிக் கொள்வார்கள் தாத்தா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

வேற்று இனத்தவர்களுக்கு அழகியல் பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கும்போது பெரு விருப்போடு வாங்கிக் கொள்வார்கள் தாத்தா..

வடிவு பாக்க  சோக்கேசுக்கை வைக்கிற மாதிரி  இல்லாமல் டெய்லி பாவிக்கக்கூடியமாதிரி  பொருட்களை வாங்கி குடுங்கோ......இனிவரும் சமுதாயத்துக்கு எங்கடை முன்னோர் பாவித்த உமல்,பன்பை....பனையோலையிலை இழைச்ச கடகம் பெட்டி பாய்கள் தான் அவசியம் தேவைப்படும். 
இப்ப இஞ்சை ஒரு சில கடையள்ளை பிளாஸ்டிக் எண்ட கதைக்கே இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

28685485_190603045048638_188027877953281

கனடாக்காரர் உதுலை என்னத்தை ஊத்தி குடிக்கினமாம்? tw_blush:

கனடாக்காரருக்கு மட்டுமல்ல... இயற்கை மீள் சுழற்சிக்கு உட்படக் கூடிய இந்த இயற்கை தாவரங்களின் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் இந்த உற்பத்திகள்.. உலக சந்தைகளை உருப்படியாக எட்டின்.. இவற்றின் வருவாய் என்பது எமது தேசத்தின் பொருண்மிய மீட்சியில் பெரும் பங்களிப்புச் செய்யும்.

இந்த உற்பத்திப் பொருட்கள் பனை.. தென்னை கழிவுகளில் இருந்து உற்பத்தியாவதால்.. அத்தாவர வளங்கள் அழிக்கப்பாடமல்... பெருக்கப்பட வாய்ப்பும் உருவாக்கப்படும். 

இன்று உலகம்.. பிளாஸ்ரிக்கில் இருந்து மீள்வது பற்றிச் சிந்திக்கும் இந்த நிலையில்... இந்த பொருட்களின் சர்வதேச நுழைவு என்பது எமது பொருண்மியத்துக்கு பலம் சேர்க்கும். அதனால்.. நலிவுற்றிருக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்யலாம். ஆனால்.. இதய சுத்தி வேண்டும். ஈட்டப்படும் பொருண்மியம் அந்த மக்களைச் சரியாகச் சென்றடைய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகள் முழுதும் இயற்கையை விரும்புதுகள் நம்ம சனம் மட்டும் பிளாஸ்டிக்கில நின்று மல்லுக்கட்டுதுகள் எவராச்சும் ஒரு துணிப்பையை வைத்து பயன்படுத்துகிறார்களா

ஒருவன் சாமிகிட்ட வரம் கேட்டானாம் அதுவும் சாகாவரம் சாமியும் பொலித்தீனாக மாறு என்று சொன்ன கதயாக்க்கிடக்கு :11_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.