Jump to content

சிந்தனை கவிதைகள்


Recommended Posts

கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
 
கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!
 
காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!
 
சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழ கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
 
Link to comment
Share on other sites

கோயிலில் பாலபிஷேகம்.....
ஓட்டை சட்டையுடனும்.....
ஓட்டை சட்டியுடனும்.....
வரிசையில் ஆயிரகணக்கில்.....
குழந்தைகள்.....!

கோயிலின் வாசலில்......
வரிசையாக முதியவர்கள்.....
கைநீட்டியதையும் ......
காணாமல் பட்டுவேட்டியுடன்......
கோவில்தரிசனம்......!

கோயிலை 
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?

^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலை 
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?

 

ஆண்டவன்தான், வேறுயாருளரோ....!

கவிதையில் கருத்துக்கள் சொல்லும் கருத்தான கவிதை முன்னே நிற்பது......! tw_blush:

Link to comment
Share on other sites

On 4/17/2018 at 3:11 PM, suvy said:

கோயிலை 
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?

 

ஆண்டவன்தான், வேறுயாருளரோ....!

கவிதையில் கருத்துக்கள் சொல்லும் கருத்தான கவிதை முன்னே நிற்பது......! tw_blush:

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மனிதனும்.....
ஒவ்வொரு நூலகம்......
ஒவ்வொரு அனுபவமும்....
ஒவ்வொரு நூல்கள்.......
ஒவ்வொரு நிகழ்வும்.....
ஒவ்வொரு அறிவு....
பெருக்கிக்கொண்டவன்...
அறிஞனாகிறான்....!

ஒவ்வொரு மனிதனும்....
அறிவுடனேயே பிறக்கிறான்......
அதை கண்டுகொள்ளும்.....
அறிவுத்திறன் அனுபவத்தால்.....
உதிர்க்கிறது........
கண்டுபிடிக்க முடியாத.....
அறிவுகள் உதிர்ந்து விடும்......!

^^^^^
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உள்ளத்தில் பூவை.....
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை 
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!

@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.