Jump to content

மஹிந்தானந்த எம்.பி கைது


Recommended Posts

மஹிந்தானந்த எம்.பி கைது
 
 

image_5e7803e8df.jpgநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கெரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39  மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ  கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தானந்த-எம்-பி-கைது/175-214320

Link to comment
Share on other sites

மஹிந்­தா­னந்­தவை பிணையில் விடு­வித்­தது கோட்டை நீதி­மன்றம் : டிலான், தயா­சிறி, சந்­திம, அனு­ராத ஆத­ரவு தெரி­வித்து நீதி­மன்றில்

04-3f00241d03860e38a589d4fca4d16cee2e6a3e71.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிணை நிபந்­த­னை­களில் ஒன்­றினை பூர்த்தி செய்­யா­ததால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கேயின், கடவுச்சீட்டு தொடர்­பி­லான ஆவ­ணங்கள் நேற்று நீதி­மன்­றுக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை பிணையில் செல்ல கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன நேற்று அனு­ம­தித்தார். 

முன்னாள் விளை­யாட்டுத் துறை அமைச்­சரும் தற்­போ­தைய கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே நேற்று முன் தினம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாத­ம­ளவில் சதொச ஊடாக 28000 கரம், தாம் பல­கைகள் கொள்­வ­னவு செய்­யப்­படும் போது 39 மில்­லியன் ரூபா அரச பணம் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்­பி­லேயே நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்­தது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவர் நேற்று முன் தினம் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர்ச் செய்­யப்­பட்ட போது, அவரை 35 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல நீதிவான் அனு­ம­தித்தார். அத்­துடன் அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணத்தை தடைச் செய்து அவ­ரது கடவுச் சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

எனினும் நேற்று முன் தினம் மாலை நீதி­மன்ற நட­வ­டிக்கைள் நிறை­வு­று­வ­தற்குள், பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்ய சந்­தேக நப­ரான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தவ­றி­யதால் அவர் வெலிக்­கடை - மெகஸின் விளக்­க­ம­றியல் சிறைக்கு சிறைக்­கா­வ­லர்­களின் பாது­காப்பில் அழைத்துச் செல்­லப்­பட்டார்.

குறிப்­பாக அவ­ரது கடவுச் சீட்டு மேல் நீதி­மன்றில் பிரி­தொரு வழக்கு நட­வ­டிக்கை தொடர்பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிணை வழங்­கிய போது நீதி­மன்­றுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்பில் கோட்டை நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக மேல் நீதி­மன்றை தொடர்­பு­கொண்ட போதும் உட­ன­டி­யாக அதனை உறு­திப்­ப­டுத்த முடி­யாமல் போகவே இவ்­வாறு மஹிந்­தாந்த அளுத்­க­மகே எம்.பி. பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­யா­த­வ­ராக கருதி நீதி­வானின் உத்­தர்­வுக்கு அமைய விளக்­க­ம­றி­ய­லுக்கு அழைத்து செல்­லப்­பட்டார்.

 எவ்­வா­றா­யினும் நேற்று முற்­பகல் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது மஹிந்­தா­னந்த அலுத்­க­ம­கேவின் சட்­டத்­த­ர­ணிகள் கொழும்பு மேல் நீதி­மன்றில் 95/17 எனும் இலக்க வழக்கு தொடர்பில் மஹிந்­தா­னந்­தவின் கடவுச் சீட்டு மேல் நீதி­மன்றில் இருப்­பதை உறுதி செய்து அது குறித்த ஆவ­ணங்­களை நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­தனர். இந்­நி­லை­யி­லேயே நேற்று முன் தினம் விதித்த அதே பிணை நிபந்­த­னை­களின் கீழ் பிணையில் செல்ல மஹிந்­தா­னந்­த­வுக்கு நீதிவான் அனு­மதி வழங்­கினார்.

இத­னி­டையே நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்ட போது, அங்கு கடந்­த­வாரம் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நால்வர் அவ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்கும் முக­மாக நீதி­மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டிலான் பெரேரா, தயா­சிரி ஜய­சே­கர, சந்­திம வீரக்­கொடி மற்றும் அனு­ராத ஜய­ரத்ன ஆகி­யோரே இவ்­வாறு நீதி­மன்­றுக்கு சென்று மஹிந்­தா­னந்­த­வுக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்­தனர். இதன்­போது இவ்­வா­றான வழக்­குகள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மையப்­ப­டுத்­திய வழக்­குகள் எனவும், நீதி­மன்றின் நியா­ய­மான தீர்ப்­புக்கு தலை வணங்­கு­வ­தா­கவும் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2015.01.25 அன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு அமைவாக மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 11 ஆம் திகதி மீள இடம்பெறவுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.