Jump to content

12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம்


Recommended Posts

  • 12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம்
 
 

12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம்

மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சிறு­வன் கடந்த சில நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று சேர்ப்­பித்­துள்­ளார்.

அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை சேர்க்­கப்­பட்­டான் – என்று குறிப்­பிட்­ட­னர்.

சிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.  சிறு­வ­னின் தந்தை தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­னர்.

http://newuthayan.com/story/84873.html

Link to comment
Share on other sites

பெற்றோர்களும் குறித்த உறவினர்களும் பொறுப்புடன் நடந்திருந்தால் இதுபோன்ற ஒழுக்கமற்ற சிறுவர்கள் ஒரு கட்டுக்குள் இருந்திருப்பர்!

இதுபோன்ற கடும் தண்டனைகள் பெற்றோர்களின் கையாலாகாத தனம் என்று சமூகம் முடிவுசெய்ய முடியாத அளவிற்கு பெற்றோர்களுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளமை தாயகத்தின் யதார்த்தம்.  

Link to comment
Share on other sites

41 minutes ago, போல் said:

பெற்றோர்களும் குறித்த உறவினர்களும் பொறுப்புடன் நடந்திருந்தால் இதுபோன்ற ஒழுக்கமற்ற சிறுவர்கள் ஒரு கட்டுக்குள் இருந்திருப்பர்!

இதுபோன்ற கடும் தண்டனைகள் பெற்றோர்களின் கையாலாகாத தனம் என்று சமூகம் முடிவுசெய்ய முடியாத அளவிற்கு பெற்றோர்களுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளமை தாயகத்தின் யதார்த்தம்.  

ஒழுக்கமற்ற சிறுவன் என்று செய்தியில் சொல்லப்படவில்லை. சிறுவன் வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் சில் நாட்கள் இருந்தமைக்கும் பின்னர் வீட்டிற்குத் திரும்பியமைக்கும் காரணம் இருக்கலாம். சிறுவனின் தங்கை ஏற்கனவே தகப்பனால் தாக்கப்பட்டுச் சிறையில் இருந்துள்ளார். எந்த ஒரு காரணமும் தனது பிள்ளைகளைத் தாக்கியதை நியாயப்படுத்த முடியாது.

எந்த ஒரு நாட்டிலும் சமூகச் சீரழிவிற்கும் குடும்பப் பிரச்சனைகளுக்கும் பொருளாதார நெருக்கடியே பெரும்பாலும் காரணியாக உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் சமூக ஒழுங்கை ஏற்படுத்துவது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

பெற்றோர்களும் குறித்த உறவினர்களும் பொறுப்புடன் நடந்திருந்தால் இதுபோன்ற ஒழுக்கமற்ற சிறுவர்கள் ஒரு கட்டுக்குள் இருந்திருப்பர்!

இதுபோன்ற கடும் தண்டனைகள் பெற்றோர்களின் கையாலாகாத தனம் என்று சமூகம் முடிவுசெய்ய முடியாத அளவிற்கு பெற்றோர்களுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளமை தாயகத்தின் யதார்த்தம்.  

பிள்ளைஉறவினர் வீட்டில் தங்கியது தவறாக இருக்கலாம்; பிள்ளைக்கு ஏற்கனவே ஏதோவொரு வகையில் வீட்டில் தொந்தரவு இருந்திருப்பதால் தானே தவறிளைக்க நேர்ந்திருக்கிறது..தந்தையார் ஏற்கனவே பெண்பிள்ளையை அடித்த குற்றத்திற்காக சிறைக்கு போய் இருக்கிறார்...அதை வாசிக்க வில்லையா..பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு பிள்ளைகளை போட்டு அடிக்க இயலுமா..என்ன பெரிய பொருளாதார சிக்கல். எங்களை நம்பி இரண்டு முன்று உயிர் இருக்கிறதென்றால் எப்பாடு பட்டாவது காப்பாற்றியே ஆகனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

எந்த ஒரு நாட்டிலும் சமூகச் சீரழிவிற்கும் குடும்பப் பிரச்சனைகளுக்கும் பொருளாதார நெருக்கடியே பெரும்பாலும் காரணியாக உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் சமூக ஒழுங்கை ஏற்படுத்துவது கடினம்.

பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடுகளிலும் பிள்ளைகளை பயங்கரமாக தாக்கிய தாக்கும் சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. இப்படியான சம்பவங்கள்  எம்மவர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில் நடந்தால் சிறுவர்நலகாப்பகங்கள் பிள்ளைகளை சுவீகரித்துக்கொள்ளும். பெற்றோருக்கும் தகுந்த தண்டனைகளும் நன்னடத்தை அறிவுகளும் போதிக்கப்படும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.