Jump to content

வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?


Recommended Posts

  • வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?
 
 

வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நில­வு­கின்­றது. இரண்டு கட்­சி­க­ளும் ஏனைய கட்­சி­களை வளைத்­துப்­போட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ர­மாக உள்­ளன.

தொங்கு நிலை­க­ளில் உள்ள சபை­க­ளின் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் இடம்­பெற்று வரு­கின்­றது.

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று காலை 10 மணிக்கு வவு­னியா நகர சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 8 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி 4 ஆச­னங்­க­ளை­யும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈ.பி.டி.பி., சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன தலா ஒவ்­வொரு ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஈ.பி.டி.பி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வைத் திரட்­டி­யுள்­ளன. கூட்­ட­மைப்­பி­டம் 8 ஆச­னங்­கள் மாத்­தி­ரமே உள்­ளன. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ர­வ­ளித்­தா­லும் ஒன்­பது ஆச­னங்­களை மாத்­தி­ரமே கூட்­ட­மைப்­பால் பெற்­றுக் கொள்ள முடி­யும்.

இந்த நிலை­யில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், வவு­னியா மாவட்ட தமிழ் அர­சுக் கட்சி தலை­மை­யால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் சார்­பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பி­னரே வவு­னி­யா­வில் வெற்றி பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளது ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

வவு­னியா நகர சபை­யில் உப­த­வி­சா­ளர் பதவி, வவு­னியா தெற்­கில் தவி­சா­ளர் பதவி தமது கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால், கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­க­லாம் என்று இந்­தப் பேச்­சுக்­க­ளில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­கள், வவு­னியா மாவட்­டத்­தின் தமிழ் அரசு தலை­மை­யி­டம் எடுத்­து­ரைத்­த­னர். இதற்கு மாவட்ட தமிழ் அர­சு­வின் தலை­மை­யும் இணங்­கிய நிலை­யில், நேற்­றைய தினம் திடீ­ரென கூட்­ட­ணி­யி­னர் அதி­லி­ருந்து பின்­வாங்­கி­யுள்­ள­னர்.

தாம் நடு­நி­லமை வகிக்­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். இருப்­பி­னும் உறுப்­பி­னர்­களை அலை­பே­சி­க­ளு­டன் இருக்­கு­மா­றும் முடி­வில் மாற்­றம் என்­றால் அறி­விப்­போம் என்­றும் கூட்­ட­ணி­யின் நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நில­மையை உணர்ந்து தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கா­விட்­டால் வவு­னியா நகர சபை பெரும்­பான்­மைக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­டம் தாரை வார்க்­கப்­பட்டு விடும் என்று வவு­னியா பொது அமைப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­வேளை, வவு­னியா வெண்கலச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் அமர்வு இன்று மாலை 2.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யி­லும், தமிழ்க் கட்­சி­கள் ஓர­ணி­யில் திர­ளா­விட்­டால், சபை பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளி­டம் செல்­லும் நில­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்­தச் சபை­யில், கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 4 ஆச­னங்­க­ளை­யும், கூட்­ட­ணி­யி­னர் 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன தலா ஓர் ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/84851.html

Link to comment
Share on other sites

  • தமிழர் விடுதலைக்கூட்டணி, சு.க. இணைந்து வவுனியா நகரசபையை ஆட்சி!!
 
 

தமிழர் விடுதலைக்கூட்டணி, சு.க. இணைந்து வவுனியா நகரசபையை ஆட்சி!!

வவு­னியா நகர சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ராசலிங்கம் கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு
ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.

அதேவேளை உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி  11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

unnamed-1-2-300x225.jpg

http://newuthayan.com/story/84893.html

Link to comment
Share on other sites

வவுனியா நகரசபையில் ஆட்சியைப் பிடித்தது ஈபிஆர்எல்எவ் – ஏமாந்தது கூட்டமைப்பு

 

vavuniya-UC-300x200.jpgவவுனியா நகர சபையை, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து-  தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கைப்பற்றியுள்ளது.

வவுனியா நகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐதேகவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில், திடீரென, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எவ் தமது தரப்பில் முதல்வர் வேட்பாளராக கௌதமனை நிறுத்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சேனாதிராசா போட்டியில் நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கௌதமன் 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சேனாதிராசா 9 வாக்குகளை மாத்திரம் பெற்றார்.

vavuniya-UC.jpg

வவுனியா நகரசபையில் 3 ஆசனங்களை மாத்திரம் கொண்டுள்ள ஈபிஆர்எல்எவ்வுக்கு, ஐதேகவின் நான்கு உறுப்பினர்களில் மூவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஈபிடிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலா 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.

சேனாதிராஜாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐதேகவின் 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.

நகரசபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் கௌதமன், வட்டார முறையில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்து  பின்னர் விகிதாசாரப் பட்டியல் மூலம், நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவராவார்.

இதையடுத்து நடந்த, பிரதி தவிசாளர் தெரிவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சு குமாரசாமி 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

வடக்கு, கிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் மற்றும், ஈபிடிபியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்ததை ஈபிஆர்எல்எவ் கடுமையாக விமர்சித்திருந்தது. தற்போது  வவுனியா நகரசபையில், இந்தக் கட்சிகளுடன் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/04/16/news/30428

Link to comment
Share on other sites

வவுனியா நகரசபை ஆட்சியதிகாரம் அதிக ஆசனங்களைப் பெற்றகட்சிக்கு கிடைக்காமை வெளிப்படுத்தும் செய்தி என்ன?

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் அதிகப்படியாக 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாது போயிருக்கின்ற நிலையில், மொத்தமாக 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ,பொதுஜன பெரமுண மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் கூட்டு அமைத்து இன்றையதினம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

இதுதொடர்பாக கருத்துவெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசற்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்றுசேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கடந்த பெப்ரவரி 10;திகதி போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விகிதாசார முறைமையால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்குத் தெரிவாகினர் . தற்போது ஏனைய கட்சிகளுடன் கூட்டுவைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடித்துள்ளமை குறிப்பிடடத்தக்கது எனவும் அவர் மேலும் கூறினார்.

http://www.newsuthanthiran.com/2018/04/16/வவுனியா-நகரசபை-ஆட்சியதிக/

Link to comment
Share on other sites

  • துரோ­கத்­தைத் தன் கண்­க­ளால் நேரில் கண்ட சுமந்­தி­ரன் எம்.பி.!!
 
 

துரோ­கத்­தைத் தன் கண்­க­ளால் நேரில் கண்ட சுமந்­தி­ரன் எம்.பி.!!

துரோ­கங்­க­ளைப் பார்க்­கத்­தான் வந்­தோம் என்று, வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு முடிந்து வெளி­யே­றும் போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அதே­வேளை, “தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி எமக்கு துரோ­கம் செய்து விட்­டது. நடு­நி­லமை வகிக்­கும் என்று நேற்று (நேற்­று­முன்­தி­னம்) 40 நிமி­டங்கள் நடந்த சந்­திப்­பில் எமக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.”- என்று வடக்கு மாகாண சபை  உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் குறிப்­பிட்­டார்.

http://newuthayan.com/story/85229.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.