Jump to content

வாழ்க்கை எப்படிப் போகின்றது?


Recommended Posts

முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு.

போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டிருந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்?

தற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

மேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது.

உத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள்ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன.

இந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்வின் அர்த்தம் என்ன என்று வெறுமைக்குள் தேடும்போது ஒருவித பயமுண்டாகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு போதைகளில் மனத்தை திசைதிருப்பி மூளைக்கு ஓய்வைக் கொடுக்காமல் வாழ்வை ஓட்டப் பழகுகின்றோம். ஒருநாள் லீவு கிடைக்காதா என்று ஏங்குவதும், ஒன்றுக்கு இரண்டு நாள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருந்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்று அச்சப்படுவதுமான வாழ்க்கை போகின்றது. இன்னும் விரிவாக எழுதலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

மட்டக்களப்பு சரிவருமா?? ரதி tw_confused:

 

5 hours ago, Innumoruvan said:

புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது

இப்படித்தான் போகிறது இன்னுமொருவன் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

Funeral directors இடம் காசு கட்டினால் நீங்கள் விரும்பியபடி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

Funeral directors இடம் காசு கட்டினால் நீங்கள் விரும்பியபடி செய்வார்கள்.

 

காசு வேணுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

 

காசு வேணுமே

உழைக்கிறதை என்ன செய்கிறீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

உழைக்கிறதை என்ன செய்கிறீர்கள்...

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

32 minutes ago, ரதி said:

 

காசு வேணுமே

கன பேர் இப்படித்தான் சொல்கிறார்கள் ரதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

உண்மையாகவே பலருக்கு இப்படியான சம்பவங்கள் ஏற்படுகிறது, உடல் சுகவீனம், வியாபாரத்தில், சீட்டில், கடன், வட்டி என்று பல..

எனக்கும் சீட்டில் 7 வர இருக்கிறது. 6/7 மாதமாக இழுபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

உண்மையாகவே பலருக்கு இப்படியான சம்பவங்கள் ஏற்படுகிறது, உடல் சுகவீனம், வியாபாரத்தில், சீட்டில், கடன், வட்டி என்று பல..

எனக்கும் சீட்டில் 7 வர இருக்கிறது. 6/7 மாதமாக இழுபடுகிறது

 

ம் நானும் அவரிடம் சொன்னேன் பேசாமல் அங்க உள்ள சொத்துக்களை விற்று விட்டு இங்கே வந்து செட்டிலால சொல்லுங்கல் என்று சொன்னேன் இன்னும் வரவில்லை என்றார் அவர்  ஆனால் வருடத்திற்கு ஒரு தடவை வந்து விட்டு செல்கிறார்கள் என்றார் அவர் சம்பந்தம் இல்லாத குடும்பம் ஒன்று சுவிஸில் இருந்து வந்து இங்கு செட்டிலாகிவிட்டது 

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றிகள் இன்னுமொருவன்..

எனது அனுபவத்தில் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவது, அர்த்தம் தருவது அல்லது அதை நாடிய முயற்சிகள் எனபது அவரவரோடு சேர்நத வாழ்விடமும் சேர்ந்தது.  ஊரில் வயதான ஒருவர் தனது காணியின் வேலிக்கு கதியால் போட்டு அடைத்துக்கொண்டிருப்பார்,  தனத காணியில் மரங்கள் நடுவார், பாராமரிப்பார் இப்படியே சதா தோட்டம் வயல்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார். அவர் இயல்பாகவே அதைச் செய்வார், யாரும் அவருக்கு செய் என்று கட்டளை இடமாட்டார்கள். கட்டளைக்கு கட்டுப்பட்டு செய்வதை விட அதிகமாக வேலைகளை செய்வார். அதிலிருந்து தனது வாழ்வாதாரத்துக்கானதையும் எடுத்துக்கொள்வார். தொடர்ச்சியாக உயிர்வாழுதல் என்பது தான் அடிப்படை.  அதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். அதை எப்படி செய்வது என்பதில் தான் அர்த்தம் இருக்கின்றது அல்லது நிறைவு இருக்கின்றது.  வயதானவர் அவரது வழ்வை முடிந்தளவுக்கு அவரே தீர்மானிக்கின்றார். இங்கே எமது வாழ்வை நாம் தீர்மானிக்க முடியாது.  "நான்" என்பது வயதானவரை பொறுத்தவரை அவரது வளவு தோட்டம் மரங்கள் என்ற பெருவட்டத்தைக்கொண்டிருக்கும். அவர் தனியே ஒரு மனித உருவமாக மட்டும் அடயாளம் பெற மாட்டார். இங்கே "நான் " என்றால் எதுவும் இல்லை. எனது வட்டத்துக்குள் என்ன என்று பார்த்தால் ஒரு வீடு ஒரு கார் இரண்டும் எனக்கு சொந்தமா என்று பார்த்தால் அதற்கான கடனை கட்டும் வரை எனக்கு சொந்தமில்லை. கடன் எப்போ முடியும் என்று பார்த்தால் அண்ணளவாக எனது ஆயுள் முடியும் காலம் வரை அது இருக்கும். வேலை நிரந்தரமா என்று பார்த்தால் அதுவும் எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் வயதானவரும் அவரது காணியை விட்டு விரட்டப்பட்டு விட்டார். 

மனிதன் ஒரு வேட்டை விலங்கு. இந்த உலகம் ஒரு வேட்டைக்காடு. இந்த அடிப்படைக்கு உள்ளகவே வழ்க்கை அமைகின்றது. எமது சந்தோசம், நிறைவு, அர்த்தம் ஆன்மீகம் கடவுள் என அனைத்தும் இந்த அடிப்படைக்கு உள்ளகவே தனது எல்லையை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வாழ்வின் பொருள் அர்த்தம் நிறைவு என்பதை பெரிய விசயமாக உணர்வதில்லை. அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன திருப்திகளை அனுபவிப்பது. வேணுமான தருணத்தில் நல்ல ஒரு தேத்தண்ணி உள்ளடங்கலாக. வாழ்க்கை போகுது... 
 

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 வாழ்வின் அர்த்தம் என்ன என்று வெறுமைக்குள் தேடும்போது ஒருவித பயமுண்டாகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு போதைகளில் மனத்தை திசைதிருப்பி மூளைக்கு ஓய்வைக் கொடுக்காமல் வாழ்வை ஓட்டப் பழகுகின்றோம். ஒருநாள் லீவு கிடைக்காதா என்று ஏங்குவதும், ஒன்றுக்கு இரண்டு நாள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருந்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்று அச்சப்படுவதுமான வாழ்க்கை போகின்றது. இன்னும் விரிவாக எழுதலாம்.

 

நல்ல அர்தமுள்ள காணொலி கிருபன். 

 

 

Link to comment
Share on other sites

அனைவரது வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. 

உண்மைதான் கிருபன். காட்சிச்சாலையில் இருக்கின்ற குரங்கிற்கும் காட்டில் இருக்கும் குரங்கிற்கும் மனநிலையில் அதிகம் வித்தியாசம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் தனக்கு சாவு இருக்கிறது என்பது பற்றியோ நேரம் பற்றியோ விலங்குகள் உணர்வதில்லை. ஆனால் அந்தக்கணத்தில் மட்டும் பூரணமாக வாழ்வது என்பது மனிதனிற்கு அத்துணை சர்தியமானதில்லை. இது பற்றி மனிதன் பலகாலம் பேசிவருகின்ற போதிலும் குளப்பங்களே அதிகரிக்கின்றன. living in the moment என்பதைப் புரிந்து கொண்டதாய் கூறும் பலர் இது பற்றிக் கதைக்க ஆரம்பித்ததும் குளம்பிப் போய்விடுகிறார்கள். முடிந்தால் நன்மை தான்.

ரதி உங்கள் ஆதங்கமும் வலியும் புரிகிறது. ஆனால் இறப்பின் பின் உடல் என்னாகும் என்பதில் நிஜத்தில் உங்களிற்குக் கரிசனை இருக்கின்றதா?

சுகன் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். காணியில் கதியால் போடுவதும் வேலை செய்வதும் இயற்கையின் அங்கமாக மனிதனைச் சேர்த்து வைத்திருந்தன. முதலீடுகள் எல்லாம் இலத்திரனியல் பரிமாற்றங்கள் ஆகிப்போயுள்ள நிலையில் ஒருவர் தமது தேட்டத்தை தொட்டுப் பார்த்தலே சாத்தியமின்றி அனைத்தும் இலக்கங்கள் மட்டுமே என்றாகிவிட்டன. 

ஆனால் அர்த்தம் தேடல் என்பது நாம் றூம் போட்டு யோசிப்பதனால் மட்டும் வருவதாக இல்லையே. மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கையில் இத்தகைய தேடல் உள்ளார்ந்து எங்கோ ஒளிந்திருந்து ஆனால் துருத்திக்கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்கும் அவகாசம் வாழ்வு கொடுக்கும் போது தேடல் முன்னணிக்கு வந்து விடுகிறது--தவிர்க்க முடியாததாகிப் போகிறது.. அதை ஒதுக்கிவிடல் சிரமமாகிறது. இருப்பினும் நீங்கள் எழுதியிருக்கும் விதம் அழகாக இருக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

கலைஞன் உங்கள் காணொளிகளிற்கு மிக்க நன்றி. உண்மை தான் கோப்பிக்கும், கப்பிற்கும் இடையேயான வித்தியாசம் மிக உண்மை என்றபோதும்¸ வாழ்வு, குறிப்பாக சந்தை¸ இந்த வித்தியாசத்தை நாளாந்தம் இல்லாதபடி ஆக்கிக்கொண்டிருக்கிறது. சூப்பை சூப்பிற்காக மட்டும் குடித்தலோ கோப்பியோ இன்னும் இதர அனைத்தும் அசாத்தியங்கள் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது மிக ஆழமான பிரச்சினை. அனைத்து முனைகளையும் பாதிப்பது. அதே நேரம்¸ மேற்படி வித்தியாசங்களையோ சந்தையின் அரூபகரங்களையோ ஒரு கணம் நாம் ஒதுக்கிவிட்டு¸ விதிப்படி விளையாடி, நாம் இந்த ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று அனைவராலும் வியந்து பார்க்கப்படும் அதியுன்னது கப்பினை வைத்திருக்கும் போது கூட¸ மற்றையவர்கள் நம்மைப் பார்த்துப் பெருமூச்சு விடும் போது கூட, அர்த்தம் தேடும் தேடல் வலுக்கத் தானே செய்கிறது. வாழ்வின் ஆரம்பநிலை தொழில் சார் உழைச்சல்களை வென்று, பொருளாதார ரீதியில் நாற்பதிற்கு னரேயே சுதந்திரம் அடைந்துவிடினும் கூட¸ அர்த்தம் சார்ந்த தேடல் வலுப்படத்தானே செய்கிறது. இது மற்றையவர்களோடான ஒப்பீடு அன்றி உள்ளூர நடக்கும்¸ நாம் எம்மில் இருந்து ஒளித்துக்கொள்ள முடியாத தேடலாக இருக்கின்றது அல்லவா?

 

Link to comment
Share on other sites

தேடல்


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு தேடல் உண்டு….தேடல் இல்லா மனிதனே இல்லை எனலாம்….தேடல் மனிதனின் சிந்தனை மற்றும் செயல்களை பொருத்தும் மாறும்…சிலருடைய தேடல் பணமாக இருக்கலாமி சிலருடைய தேடல் அறிவாக இருக்கலாமி சிலருடைய தேடல் புகழாக இருக்கலாம்…ஆனால் தேடல் என்ற ஒன்று அனைவரின் வாழ்விலும் செயலிலும் மறைந்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது….

தேடல் என்ற செயல் நமது வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமிப்பதோடுஇவாழ்க்கையை சற்று நீளவுமிவாழ்க்கையை திருப்தி அடையவும் வழி செய்கிறது…

தேடலை பற்றி சிந்திக்கும் போது எனக்கு எழுந்தது இந்த கேள்வி?

எதற்காக இந்த தேடல் என்று ?

நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்காகவே…இன்னும் கொஞ்ச நாள் வாழப் போகிறோமிஅதுவரை சந்தோசமாக வாழ்ந்து விடுவோமே என்ற அற்ப மனப்போங்கு…வேறு எந்த காரணமும் இல்லை….

மனித வாழ்வின் தேடலை எழுதும் போதுஇஎனக்கு ஒன்றும் புலப்படவில்லை…என் எண்ணங்களுக்கு தெளிவாய் தெரிந்ததது இரண்டுவகை தேடல் மட்டுமே…

அதை விவரிக்கிறேன்….

தேடல் 1:

நீங்கள் சிறுவனாக இருக்கும் போது நிச்சயமாக இதை நினைத்திருப்பிர்கள் நன்கு படித்து மற்றவர்களை போல் பெரியாளாகி விட வேண்டும் என்று….பெரியாள் என்றால் பணக்காரானாகி விட வேண்டும் என்று பொருள்..இப்போது நீங்கள் நினைத்தது நிறைவேறியதா?….சிலருக்கு இருக்கலாம்….ஆனால் பலருக்கு இல்லை….உங்கள் சிறுவயதில் உங்களின் தேடல் சினிமா காரர்களால் பொய்யாக உங்கள் மேல் திணிக்கப்பட்டது…..அவை திணிக்கப்பட்டதாக இருந்தாலும் அதற்காக முயற்சிக்கிறிர்கள் ஆனால் படித்து முடித்த பினிபட்டதாரிகளாய் இருந்து பல  இன்னல்களை அனுபவிக்கிறிர்கள்….பிறகு களைப்பால் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறிர்கள்…பின் ஐந்து ஆறு ஆண்டுகள் கழிந்த பின் திருமணம் செய்து கொள்கிறிர்கள்.அதன் பின் நீங்களும் குட்டி போட்டுவிடுகிறிர்கள்…பிறகு நீங்கள் குடும்பத்திற்காகவுமி குழந்தைகளுக்காகவும் வாழ்க்கையை வாழ்வோம் என்ற எண்ணத்தின்  ஆதிக்கத்தால் உங்களின் தேடல் திசையை மாற்றுகிறிர்கள்.இ

பின் பணம் சம்பாதித்தலிகுடும்பம் வாழ்க்கையை நடத்துதலிகுழந்தைகளை வளர்த்தல் போன்ற செயலை செய்து உங்கள் வாழ்க்கையின் காலத்தை நகர்த்துகிறிர்கள்…இடையிடையில் உங்களை மகிழ்வித்து கொள்ளும் சில செயல்களை செய்துஇஅதாவது  போலித்தனமான மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்களை செய்து நீங்களே உங்களை மகிழ்வித்து கொள்கிறிர்கள்.உதாரணத்திற்கு பொருள் வாங்குதலிபடத்திற்கு செல்லுதலிகுழந்தைகளுடன் விளையாடுதலிசுற்றுலா…போன்ற செயல்களை செய்து மகிழ்ச்சியாக இருப்பது போல் உங்களை நீங்களே ஏமாற்றுகிறிர்கள்…

அதையும் தாண்டி குடும்ப சுமை அதிகரிக்கும் போதுஇபொறுப்புக்களை தவிர்க்க சன்யாசம் பூண்டுவிடுகிரார்கள்…..சிலருக்கு அதிக பணமிவசதி இருந்தால் ஆன்மிகம் நோக்கி சென்றுவிடுகின்றனர்…இவ்வளவு தான் உங்கள் தேடல்……….

மாற்றொரு வகை தேடலும் உள்ளது….அதையும் பார்ப்போம்…

தேடல் 2:

இம்முறை எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும்….அல்லது வித்தியாசமாக செய்யவேண்டும் …பலரின் கவனத்தை கவர வேண்டுமி… தன்னால் கவரப்பட்டவர்கள் பலர் தன்னை தொடர வேண்டும்….

இதில் எதையாவது நீங்கள் செய்ய விரும்பும் போது புதிய முயற்சியை எடுக்கிறிர்கள் …அதை விடாமுயற்சிடன் செய்து சாதிக்கிறிர்கள்…..அதன் பின் என்ன???? அடுத்தைஎந்த செயல் உங்களை சந்தோசமாக வைத்திருக்கும் என ஆராய்ந்துஇஅதை அடைவதற்கான செயலையே செய்கிறிர்கள்  ஆகவே தேடல் என்பது ஏதாவது ஒன்றை அடையவதற்க்கான செயலே….

தேடல் 1 ல் குடும்பமிகுட்டி னு வாழ்கிறிர்களிதேடல் 2ல் புதிய சாதனைஇபுகழ் என்ற ஆர்வத்தில் வாழ்கிறிர்கள்…இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை…

சரி தேடல் எப்போது ஆரம்பிக்கிறது.?

புரிந்த தேடல் நீங்கள் இளைஞான இருக்கும் போதுமிபுரியாத தேடல் சிறுவனாக இருக்கும் ஆரம்பித்துவிடுகிறது….அதென்ன புரிந்த தேடலிபுரியாத தேடல்…??

புரிந்த தேடல்.. பணத்தேவைஇமேற்படிப்பு தேவைஈருப்பிடமிஎன அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும் போது பொருளாதார நிலைஇஒருவனால் உணரப்படும்……அவ்வாறு உணர்ந்தவனிஅவன் சிறப்பான வாழ்க்கையை அடைவதற்காகவுமிநல்ல பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசையுடன் முயற்சிக்கிறான்.ஆகவே அவனுடைய தேடல் பொருளாதார நிலையை சரி செய்யும் வகையில் அமைந்திருக்கும்….இது புரிந்த தேடல்..

புரியாத தேடல்….சிறுவனாக இருக்கும் போதுஈபெண்களின் மீது உண்டாகும் பாலுணர்வு எழுச்சீநண்பனின் மீது உண்டான எல்லையற்ற வெறுப்பால் உருவாகும் பழிவாங்கும் எண்ணமிபணக்காரானாகி விட வேண்டும் என்ற ஆசை போன்றவை காரணமில்லா தேடல்….

நமது சமுதாயத்தில் சொந்த தேவைகளை பொறுத்துஇபுரிந்த தேடலினால் வாழ்க்கையின் பாதை வெவ்வேறு வகையில் திசைமாற்றப்படுகிறது….

பொதுவாக ஆண்கள் அனைவரும் இபொறுப்புகளை தவிர்க்கவே விரும்புவார்கள்….சிலருக்கு கோபம் வரலாம்..ஆனால் அது தான் உண்மை….

நீங்கள் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையில் சந்தோசமான பகுதி என்ன ? என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் நிச்சயம் அவர்களின் டியெளக்டழச வாழ்க்கையை தான் கை காட்டுவார்கள்….ஏன்?

டியெளக்டழச வாழ்க்கையில் தேடலுக்கான முக்கியத்துவம் குறைவுஇஅவனுடைய சுற்றுப்புறத்தால் உண்டான போலி சந்தோசமிஅவனுடைய தேடலை தற்காலிகமாக மறக்கச்செய்கிறது…மேலும் போலி சந்தோசங்கள் அவன் மனதை திருப்தி அடையச்செய்கிறது.இந்த துயரமில்லா வாழ்வையுமிபொறுப்புகள் இல்லா நிலையை உணரவே இபோலி சந்தோஷ நிலையை அடையவே பலர் மது அருந்துகின்றனர்……

.இது இளைஞனுடைய தேடல் மட்டுமல்லாமலீவாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட அனைவரும் இதே செயலை செய்துள்ளனர்…பொறுப்புக்களை தவிர்க்கவே நினைக்கின்றனர்.என்ன சிலர் தேடலை சற்று வேறு வழியில் தேடுகின்றனர்…அமைதீதியானமிஆன்மிகம் போன்றவைகளை செய்து திருப்தியடைகின்றனர்….இந்த வகை தேடல் அனைத்தும் அவன் வாழ்க்கை இன்னும் சிறிது காலம் சந்தோசமாக நீட்டிக்க வழி செய்யும் அவ்வளவு தான்…

தேடலின் முடிவு தான் என்ன?

பலர் தியான நிலையை அடைய முயற்சிக்கின்றனரிதன்னை உணர வேண்டும் ஞானம் பெற வேண்டும் என்ற தேடலை செய்து போலி சாமியார்களிடம்  பணத்தை வீணாக்குகிறார்கள்..உண்மையில் தன்னிலை உணர்ந்த பல ஞானிகள் கண்டது “வெறுமையே”…தன்னுடைய நிலையை உணர்ந்தவர்கள் சிலர் மனநோயாளியாகவுமி சிலர் எதுவும் பேசாத நிலையை அடைகின்றனர்….தன்னிலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே  மேற்கூறிய போலி சந்தோசங்கள் தேவை ….அவைகளால் மட்டுமே அவர்களின் சுயசிந்தையை மறக்கடிக்க முடியுமிமேலும் அவர்களின் வாழ்க்கையை நீட்டிக்கவும் முடியும்…ஆகவே தான் அவர்கள் போலி சந்தோசங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பார்கள்…..

போலி சந்தோசம் என்றால் என்ன? என கேட்கிறிர்களா???

சில உதாரணங்களை பார்ப்போம்…

ஒருவன் அவன் விரும்பும் பெண்ணிடம் காதலை தெரிவிக்கிறான்…அவள் அதை ஏற்கவில்லை…அவன் அதை உணர்ந்தாலும் அவளை விடாமல் காதலிக்கிறான்….ஏன்?ஒருவகை போலியான மகிழ்ச்சி ….அவள் மீது கொண்ட போலி அன்பின் காரணமாக மீண்டும் அவளை தொடர்கிறான்…வேறு மொழியில் கூறினால் ஒரு வகையான வைஅந ப்யளள தான்…. அவன் அவனை மகிழ்வாக வைத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை….ஆனால் அவளுக்கு தொந்தரவு கொடுக்காத வரை சரி தான்…

காதல் தோல்வியடைந்த சிலர் இப்படி செய்வதை நான் கண்டதுண்டுஇஅவள் இன்னும் தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொள்வார்கள்….அப்போது அவனுடைய மூளை அவனை திருப்திசெய்யைஅவனை  மகிழ்வாக வைத்து கொள்வதற்காக சில ஹார்மோன்களை சுரக்கிறது.விளைவு எல்லையற்ற மகிழ்ச்சி…உதாரணத்திற்கு அவன் செல்போனில் பாடல் கேட்டுகொண்டிருந்தால் அவன் நினைவுகள் பாடலுக்கேற்ப அவனையும் அவளையும் இணைத்து அவனுக்கு ஒரு போலியான மாயையை உருவாக்கீபின் மகிழ்ச்சியை அளிக்கிறது பின் அவன் புத்துணர்வுடன் அடுத்தவேலையை பார்க்க செல்கிறான்….இதே போன்று தான் நாமும் நாம் வாழ்க்கையை நகர்த்த பல வித கற்பனைகளை மனதில் எண்ணிக் கொண்டு நம் எண்ணத்தை நோக்கிய பயணத்தை தொடர்கிறோம்….

நமது எண்ணங்கள் தான் நம் தேடலுக்கு வழிவகை செய்கிறது….உங்களை மகிழ்ச்சியாக வைக்கவுமிசோகமாக வைக்கவும்..அவையே அடிகோல் இடுகிறது….ஏன் நீங்கள் யார் என்று தீர்மானிப்பதும் அதுவே….நீங்கள் கோபமிபொறாமைஇசமுதாயத்தின் மீது வெறி கொண்டவராக இருந்தால் மனநோயாளியாக்கலாம்….மாறாக அனைத்தையும் சகித்து கொண்டு வாழத் தெரிந்தால் நல்ல கணவனாகவுமிநல்ல தந்தையாகவுமிநல்ல பொறுப்புள்ள மாணவனாகவும் இருக்கலாம் இவை அனைத்தும் சமுதாயத்தின் பார்வையே…உங்களின் எண்ணங்கள் அல்ல…ஆகையால் சமுதாயத்தின் பார்வையை உங்கள் மீது இருந்து அகற்றுங்கள்…நீங்கள் யார் என்று தீர்மானிப்பது உங்கள் எண்ணங்கள் மட்டுமே….

ஆகையால் தான் எண்ணங்களை பற்றி விவேகானந்தர் முன்னரே கூறியுள்ளார் “நீ எதை நினைகின்றாயோ அதுவாகவே ஆகிறாய்”என்று..போலியான மகிழ்ச்சியே உங்களை மகிழ்விக்கிறது என்று அதை நீங்கள் தவிர்த்தால் “நம் வாழ்கை எங்கே போகிறது?என்ற கேள்வி ஆதிக்கம் பெற்று உங்கள் மனதை வருத்தும்…..பின் வாழ்க்கை வெறுமையாக காட்சியளிக்கும் ஒன்றுமில்லா வெங்காயம் போல….இதை தான் புத்தர் தன் தியான நிலையில் கண்டார்….

தேடலின் முடிவு தான் என்ன???

தேடல் நமது வாழ்க்கையை பல வழிகளில் நடத்தினாலும் அவற்றை சிறியதாக அல்லது பெரியதாக அமைத்து கொள்வது நம் கையில் தான் உள்ளது…..சிறிதாக இருப்பின் வெறுமை வெகுவிரைவில் உணரப்படும்….உதாரணத்திற்கு வீடு வாங்குதலிகல்யாணமிகாரிசெல்போன் போன்றவை…..அவைகளை அடையும் வரை மட்டுமே அதன் மீது ஆர்வம் அதிகமாக இருக்குமீதனதுடையதான பின்  அதன் மீதான ஆர்வம் குறைந்து விடும்.ஒருவேளை பெரிதாக இருப்பின் சந்தோசம் தான்….உங்களுடைய தேடலின் பாதைஇஉங்களுடையதாகவே கடைசி வரை இருக்கும் எந்த வித மனக் குழப்பங்களும் ஏழாது..முயற்சியுங்கள்…

https://pakuvinpakkangal.wordpress.com/2014/12/11/பகுவின்-பார்வையிலிருந்-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அர்த்தமுள்ள ஆழமான ஒரு விடயத்தை கையில் எடுத்திருக்கின்றிர்கள் இன்னுமொருவன்..... இதில் எழுத நிறைய யோசிக்க வேண்டி யுள்ளது....பின்பு எழுதுவேன்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

 

இப்படி ஒரு சம்பவம் எனது நண்பனுக்கும் நடந்தது. 

எனது நன்பனின் நண்பன் ஒருஆள் பாரிஸ் ல இருக்கிறான். அங்கை சொந்த வீடு கார் எண்டு எல்லாம் இருக்குது. ஆனால் அவன் ஒருநாள் எனது நண்பனிடம் யூரோ 5000 கடனாக கேட்டுஇருந்தான் (எனது நண்பன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்பவன்). எனது நண்பனும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை வேறு நண்பர்களிடம் வாங்கி அனுப்புவதாக கூறி, சொன்னது போல பல நண்பர்களிடம் (நான் உட்பட) கடன் வாங்கி ஒருவாறு 5000 யூரோ அனுப்பிவிடான். அதன் பிறகு எனது நண்பன், தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை தனது சொந்த காசு மூலம் கட்டிவிடான். ஆனால், எனது நண்பனின் நண்பன் இன்னும் எனது நண்பனுக்கு அந்த 5000 யூரோ ஐ கொடுக்கவில்லை. இது நடந்து இப்ப ஒரு 3 வருடத்துக்கு மேல இருக்கும். ஆனால் நண்பனின் நண்பன் ஒவ்வொரு வருடமும் இலங்கை வந்து போறவன். இவனும் கடனை கேட்டால் பாரிஸ் போட்டு அனுப்பிறன் எண்டு ஒரே எமது கதை. இதுவரை வட்டியும் இல்லை முதலும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களை நினைத்து கவலைப்படாமல் ,இனிமேல் இப்படித்தான் நடக்கும் என்று நினைத்து தேவையில்லாமல் வேதனைப்படாமல் நிகழ்காலத்தினை (present in the moment) இரசித்து வாழ்வதினால் இன்பமான இருக்கலாம்  -  எனக்கும் யாழ்களப் புத்தனுக்கும் தெரிந்த ஒருவர் சொல்லும்  அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

What does present in the moment mean?
It means that your awareness is completely centered on the here and now. You are not worrying about the future or thinking about the past. When you live in the present, you are living where life is happening. The past and future are illusions, they don't exist.

     

With that goal in mind, consider this list of ten tips below to start living your life in the present:
  1. Remove unneeded possessions. ...
  2. Smile. ...
  3. Fully appreciate the moments of today. ...
  4. Forgive past hurts. ...
  5. Love your job. ...
  6. Dream about the future, but work hard today. ...
  7. Don't dwell on past accomplishments. ...
  8. Stop worrying.
  9. Think beyond old solutions to problems
  10. Conquer addictions

உங்களுக்கு எதாவது விளங்கியிருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுய  மீட்டல்

 

நீங்கள் மேலே  குறிப்பிட்டது போல

எல்லாவற்றையும்   இலகுவாக அடைந்துவிட  வாங்கிவிட முடிகிற  வாழ்க்கை

சுவையுள்ளதாக  இருக்குமா??

எம் முன்னோர்கள்  எப்பொழுதே  சொன்னார்களே

போதும்  என்ற  மனமே பொன் செய்யும் மருந்து என்று

இன்று  எதை  அடைந்த போதும்

அது போதுமானதாக

திருப்தி  அடைந்ததாக  மாறி  வருகிறதா??

மாட்டுவண்டிச்சவாரிக்கும்

சந்திர  மண்டல  பயணத்துக்குமான  இடைவெளியும்

போட்டியும்

தாகமும்  இருந்து கொண்டு தானே  இருக்கிறது?

சுயநலங்கள்  அதிகரித்திருப்பது உண்மை  என்றால்

புடுங்குப்பாடுகள் தானே  அதை வளர்க்கின்றன?

 

தனிப்பட

நான்  எனது  வாழ்வின்  இலட்சியங்களை

கனவு  கண்ட  வாழ்வை

நான்  வாழ  எண்ணிய வாழ்க்கையை

அடைந்தேனா  என்றால்  இல்லை  என்பது தான் பதிலாக  இருக்கும்

எல்லாம்  இருந்தும் ஏதோ  ஒன்றை  தொலைத்த  வெறுமை

பெரும் புத்தகமாக எழுதக்கூடிய அனுபவங்கள்

அடியெடுத்து வைத்தவை

அல்லது முயற்ச்சித்தவை  

அவற்றில்  வென்றவற்றை  பார்த்தால்????

எம்மை ஏமாற்றியவர்கள்

நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள்

இன்னும் இருவேடமிடும் சொந்தங்களுக்கு  மத்தியில்

இவற்றை அறவே துறந்து

இவன் மனச்சாட்சிப்பட  நடப்பவன் என்ற  நல்ல பெயரோடு

வாழ்ந்தால் இவர் போல  வாழணும்

இவர் போல பிள்ளைகளை  வளர்க்கணும் என நாலு பேர்  சொல்லும் அளவுக்கு

வாழ்ந்து முடித்திருப்பதே இப்போதைக்கு  என்னுடன்  கூடவே வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் படித்ததில் பிடித்தது;
வாழ்க்கை என்பது கனவு போல
வாழ்ந்து பார்க்கணும் கவிதை போல
பாடலில் பிடித்தது;
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
என் அனுபவத்தில் கிடைத்தது;
இதுவும் கடந்து போகும் என்று
எதனையும் இறை அருளுடன்
எதிர் கொண்டு  வாழ்வது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்‘
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎/‎04‎/‎2018 at 12:46 PM, Innumoruvan said:

அனைவரது வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. 

 

ரதி உங்கள் ஆதங்கமும் வலியும் புரிகிறது. ஆனால் இறப்பின் பின் உடல் என்னாகும் என்பதில் நிஜத்தில் உங்களிற்குக் கரிசனை இருக்கின்றதா?

 

 

இல்லை இன்னுமொருவன்...நான் செத்து பிரேதமாய் இருக்கும் போது வடிவாய் இருக்க வேண்டும் என்ட அற்ப ஆசை இருக்குது ...ஆனால் செத்த பிறகு நான் எப்படி இருந்தால் எனக்கு என்ன தெரியவா போகுது:unsure:
வயசு போகப் போக கெதியில் வயசு போகுது என்ட கவலையும் ,கெதியில் செத்திடுவேன்:rolleyes: என்ட பயமும் இருக்கு....அதே நேரத்தில் வாழும் வாழ்க்கை கூட திருப்தி இல்லாமல் இருக்கு.tw_confused:
இருக்கும் வரைக்கும் சந்தோசமாய் இருந்து விட்டு வருத்தம்,துன்பம் வந்து படுக்கையில் கிடக்காமல் சாக வேண்டும் என்பதும் எனது அவா<_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்று பயப்படுவதும்  மற்றவர்களுக்காக வாழாமல் எமக்காக மட்டும் வாழ வேண்டும் என்றும் நினைப்பது உண்டு
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:
இல்லை இன்னுமொருவன்...நான் செத்து பிரேதமாய் இருக்கும் போது வடிவாய் இருக்க வேண்டும் என்ட அற்ப ஆசை இருக்குது ...ஆனால் செத்த பிறகு நான் எப்படி இருந்தால் எனக்கு என்ன தெரியவா போகுது:unsure:
வயசு போகப் போக கெதியில் வயசு போகுது என்ட கவலையும் ,கெதியில் செத்திடுவேன்:rolleyes: என்ட பயமும் இருக்கு....அதே நேரத்தில் வாழும் வாழ்க்கை கூட திருப்தி இல்லாமல் இருக்கு.tw_confused:
இருக்கும் வரைக்கும் சந்தோசமாய் இருந்து விட்டு வருத்தம்,துன்பம் வந்து படுக்கையில் கிடக்காமல் சாக வேண்டும் என்பதும் எனது அவா<_<

கிழவி  மாதிரி  பேசக்கூடாது ரதி

எவ்வளவோ  இருக்கு  வாழ்வில்  இன்னும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 https://m.facebook.com/story.php?story_fbid=1969186426729146&id=1557825057865287

19 minutes ago, விசுகு said:

கிழவி  மாதிரி  பேசக்கூடாது ரதி

எவ்வளவோ  இருக்கு  வாழ்வில்  இன்னும்...

வயசு போக போக அப்படித்  தான் மனசு நினைக்கிறது....நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணா

.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

 https://m.facebook.com/story.php?story_fbid=1969186426729146&id=1557825057865287

வயசு போக போக அப்படித்  தான் மனசு நினைக்கிறது....நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணா

.....

ஆனால்  உங்கள்  வயதில்

நம்பிக்கை  ஒன்றுதான்  வாழ்வாக  இருக்கும்

இருக்கணும்

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.