Jump to content

சாய்வு - அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாய்வு

நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் திறந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலையும் தாமரை இலையின் சலனம் போல் உன் உதடு புன்னகையால் அசைந்தது. ஒரு கணம் திகைத்து பின் சுதாகரித்து யார் நீ என்பது போல் விழியசைத்து உன்னைப் பார்த்தேன்.

நான் தங்கியிருக்கும் வீட்டில் நீயும் தங்க வந்திருந்தாய் பக்கத்து அறையில். இங்கிலாந்துக்கு வந்த பொழுது உள்ளத்தில் ஒரு குதூகலம் ஓய்ந்து சோர்வு என்னையறியாமல் பீடித்திருந்தது. தனிமை என்பதைவிட வெறுமை என்றே சொல்லலாம். இசையாலும் மதுவாலும் என்னை நிரப்பிக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகம் மூன்று நாட்கள் மட்டும்தான். மிகுதி நேரங்களை நூலகத்திலும், வளாகம் அருகேயிருக்கும் வாவியில் நீச்சல் அடிக்கும் நாரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதோடும் பொழுதுகளை செலவளித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு நண்பர்கள் குறைவு என்பதைவிட நண்பர்களை பிடித்துக்கொள்வது சவாலாக இருந்தது. நெருங்கிப்பழகுவதில் தயக்கமே கொழுந்துவிட்டு எரிந்தது. மீண்டும் யோசித்துப்பார்க்க தாழ்வு மனப்பான்மையோ என்று தோன்றினாலும் அதை புரிந்துகொள்வதில் கடினமே இருந்தது.

உடலோடு ஒட்டிய பாம்பின் வழுவழுப்பான தோல்கள் போன்ற நீண்ட கருப்பு நீள்சட்டையும், அதே நிறத்தில் முழுநீள மேல்சட்டையும் மணிக்கட்டுவரை அன்று அணிந்திருந்தாய். ஒற்றைப் பின்னல் முதுகுவரை செந்நிறத்தில் அசைந்தது. சீனப் பெண்ணொருவரை ஒற்றைப் பின்னலுடன் கண்டது இதுவே முதல் முறையாக இருந்தது. எங்கள் ஊரில் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பின்னலோடு திரிவார்கள்.

நீ உன்னை “கிஜூகி மின்” என்று என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு இங்கு தங்கவந்திருப்பதைப் பற்றிச் சொன்னாய். பக்கத்து அறையில் ஒருவர் தங்க வருவதாக முன்னமே உரிமையாளர் சொல்லியிருந்தார். அதுவொரு பெண்ணாக அதுவும் சீனப்பெண்ணாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய பொருட்கள் வாசலில் இருந்தன. உன் அறையில் எடுத்து வைப்பதற்கு உதவி செய்தேன். நீ எளிதில் தீராத புன்னகையை சுடராக ஏந்திக்கொண்டு என் முன்னம் நின்றாய். என்னைப்பற்றி நான் சொல்லாதபோதும் ஒவ்வொரு பொருட்களாக தூக்கி தூக்கி உன் அறையில் அடுக்க நீ என்னிடம் என்னைப்பற்றி வினவிக்கொண்டிருந்தாய். என்னைப்பற்றிச் சொல்ல அதிகம் ஒன்றுமில்லை. ஸ்ரீலங்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்ற போது, நீ புருவங்களை நெளித்து வளைத்து அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் விழித்தாய். இந்தியாவிற்குக் கீழே இந்து சமுத்திரத்தில் சிறிய தீவாக மாம்பழ வடிவில் இருக்கும் என்று சொன்னபோது, உன் தயக்கங்களை கலைந்து தெரியும் தெரியும் என்று சொன்னாய். நான் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறேன் என்றபோது நீ கட்டடக்கலை என்றாய். அவ்வாறு தான் நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

இருவருக்கும் ஒரே பொதுக் குளியலறை. அதைப்பற்றி உனக்கு எந்தவித கவலையும் இல்லை. குறைந்தவிலையில் வாடகை வீடு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றுதான் சொல்லியிருந்தாய்.

புத்தகங்கள் எதையாவது படிக்கும்போது மட்டும் கண்டாடி அணிவாய். அகண்ட நீள்சதுரக் கண்டாடி. உன் முகத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது. எப்போதும் புத்தகம் கையுமாகவே இருப்பாய். நான் வீட்டில் பார்க்கும்போது இறுக்கமான காற்சட்டை அணிந்து உன் தொடைகளும் கால்களும் வெளியே தெரியும் வண்ணம் மிகச்சுதந்திரமாக இருப்பாய். முதலில் நான் சங்கடப்பட்டாலும், வெகுவிரைவில் அது சகஜமாகியது. பொது வரவேற்பறையில் நீ சகஜமாக காலைத்தூக்கிப் போட்டுவிட்டு காதில் நீலநிற இயர்போனை மாட்டிக்கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாய்.

ஒருமுறை என் அறையில் புகையிலையை எடுத்து அதற்குரிய மெல்லிய வெள்ளைப் பேப்பரில் பில்டரை வைத்து சுருட்டிக்கொண்டிருந்தபோது, அறைக்கதவைத் தட்டினாய். என்னவென்று கதவைத்திறந்து கேட்டபோது அறையினுள்ளே எட்டிப்பார்த்து “உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே வந்தாய். படுக்கையில் என் உடைகள் குதம்பலாகக் கலைந்திருந்தன. குடித்து முடித்த தேநீர் கோப்பைகள் கழுவாமல் இருந்தன. நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் மேசையில் சுருட்டிய சிகரட்டை எடுத்துப் பார்த்தாய்.

“இதை எப்படிச் செய்வது” என்று கேட்டுக்கொண்டே என் படுக்கையில் அமர்ந்தாய். உன் கேசங்கள் உயிருள்ள குட்டிப்பாம்புகள் போல் நெற்றியில் புரண்டுகொண்டிருந்தன. நான் புன்னகைத்துவிட்டு என் மேசையின் முன்னிருந்த நாட்காலியில் அமர்ந்து புகையிலையை பேப்பரில் வைத்து ஒரு சிகரெட்டைச் சுருட்டிக்காட்டினேன். நீயும் ஒன்றைச் சுருட்ட முயன்று தோற்றாய். மறுபடி மறுபடி சொல்லித்தந்தேன். இறுதியில் ஒன்றை சீராகச் சுருட்டி முடித்தாய்.

நான் ஜன்னலைத் திறந்துவிட்டு வெளியே புகை போகும்வண்ணம் புகைக்க ஆரம்பித்தேன். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னிடம் திரும்பி ”இங்கே வீட்டில் புகைக்க அனுமதியில்லை தெரியுமா? என்றேன்.

நீ தெரியும் என்றும் இதை வீட்டு உரிமையாளரிடம் சொல்ல மாட்டேன் என்றும் சொல்லிச் சிரித்தாய். உன் கண்கள் மிகச்சிறியன. ஈசல்களின் இறக்கைகள் போன்று சிறிய அரைவட்டமானவை. சிரிக்கும்போது இன்னும் உன் கண்கள் சுருங்கும். முழுச்சந்திரனை விழுங்கிய பூமியின் நிழல்போல் உன் நெற்றியை விழுங்கும் உன் முன் கேசம் துள்ளித் துள்ளி அடங்கியது.

“நீ ஏன் எப்போதும் அமைதி, என்னுடன் பேசுவதேயில்லை?” என்றாய். உண்மையில் அந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. அது ஏனோ என்னால் வலிந்து பேசவே முடிவதில்லை. நான் “அப்படியல்ல..” என்று பொதுவாகச் சிரித்தேன். “உனக்கு எல்லாத்துக்கும் சிரிப்பு” என்று என் பிரடி மண்டையை செல்லமாக தட்டினாய். என் மிக அருகிலே நீ இருந்தாய். உன் முழங்கால் என் கால்களை தட்டியது. என் சிகரெட் ஒன்றை வாங்கி நீயும் புகைக்க ஆரம்பித்தாய். முதல் இழுப்பில் கடுமையாக இருமினாய். இருந்தும் அனுபவம் உண்டு என்று என் மறுப்பையும் மீறி தொடந்து புகைத்தாய். உன் நீண்ட விரல்களுக்குள் கடினப்பட்டு சிகிரெட் அமர்ந்திருந்தது. இருவரும் திறந்திருந்த ஜன்னலுக்கால் தலையை வெளியே விட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசினோம். வானம் டோவ் பறவையின் விரிந்த இறக்கையின் சாம்பல் நிறத்தில் மிக அமைதியாகவிருந்தது. ஒரு முழுநீளச் சிகரெட்டை புகைத்து முடித்திருந்தாய். அதற்குப் பிறகு நீ கேட்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

“Weed இருக்கிறதா?”

“என்ன weedடா… இல்லை; அதெல்லாம் நீ உபயோகிப்பியா?” ஆச்சரியம் துகிலுரித்த விழிகளுடன் நேர்பார்வை கொண்டு கேட்டேன்.

உன் கன்னம் உள்ளே ஒடுங்கி புன்னகையாக மலர்ந்தது. நெற்றியில் புரண்ட முடிக்கற்றையைக் கோதி கீழுதட்டைக்கவ்வி “ம்ம்… ஒரேயொரு தடவை; உன்னால் முடிந்தா எடு. இருவருமாகப் புகைப்போம்” என்று சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டே என் அறையைவிட்டு நீங்கினாய். ததும்பும் நீர்ச்சுனைபோல் என் உணர்வுகள் மெலிதாக பொங்கிவிட்டு அணைந்தது. என் அறையின் மின் குமிழைப் பார்த்தேன். மிகப்பிரகாசமாக ஒளிர்ந்தது.

அதற்குப்பின் என் அறைக்கு நீ வருவதேயில்லை. உன்னைக் காண்பதும் அபூர்வமாக இருந்தது. பனிபடர்ந்த தெருக்களில் நடந்து செல்ல எதிர்ப்படும் அனைத்து சீன முகங்களும் உன் நினைவையே கிளர்ந்தின. நூலகத்தில் புத்தக மட்டையை திறக்க உன் முகம் ஆழமாக விரிந்து எனக்குள் நீந்திச் சென்று எங்கையோ தொலைந்தது. மீண்டும் அதைக் கண்டுபிடிக்க தூண்டில்விட்டு அலைந்தேன்.

உன் அறை சாத்தியே இருக்கும். நீ இருப்பதும் தெரியாது, பல்கலைக்கழகம் முடிந்து வந்ததும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப்பின் வரவேற்பறையில் உன்னைக் கண்டேன்.  குஷன் சோபாவில் காலிரண்டையும் நீட்டிப்படுத்து கைப்பிடியில் தலையை சாய்த்து தன்னிலை மறந்து மூழ்கி புத்தகத்தைப் படித்து படித்துக்கொண்டிருந்தாய். என் சப்பாத்துச் சத்தம் கேட்டு தலையை கீழாகத் தொங்கப்போட்டு என்னைப் பார்த்தாய். தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்தியகல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது.

“weed கிடைச்சுதா?” என்று முதல் கேள்வியிலே கேட்டாய். விளையாட்டாக நீ கேட்கிறாய் என்று நினைத்திருந்தேன். அது அப்படியல்ல என்று புரிய ஒரு கணம் எடுத்தது.

“இல்லை, கிடைக்கவில்லை; விரைவில் முயல்கிறேன்” என்றேன். ஒரு புன்னகையை சாய்வாக விட்டெறிந்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குள் மூழ்கினாய். உன் கால்கள் வெள்ளை வெளிறென்று இருந்தது. ஏதோவொரு வித்தியாசத்தை ஒரு கணத்தில் உன்னில் ஆழமாக உணர்ந்தேன்.

இரண்டாவது வாரத்திலே இருபது பவுண்ட் கொடுத்து நண்பனின் நண்பன் மூலம் கஞ்சா பொதியைப் பெற்றேன். நான்  நினைத்த அளவுக்கு அது அத்தனை கடினமாக இருக்கவில்லை. பொழுத்தின் கவரில் சுற்றப்பட்ட கஞ்சா துகள்களை என்னுடன் வைத்திருப்பது ஓவ்வொரு கணத்திலும் என்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இளகி இளகி மெழுகாக வீழ்ந்துகொண்டிருந்தேன்.

மூன்று நாட்களாக உன்னைத் தேடினேன். கண்டுகொள்ளவே இயலவில்லை. வாட்ஸப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியபோதும் பதில்களில்லை. உன்னுடைய பதில்களுக்காகவே ஏங்க ஆரம்பித்தேன். அதை எண்ணிப்பார்க்க எனக்குள்ளே எரிச்சல் வெந்து புறப்பட்டது. நான்காவது நாள் சமயலறையில் உன்னைக் கண்டேன். கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாய். ஒரு கையை இடுப்பில் வைத்து தலையை ஒருபக்கம் சாய்த்து எதையோ தீவிரமாக எண்ணி அதிலே திளைத்து மிக மெதுவாக கரண்டியால் கலக்கிக்கொண்டிருந்தாய். முற்றிலும் அமைதியில் நீ ஆழமாக வீழ்ந்தது போல் இருந்தது.

“ஹேய்” என்றேன். நீ என்னை திரும்பிப்பார்த்தாய். முதல் இரண்டு கணம் சிரிக்கவில்லை. மூன்றாவது கணம் வழமையாக நீ சிரிக்கும் தாமரைச் சிரிப்பை மெலிதாக என் மீது திறந்தாய்.

“நீ நலமா, என்னாச்சு உனக்கு?” என்றேன்.

“யா… நான் நலம், கோப்பி உனக்கும் வேணுமா?” என்றாய்.

இல்லை என்றுவிட்டு உன்னை கூர்ந்து பார்த்துவிட்டு “weed இருக்கு, புகைப்போமா?” என்றேன்.

நீ சலனப்படாமல் புருவங்களை நெளித்து யோசித்துவிட்டு மெதுவாகச் “சரி” என்றாய். உன்னிடம் இருந்து நீண்ட குதூகலம் வெடித்து எழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மாறாக ஏமாற்றமே எரிச்சலுடன் என்னுள் எஞ்சியது. நீ உன்னுடயை கோப்பியோடு என் அறைக்கு வந்தாய்.

வழமையாக சிகிரெட் சுருட்டும் அதே பேப்பரில் புகையிலைக்குப் பதிலாக கஞ்சா துகள்களை வைத்து சுருட்டத் தொடங்கினேன். இடைமறித்து கஞ்சா துகளை எடுத்து முகர்ந்தாய். உன் முகத்தில் நித்திய அமைதி தோன்றியது போல் எனக்குள் எண்ணம் எழுந்தது. என் தோள்மூட்டை இருகையால் பிடித்து அழுத்தினாய்.

01.jpg

என் உதட்டில் பொருத்தி லைட்டரால் எரியூட்டி நிதானமாக உள்ளே இழுத்தேன். நடுக்கத்தை மறைத்தேன். இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது கேரளா கஞ்சா இரண்டு முறை பயன்படுத்தியதுண்டு. அன்றல்லாத பதற்றம் இன்று முழுமையாச் சூழ்ந்திருந்தது. முழுக்க முழுக்க சட்டவிரோதம். கைதுசெய்தால் என்ன ஆகும் என்று தெரிந்தே இருந்தது. “டோன்ட் வொரி” இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று வாங்கித்தந்த நண்பன் சொல்லியிருந்தான். எனக்கு இதைப் புகைக்கும் எண்ணம் இருந்ததேயில்லை. உனக்காகத்தான். இதற்காக நான் செய்த பிராயச்சித்தத்தை மிகையூட்டி விபரீத சாகாமாகச் சித்தரித்து உனக்கே சொல்லிக்காட்ட வேண்டும், குற்றவுணர்சியில் தூண்ட வேண்டும் என்று ஆழமாக விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று இழுப்புக்குப் பின் உனக்குத் தந்தேன். மிக அலட்சியமாக வேண்டி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் முதுகைச் சாய்த்து நிதானமாகப் புகைக்க ஆரம்பித்தாய். பூக்களின் நறுமணம் உன்னைச்சுற்றிப் படர்ந்தது. உன் கன்னங்கள் மெல்ல மெல்ல ஊதி சிவந்து மங்குஸ்தான் பழம் போல் ஆனதாக உணர்ந்தேன். இனிமையான இசையில் ஏறிப்பயணிப்பது போல ஒன்றின் மீது வழுக்கிக்கொண்டிருந்தேன். ஆனால், வழமைக்கு அதிகமாகன நிதானத்தில் இருந்தேன்.

நீ அமைதியாக இருந்தது என்னை கடுமையாக உறுத்தியது. எதுவுமே பேசாமல் குறைந்த பட்சம் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்தது என்னைக் கடுமையாக எரிச்சல்படுத்தியது. எங்கோ ஓர் இடத்தில் ஆழமாக விறாண்டியது போல் அகங்காரத்தில் தேய ஆரம்பித்தேன்.

“உனக்கு என்ன பிரச்சினை? ஆர் யூ ஆல்ரைட்?” உன் முழங்கால் தொடையைத் தொட்டுக் கேட்டேன். நீ நிதானமாக என்னிடம் திரும்பி “ எட் ஷீரனின் பாடல்கள் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே திறந்திருந்த என் மடிக்கணனியை நோக்கிச் சென்று யூடியூப்பில் பாடல்களைத் தேடினாய். கொஞ்சம் அளவாக சத்தத்தை கூட்டி ஒலிக்கவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து “அடுத்த சுற்றை சுருட்டச் சொன்னாய்..” நான் ஆச்சரியமாக உன்னை நிமிர்ந்து பார்த்தேன்.

மீண்டும் இரண்டு சுற்றுகளைச் சுருட்டினேன். நாம் புகைத்தோம் புகைத்தோம். நீண்ட நேரம் புகைத்தோம். என் மடியில் நீ வீழ்ந்தாய். உன் விழிகளால் என்னை ஊடுருவிக்கொண்டு சட்டென்று இமைகளை மூடினாய். நான் அசையாமால் அப்படியே இருந்தேன். பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் என் தொடை இரத்தோட்டம் குன்றி விறைக்கத் தொடங்கியது. நீயே எதையோ உணர்ந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்தாய். உன் கண்களின் நரம்புகள் பின்னிப்பிணைந்த சிவந்த பாம்பாகக் கடுமையாக உறைந்திருந்தன. என் டீஷேர்ட் காலரைப் பிடித்து குளியல் அறைக்குள் இழுத்துச் சென்றாய். ஷவரை திறந்துவிட்டு என் தோள்மூட்டை பிடித்துக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாய். நீர் எம் மீது சீறிச் சாரலாக வடிந்தது. நீ அழுதது போல் தோன்றியது. நீருக்குள் உன் கண்ணீரைப் பிரித்தறிய முடியாமல் இருந்தது. என் தோள்மூட்டில் சாய்ந்தே இருந்தாய். ஒரு சொல்லைக் கூட நாம் இருவரும் பேசவேயில்லை.

உன் தலையை துவட்டி, முடிந்தவரை உன் ஆடையில் ஊறிய ஈரங்களை ஒற்றி எடுத்து உன் அறைப் படுக்கையில் படுக்கவைத்தேன். கசிந்த நீர் மெத்தையை கொஞ்சம் ஈரமாக்கியது. மிகுந்த தெளிவுடன் உன் முகம் உறக்கத்திலிருந்தது. உதட்டில் ஒரு புன்னகை ஓரமாகப் பூரித்துவைத்திருந்தாய். மூன்றுநிமிடம் அறை வாசலில் நின்று உன்னையே பார்த்தேன். உன் கால்கள் மாசற்று, உரித்த பனங்கிழங்கு போல் நீண்டிருந்தன. கைகள் பிடிப்பற்று இறுக்கம் தளர்ந்து முறிந்துவீழ்ந்த கைவிடப்பட்ட மரக்கிளையாகத் தனிமையில் இருந்தன.

என் ஒற்றை பக்கத் தலை கடுமையாக வலித்தது. ஆடைகளை மாற்றிவிட்டு என் படுகையில் வீழ்ந்தேன். வரமறுத்த நித்திரை மெல்ல மெல்ல சதையில்  நுழையும் கூரிய கத்தியாக என்னைத் துளைத்து இறங்கியது. மூளை நரம்புகள் கடுமையாக நொந்தன.

தூங்கி எழுந்து தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் செல்லும்போது உன்னை வரவேற்பறையில் கண்டேன். வழமையாக இருக்கும் அதே பாணியில் அமர்ந்திருந்தாய். “நலமாக இருக்கிறீயா?” என்று கேட்டேன். உன்னிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. குறைந்த பட்சம் உன்னிடமிருந்து ஒரு நன்றிகூட கிடைக்கவில்லை என்பது என்னைச் சீண்டியது. அதைப் புறந்தள்ளிக் கொண்டு தேநீர் தயாரிக்கச் சென்றேன்.

மின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன். உனக்கும் சேர்த்து கோப்பியை தயாரித்துக்கொண்டு வந்தேன். நீ உன் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாய். வழமையாக நீ அமர்ந்திருக்கும் இருக்கை உன் இருத்தல் இல்லாமல் தனிமையில் அமைதியிழந்திருந்தது.

என் அறைக்குள் செல்ல எத்தனிக்கும்போது அந்த முடிவை ஒரு கணத்தில் எடுத்தேன். உன் அறைக்கதவை அனுமதியில்லாமலே திறந்தேன். என் இரண்டு கைகளிலும் கோப்பி நிறைந்த கோப்பைகள் இருந்தன. தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தேன். படுக்கையில் கால்களுக்கிடையே தலையாணியை வைத்து அதற்குள் முகத்தைப்புதைத்து உறைந்திருந்தாய். மேசையில் கோப்பைகளை சத்தம் வராமல் மென்மையாக வைத்துவிட்டு, உன் அருகே வந்து முதுகைத் தொட்டு “மின்” என்று உன்னை அழைக்க விழைய உடல் குலுங்கி திடுக்கிடலுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாய். உன் உடல் ஒருமுறை உதறியது. உன் கண்கள் ஆழமான வெறுப்பை என் மீது கக்கியதை உணர்ந்தேன். நான் என் கைகளை உன் முதுகிலிருந்து விளத்த எத்தனிக்க நீ பலம்கொண்டு தட்டிவிட்டாய். நான் என் செயல்திறன் குன்றி இயலாமையை அடைந்து தாழ்வில் தவிக்க, நீ எழுந்து என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாய். நான் தடுக்கவில்லை, இரண்டாம் மூன்றாம் அடிகள் மாறி மாறி கன்னத்தில் விழ நான் பின்னால் நகர என்னையே தாக்கிக்கொண்டு முன் நகர்ந்தாய். வரவேற்பறையின் நடுவரை வந்தோம். வலி பொறுக்க முடியாமல், சமநிலை குழைந்து நான் “ஹேய்” என்று சுதாகரிக்க என் தோள் மூட்டைப் பிடித்துத் தள்ளிவிட்டாய். நிலைதடுமாறி சுவரில் சாய்ந்து பிடிமானம் ஏதும் கிடைக்காமல் தத்தளித்து பின்னால் வீழ்ந்தேன். என் இடுப்பில் இரண்டு உதை உதைந்தாய். மிக கூர்மையான அடிகள் அவை. உச்சக்கட்ட வலியை ஏற்படுத்தியது. மூச்சு எடுப்பதில் சிரமம் படர்ந்த்தது. வலி உடம்பு முழுவதும் மின்சாரமாக குறைவழுத்தத்தில் ஓடி என்னை அதிரச்செய்தது.

“எங்கள் பூர்வீகம் சீனா என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது ஹோங்கொங்கில்” என்றாய்.

“ஹ்ம்ம்”

“எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான்…” என்றுவிட்டு நீ உன் அறைக்குள் சென்றாய். நான் புரியாமல் அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தேன். வீரிட்டு உன் அறையிலிருந்து படபடக்கும் புறாபோல் மீண்டும் என் முன்னே வந்து “எனக்கு மாதவிடாய் முடிந்த பிற்பாடு மூன்றாவது நாள் நானும் அவனும் உடலுறவு கொள்வோம். விளையாட்டாக பதின்மூன்று வயதில் தொடங்கிய இந்த பழக்கம் மூன்று வருடங்கள் தொடர்ந்தது… எப்போதும் அல்ல வருடத்துக்கு மூன்று நான்கு முறை இவ்வாறு செய்துள்ளோம்” என்றாய்.

நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைச் சொல்லிவிட்டு அழுவது போல் என்னைப் பார்த்தாய். உன் கண்கள் பழுப்பு நிறத்திலிருந்தன. இப்போது என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறினேன். ஏதோவொரு ஆறுதலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறாய் என்று புரிந்தது. புண்படுத்தவே விரும்பி அமைதியாக இருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நான் உன் கண்களையே பார்த்தேன். அப்படியே பின்னால் நகர்ந்து காற்றில் வீழும் ரிப்பன் துண்டுபோல் மென்மையாக உன் அறைக்கதவுக்குள் சென்று வீழ்ந்தாய்.

குளியலறையின் பெரிய நிலைக்கண்ணாடியில் என் முகத்தைப்பார்த்தேன். வீங்கி சிவந்திருந்தது. சுடுதண்ணியால் ஒத்தடம் கொடுத்தேன். என் அறைக்கு வந்து டிஷேர்டை நீக்கிவிட்டு கழுத்தின் பின்புறத்தைத் தடவிக்கொண்டு மௌனமாகச் சற்றுநேரம் இருந்தேன். சிறிது நேரத்தில் நீ என் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தாய். பதற்றம் எழுந்த சுடரின் தவிப்புடன் அலைக்களிந்து உன்னைப் பார்த்தேன். என்னை வாரிக்கட்டிக்கொண்டாய். உன் மார்புத் துடிப்பு தெளிவாக எனக்குக் கேட்டது போல் இருந்தது. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாய். என் கழுத்தில் உன் கண்ணீர் ஓட்டிப் பிசுபிசுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சட்டென்று என் சாய்வுகளை உதறி உன் கேசத்தை ஆதரவாக தடவினேன். நீ இன்னும் என்னைத் தழுவி இறுக்கமாக அழத் தொடங்கினாய்.

உன்னை சமநிலைப்படுத்தி இருக்கச்செய்தேன். ஏதோ சொல்ல எடுப்பதும், தவிப்பதுமாக உனக்குள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து நிலையிழந்து சரிந்துகொண்டிருந்தாய். கஞ்சாவை சுற்ற ஆரம்பித்தேன். நாவறண்டிருந்த உனக்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு, கஞ்சாவை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு உனக்குத் தந்தேன். வாங்கும்போது உன் கைகள் தடுமாறிச் சரிந்தாலும் நிதானமாக புகைக்க ஆரம்பித்தாய். உன் கண்களில் வழிந்த கண்ணீர் உறைந்து நின்றது. மூக்கிலிருந்து வடிந்த நீரை துடைக்க பேப்பர் துண்டு தந்தேன்.

சிறிதுநேரத்தில் நீயாகவே பேச ஆரம்பித்தாய்.

“நானும் அவனும் சேர்ந்து கஞ்சா புகைப்போம்; என் பதினெட்டாவது வயதில் கஞ்சா அப்படிப் புகைக்க ஆரம்பித்தோம்…” என்றாய். அந்த அவன் யார் என்று எனக்குப் புரியவில்லை. அது உன் அண்ணனாக இருக்கும் என்று ஊகித்தேன்.

02.jpg

“ஆனால் நாங்கள் ஒருபோதும் அதைக்குறித்து பேசியதில்லை” என்றாய். எதை என்று என்னுளே கேட்டுப்பார்த்தேன். நீயே என் புரிதல் இன்மையைப் பார்த்து “எனக்கும் என் அண்ணனுக்கும் இருந்த அந்த ஆரம்பகால உறவை” என்றாய்.

நான் அதைக்குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை. நினைக்கும்போது அதன் வீரியம் என்னைத் தாக்கியது. கொஞ்சம் தடுமாறி “ம்ம்..” என்றேன். மூன்று இழுப்புகள் இழுத்திருந்தாய். நான்காவது இழுப்புக்கு தயாராகிவிட்டு என்னிடமே மிகுதியைத் தந்தாய். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது. வாங்கி ஆழமாக உள்ளே மூச்சுக்காற்றோடு இழுத்தேன்.

“என் அப்பா மிகப்பெரிய வியாபாரி; பிலிப்பைன்சில் ஏகப்பட்ட வாழைத்தோட்டங்கள் இருந்தன, கொலம்பியாவில் கோப்பி தோட்டங்களும் இருந்தன. எப்போதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார். நானும் அண்ணாவுமாகவே வளர்ந்தோம். எங்கள் அன்னை சிறுவயதிலே தவறிவிட்டார். எங்களைப் பார்த்துக்கொள்ள நிறையவே பணியாட்கள் இருந்தார்கள்” நீ சொல்வதை புகைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் மெல்லிய குரல் மிகக்கூர்மையாக உக்கிரம்கொண்டு என்னுளே இறங்கிக்கொண்டிருந்தது.

“எனக்கும் அண்ணாவுக்கும் அந்த உறவு உருவாகி சிறிதுகாலத்திலே ஓய்ந்தது; நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்வதில்லை. அதுவொரு விளையாட்டாக இருக்கவேண்டும் என்று எனக்குள்ளே விரும்ப ஆரம்பித்தேன். நாங்கள் வளர்ந்த பின் அண்ணா காதிலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான். அப்பாவுக்கு அந்த திருமணத்தில் பெரிய விருப்பம் இல்லை. இருத்தும் மறுப்பேதும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் அண்ணா நன்றாகத்தான் இருந்தான். தனியாகவே வியாபரம் செய்தான். கொஞ்ச நாளில் அவனுக்கும் அவன் துணைவிக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமாகியது. அவள் வேறோர் ஆணுடன் சென்றுவிட்டாள்”

நீ சொன்னவை எனக்குள் எந்தவித அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை. ஒரு திரைப்பிரதியை மீட்டுப்பார்ப்பது போல, காட்சித் துண்டங்களாக ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அவன் அதனால் மிகநொந்து நூலாகினான். மிக விரத்தியில் புண்பட்டு இருந்தான். அவனுக்கு ஆறுதல் அளிக்க அப்பா என்னை அனுப்பிவைத்தார் அவன் இடத்துக்கு. முடிந்த வரை பேசி அவனை இயல்புக்கு கொண்டுவர முயன்றேன். பெண்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தான். என்னை போ போ என்று சீறிக்கொண்டிருந்தான். இருந்தாலும் பொறுமையாக அவனுடன் இருந்தேன். ஒரு முறை நான் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை உறவுக்கு அழைத்தான். மறுத்தேன். மறுபடி மறுபடி அவன் அழைக்க சண்டையாகியது. அவனின் இடுப்பில் இரண்டு உதை உதைந்துவிட்டு அன்றே புறப்பட்டு வந்தேன்…” இப்போது எனக்கு நீ என் இடுப்பில் உதைந்தது நினைவுக்கு வர தேகம் விறைத்துப் பதறியது. புகைத்த கஞ்சா எந்த மாற்றத்தையும் உள்ளே விதைக்காதது போல் இருந்தது. ஆழமாக இழுத்தேன்.

“அதன் பின் அவனுடன் பேசுவதில்லை; முற்றிலும் அந்நியமான சூழல் வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை தேர்வு செய்து படிக்கவந்தேன்” என்றாய்.

“சரி இப்போது என்ன பிரச்சினை?” என்றேன்.

“அவன் நம் சிறுவயது உடலுறவு நினைவுகள் இருக்கிறதா என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தான். நான் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது அதை வர்ணித்து, என் யோனிவாசல் வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துகொண்டிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு மேலே பார்த்தாய்.

“இப்போது இதிலிருந்து வெளிவர எனக்கு ஒரே வழிதான் உண்டு” மேலும் நீ தொடர்ந்தாய். எனக்கு பெரிதாக புரிதல்கள் வராமல் நெளி நெளியாக குழம்பிக் கொண்டிருந்தது.

“என்ன?” என்றேன். உன்னில் மௌனம் கொடியாகப் பரவிவிரிந்து சென்று கொண்டிருந்தது. கண்களைத்திறந்து என்னை உற்றுப்பார்த்தாய். உன் விழிகளில் நீர்த்திரை வடிந்து ஓய்ந்து கனிவு சுரந்தது. எழுந்து என்னருகில் வந்து என் தோள்மூட்டை இறுகிப் பற்றி என்னை இறுக்கமாக அணைத்தாய். உன் உடலின் மென் சூடு எனக்குள் ஊடுருவியது. நானும் ஆதரவாக உன்னைத் தழுவி ஆறுதல் வார்த்தை ஏதும்சொல்ல எனக்குள் துழாவினேன். வார்த்தைகள் சிக்காமல் தடுமாறி சிதறினேன். உன் உடலின் மென்மை என்னைத் தீண்டி விரிந்தது.

கொஞ்சம் தடுமாறி சாய்வாக மனதை சரித்துக்கொண்டேன்.

உன் உதட்டால் எட்டி என் உதட்டின் விளிம்புகளைக் கவ்வினாய். வாழப்பழத்தின் தோலை உள்பக்கமாகக் கவ்வியது போல் என் உதடு உணர்ந்து மூர்க்கம் கொண்டது. நாக்குகள் பிணைந்து தீண்டி உக்கிரமாகியது. முத்தங்கள் தீயாக வருடி தேகம் எங்கும் பெய்தது. நிலைதடுமாறி சரிய ஓர் நிதானம் படகாக எனக்குள் நீந்தி வந்தது.

அன்றைய பொழுது ஓய நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். இன்பம் தேய்ந்து சுரந்து மறுபடியும் அடங்கியிருந்தது. படுக்கையில் வீழ்ந்திருந்திருந்தவாறே என்னைப் பார்த்து “கஞ்சா வேண்டும்” என்றாய். அசதியுடன் நழுவும் ஆடைகளை சரிபடுத்திக்கொண்டு பேப்பரை எடுத்து விரிந்து நிதானமாகச் சுற்றத் தொடங்கினேன். கண்களை மூடி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாய். நான் உன்னை நோக்குவதை உள்ளுணர்வில் அறிந்தோ என்னவோ கண்களை விழித்து என் கண்களையே பார்த்தாய். உன் கண்களில் அமைதி செந்நிறமாகத் தெரிந்தது. மீண்டும் புகைத்தோம். இந்தமுறை புகைத்து முடிய என் மார்பில் நீ புதைந்தாய். உன் கேசத்தை வருடிக்கொண்டு மிகுதியை புகைத்து முடிந்தேன். அதன் பின்பும் கலவி புரவி வேகத்தில் எழுந்து திமிறியது.

மறுநாள் பல்கலைக்கழகம் முடிந்த பிற்பாடு உடை மாற்றிவிட்டு என் அறைக்குள் வந்து என்னை தள்ளி வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து நாக்கால் என் முகத்தை வருடினாய். அன்றும் கலவி கொண்டோம். மிக உக்கிரமாக என்னை புரட்டி எடுத்தாய். புன்னகைத்துக்கொண்டே இருந்தோம்.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இருள் வடியும் அன்றைய பின்னேரப் பொழுதிலே நீ உன் நண்பர்களுடன் ஸ்காட்லாந்துக்கு விடுமுறையை கழிக்கச் சென்றாய். நீல நிற அங்கியுடன் நீ புறப்பட்டுச் சென்றதை விழியசையாமல் பார்த்தவாறிருந்தேன். எனக்கு ஆய்வு வேலைகள் குமிந்திருந்தன. இந்த நான்கு நாட்களில் அதனை முடிப்பதாக தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன்.

நீயற்ற வெறுமை எனக்குள் முளைக்க, உன் மீதான தங்குதலை உணர்ந்து என்னையே வெறுத்து உன் மீதான நினைவுச் சுழிப்புகளை உடைக்கத் தொடங்கினேன். கலவியை விட அதன் மீதான நினைவுகள் எத்தனை உக்கிரம் கொண்டவை. அதன் இன்பத்துக்குள் வீழ்ந்து திகைத்து தட்டுத்தடுமாறி என் ஆய்வு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்ய ஆரம்பித்தேன்.

நீயொரு சீனப் பாடலை உற்சாகமாக முணுமுணுத்துக்கொண்டு வீட்டின் கதவைத்திறந்து ஐந்தாம் நாள் விடுமுறையை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாய். உன் முகம் பூரிப்பால் அலைவுற்றவாறிருந்தது. என்னைப் பார்த்து தாமரைச் சிரிப்பை எறிந்துகொண்டு உன் அறைக்குள் சென்று வீழ்ந்தாய்.

அதன் பின் உன்னைக் காண்பதே மறுபடியும் அபூர்வமாகத் தொடங்கியது. உன் அறையை விட்டு நீ வெளியாகுவதே இல்லை. சமையலறையிலும், வரவேற்பறையிலும் உன் வருகைக்காக காத்திருந்து தேய்ந்தேன். உன் அறைக்குள் நுழைய அச்சம் விம்மியது. வெறுமை என்னைச் சூழ, தத்தளிப்புக்குள் வீழ்ந்து நொறுங்கினேன். உன் அடர் வாசம் என் நாசிக்கால் நுழைந்து என்னைப் படுத்தி நண்டு கால்களால் எண் திசையிலும் கீறியது. நீண்ட தடுமாற்றத்திற்குப்பின் உனக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினேன். உன் புறக்கணிப்புகள் எனக்குள் சீற்றம் பெற “”உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டும் வா” என்று செய்தி அனுப்பினேன்.

தூக்கத்திலிருக்கும் போது என் அறையின் கவதை தடாலாகத் திறந்து உள்ள வந்தாய். நான் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போர்வையை விலத்தி எழுந்து பார்த்தேன். உன் கேசம் தீ நாக்குகளாக அலைந்தது. மௌனமாக என்னைப் பார்த்தாய். அந்த மௌனம் என்னைச் சாய்த்தது. எதுவும் சொல்லாமல் என் அறையை விட்டு நீங்கினாய். உடனே எழுந்து வாசலுக்கு வந்து உன் கைகளை எட்டிப்பிடித்து இழுத்தேன். நீ திமிறினாய். அந்தத் திமிறலுக்குள் என் மீதான உன் சாய்வைக் கண்டேன். என் மார்புக்குள் நீ சாய்ந்தாய். எனக்கு அழுகை வெடித்துக் கசிய கண்ணீர் வடிந்து உன் கேசத்தில் கோடுகள் வரைந்தன.

“நாயே என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டியா?”

என் இடிப்பில் எட்டி வலிமை தெறிக்க உதைந்தாய். அதை எதிர்பார்த்தவன் போல் வாங்கிக் கொண்டேன்.

“எல்லாத்தையும் மறக்கப் பயணம் போய் வந்தேன்; இப்போதுதான் மகிழ்ச்சி துமித்தது. நீ மீண்டும் நினைவுபடுத்தி ஆரம்பிக்கிறாய்”

இடுப்பு மிக வலிக்க, இன்னும் மிகை உணர்ச்சியைக்கூட்டி மௌனமாகத் தரையில் அமர்ந்தேன்.

“நடிக்காத நாயே” என்றாய் உக்கிரம் தீயாகப்பாய. அமைதியாகவே இருந்தேன். என்னை இழுத்து எழுப்பினாய், பின் என் முகத்தை எட்டி உதட்டில் முத்தம் இட்டாய், “நாயே என்ன இத்தனை மெசேஜ்? அண்ணன் போல் இப்படி அனுப்பியிருக்கிறாய்” என்று விட்டு என்னை இறுக்கி அணைத்தாய்.

இருவருமாக மொட்டை மாடிக்குச் சென்று வான் நோக்கி முகம் பார்க்க நட்சத்திரங்களைப் அவதானித்தவாறு கஞ்சா புகைத்தோம். குளிர் காற்று வீசித் தீண்ட, கைகளை இறுக்கி என்னை இன்னும் நெருக்கமாக அணைத்தாய். உன் மூச்சுக்காற்று என்னுள் ஊர்ந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அமைதியை கீறும் வண்ணம் “அண்ணாவை எனக்கு மிகப்பிடிக்கும்” என்றாய் சட்டென்று யோசனையிலிருந்து விடுபட்ட அம்பாக.

“தெரியும்” என்றேன்.

என் மார்பில் கைகளை ஊன்றி எழுந்து என் முகம் பார்த்து “எப்படி என்றாய்?” நான் வெறுமே புன்னகைத்தேன். எனக்குள் ஓர் அதிர்வு கிளர்ந்து வளர்ந்து சரிந்தது.

“குற்றவுணர்வை கடப்பது என்பது எத்தனை கடினம்” என்றாய் ஒரு பெருமூச்சு வெளிப்பட.

“அதை யார் மீதாவது சாய்த்துவிட்டு கடப்பது தான் இருக்கும் வழி” என்றேன்.

நீ உடல் அசைய என்னை ஊடுருவிப்பார்த்தாய். நானும் உன் முகத்தை ஊடுருவி உன் விழிகளை ஊடுருவிப் பார்த்தேன் என் முகம் கலங்கலாக உன் சிறிய விழிகளில் தெரிந்தது, அந்த மென் ஒளியிலும்.

அன்றைய பொழுதில் மீண்டும் நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். காலையில் எழுந்து உன் வருகையிலிருந்து எனக்குள் நடந்ததை சொல்லிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அன்றைய தின வகுப்புக்கு நீ புறப்பட்டுச் சென்றாய். உன் அண்ணாவின் பெயரை இதுவரை நான் கேட்டதில்லை, நீயும் சொன்னதில்லை. என் பெயரை எனக்குள் நானே சொல்லிப் பார்த்தேன்.

முற்றும்

 

http://www.annogenonline.com/2018/04/10/saaivu/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில பிறந்து இங்க படிக்க வந்த ஆண் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை தைரியமாக எழுதி உள்ளார்...இப்படி பெண்கள் எழுத முடியுமா? tw_anguished:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்"

சுயாந்தன்

March 04, 2018

இதற்கு முந்தைய அனோஜனின் கதைகள் பற்றிய பதிவுகளில் அவர் கதையின் பலங்களை மட்டுமே பதிந்திருக்கிறேன். சாய்வு என்ற கதையில் அவரது பலம்-பலகீனம் இரண்டையுமே அவதானிக்கலாம்.

"சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்" என்று கதை மீதான  ஒட்டுமொத்தமான என் பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது. 

1. அத்துமீறலின் புலப்பதிவு.

அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும் இருந்தெழுபவை. அதற்கு விஞ்ஞானம், பண்பாடு, இனம், சமூகம், மொழி, சமாதானம் என்று எந்தப் பிரிவினையும் கிடையாது. அந்த அத்துமீறல்கள் ஆரம்பத்தில் ஒரு வியப்பையும் போகப்போகப் பழக்கப்பட்ட ஆழ்மன பிம்பத்தையும் நம்மிடையே அளிக்கின்றது. இதன் புரிதல்களுக்கான பக்குவம் உருவாக நம் சமூகத்தின் கடப்பாடுகள் வழிசெய்யாது. அந்தப் புரிதலை அடைய இரண்டு வழிகள் உண்டு. 
1. அனுபவம். 2. இலக்கியம்.
அனுபவத்தை நம் சமூகத்தின் அடைவுகளைத் தாண்டி புதிதான சூழலில் சேரும்போது அதன் உத்வேகமான "மன நிகேதனம்" நமது சுய சிந்தனைகள் மீது கேள்விகளைத் தொடுக்கக் கூடியது. அதற்கான புரிதல்களை ஆரம்பத்தில் இலக்கியம் மூலம் அடைந்து வைத்திருப்போம் என்றால், விடைகளை எழுத்தின் மூலம் நம்மால் வெளிப்படுத்த முடியும். இந்த வெளிப்பாட்டைக் "Culture Shock" என்ற கோட்டின் மூலம் பிரிப்பவர்கள் கல்வியியலாளர்கள். வெளியில் இருப்பவர்களால் அதனை வெறுமனே கலாச்சார அதிர்ச்சி என்று வகுக்க முடியாது. அப்படி வகுப்போம் என்றால் அந்த இலக்கிய வெளிப்படுத்துகை ஒரு வெளிறிப்போன தட்டையான ஆக்கமாகவும், வன்மம் கொண்ட புறக்கணிப்பை மட்டுமே வேண்டுகின்ற மரபுப் பார்வையாகவுமே இருக்கும். அதன் மீதான பார்வைகளை "அத்துமீறலின் புலப்பதிவு" என்ற கட்டுக்குள் வைத்துப் பார்க்கவேண்டும். இந்தக் கட்டு நம் சமூகத்தின் அத்தனை கட்டுக்களையும், பிரம்மைகளையும், பேசாப்பொருட்களையும் பேசி நகர்வது.

"சாய்வு" என்ற அனோஜனின் கதையை நாம் இவ்வாறுதான் அணுகவேண்டும். பலர் என்ன காரணத்துக்காகத் திருமணம் செய்கிறோம் என்று தெரியாமலே திருமணம் செய்கின்றனர். அந்தக்காரணத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் வயது இருபது தொடக்கம் முப்பது. எவனொருவன் அதற்கான காரணம் இதுதான். இதன் உள் விடயங்கள் பண்பாடு-கலாசாரம் தாண்டிய கருவானவை என்ற புரிதலை அடைகின்றானோ அவனால் காதல்-காமம்-உடல் பற்றிய அக-புற வெளிப்பாடுகளைக் காட்சிப்படுத்தமுடியும். சாய்வு கதையின் கருவாக அதனைக் கருதுகிறேன். தமிழ் இளைஞன் இங்கிலாந்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறான். அருகிலுள்ள அறைக்குக் குடியிருக்க சீன யுவதி வருகிறாள். இருவரும் பேசிக்கொள்கின்றனர். உரையாடுகின்றனர். தொடுகை மோதலாக மாறுகிறது. பின்னர் உடலியல் உறவுகளையும் வைக்கின்றனர். அந்த உறவு வைத்தலுக்கான காரணத்தை அத்துமீறிய சில விடயங்களைக் கொண்டு கதை நியாயப்படுத்துகிறது. சகோதர-சகோதரிகளின் புனிதம் தகர்க்கப்படுகிறது. அல்லது அந்த உறவின் இதுவரையான பாரம்பரியப் பார்வை மாற்றுநிலைப்படுத்தப்படுகிறது. இதனை கலாசாரப் பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாது. என்றாலும் அங்குள்ள கலாச்சார வேர்களில் இதன் தாக்கம் சாதாரணமானது.  இங்கு இந்த விடயத்தைப் பதிந்தபோது கதாசிரியரின் பலம் என்னவென்றால், அத்துமீறலுக்காக எடுத்துக்கொண்ட பெண்ணின்  வளர்ப்பிடமும் பூர்வீகமும் சீனா-ஹொங்கொங் என்று வருகிறது. இங்கு இவ்வகையான Incest உறவுகளைச் செய்திகளில் சாதாரணமாக வாசிக்கலாம். அதனை நமது அனுபவத்துடன் கதைப்படுத்துவதில் கண்ணியம் என்று கலாசார காவலர்கள் கருதுபவற்றை கதையாசிரியர் நிராகரித்து எழுதியுள்ளார். 
அத்துமீறலின் புலப்பதிவு என்பதை இக்கதையின் மிகமுக்கியமான பலமாகக் கருதலாம். அனோஜனின் இதம் கதையில் வரும் சிங்களப் பெண்ணுக்கும் சாய்வு கதையின் சீனப் பெண்ணுக்கும் இடையில் பெரியதொரு பண்பாட்டு நகர்வையும் கலாசார தகர்ப்பையும் அவதானிக்கலாம். 

2. செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்.

பாலுறவுக் கற்பனையில் மீந்துகொண்டிருக்கும் மனம் எதிரிலுள்ள மாற்றுப் பாலினத்தவர்களைக் கண்டதும், ஸ்தூல சரீரமும் சூட்சும சரீரமும் என்ற இருவேறு நிலைகளும் இணைந்து நிலையற்றுத் தவிக்கத் தொடங்குகிறது. அதனை விட்டு விலக சொப்பன மைதுனமோ, நனவு மைதுனமோ தேவைப்படுகிறது. இங்கு மைதுனம் என்று நான் குறிப்பிட்டது "Sexual Union".  இந்த பாலியல் ஐக்கியத்தின் நிலைபேறற்ற எழுத்துக்கள்தான் அனோஜனின் சாய்வு என்ற கதை. இதில் இருக்கும் செயற்கைத் தன்மைகளை அழுத்தமாகக் கூற அல்லது செயற்கைத் தன்மைகளை நியாயப்படுத்த  தன்னிலை அனுபவம் போல கதையை நகர்த்தியுள்ளார். அது வாசிப்பவனிடத்தில் ஒரு உண்மையான, செயற்கைப்படுத்தாத முன்வைப்பு என்று  எண்ணவைக்கும். இதற்கான பிரயத்தனம்தான் சீனப்பெண்ணுடனான உரையாடல்களும் உடலுறவுகளும். 

சாய்வு கதையை நான் விரும்பக் காரணம் அதன் மொழிநடையும், அசாதாரணமான மரபுமீறலும்தான். ஆனால் அதனுள் இருக்கும் குழந்தைத் தனங்களைச் சொல்லாமல் விடமுடியாதல்லவா?.  
A. எவ்வளவுதான் ஐரோப்பியக் கலாச்சாரம் வெளிப்படையான மனதுடன் செயற்பட்டு வந்தாலும் அதற்கென்று இறுகிய பல தனிநபர் சார்ந்த சிந்தனைகள் இருக்கவே செய்கிறது. ஆசியாவிலிருந்து செல்லும் இருவர் அந்தப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள நீண்டகாலம் எடுக்கலாம். அவ்வாறு புரிந்து கொண்டாலும் பரஸ்பரம் பாலுறவு பற்றிய பிரக்ஞை ஒற்றைப் புன்னகையுடன் இருவருக்கும் வந்துவிடுவதில்லை.   
இந்த வழக்கமான போக்கைக் கதையின் முற்பாதியில் அவதானிக்கலாம். கதையின் ஆசிரியரே கதை சொல்லியாகவும், கதையின் பாத்திரமாகவும் அமைவதனால் இதன் குழந்தைத் தனங்கள் மீந்திருக்கின்றன. சுய அனுபவக் குறிப்புகளுடன் கற்பனைகளை ஏற்றும்போது அவற்றின் குழந்தைத் தனங்களைக் கண்டறிவதில் வாசகனுக்கு அவ்வளவு இடர்பாடுகள் ஏற்படப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். 
B. எவ்வளவுதான் அப்பாவியான ஆணைக் கண்டாலும் அவன் ஒரு பெண்ணின் கையால் அடியுதை வாங்குபவனாக இருந்தாலும் ஒரு பெண் தான் தனது சோதரனுடன் உறவுகொண்டதை அவ்வளவு சாதாரணமாகக் கூறிவிடமாட்டாள். அவ்வாறு கதைக்குக் கூறுகிறாள் என்றால் அப்பெண்ணைப் பற்றிய பட்டவர்த்தனமான முன்முடிபுகளை வாசகருக்கு அளிக்கவேண்டிய கடமையிலிருந்து கதையாசிரியர் தவறிவிட்டார் என்றே நினைக்கிறேன். சோதரனுடைய தொடுகையும் கதைசொல்பவனின் தொடுகையும் ஒரே இடம் என்பதனால் அது சாதகம்தானே என்ற தர்க்கம் கதையின் செயற்கையாக்கமன்றி வேறில்லை.

3. மொழிநடையும் அழகியலும்.

ஒரு பெண்ணுடனான சந்திப்பு நிகழ்ந்த சம்பவங்களைக் கூறிக்கொண்டு வரும்போது அவளது உருவமைப்புப் பற்றிய வருணனைகளும் உவமைகளும் வரிசையாக வருகின்றது. தோல், கண், முகம், தேகம் என்று ஒவ்வொரு சம்பவங்களை அடுத்தடுத்து பிரயோகிக்கப்படுகிறது. இதனை 

கதையின் மொழிப் பிரயோகத்தில் முக்கியமான அம்சம் ஒரு சீனப் பெண்ணை ஒப்பிடுகையில் இலங்கையின் முக்கியமான நமது வாழ்வின் அன்றாடக் குறியீடுகளான விடயங்கள் குறிப்பிடப்படுகின்றது. பனங்கிழங்கு, நித்திய கல்யாணி என்று பல. சீனப் பெண்ணின் புன்னகையை நம் நாட்டின் நித்தியகல்யாணியுடன் ஒப்பிடுவது தேர்ந்த அழகியல் என்றும் கருதலாம்.
"தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்திய கல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது."

இதனை விட அனோஜனின் அநேக கதைகளின் மனம் பொருளாதாரத்தின் மேல்தட்டுச் சார்ந்தது. எங்கும் ஜாதீய, இனத்துவ அடையாளங்களின் ஆழ்மன வெளிப்பாடுகள் தீவிரமாக எதிரொலிக்காத தன்மையை அவதானிக்கலாம். உதாரணமாகச் சில கதையாசிரியர்களை எடுத்தால் அவர்களது கதையின் மனவெளிப்பாடுகளைக் கொண்டு அவ்வாறான போக்கைக் காணலாம். புதுமைப் பித்தனின் கதைகளின் கதாபாத்திரங்கள், களங்கள் சைவ வேளாள ஜாதிய மரபையும் மௌனியின் கதைகளில் பிராமண மரபையும் தெளிவாக அடையாளம் காணலாம். இதனை ஆழ்மன வெளிப்பாடு என்றும் இதுவே ஒரு யதார்த்தக் கதையாசிரியரின் வெளிப்பாடு என்றும் கூறலாம். இதனை அவன் வெளிப்படுத்தா விட்டால் அவனின் கதை தட்டையான ரூபத்தை அடையும் என்பது தெளிவு. இங்கு அனோஜனின் கதையின் பலமாகவும் பலவீனமாகவும் நான் கருதும் ஒரு புள்ளி இதுதான். இதனை இவர் தன் பொருளாதார மேல்தட்டின் தளத்தில் நின்று பாலுறவுகளாகவும், உல்லாச வாழ்வாகவும் கூறுகிறார். இதனைத் தன் இனத்துவ ஜாதீய ஆழ்மனப் போக்குகளின் சமகால மாறுகை என்று பலமாகக் கருத வாய்ப்புண்டு. அதே நேரம் இந்த பொருளாதார மேல்த்தட்டு மனோநிலை என்பது ஒரு உயர் வர்க்க எண்ணப்பாடு என்ற பலவீனமான கூறுமுறை ஒன்றும் அதற்குள் எதிரொலிக்கிறது என்பதையும் நாம் அடையாளம் காணவேண்டும்.

 

https://suyaanthan.blogspot.com/2018/03/blog-post_4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.