Jump to content

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?


Recommended Posts

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?

 
சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின.

கடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது.

சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரியா அரசு குற்றம் சாட்டுகிறது. இந்தத் தாக்குதல்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவும், இரானும் அமெரிக்க கூட்டணிப்படைகளின் தாக்குதலுக்கு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று காட்டமாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஷ்யா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சிரியா விவகாரத்தில் எதிரும் புதிருமாக கச்சைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா, இரான், சிரியா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், மறுபுறமோ, ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை வரவேற்கின்றன.

ஆனால், உலகளவில் அதிகரித்துள்ள இந்த பதற்றமான சூழ்நிலை பற்றி இதுவரை இந்தியாவின் அரசு எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறது.

இரு தரப்புடனும் இந்தியாவுக்கு நெருக்கமான உறவுகள் இருந்தாலும், தற்போதைய கொந்தளிக்கும் சூழலில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

மத்திய கிழக்கு விவகாரங்களில் பரிச்சயம் கொண்ட கமர் ஆஹாவின் கருத்துகள் இவை:

"இரு தரப்புகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தால், இந்தியாவின் நிலைமை மேலும் சிக்கலாகும். ஒருபுறம், இந்தியாவின் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்றால், அதன் எதிரணியில் இருக்கும் ரஷ்யாவுடனான நமது தொடர்போ மிகவும் தொன்மையானது. ரஷ்யா இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது. ஆனால் மாறிவரும் உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டால், மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதே நல்லது. இந்தியா போரை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூறலாம். ஐ.நாவின் வழிகாட்டுதல்களின்படி நடக்கவேண்டும் என்று அது கூறும்."

மேலும் சில விஷயங்களையும் கமர் ஆஹா கோடிட்டு காட்டுகிறார், "இந்தியா எப்போதுமே போரை விரும்பியதில்லை, ஏனெனில் போர் மூண்டால் அது எண்ணெய் விலையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், அதன் விளைவாக இந்திய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது."

இதைத்தவிர மற்றொரு முக்கியமான விஷயம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் என்கிறார் கமர் ஆஹா. "மத்திய கிழக்கு நாடுகளில் 85 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தகமும் அதிகம். எனவே இந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே இந்தியா விரும்பும்."

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த மெளனத்திலிருந்து இந்தியாவுக்கு என்ன நன்மை?

இராக் மீது தாக்குதல் நடத்தும்போது அமெரிக்கா ஐ.நாவின் அனுமதியை பெறவில்லை. அந்த சமயத்திலும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்தியா எந்த கருத்தையும் கூறவில்லை.

ஆனால், சரித்திரத்தை இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், ஜவஹர்லால் நேரு காலத்தில், கொள்கை ரீதியாக இந்தியா தனது கருத்தை முன்வைத்திருப்பதை காணமுடிகிறது.

பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன் இதுபற்றி விளக்கமாக கூறுகிறார். "கடந்த 20 ஆண்டுகளில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவுடன் நட்பை வளர்த்துக் கொண்ட பிறகும்கூட இந்தியா ரஷ்யாவை விட்டு விலக முடியாது. இதற்கு காரணம் ரஷ்யா, இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவுகிறது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் சிறப்பு விமானங்களை ரஷ்யா வழங்குவதைப் போல அமெரிக்கா கொடுப்பதில்லை. "

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

" 70 சதவிகித இந்திய ராணுவ தளவாடங்கள் தற்போதும் ரஷ்யாவில் இருந்தே வாங்கப்படுவது இந்தியாவுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது ராணுவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமா? அதிலும் குறிப்பாக மோடி அரசின் கொள்கைகளின்படி அதுவும் சாத்தியம் என்று சொல்ல முடியாது" என்கிறார் பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன்.

மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு என்ன?

இந்திய வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றைப் பார்த்தால், இந்தியா பலவீனமான நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

பல இந்திய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் பாலத்தீன தினத்தை கொண்டாடுவதன் மூலம் பாலத்தீன பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகிறது.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் சோஹராப் இதுபற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவிடுகிறார்:

"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்த பிராந்தியத்தின் எந்தவொரு அரசியல் பிரச்சினையுடனும் எந்தவித தொடர்பும் தேவையில்லை, வர்த்தக உறவுகளை மேம்படுத்தினால் போதும் என்று இந்தியா கருதுகிறது. அதனால்தான் இந்தியா எந்தவொரு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில்லை".

"எந்தவொரு நாட்டின் அரசும், வெளிநாட்டு சக்திகளால் மாற்றப்படக்கூடாது என்ற கொள்கையை கொண்ட இந்தியாவின் முன் மற்றொரு மாபெரும் கேள்வி தொக்கி நிற்கிறது. ஒரு நாட்டை ஆளும் அரசால் அதன் மக்களையோ, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்றால், அந்த சூழ்நிலையில் இந்தியாவின் இந்த கொள்கையும், கோட்பாடுகள் பொருந்துமா?"

சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இந்தியா வலுவான நாடாக இல்லாமல் இருந்த காலகட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளான ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவராக இருந்தது. அதன் விளைவாக, இந்த நாடுகள் இந்தியாவுக்கு அரசியல் ஆதரவு கொடுத்துவந்தன. ஆனால் இப்பொழுது இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிட்டது."

இருந்தாலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் சுஷாந்த் சரீனின் கருத்துப்படி, இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்ட தீவிர மாற்றம் தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக கூறுவது சரியானதல்ல.

இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறும் சரீன், ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலும் இந்தியா இதுபோன்ற பல நடைமுறை முடிவுகளை எடுத்த பல சம்பவங்கள் உள்ளது என்கிறார்.

பிரச்சனையின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு இந்தியா முன்னேறிச் செல்கிறது; ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து சர்வதேச சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று இந்தியா கருதுவுதாக கமர் ஆஹா கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global-43771153

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.