Jump to content

சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்


Recommended Posts

சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்

 

mahinda.jpgசிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள்  மீண்டும் நாட்டில் தென்படுகின்றன. 

ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காதமை, அவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பௌத்த தேசியவாதத் தலைவரான மகிந்தவின் புதிய கட்சிக்கு ஆதரவாக மக்கள் தமது வாக்குகளை வழங்கியதன் மூலம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகளில் இடம்பெறவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் புதிய கட்சிக்கு மக்கள் அளித்த வாக்கானது, இவர் சிறிலங்காவின் மிகவும் பிரபலமான ஒரு அரசியல்வாதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவரது ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதேவேளையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவாரோ என்கின்ற அச்சம் இவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியினரால் அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இது தோல்வியில் முடிவடைந்தது. இந்த விவாதத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

‘இடைத்தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமானது மிகவும் உறுதியற்றதாக அமையப் போகிறது. நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் இடைத்தேர்தலை நடத்துவதைத் தவிர வேறெந்தத் தெரிவையும் கொண்டிருக்கவில்லை’ என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபரின் வாரிசுமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

பெப்ரவரியில் இடம்பெற்ற தேர்தல்களுக்கான பரப்புரை விளம்பரங்கள் அச்சுறுத்தும் விதமாக அமைந்திருந்தன. ‘ரக்பி விளையாட்டில் வெற்றி பெற்றது  மரண தண்டனைக்கு உட்பட்டதை   நினைவுபடுத்த வேண்டும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரை பதாகை ஒன்றில் வினவப்பட்டிருந்தது. அதாவது படுகொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜபக்ச குடும்பத்தைச் சாடியே இந்தப் பதாகை இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று ‘பயங்கரவாதத்தினதும் அடக்குமுறையினதும் குறியீடாக வெள்ளை வான்கள் காணப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும்’ என்கின்ற விதத்தில் பதாகைகள் காணப்பட்டன.

இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமதப்பட்ட ஒரு தலைவர் மீண்டும் எழுச்சியுறுவதானது அரசியல் அவதானிகள் மத்தியில் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

‘ராஜபக்ச ஒருபோதும் அரசியலை விட்டுச் செல்லமாட்டார். இவர் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து அரசியல் நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.

2015ல் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். இவரது அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இவரிடமிருந்து விலகி கூட்டு அரசாங்கம் ஒன்றை உருவாக்கினர். ஊழலை முடிவிற்குக் கொண்டு வருவதாக பரப்புரை செய்ததன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தனர்.

எனினும் நீண்டகாலமாக அரசியல் எதிரிகளாக இருந்த இருவர் ஒன்றாக ஆட்சியை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. ‘சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மற்றும் பிரதமருக்கு இடையிலான உறவானது மிகவும் மோசமாக காணப்படுகிறது’ என கீனன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் போன்ற நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்வதற்காக மைத்திரிபால சிறிசேனவால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதாவது பிராந்தியங்களுக்கான அதிகாரப் பகிர்வு, ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்தல், அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துதல் உட்பட பல உறுதிமொழிகளை சிறிலங்காவின் தற்போதைய அதிபர் முன்வைத்திருந்தார்.

நாட்டில் நிலவும் பௌத்த தேசியவாத உணர்வலைக்கு முகங்கொடுக்க முடியாததாலேயே சிறிசேன தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுவதை விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பௌத்த தேசியவாத உணர்வலையை எதிர்ப்பதன் மூலம் மீண்டும் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக மைத்திரிபால சிறிசேன தனது வாக்குறுதிகளை முற்று முழுதாக நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தால் வெங்காயம், மீன் மற்றும் தேங்காய் போன்றவற்றுக்கான விலை அதிகரிப்பதைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் உரமானியத்தை அகற்றுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானமானது விவசாயத்துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.

‘மகிந்த எங்களது நலனில் அக்கறை காண்பித்தார்’ என சிறிலங்காவின் தென் கரையோரக் கிராமமான மடிலாவைச் சேர்ந்த நெல் மற்றும் வாழை பயிரிடும் விவசாயி ஒருவர் தெரிவித்தார். ‘அவரது ஆட்சிக்காலத்தில் விவசாய உரங்கள் தற்போதைய விலையை விட எட்டு மடங்கு குறைவாகக் காணப்படுகிறது.

தற்போது விவசாயப் பொருட்களின் விலை அதிகரித்ததால் எனது வருடாந்த இலாபமானது அரைவாசியாகக் குறைந்துள்ளது. தற்போது உரமானியங்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. சிலவேளைகளில் இவற்றைப் பெறமுடியாத நிலையும் காணப்படுகிறது’ என குறித்த விவசாயி தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் சீனர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிறிதொரு தென்னிலங்கை விவசாயி கருணானப்பால கவலை தெரிவித்தார். சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்குவதாக சிறிசேன அரசாங்கம் கடந்த டிசம்பரில் தீர்மானித்தது. ராஜபக்ச அரசாங்கத்தால் சீனாவிடமிருந்து கடனாகப் பெறப்பட்ட 8 பில்லியன் டொலரைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே இத்தீர்மானத்தை சிறிசேன அரசாங்கம் எடுத்தது.

‘சிறிசேன எமது சொத்துக்களை விற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதை விட எமக்காக என்ன செய்துள்ளார்?’ என கருணானப்பால வினவினார்.

2015 தொடக்கம் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள சிவில் அமைப்புக்கள் கூறுகின்றனர். அதாவது ஊடகத் தணிக்கை நீக்கப்பட்டுள்ளமை மற்றும்  ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இரவு வேளைகளில் ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் தற்போது காணப்படாமை, தற்போது ஊடகங்களால் அரசாங்கத்தைக் கூட விமர்சிப்பதற்கான ஊடக சுதந்திரம் உள்ளமை போன்ற பல்வேறு மாற்றங்கள் சிறிசேன அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்  ஏற்பட்டுள்ளதாக சிவில் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தற்போது மீண்டும் தமது அலுவலகங்களை சிறிலங்காவில் திறந்துள்ளதையும் காணலாம்.

மக்கள் தற்போது இயல்பு வாழ்வை வாழ்வதாக வழக்கறிஞரும், Transparency International என்கின்ற அமைப்பின் சிறிலங்காவிற்கான இயக்குநருமான அசோக ஒபயசேகர தெரிவித்தார். ‘பொதுமக்கள் தற்போது அச்சமின்றி வாழ்கின்றனர்’ என அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் போன்றன நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட பரப்புரை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் புதியதொரு ஆரம்பத்திற்காக காத்திருக்கிறோம். நாங்கள் எமது தவறுகளைத் திருத்திக் கொள்வோம். எமது அயல் நாடுகளுடன் பரந்ததொரு நட்புறவை வளர்த்துக்கொள்வோம்’ என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சியானது மேற்குலக நாடுகளுடன் தூய்மையான உறவை ஏற்படுத்தும் எனவும் ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபையின் விசாரணையின் பங்கெடுப்பது தொடர்பாக ஆழமாக ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

‘எந்தவொரு யுத்தமும் இழப்புக்களைக் கொண்டதாகவே இருக்கும். நாங்கள் அதனை மறுக்கவில்லை ஆனால் இதன் முடிவானது எதிர்காலத்திற்கு தேவையானதாகும்’ என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

ராஜபக்சவின் குடும்பத்தின் எதிர்காலமானது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்களது கட்சியானது உள்ளுராட்சித் தேர்தலில் 45 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.  ஆனால் இத்தேர்தல் பெறுபேறானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையையோ அல்லது அதிபர் பதவிக்கான வெற்றியைப் பெற்றுக்கொடுக்கப் போதுமானதாக இல்லை.

எதிர்க்கட்சிகள் தமக்குள் உள்ள பேதங்களைக் களைந்து 2015ல் ஒன்றுசேர்ந்தது போன்று தற்போதும் ஒன்று சேர்ந்தால் ராஜபக்சாக்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முடியும். ‘உள்ளுராட்சித் தேர்தல் பெறுபேறானது இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே இக்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டணியின் கீழ் போட்டியிடும் போது பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும்’ என வழக்கறிஞரான அசோக ஒபயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

வழிமூலம்       – The Guardian
ஆங்கிலத்தில் – Michael Safi and Amantha Perera
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2018/04/15/news/30406

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.