Jump to content

பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம்


Recommended Posts

பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம்

 

 
wahab%20riaz

வஹாப் ரியாஸ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார்.

கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பயிற்சி முகாமுக்காக அறிவிக்கப்பட்ட 25 வீரர்கள் கொண்ட உத்தேசப் பட்டியலில் கூட வஹாப் ரியாஸ் பெயர் இடம்பெறவில்லை. அயர்லாந்து பயணத்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸின் பணி அர்ப்பணிப்பு, பயிற்சிக்கான நாட்டம் ஆகியவற்றை கேள்விக்குட்படுத்திய ஆர்தர், ‘இரண்டு ஆண்டுகளில் வஹாப் ரியாஸ் ஒரு போட்டியைக் கூட எங்களுக்காக வென்று தரவில்லை’ என்று சாடினார்.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு மிக்கி ஆர்தர் கூறும்போது, “2 ஆண்டுகளில் அவரால் எந்த ஒரு போட்டியையும் வென்று தர முடியவில்லை. நீண்ட காலமாக அணியில் இருப்பவர்கள் போட்டிகளை வென்று கொடுத்து தரநிலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

இல்லையெனில் நீண்ட எதிர்காலம் உடைய இளம் வீர்ர்களுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும். வஹாபை நீக்குவது மிகப்பெரிய முடிவுதான் ஆனால் நேரத்துக்கேற்பவே அணித் தேர்வு செய்யப்படுகிறது. வீர்ர்கள் தங்கள் இடம்பற்றிய உத்தரவாதம் மற்றும் சவுகரிய நிலைகளிலிருந்து வெளியே வர வேண்டும்” என்றார்.

உடற்தகுதி சோதனையில் வஹாப் ரியாஸ் அதிகாரபூர்வ நிர்ணயமான 17.4 புள்ளிகள் ஸ்கோர் செய்தது போதாது என்று கூறும் ஆர்தர் அதிகாரப்பூர்வமற்ற 19 புள்ளிகள் என்று நிர்ணயம் செய்து வஹாபை வெளியேற்றியுள்ளார், புதிய அஃப்ரீடி 18 புள்ளிகள் எடுத்துள்ளார்.

“பந்து வீசும் போது வஹாப் ரியாஸை நான் குறை கூற மாட்டேன். பயிற்சி, கட்டுக்கோப்பு உள்ளிட்ட விஷயங்களில்தான் நான் அவரிடம் குறைகாண்கிறேன்.

நான் பாகிஸ்தான் கிரிக்கெட் சூழலை மாற்ற விரும்புகிறேன். குறைந்தபட்சமாக செய்வது போதும் என்று நினைக்கும் வீர்ர்களிடம் நான் ஆர்வம் காட்டுவதில்லை. இது உயர் திறன் சூழலாகும், இங்கு சாமானியங்களுக்கு இடமில்லை. போட்டிகளை சீரான முறையில் வெற்றிப்பெற்று தரவில்லையெனில் தானாகவே அணியில் உங்கள் இடம் கேள்விக்குறிதான் ஆகும்” என்கிறார் கண்டிப்புப் புலி மிக்கி ஆர்தர்.

ஜனவரி 2016லிருந்து வஹாப் ரியாஸ் 11 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இது சிறந்த பந்து வீச்சுதான். பாகிஸ்தானின் அதிகவிக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரராவார் வஹாப் ரியாஸ், இவர் இதுவரைவீழ்த்திய விக்கெட்டுகளில் முக்கால்வாசிக்கு மேல் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 உலகக்கோப்பை ஆஸி.க்கு எதிரான பவுலிங்கும்... மேலும்:

2015 உலகக்கோப்பையில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஸ்பெல் போட்டாரே அதை மறக்கமுடியாது, ஷேன்வாட்சனுக்கு இவருக்கும் ஒரு பெரிய போரே நடந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல் துபாயில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் வேகாத வெயிலில் ஒரு ஸ்பெல் போட்டு மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரை வீழ்த்தியது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தது.

அதே போல் இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் 262 ரன்களுக்குச் சுருண்டு 220 ரன்கள் பின் தங்கியிருந்தது. 2வது இன்னிங்சில் இலங்கை அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது அதிர்ச்சியளித்தவர் வஹாப் ரியாஸ், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உத்வேகம் அளித்தார், இதுதான் இவர் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். ஆனாலும் பாகிஸ்தான் தோற்றது வேறு கதை. 2016-17 ஆஸ்திரேலியா தொடரிலும் பாகிஸ்தான் சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் வஹாப் ரியாஸ்தான்.

டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் வஹாப் சோபிக்க முடியாமல் போனது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 8 ஓவர்களில் 87 ரன்கள் விளாசப்பட்டார், மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் 44 ரன்களைக் கொடுத்தார் வஹாப்.

ஒரு நல்ல பவுலரை பாகிஸ்தான் கிரிக்கெட் பண்பாடு தெரியாத அயல் நாட்டுப் பயிற்சியாளர் ஒருவரைக் கொண்டு ஒழிப்பது என்பது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது புரியவில்லை.

மிக்கி ஆர்தர் ஒரு சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரியாதா?

http://tamil.thehindu.com/sports/article23526410.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.