Jump to content

LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல்


Recommended Posts

LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சிரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல. இவர் ஓர் அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

"முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது. அனைத்து பொறுப்புகளும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் வசம் உள்ளன," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிரியா

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-43763494

Link to comment
Share on other sites

சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்

 

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.படத்தின் காப்புரிமைPA Image captionசைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா கிளம்பின.

பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

'காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்'

 

ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.

சிரியா

அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை எதிர்கொள்ள, தங்கள் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், சோவியத் ரஷ்யா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய தளவாடங்களையே சிரியா பயன்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்

மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு ஏவுகணை.படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து சிரியாவை நோக்கி ஏவப்படும் ஓர் ஏவுகணை

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலை எதிர்த்து சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Syriaபடத்தின் காப்புரிமைREUTERS

"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, ஓர் அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சிரியா அதிபர் அல்-அசாத் வழக்கமாக தமது அலுவலகத்துக்கு செல்லும் காணொளி ஒன்றை அவரது அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் சிரியாவில் மேற்கத்திய நாடுகளின் இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சிரியா Image captionதாக்குதல் நடக்கும் இடங்கள்

எங்கெல்லாம் தாக்குதல் நடந்தது?

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

"டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

டோமாஹாக் ஏவுகணை

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிரியா நிறுத்தும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global-43763494

Link to comment
Share on other sites

அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்

மாலை 4:45: சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது - சீனா

தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங், சர்வதேச உறவுகளில் ஆயுத சக்தி பயன்படுத்தப்படுவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும், ஐக்கிய நாடுகள் அவையை தாண்டிய ராணுவ நடவடிக்கை சர்வதேச கொள்கைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

ஏவுகணை

மாலை 4:45: சிரியா தாக்குதலுக்கு சட்டபூர்வ அடிப்படை இல்லை - பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர்

சிரியா மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

போர் விமானம்படத்தின் காப்புரிமைMOD

அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்படுகின்ற ராணுவ தாக்குதலுக்கு பிரிட்டனின் போர் விமானங்களை அனுப்புவதற்கு முன்னால், பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மாலை 4:14: மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதலை நிராகரித்த கிளர்ச்சியாளர்

பிரிட்டன் போர் திறன்

சிரியா அரசின் போர் திறனை பலவீனமாக்குவதற்கு போதுமானவைகளாக மேற்குலக நாடுகளின் வான்வழி தாக்குதல்கள் அமையும் என்று சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான பிரிவுகளிடம் நம்பிக்கை இருந்தது.

இதுவரை, மேற்குலக நாடுகளின் தாக்குதல் குறிப்பிடும்படியாக இல்லை என்று முன்னிலை கிளர்ச்சியாளரான முகமது அல்லுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குற்றத்தின் கருவியைதான் தாக்கியுள்ளன. குற்றவாளியை அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 15:57 மணி: சிரியா மீதான தாக்குதல்கள் எங்களை வலிமையாக்கும் - அசாத்

சிரியா அதிபர் அசாத்படத்தின் காப்புரிமைREUTERS

சிரியாவிலுள்ள தீவிரவாதத்தை நசுக்குவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கான வலிமையை அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் வழங்கியுள்ளதாக சிரியாவின் அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்திருக்கிறார்.

இரான் அதிபர் ஹசன் ரூஹானியோடு தொலைபேசியில் பேசியபோது தெரிவிக்கப்பட்ட இந்த கூற்று சிரியா அதிபரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது,

மதியம் 15:53 மணி: சிரியா தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் - ரஷ்யா

வரைபடம்

சிரியா மீது தாக்குதல் தொடங்கியிருப்பது அமைதி பேச்சுவார்த்தைகளில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாக அரசின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடும்போக்காளர்களும், கிளர்ச்சியாளர்களும் சரியானதையே செய்கிறார்கள் என்ற வலுவான சமிக்கையை இந்த நடவடிக்கை வழங்கியுள்ளதாக மரியா ஸக்காரேவா கூறியுள்ளார்.

அமெரிக்க போர் திறன்

மதியம் 2:45 மணி: மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்தவிரும்புகிறது மேற்குலம் என்றார் இரான் அதிபர்

மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த மேற்குலகு விருப்பம் - இரான் அதிபர்படத்தின் காப்புரிமைEPA

அழிவையும், நாசத்தையும் தவிர மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலால் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று கூறி சிரியா மீது அமெரிக்க தலைமையில் நடைபெறும் தாக்குதலை இரான் அதிபர் ஹசன் ரூஹானி கண்டித்துள்ளார்.

சனிக்கிழமை காலை இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியுடன் நடத்திய கூட்டத்தில் இந்த தாக்குதல் மூலம் மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை நியாயப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துளாார்.

மதியம் 2:45 மணி: சிரியா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு

சிரியா

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது வரம்பை தாண்டி செயல்படுவதாக அமையும் என்று அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

எனவே, இன்று அதிகாலையில் அமெரிக்காவின் தலைமையில் பிரான்சும், பிரிட்டனும் அந்த எதிர்ப்பை செயலில் காட்டியுள்ளன என்று இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகல் 2:44 மணி: யாரும் உயிரிழக்கவில்லை - ரஷ்யா

சிரியா மீது நடத்தப்பட்டு்ள்ள வான்வழி தாக்குதலில் பொது மக்கள் அல்லது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பகல் 2:43 மணி: சர்வதேச விசாரணை முடிவுக்கு காத்திருக்க அவசியமில்லை - தெரீசா மே

சிரியாவில் தாக்குதல் தொடுப்பதற்கு, ரசாயன தாக்குதலை உறுதி செய்கின்ற சர்வதேச கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

டூமா நகரில் என்ன நடந்தது என்பது பற்றி பிரிட்டனே சுய ஆய்வு செய்து கொண்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதல் பற்றிய சர்வதேச விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.

மதியம் 2:43 மணி: ஹோம்ஸ் நகரில் அழிவுகளை காட்டும் புகைப்படங்கள்

அழிவுகள்படத்தின் காப்புரிமைAL-IKHBARIYAH AL-SURIYAH

சிரியா அரசு ஆதரவு செய்தி சேனல் ஒளிபரப்பில் ஹோம்ஸ் நகர்புறத்தில் எடுக்கப்பட்ட காணொளி பதிவில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் காட்டப்படுகின்றன.

காலை 8:23 மணி: விளைவுகளை எதிர்பார்க்கவும் - ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சிரியா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை இல்லாமல் போகாது என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

காலை 8:02 மணி: பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

ஏவுகணை எதிர்ப்புபடத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்கா, பிரான்சோடு சேர்ந்து பிரிட்டன் நடத்துகின்ற தாக்குதலில் பொது மக்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

சிரியாவின் மீதான தாக்குதலில் பிரிட்டன் ஈடுப்பட்டுள்ளதை அறிவித்துபோது, தெரீசா மே இதனை தெரிவித்துள்ளார்.

காலை 7:48 மணி: ரசாயன சேமிப்பு கிடங்கில் தாக்குவதற்கு பிரிட்டனின் டேர்னாடோ ஜெட் விமானங்கள்

சிரியாவின் ராணுவ படைதளங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் விமான படையின் டேர்னாடோ ஜெட் விமானங்கள் அனுப்பப்படுவதாக பிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 7:45 மணி: தாக்குதல் தவிர மாற்று வழியில்லை - பிரிட்டன் பிரதமர்

3 நாட்டு தலைவர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக தாக்குதலை தொடங்கிய பின்னர் முதல்முறையாக பிரிட்டன் பிரதமர் இது பற்றி பேசியுள்ளார்.

சிரியா அரசால் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

காலை 7:32 மணி: டூமா நகர தாக்குதல் அரக்கனால் நடத்தப்பட்டது

சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதர் ஒருவரால் நடத்தப்பட்டதல்ல. ஆனால், ஓர் அரக்கனால் நடத்தப்பட்டது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் அதிபர் அசாத்துக்கு ஆதரவு வழங்கி வரும் ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகள், அவை யாருக்கு ஆதரவு வழங்கி வருகின்றன என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 7:26 மணி: சிரியாவில் தாக்குதல் நடத்த டிரம்ப் ஆணை

அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைMIKE THEILER - POOL/GETTY IMAGES

சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாககுதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன.

கட்ந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் சிரியாவின் டூமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஆணையிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் டூமா நகர ரசாயன தாக்குதல் சம்பவம் புனையப்பட்டது என்றும் சிரிய அரசு கூறிவருகிறது.

http://www.bbc.com/tamil/global-43765582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ருஷ்ய க்கும் சும்மா வாய் தான்.  Really disappointed with Russia :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ எல்லாரும் ரஷ்யா உட்பட பேசிப்பறைஞ்சுதான்  அடிக்கிறாங்கள் போலை கிடக்கு.....:rolleyes:

Link to comment
Share on other sites

 

சிரியாவுக்காக அழும் அமெரிக்கா எப்படியா இரட்டை வேடம் பூண்டுள்ளது என்பதற்கு இதை விட என்ன சான்று தேவை??

 

Link to comment
Share on other sites

சிரியா: துருப்புக்களை திரும்ப பெறாமல் இருக்க டிரம்பை சம்மதிக்க வைத்தாரா மக்ரோங்?

சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியா மீது நடத்தப்படும் தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள அதிபர் டிரம்பிடம் கூறியதாக அதிபர் மக்ரோங் கூறியுள்ளார்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

ரசாயன ஆயுத தாக்குதல் என்று கூறப்படுவதற்கு பதிலடியாக சிரியா அரசு படைகளின் தளங்களை குறி வைத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தின.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை முற்றிலும் ஒழித்து விடுவதோடு, அந்த குழு மீண்டு வருவதை தடை செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது” சாரா சான்டர்ஸ், செய்தி தொடர்பாளர்

இந்த தாக்குதல்களை மட்டுப்படுத்தி கொள்ள டிரம்பிடம் கூறியதாகவும் மக்ரோங் கூறியுள்ளார்.

நட்புறவு கொண்டுள்ள இவர்கள் இருவரும், இந்த ராணுவ தாக்குதலை மேற்கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்னர், பலமுறை பேசி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்ரோங் இவ்வாறு தெரிவித்த பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், "அமெரிக்காவின் திட்டம் மாறவில்லை. அமெரிக்கா, படைப்பிரிவுகளை எவ்வளவுக்கு விரைவாக நாடு திரும்ப செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்ற அதிபர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP Image captionஎந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்

ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை முற்றிலும் ஒழித்து விடுவதோடு, அந்த குழு மீண்டு வருவதை தடை செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எந்தவொரு நிலைமையிலும், சிரியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதை நாட்டு மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தபோது வாஷிங்டனில் டிரம்ப் வலியுறுத்தினார்.

'சிரியா ஜனநாயக படைப்பிரிவுகள்' என்று அழைக்கப்படும் குர்து இன மற்றும் அரபு ஆயுதப்படையினர் இணைந்து செயல்படும் கூட்டு படைக்கு ஆதரவு தெரிவித்து சிரியாவின் கிழக்கு பகுதியில் 2,000 படையினரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

http://www.bbc.com/tamil/global-43779480

Link to comment
Share on other sites

சிரியா: ரசாயன தாக்குதல் நடந்த இடத்தில் "ஆதாரங்களை அழிக்கவில்லை" - ரஷ்யா

சிரியாபடத்தின் காப்புரிமைAFP

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் உள்ள ஆதாரங்கள் எதிலும் தலையிடவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பிபிசிக்கு பேட்டியளித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லவ்ரவ், "தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள ஆதாரங்களில் ரஷ்யா தலையிடவில்லை என தாம் உத்தரவாதம் அளிப்பதாக" கூறினார்.

ஏப்ரல் 7ஆம் தேதியன்று ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீண்டும் மறுத்துள்ளது.

சிரியாபடத்தின் காப்புரிமைAFP

"ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது என ஊடக செய்திகளை வைத்தும் சமூக ஊடகங்களின் அடிப்படையிலும்தான் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இதனை கூறுகின்றன" என்று லவ்ரவ் கூறினார்.

நடந்ததாக கூறப்படும் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகம் என்று கூறிய அவர், சர்வதேச அதிகாரிகள் டூமா நகரத்திற்கு சென்றடையும் ஒரு நாள் முன்பு அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஆய்விற்காக சிரியாவில் உள்ள அதிகாரிகள் இன்னும் டூமாவிற்கு சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-43786636

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:

சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்

Pornodarstellerin Stormy Daniels kommt beim Bundesgerichtsgebäude des âSouthern District of New Yorkâ (SDNY) in Lower Manhattan an

Bei der Sicherheitskontrolle muss Stormy Daniels auch die Schuhe ausziehen

பெண்வியாதி பிடித்த அரசியல் தலைவர்களுக்கு  தங்கள் வியாதி பிரச்சனைகளை மறைக்க............

தங்களை வீரதீரனாக காட்ட அனாவசியமற்ற போர்கள் அவசியமாகின்றது.

இப்படியான தரங்கெட்ட பொய்களை மறைக்க போர்/வெடிகுண்டுகளை ஆரம்பித்த பெருமை பில் கிளிண்டனையே சாரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.