Jump to content

வைகோவின் மருமகன் தீக்குளிப்பு; சீமான் கட்சியினர் மீது குற்றச்சாட்டு


Recommended Posts

வைகோவின் மருமகன் தீக்குளிப்பு; சீமான் கட்சியினர் மீது குற்றச்சாட்டு

வைகோ

தன் மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சீமான் கட்சியினர் வெளியிடும் மீம்ஸ்களே காரணம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகனான சரவணன் சுரேஷ் என்பவர் இன்று காலையில் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்து கதறியழுதார்.

"30ஆம் தேதி மாலையில் என்னைச் சந்தித்தவர், மிகவும் வருத்தப்பட்டு அழுதார். என்ன என்று கேட்டேன். பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டார்.

சீமான் ஆறுமுகம் என்பவர், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் என் மகன் வையாபுரிக்கு 3 சதவீதம் பங்கு வாங்கிவிட்டதாக குறிப்பிட்டு, ஸ்டெர்லைட் டீல் முடித்து தற்போது நியூட்ரினோ டீலுக்கு புறப்பட்டுவிட்டான்னு போட்ருக்காங்கன்னு சொன்னார்.

சீமான் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரும் இதேபோல எழுதியிருக்கிறார். நீங்க 32 வருடமாக ஸ்டெர்லைட்டிற்காகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் முதலாளியையே பார்க்க மறுத்தீர்கள். இப்போது ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் நடக்கும்போது அங்கு உங்களால் போக முடியவில்லை.

எதற்கு உங்களை தொடர்ந்து கேவலமாக சித்தரித்து, ஜாதியைக் குறிப்பிட்டு பதிவிடுகிறார்கள் என்று கேட்டார்" என்று செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

சீமான்படத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR

தன் வாழ்க்கை முழுவதும் பழியைச் சுமந்துவந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தால் தன் குடும்பத்தினர் நொறுங்கிப் போயிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார். இதுபற்றி சீமானிடம் கேட்டால், தன்னைப் பற்றிக்கூட மீம்ஸ் வருவதாக அவர் அதைக் கடந்து சென்றாலும், இந்த விவகாரம் தன் குடும்பத்தனரின் மனதை எரித்துவிட்டதாகவும் வைகோ கூறினார்.

இது தொடர்பாக, இன்று காலையில் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில் தனது மைத்துனர் மகன் காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தன்னைப் பற்றி மிக மோசமாக மீம்ஸ்களை வெளியிடுவதாகவும் ஜாதியை அடிப்படையாக வைத்து அவதூறாகப் பேசுவதாகவும் சீமான் மீது வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க அந்தத் தருணத்தில் சீமான் மறுத்துவிட்டார். தற்போது வைகோவின் குற்றச்சாட்டு குறித்து அவரது கருத்தை அறிய முயன்றபோது சீமானை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

http://www.bbc.com/tamil/india-43754816

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் எதுக்கோ தற்கொலை செய்ய வெளிக்கிட, இந்தாள், மீம்ஸ்சோட கணக்சன் கொடுக்கிறாரே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ... எழுதும்,  "மீம்ஸை"  பார்த்து...  
வைகோவின் மருமகன்  தற்கொலை செய்ய முயற்சித்தார் என்று  சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.  
வைகோவே... தனது கட்சி உறுப்பினர்கள்  தீக் குளித்தால், மிகவும் கண்டிப்பவர்.
அதனை... அவர் மருமகன்,  செய்தது ஏன்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

யாரோ... எழுதும்,  "மீம்ஸை"  பார்த்து...  
வைகோவின் மருமகன்  தற்கொலை செய்ய முயற்சித்தார் என்று  சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.  
வைகோவே... தனது கட்சி உறுப்பினர்கள்  தீக் குளித்தால், மிகவும் கண்டிப்பவர்.
அதனை... அவர் மருமகன்,  செய்தது ஏன்?  

சீமானை, சைமன் என்று, வயிரவத்தார் சொல்வதைக் கேட்டு, யாழ் கள உறவுகள் தீக்குளிக்கப் போகினமே... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

சீமானை, சைமன் என்று, வயிரவத்தார் சொல்வதைக் கேட்டு, யாழ் கள உறவுகள் தீக்குளிக்கப் போகினமே... ?

வயிரவத்தாரின்... கருத்துக்களை,  யாழ். கள  உறுப்பினர்கள், கணக்கில் எடுப்பதில்லை,  நாதமுனி.  :grin:

Link to comment
Share on other sites

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கலைஞன் said:

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

செய்தி மூலம் பிபிசி தான்.... வைகோ அவ்வாறு சொன்னதும் உண்மைதான்...

அனால்.... மருமகன் இறந்தது காவேரிக்காக என்று சொல்லி விட்டு... பின்னர் மீம்ஸ் கொமெண்டுக்காக என்று சொல்வதை... அதுவும் ஒரு  பழுத்த அரசியல்வாதி சொல்வதை யாருமே பொறுட்படுத்த வில்லையே...

சீமானை எங்காவது மாட்டி விடலாம் என்ற நோக்கம் தான்.... உண்மையில் கொமெண்டால் தான் மரணம் என்றால்... போலீசில் அல்லவா முறைப்பாடு செய்ய வேண்டும்.

இவர் எதுக்கு குய்யோ முறையோ என்று கதறி அழுகிறார்?

கீழே உள்ள பின்னூட்டங்களை பாருங்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கலைஞன் said:

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

பி.பி.சி  சொன்னால்.. தெய்வ வாக்காக இருக்க முடியுமா?
எமது ஈழப் போராட்டத்தில்,  பி.பி.சி.  சொன்ன பொய்கள்.. எத்தனை  ஆயிரம் என்று  எமக்குத் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வாற பிபிசி செய்திகளையும் நம்புறதுக்கு சனம் இருக்கு..tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இப்ப வாற பிபிசி செய்திகளையும் நம்புறதுக்கு சனம் இருக்கு..tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

வயிரவத்தாரின்... கருத்துக்களை,  யாழ். கள  உறுப்பினர்கள், கணக்கில் எடுப்பதில்லை,  நாதமுனி.  :grin:

அதைத்தான் சொன்னேன். உப்பு சப்பில்லாத விஷயங்களை தூக்கி காவடி ஆடும் வைரவத்தார் நிலைக்கு வைகோ போயிடடார் என்று. :grin: 

Link to comment
Share on other sites

வைகோவின் மைத்துனர் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

 
 

விருதுநகரில் நேற்று தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி  மதுரை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வைகோ

விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவண சுரேஷ் நேற்று காலை பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். காவிரி பிரச்னைக்காக தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன்  மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் . இந்தத் தகவல் வைகோவை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது . அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து வைகோ கதறி அழுது தன் நிலையை விளக்கினார். தவறான மீம்ஸ் உள்ளிட்ட விஷயங்களால் காயப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.  மேலும் `90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாலை 6  மணிக்கு மேல் அவரது  சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது .

https://www.vikatan.com/news/tamilnadu/122178-vaikos-relative-who-attempts-suicide-died-today.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.