Jump to content

வைகோவின் மருமகன் தீக்குளிப்பு; சீமான் கட்சியினர் மீது குற்றச்சாட்டு


Recommended Posts

வைகோவின் மருமகன் தீக்குளிப்பு; சீமான் கட்சியினர் மீது குற்றச்சாட்டு

வைகோ

தன் மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சீமான் கட்சியினர் வெளியிடும் மீம்ஸ்களே காரணம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகனான சரவணன் சுரேஷ் என்பவர் இன்று காலையில் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்து கதறியழுதார்.

"30ஆம் தேதி மாலையில் என்னைச் சந்தித்தவர், மிகவும் வருத்தப்பட்டு அழுதார். என்ன என்று கேட்டேன். பதிவுகளை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டார்.

சீமான் ஆறுமுகம் என்பவர், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் என் மகன் வையாபுரிக்கு 3 சதவீதம் பங்கு வாங்கிவிட்டதாக குறிப்பிட்டு, ஸ்டெர்லைட் டீல் முடித்து தற்போது நியூட்ரினோ டீலுக்கு புறப்பட்டுவிட்டான்னு போட்ருக்காங்கன்னு சொன்னார்.

சீமான் கட்சியைச் சேர்ந்த இன்னொருவரும் இதேபோல எழுதியிருக்கிறார். நீங்க 32 வருடமாக ஸ்டெர்லைட்டிற்காகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் முதலாளியையே பார்க்க மறுத்தீர்கள். இப்போது ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் நடக்கும்போது அங்கு உங்களால் போக முடியவில்லை.

எதற்கு உங்களை தொடர்ந்து கேவலமாக சித்தரித்து, ஜாதியைக் குறிப்பிட்டு பதிவிடுகிறார்கள் என்று கேட்டார்" என்று செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

சீமான்படத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR

தன் வாழ்க்கை முழுவதும் பழியைச் சுமந்துவந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தால் தன் குடும்பத்தினர் நொறுங்கிப் போயிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார். இதுபற்றி சீமானிடம் கேட்டால், தன்னைப் பற்றிக்கூட மீம்ஸ் வருவதாக அவர் அதைக் கடந்து சென்றாலும், இந்த விவகாரம் தன் குடும்பத்தனரின் மனதை எரித்துவிட்டதாகவும் வைகோ கூறினார்.

இது தொடர்பாக, இன்று காலையில் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில் தனது மைத்துனர் மகன் காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தன்னைப் பற்றி மிக மோசமாக மீம்ஸ்களை வெளியிடுவதாகவும் ஜாதியை அடிப்படையாக வைத்து அவதூறாகப் பேசுவதாகவும் சீமான் மீது வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க அந்தத் தருணத்தில் சீமான் மறுத்துவிட்டார். தற்போது வைகோவின் குற்றச்சாட்டு குறித்து அவரது கருத்தை அறிய முயன்றபோது சீமானை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

http://www.bbc.com/tamil/india-43754816

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் எதுக்கோ தற்கொலை செய்ய வெளிக்கிட, இந்தாள், மீம்ஸ்சோட கணக்சன் கொடுக்கிறாரே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ... எழுதும்,  "மீம்ஸை"  பார்த்து...  
வைகோவின் மருமகன்  தற்கொலை செய்ய முயற்சித்தார் என்று  சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.  
வைகோவே... தனது கட்சி உறுப்பினர்கள்  தீக் குளித்தால், மிகவும் கண்டிப்பவர்.
அதனை... அவர் மருமகன்,  செய்தது ஏன்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

யாரோ... எழுதும்,  "மீம்ஸை"  பார்த்து...  
வைகோவின் மருமகன்  தற்கொலை செய்ய முயற்சித்தார் என்று  சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.  
வைகோவே... தனது கட்சி உறுப்பினர்கள்  தீக் குளித்தால், மிகவும் கண்டிப்பவர்.
அதனை... அவர் மருமகன்,  செய்தது ஏன்?  

சீமானை, சைமன் என்று, வயிரவத்தார் சொல்வதைக் கேட்டு, யாழ் கள உறவுகள் தீக்குளிக்கப் போகினமே... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

சீமானை, சைமன் என்று, வயிரவத்தார் சொல்வதைக் கேட்டு, யாழ் கள உறவுகள் தீக்குளிக்கப் போகினமே... ?

வயிரவத்தாரின்... கருத்துக்களை,  யாழ். கள  உறுப்பினர்கள், கணக்கில் எடுப்பதில்லை,  நாதமுனி.  :grin:

Link to comment
Share on other sites

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கலைஞன் said:

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

செய்தி மூலம் பிபிசி தான்.... வைகோ அவ்வாறு சொன்னதும் உண்மைதான்...

அனால்.... மருமகன் இறந்தது காவேரிக்காக என்று சொல்லி விட்டு... பின்னர் மீம்ஸ் கொமெண்டுக்காக என்று சொல்வதை... அதுவும் ஒரு  பழுத்த அரசியல்வாதி சொல்வதை யாருமே பொறுட்படுத்த வில்லையே...

சீமானை எங்காவது மாட்டி விடலாம் என்ற நோக்கம் தான்.... உண்மையில் கொமெண்டால் தான் மரணம் என்றால்... போலீசில் அல்லவா முறைப்பாடு செய்ய வேண்டும்.

இவர் எதுக்கு குய்யோ முறையோ என்று கதறி அழுகிறார்?

கீழே உள்ள பின்னூட்டங்களை பாருங்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கலைஞன் said:

வை.கோ சொல்வதை ஏன் நம்பமுடியாமல் உள்ளது உங்களுக்கு? செய்தி மூலம் பி.பி.சி என்று சொல்லப்படுகின்றது.

பி.பி.சி  சொன்னால்.. தெய்வ வாக்காக இருக்க முடியுமா?
எமது ஈழப் போராட்டத்தில்,  பி.பி.சி.  சொன்ன பொய்கள்.. எத்தனை  ஆயிரம் என்று  எமக்குத் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வாற பிபிசி செய்திகளையும் நம்புறதுக்கு சனம் இருக்கு..tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இப்ப வாற பிபிசி செய்திகளையும் நம்புறதுக்கு சனம் இருக்கு..tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

வயிரவத்தாரின்... கருத்துக்களை,  யாழ். கள  உறுப்பினர்கள், கணக்கில் எடுப்பதில்லை,  நாதமுனி.  :grin:

அதைத்தான் சொன்னேன். உப்பு சப்பில்லாத விஷயங்களை தூக்கி காவடி ஆடும் வைரவத்தார் நிலைக்கு வைகோ போயிடடார் என்று. :grin: 

Link to comment
Share on other sites

வைகோவின் மைத்துனர் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

 
 

விருதுநகரில் நேற்று தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி  மதுரை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வைகோ

விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவண சுரேஷ் நேற்று காலை பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். காவிரி பிரச்னைக்காக தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன்  மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் . இந்தத் தகவல் வைகோவை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது . அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து வைகோ கதறி அழுது தன் நிலையை விளக்கினார். தவறான மீம்ஸ் உள்ளிட்ட விஷயங்களால் காயப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.  மேலும் `90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாலை 6  மணிக்கு மேல் அவரது  சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது .

https://www.vikatan.com/news/tamilnadu/122178-vaikos-relative-who-attempts-suicide-died-today.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.