Jump to content

மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு


Recommended Posts

  • மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு
 
 

மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதே வேளை 28 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத வீதியான காங்கேசன்துறை – வளலாய் வரையிலான வீதியும் தற்போது இராணுவத் தளபதியால் விடுவிப்புச் செய்யப்பட்டது.

இந்த வீதி காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே மக்கள் பாவைனைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/84315.html

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

17 minutes ago, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

 விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம்.

துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, Dash said:

 விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம்.

துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான்.

 

தவறான தகவல்!

Link to comment
Share on other sites

யாழ்.வலி, வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு..

யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.  மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.  கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

3458-2.jpg?resize=800%2C6003458-3.jpg?resize=800%2C6003458-4.jpg?resize=800%2C6003458-5.jpg?resize=800%2C6003458-6.jpg?resize=800%2C6003458-7.jpg?resize=800%2C600

 
 வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது….

வலிகாமம் வடக்கில் இன்று 5 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்வு சற்று முன்னர் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

   mil.jpg?resize=464%2C484mil2.jpg?resize=462%2C468mil3.jpg?resize=455%2C491mil4.jpg?resize=465%2C434

http://globaltamilnews.net/2018/74884/

Link to comment
Share on other sites

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

 

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது.

பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனா்.

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

இந்த நிலையில் 40 இற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இடா்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் காணி இன்றையதினம்(13-04-2018) விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள்ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/land-release-in-vali-north-13

Link to comment
Share on other sites

மகிழ்ச்சிகரமான செய்தி. ஒரு தலைமுறையே 28 வருடங்கள் முகாம்களில் வசித்து இருக்கின்றது. இனியாவது தம் சொந்த மண்ணில் வாழும் பாக்கியத்தை தொடர்ந்து பெறட்டும்.

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

தவறான தகவல்!

இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது.

காணிப்பதிவு அறிக்கையை வைத்து உரிமயாளர்களிடம் சென்று  நேரடியாகவே காணிகள் முஸ்லிம்களால் வாங்கப்பட்டு உள்ளது போல் இருக்கிறது.

அதை விட முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு என மேலும் காணிகள் கோரப்பட்டதாகவும் அதை சீ.வீ வழங்க மறுத்ததாகவும் தெரிகிறது.

அப்படி நான் கூறியது தவறாயின்

1.மன்னாரில் எப்படி மன்னாரில் முஸ்லிம்கள் தொகை 46% ஆனது.2016இல்

போருக்கு முன்னர் 1981இல் 25% 

2010இல் 10%

2.முல்லைத்தீவில் எப்படி முள்ளியவளை பிரதேசமே இஸ்லாமிய மயமானது.

3. கிளிநொச்சி எப்பொழுதும் முஸ்லிம் இல்லாத பிரதேசம். அங்கு ஏன் 5 பள்ளிவாசல்கள்.

4.யாழ் மத்தியில் முஸ்லிம்களுக்கு என ஏன் தனியான வர்த்தக மையம் உருவாக்க முயற்சிக் நடக்குது.

 

5. வவுனியாவிலும் வடமராட்சி பிரதேசங்களிலும் வேகமாக நடைபெறும் இஸ்லாமிய மத மாற்றங்களை ஊக்குவிப்பது யார்.

6.200க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள், இதை ஊக்குவிப்பது யார்??

புள்ளிகளை தொடுத்து பாருங்கள் போல் யதார்த்தம் புரியும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுகளுக்குச் சொந்தமான ஒரு காணியில் மயிலிட்டியைச் சேர்ந்த நாலைந்து குடும்பம் இருக்கு நான் ஊருக்குப்போனபோது மிகவும் சந்தோசமாகக் காணப்பட்டார்கள் எங்கட காணியெல்லாம் விடுபடப்போகுது இப்போ மயிலிட்டித் துறைமட்டும் போகலாம் எங்கடகாணி கூப்பிடுதூரத்தில் இருக்கு அதுவரைக்கும் போய் அங்கால போகப்பார்த்தம் ஆனால் அவங்கள் விடுகிறாங்கள் இல்லை என மிகவும் ஏக்கத்துடன் கூறினார்கள் கேதக்கவலையாக இருந்தது இப்போ அவர்கள் தங்கள் சொந்தப்பிரதேசத்துக்குப்ப்போகப்போகிறார்கள் என நினைச்சால் சந்தோசமாகவும் ஒருபுறத்தில் அவர்கள் எங்கட காணியை மிகவும் சரியான முறையில் பராமரித்தார்கள் எப்போதுபோனாலும் இக்காணியில் நீங்கள் எங்களை இருக்கவிட்டதுக்கு கோடி புண்ணியம் எனக்கூறுவார்கள் இந்தமுறை போகும்போது அவர்களது மீள்குடியேற்றத்துக்கு ஏதாவது உதவி ஒழுங்குகள் செய்யவேணும். அவர்கள் எங்களது காணிக்குள் வந்து குடியேறமுதல் எனக்கு அவர்களைத் தெரியாது ஆனால் இப்போது அவர்கள் எங்களது உறவுகள்போல் எண்ணுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஒரு குறுப்பும் வராமல் இருந்தால் சந்தோசம்:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மகிழ்ச்சியான விடயம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

 

 

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.

வலிகாமம் வடக்கில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர்.

நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.

இதனையடுத்து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sticky-posters-People-of-Mylity

Link to comment
Share on other sites

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

 

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் மயிலிட்டி - கட்டுவன் வீதியில் வடக்குப் புறமாக இருந்த 683 ஏக்கா் காணிகள் மக்கள் பாவனைக்காக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த காணி விடுவிப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மக்களுக்கு முன் பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் புகுந்து அங்கு கிடந்தவற்றையெல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

மக்கள் தமது வீடுகளைக் காணிகளைப் பார்க்கச் சென்ற போது அவர்களின் எதிரே பழைய இரும்புகள், பாத்திரங்கள், பித்தளைகளுடன் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்கள் லான்ட் மாஸ்டர்கள் என்பவற்றில் வந்து அவர்கள் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்வதில் மும்முரமாக இருந்துள்ளனர்.

முதல் நாளே இப்படி என்றால் இனிவரும் நாட்களில் வீடுகளில் எஞ்சிக் கிடக்கும் ஒன்றிரண்டு பொருட்கள் கூடக் கிடக்காது என்று அச்சமாக இருக்கின்றது. எனவே இதற்கு உடனடியாக உரியவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Old-Iron-dealer-ndecent-act

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2018 at 8:46 PM, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இப்ப பொறுங்கோ எத்தனை அரசியல்வாதிகள் நாங்கள் தான் இதுக்கெல்லாம் காரணம். என்று கூவிக்கொண்டும், சவால் விட்டுக்கொண்டும் வருவினம். அடுத்த தேர்தல் மேடையில முழங்குவினம் பாருங்கோ. ஆனால் மேடையிலேயே வாங்கிக் கட்டுகினமோ, மேடையை விட்டு  இறக்கப் படுவினமோ பொறுத்திருந்து பாப்போம். எத்தனை அரசியல் வாதிகள் அந்த மக்களை போய்ப்பார்த்து, ஆறுதல் சொன்னவை? இதுக்கெல்லாம் காரணம் யார் என்று காலம் ஒருநாள் உரத்துச் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!
 
 

மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ள மரங்கள், பெறுமதியான மரங்கள் என்பன வியாபாரிகளால் வெட்டப்படுகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ”மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) கட்டுவனைச் சேர்ந்த மக்கள் அனுமதியின்றி மரங்கள் கட்டட தளபாடங்களை அனுமதியின்றி வெட்டவோ, சேதமாக்கவோ வேண்டாம். இது ஊர்மக்களின் அன்பார்ந்த கோரிக்கையாகும். இதையும் மீறி செயல்படும் நபர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

30710506_2420135884680660_4897329620125930706379_2420128838014698_5377643718696930716761_2420105958016986_15683853880362

http://newuthayan.com/story/84756.html

Link to comment
Share on other sites

On 4/13/2018 at 8:24 PM, Dash said:

இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது.

மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! 

புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது!

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! 

புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது!

நீங்கள் வேற...!!!

எப்படி போகலாம் என்று பிலான் பண்ணுற ஆக்கள் தான் அதிகம்....!!!

Link to comment
Share on other sites

பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள்

 

 
 

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளதை காண கூடியதாகவுள்ளது.

New_Layout.jpg

மேலும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ்வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலே அக் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/32520

Link to comment
Share on other sites

விரைவாக மீளக்குடியேற உதவி

 

 
 

யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களில் மக்கள் விரை­வாக மீளக் குடி­யேறும் வகையில் வலி. வடக்கு பிர­தேச சபை­யா­னது மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது  என்று   வலி. வடக்கு பிர­தேச சபையின் தவி­சாளர் சுகிர்தன் தெரி­வித்தார்.  

வலி. வடக்கு பிர­தேச சபை­யினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக அவர்  மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கடந்த  சித்­திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்­க­ளது காணி­களில் 683 ஏக்கர் காணிகள்  இரா­ணு­வத்­திடம் இருந்து பொதுமக்­க­ளுக்கு மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.  இவற்றில் மக்கள் மீள குடி­யேற்­றத்தை விரை­வாக மேற்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

குறிப்­பாக விடு­விக்­கப்­பட்ட காணி­களில் உள்ள கிண­று­க­ளா­னது பாழ­டைந்து தூர்ந்து போயுள்ள நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கான  நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இவை தவிர மக்கள் காணி­க­ளுக்கு செல்­வ­தற்கு இடை­யூ­றாக பாதை­களில் பற்­றை­களும் காட்டு மரங்­களும் அடர்த்­தி­யாக வளர்ந்­துள்­ளன. எனவே அம் மரங்­களை இயந்­தி­ரங்­களைக் கொண்டு வெட்டி பாதை­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வேலை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

 வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு சொந்­த­மான கட்­டுவன் –மயி­லிட்டி பிர­தான வீதி­யா­னது சேத­ம­டைந்­துள்ள நிலையில் அவ் வீதியினையும் விரைவாக சீர்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

http://www.virakesari.lk/article/32529

Link to comment
Share on other sites

  • வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!!
 

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!!

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

30726513_209214816342553_57222238924041030724253_209214663009235_72162754980730630729082_209214773009224_152673164675199

http://newuthayan.com/story/85458.html

Link to comment
Share on other sites

காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)

காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)

 

 
 
மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளை இன்று (17) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்துவருகின்றார்கள்.

இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது.

அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம்.

காணிவிடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது.

6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிருவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=101527

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.

தானா பனம்பழம் விழ இந்த அண்டம்ககாக்கை உரிமை கோரி கரையுது .

அவன் சொறிலன்காவின் கடனை அடைக்க un ஆமியில் போய்சேர விடுபட்ட இடங்களை இந்த கூட்டம் தங்கடை வெற்றி என்று கரையுதுகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.