Jump to content

உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்!


Recommended Posts

உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்!

 

ஃபேஸ்புக்

சமூக வலைதளங்கள் ஒரு சாம்ராஜ்யம் என்றால் அதற்கு ராஜா இப்போதைய சூழலில் ஃபேஸ்புக்தான். ஒரு மனிதனோட எல்லாவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஊடகமாக தன்னுடைய 14-வது வருடப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். ஒரு பையனோ பொண்ணோ வளரும்போது "இந்த டீன் ஏஜ் வந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும், பிரச்னைகளை எதிர்கொள்ள கத்துக்கணும், சமூகத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜுக்குள் நுழைந்துள்ள ஃபேஸ்புக்கும் இதனைப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி ஒருவனாக களத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஃபேஸ்புக்குக்கு இது சோதனை காலம்.

ஆரம்பத்தில் நண்பனின் ஐடியாவை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டை சட்ட ரீதியாக வென்று ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்குகிறார் மார்க் சக்கர்பெர்க். ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இன்று உலகை இணைக்கும் முயற்சியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இன்னமும் "ஃபேஸ்புக்கா அப்படின்னா என்ன.." என்று கேள்வி கேட்கும் தலைமுறையையும் இந்த உலகத்துக்குள் கொண்டு வர மார்க் போடும் திட்டங்கள் எல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரகம். 

இப்போது மெகா பூதம் ஒன்று நம் கண்முண்ணே வந்து நிற்கிறது. பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கற ஃப்ரெண்டு பத்து நிமிஷம் டீ குடிக்கப் போனாலே அவரோட ஃபேஸ்புக்ல ஜாலி ஸ்டேட்டஸ் தட்டும் தலைமுறை இது. 10 நிமிஷத்துல உங்களோட ஒட்டுமொத்த ஃபேஸ்புக் டேட்டாவையும் யாரோ ஒருவரால் எடுக்க முடியும் என்றால் எவ்வளவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்? ஷாக் குறையாமல் கேளுங்கள். இதில் நீங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மெஸேஜ்களும் அடங்கும். 

நீங்கள் உங்கள் காதலிக்கு அனுப்பிய ஹார்ட்டின் எமோஜிக்கள் முதல் ப்ரப்போஸ், கோலின்னு ஒரு புது ப்ளேயர் செமயா அடிக்குறான்ப்பா அப்படினு தட்டின ஸ்டேட்டஸ், டிமானிடைஷேசன் அப்போ ஏடிஎம்ல வரிசைல நின்னது. நெடுவாசல் பிரச்னைக்கு குரல் கொடுத்தது என அனைத்து ஸ்டேட்டஸ்களும், நீங்கள் ''ஒன்லி மீ'' ப்ரைவஸியில் வைத்திருக்கும் உங்களது யாருக்கும் பகிராத புகைப்படமும் இன்னொருவர் கைக்குச் செல்ல அதிகபட்சம் 30 நிமிடங்கள் போதும். 

"நான் ஃபேஸ்புக்குக்கு வந்து 14 வருஷம் ஆச்சு. இவ்வளவு ஸ்டேட்டஸ், மெஸேஜ், போட்டோ எல்லாத்தையும் எப்படி 30 நிமிஷத்துல டவுன்லோட் பண்ண முடியுமா?" என்றால், முடியும். ஃபேஸ்புக் நிறுவனம் உங்களோட மொத்த டேட்டாவையும் ஒரே க்ளிக்ல டவுன்லோட் பண்ணுற ஆப்ஷன கொடுத்துருக்கு. இதுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அடிப்படை தேவை ஒரு லாக் இன் ஆன ஃபேஸ்புக் ஐடிதான். நிறையா இடங்கள்ல நாம ஃபேஸ்புக் பயன்படுத்துறோம். அவசரத்துக்கு ப்ரொஃபைல் செக் பண்ண ப்ரெண்ட்ஸ் மொபைல், ப்ரெளசிங் சென்டர், ஆபீஸ் கம்ப்யூட்டர் இது எல்லாத்துலயும். ஹைலைட்டா சில மால்கள், சினிமா திரையரங்குகள்ல வைச்சிருக்குற கம்ப்யூட்டர்லயே ஃபேஸ்புக் பாக்குற சிலரையும் நாம பார்த்திருப்போம். 

நீங்கள்லாம் லாக் அவுட் பண்ண மறந்துட்டாலோ இல்ல உங்களோட பாஸ்வேர்டு யாருக்காவது தெரிஞ்சுட்டாலோ மொத்த டேட்டாவும் அவங்ககிட்ட போய்டும்ங்றதுல மாற்றுக்கருத்தே இல்லை. அப்படி டவுன்லோட் செய்த ஃபைலில் என்னவெல்லாம் இருக்கும் என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிக்கிறது ஃபேஸ்புக். இதில் க்ரேடிட் கார்டு தகவல் துவங்கி ஐபி அட்ரஸ், ஃபேஸ்புக் பேஜ் தகவல் என 70 தகவல்களை ஒற்றை க்ளிக்கில் தந்துவிடுகிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் தரும் தகவல்கள் விவரம் இதோ...

ஃபேஸ்புக்

இந்த டேட்டாவை டவுன்லோட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் செட்டிங்கில் ''Download Facebook Copy'' என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால் உங்களது டேட்டா மொத்தமும் காப்பி எடுக்க துவங்கிவிடும். அதன் பின் உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வரும் அதை மொபைலில் வை-பை மூலமாகவோ அல்லது கணினியில் அதிவேக இணைய சேவை மூலமாகவோ டவுன்லோட் செய்ய முடியும். அவ்வளவுதான் ஒரே ஃபைலில் ஒட்டுமொத்த டேட்டாவும் கொட்டிவிடும்.

Step 1

தகவல்கள்

Step 2

தகவல்கள்

Step 3

தகவல்கள்

 

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Settings -> Security and Log in -> where you're logged in பகுதியில் எந்த சிஸ்டத்தில் எல்லாம் நீங்கள் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விஷயம் இருக்கும். அதை செக் செய்து, உங்கள் கணினி, மொபைல் தவிர அனைத்தையும் லாக் அவுட் செய்து வையுங்கள். 

two-factor authentication முறையில் உங்கள் மொபைல் நம்பரை இணைத்து வையுங்கள். அப்படிச் செய்தால் ஒவ்வொருமுறை லாக் இன் செய்யும் போதும் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும். அதன்பின் லாக் இன் செய்து பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தீர்வு என்று முழுமையாக கூறமுடியாது. இவற்றின் மூலம் ஓரளவுக்கு உங்கள் தகவல்கள் வெளியாகாமல் தடுக்க முடியும். 

ஃபேஸ்புக்கில் பதிவிடும் விஷயங்கள் எல்லாம் பொதுவானவைதான். பர்சனலாக ஏதுமில்லை. பெரிதாக பிரச்னை ஏற்படுத்தக்கூடிய தனிநபர் உரையாடல்களும் இல்லை என்பவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், மேலே உள்ளவற்றில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். 

அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக் செய்தது என்ன?

சரி, இந்த தகவல்களுக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலில் 8 கோடி பேரின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியது என்பதற்கும் என்ன தொடர்பு?

இந்தத் தகவல்களை சைக்கோகிராஃபிக் ப்ரோஃபைல்களாக பிரிக்க முடியும். அதாவது நீங்கள் விரும்பும் விஷயம், உங்களது ப்ராண்டுகள் என்ன, நீங்கள் எந்த மாதிரியான நபர், அதிகமாக என்ன மனநிலையில் இருப்பவர் என்ற தகவல்களையெல்லாம் பெற முடியும். இதைத்தான் ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இந்த விவரங்களையும் நீங்கள் மற்றவர்களுக்கு வழங்காமல் தடுக்கமுடியும். 

விளம்பரம்

 

Settings -> Ads பகுதிக்குச் சென்று Your information பகுதியில் நீங்கள் எந்த விஷயங்களை விளம்பரதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை நிர்ணயிக்கமுடியும். அதேபோல உங்கள் விருப்பங்களையும் மாற்றியமைக்கமுடியும்.

https://www.vikatan.com/news/information-technology/121835-your-14-years-facebook-data-can-be-downloaded-in-single-click.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.