Jump to content

மக்­களை ஏமாற்­று­வ­தற்கு பெயர்­தான் இரா­ஜ­தந்­தி­ரமா?


Recommended Posts

மக்­களை ஏமாற்­று­வ­தற்கு பெயர்­தான் இரா­ஜ­தந்­தி­ரமா?

 

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லு­டன் எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யும் செய்­து­கொள்­ள­வே­யில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

“ரணி­லு­டன் கூட்­ட­மைப்­புப் பேசி­யது. அதில் முக்­கி­ய­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய 10 விட­யங்­களை அவ­ரி­டம் முன்­வைத்­தது. அவற்றை நிறை­வேற்­று­வ­தாக அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால் இது தொடர்­பாக அவ­ரு­டன் நாம் (கூட்­ட­மைப்பு) எந்­த­வொரு எழுத்­து­மூல உடன்­ப­டிக்­கை­யை­யும் செய்­து­கொள்­ள­வில்லை” என்­கி­றார் சுமந்­தி­ரன்.

ஆனால் ஏப்­ரல் மாதம் 4ஆம் திகதி நடை­பெற்ற கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைகளை ஏற்று தலைமை அமைச்­ச­ரின் கடி­தத் தலைப்­பில் ரணில் ஒப்­ப­ மிட்­டார் என்று கூறப்­பட்ட ஆவ­ணம், எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னால் அன்­றைய கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் காண்­பிக்­கப்­பட்­டது.

அந்த ஆவ­ ணத்­தின் பிரதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்­லை­யா­யி­னும் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த ஆவ­ணத்­தைத் தொட்­டு­ணர்ந்து தமது புறக்கண்களாய் நேரில் காணும் வகை­யில் அவர்­க­ளின் கைக­ளில் வழங்­கப்­பட்­டது.

அதன் பின்­னரே ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை ஒரு சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரை மன­தா­க­வா­வது ஏற்­றுக்­கொண்­டார்­கள். அதற்கு முதல் நாளில் அந்த முடி­வைக் கடு­மை­யாக எதிர்த்­த­வர்­கள் அவர்­கள்.

அந்­தக் கூட்­டத்துக்கு உரிய நேரத்துக்கு வருகை தராத நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்த விட­யம், அதா­வது ரணி­லின் ஆவ­ணத்­தைத் தாம் தொட்­டு­ணர்ந்து கண்­ணா­ரக் கண்ட காட்­சியை கூட்­டத்­தில் இருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எடுத்து விளக்­கி­யும் இருந்­தார்­கள்.

இருந்­தா­லும் ரணில் அத்­த­கைய உடன்­ப­டிக்கை எத­னை­யும் செய்­து­கொள்­ள­வில்லை என்று ஆணித்­த­ர­மா­கப் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்திருக் கிறார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன். அவ­ரது இந்­தக் கூற்று எழுப்­பும் கேள்­வி­களோ பல.

ரணில் ஒப்­ப­மிட்­டார் என்று கூறி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்குக் காட்­டப்­பட்ட ஆவ­ணம் என்ன? கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­களை ஏற்று அவற்றை நிறை­வேற்­று­வேன் என்று கூறும் ஆவ­ணம் என்று அதனை எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் கூறி­யமை பொய்யா?

அல்­லது உண்­மை­யி­லேயே ரணில் அத்­த­கைய ஆவ­ணம் ஒன்­றைக் கைய­ளிக்­காத நிலை­யில், போலி­யான ஆவ­ணம் ஒன்று தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குக் காண்­பிக்­கப்­பட்­டதா?

அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 13 பேரில் 10 பேர் ஏமாற்­றப்­பட்­டார்­களா? கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கச் செய்­வ­தற்­காக இத்­த­கைய நாட­கம் ஒன்று திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­பட்­டதா?

அப்­ப­டி­யா­னால் அதன் சூத்­தி­ர­தாரி யார்? எந்த நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் அல்­லது இர­க­சிய உடன்­ப­டிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஏமாற்­றப்­பட்­டார்­கள்? மக்­கள் பிர­தி­நி­தி­களை ஏமாற்­று ­வது அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளையே ஏமாற்­று­வ­தா­காதா?

இந்­தக் கேள்­வி­க­ளில் ஒன்­றைக்­கூ­டப் புற­மொ­துக்­கி­வி­ட­மு­டி­யாது. ஏனெ­னில் ரணி­லின் கையெ­ழுத்­து­டன் தமக்கு ஒரு ஆவ­ணம் காட்­டப்­பட்­டது என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் அடித்­துச் சத்­தி­யம் செய்­கி­றார்­கள். ஆக, முழுப் பூச­ணிக்­காயை சோற்­றுக்­குள் மறைப்­ப­வர்­கள் யார் என்­ப­தைத்­தான் கண்­ட­றிந்­தா­க­வேண்­டும்.

அது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களா? சுமந்­தி­ரனா?
கூட்­ட­மைப்­புக்கு ரணில் வாக்­கு­றுதி வழங்­கி­விட்­டார் என்­கிற செய்தி வெளி­யா­கி­ய­துமே, தமி­ழீ­ழத்­தைப் பிரித்­துக்­கொ­டுக்க ரணில் இணங்­கி­விட்­டார் என்று தெற்­கில் பரப்­புரை செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள், இத்­த­கைய சிக்­கல்­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே சுமந்­தி­ரன் அப்­ப­டி­யொரு ஒப்­பந்­தமே இல்லை என்று சொல்­லி­யி­ருக்­கக்­கூ­டும் என்­றும் ஒரு நியா­யம் சொல்­லப்­ப­டு­கி­றது.

அப்­ப­டியே வைத்­துக்­கொண்­டா­லும், 2015ஆம் ஆண்­டில் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­யும்­போ­தும் கூட்டு அரசை ஏற்­ப­டுத்­தும் போதும் இது­போன்­று­தானே நியா­யம் சொல்லி எந்­த­வொரு எழுத்­து­மூல ஒப்­பந்­தத்­தை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிரா­க­ரித்­தது.

அப்­ப­டிப் பொத்­திப் பொத்­திப் பாது­காத்து உரு­வாக்­கிய இந்த அர­சின் தலை­வர்­க­ளான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தமி­ழர்­க­ளுக்கு என்ன செய்­து­விட்­டார்­கள்?

குறைந்­த­பட்­சம் தீர்­வில் எந்­த­ள­வுக்கு அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டப்­போ­கின்­றன என்­ப­தைக்­கூட தீர்­மா­னிக்க முடி­யா­த­வர்­க­ளா­கத்­தானே நிற்­கி­றார்­கள். போர்க்­குற்ற விசா­ர­ணையை நடத்த முடி­யா­த­வர்­க­ளாக, போர்க்­குற்­ற­வா­ளி­க­ளைப் பாது­காக்­கும் நாய­கர்­க­ளா­கத்­தானே நிற்­கி­றார்­கள்.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது இப்­போ­தும் அவர்­க­ளின் பாது­காப்­புக்­காக, தேவைக்­காக, நல­னுக்­காக தமி­ழர்­க­ளு­ட­னான உடன்­ப­டிக்­கையை மறைப்­பது தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு உத­வப்­போ­வ­தில்லை.

தமி­ழர்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வு ஒன்­றைத் தரு­வ­தற்­கான செய்­மு­றையை மீள ஆரம்­பித்­துத் துரி­தப்­ப­டுத்­து­வேன் என்­ப­தையே சிங்­கள மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லத் தைரி­ய­மில்­லாத, அத­னால் வரும் எதிர்ப்­பைச் சரி­வ­ரக் கையாண்டு சிங்­கள மக்­களை தன்­வ­சப்­ப­டுத்த முடி­யாத ஒரு தலைமை, தலை­வர் எப்­படி உச்ச அதி­கா­ரங்­க­ளைத் தமி­ழர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்டு அதற்­குச் சிங்­கள மக்­க­ளின் ஆத­ர­வை­யும் பெறு­வார் என்று எதிர்­பார்ப்­பது? அத்­த­கைய எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில் அவ­ரைக் காப்­பாற்ற முயற்­சிப்­பது நியா­யமா?

இதில் எது­வாக இருந்­தா­லும் ஒன்று மட்­டும் நிச்­ச­யம். கூட்­ட­மைப்­பின் இரு தரப்­பி­ன­ரில் ஒரு­வர் வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்­று­கி­றார்­கள். இவர்­கள் இது­வ­ரை­யில் சொல்லி வந்த இரா­ஜ­தந்­தி­ரம் என்­பது இப்­படி மக்­களை ஏமாற்­று­வ­து­தானா?

http://newuthayan.com/story/83022.html

Link to comment
Share on other sites

புதிய உதயனுக்கு எல்லோரும் காலை வணக்கம் சொல்வோம். :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.