Jump to content

நினைவழியாத கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

”எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த 
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.”
.
எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். 
இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். 
.
வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர் அவர் முஸ்லிம் குழுவினரை சந்திதிருந்தார். ஓயாமல் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் தமிழ் கொள்ளை அழகு எனப் புகழ்ந்துகொண்டிருந்தார். ஹனீபாவுக்கு ஞாபகம் இருக்கும். அவர் மட்டக்களப்பில் வேறு பெயரைப் பயன்படுத்தினார். அவருடைய அலுவலகத்தில் என்னை சந்தித்த பெண்போராளிகள் சரிநிகரில் வெளிவந்திருந்த “பூவால் குருவி” கவிதை எங்களுக்கு பிடிச்சிருக்கு எங்கள் கதைபோல இருக்கு” என பாராட்டினார்கள்.

சில பெண்போராளிகளதும் சில பெண் ஆர்வலர்களதும் விருப்பத்துக்குரிய இக் கவிதை காலங்களைக் கடந்து நிற்க்கும். மறு வாசிப்புக்காக
.

பூவால் குருவி
வ.ஐ.ச.ஜெயபாலன்
.

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை 
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்
வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.
.
காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.
.
நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.
.
நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.
.
எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.
எல்லாம் அறிந்தேன்.
.
எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த 
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.

இன்னமும் கண் முன்னே நிழலாடுகின்றன.

Link to comment
Share on other sites

நன்றி ஈழப்பிரியன். இன்னமும் கண்முன்னே நிழலாடும் வன்னி மற்றும் படுவான்கரை வீரர், வீராங்கனைகளின் நினைவை காலத்தில் பொறிக்க வேண்டும். காவலூர்க் கண்மணிக்கும் என் அன்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.