Jump to content

நமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

Choices: Inside the Making of Indian Foreign Policy Hardcover – 15 Nov 2016 - Shivshankar Menon
.
நமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். .
,
இது சிவசங்கர் மேனனது புத்தக விமர்சனமல்ல. ஏனெனில் நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. ஆனாலும் நமது போராட்டத்தின் சொல்லபடாத சேதிகள் பல திடீரென வெளிவர ஆரம்பித்துள்ளது. ந்தவண்ணம் கில்லாரி கிழிண்டன் மேற்க்கு நாடுக பாலசிங்கம் ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் என எமது விடுதலைப்போராட்ட வரலாறு சம்பத்தபட்ட புதிய சர்சைகள் எழுந்துள்ளது. இது சமாதான பேச்சு வார்த்தைக் காலக்கட்டத்தில் திரைக்குப்பின் நிகழ்ந்த பல விடயங்கள் மெல்ல மெல்ல வெளியே வரப்போகிறது என்பதையே புலப்படுத்துகிறது, பல உண்மைகள் ஜீரணிக்க கஸ்ட்டமானவையாக இருக்கும். ஆனால் அவைகள்தான் நமது பிள்ளைகளுக்கு நாளைய வழியை காட்டுவதாக அமையப்போகின்றது.
.
விடுதலைப் போராட்ட தலைமை சமாதான பேச்சுவார்த்தை சமயத்தில் ஐரோப்பிய கிழைகளின் முகாமையாளராகச் செயல்பட்ட கஸ்றோவின் சொல்கேட்டு பாலசிங்கத்தை ஓரம்கட்டாமல் இருந்திருந்தால் நாமும் கொசோவோ தெற்க்கு சூடான் போல மேற்க்கு நாடுகளின் ஆதரவோடு விடுதலை பாதையில் முன்னெறியிருப்போம். உண்மையில் பாலசிங்கம் கொசோவா தலைவர்கள்போல மேற்க்கு நாடுகளோடு இணைப்பாட்ச்சி ஒப்பந்தமொன்றில் கையொப்பம் இட்ட சேதி கிடைத்து மகிழ்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன். அந்த ஒப்பந்தத்தில் கருணாவும் கையொப்பமிட்டதாக சேதி உள்ளது.
.
மேற்க்கு நாடுகள் நீண்ட கால அடிப்படையில் (சீனா தொடர்பாக) இந்தியாவும்கூட புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வடகிழக்கு இணைந்த ஒரு தீர்வை உருவாக்கும் தெரிவு ஒன்றைக் கொண்டிருந்தன. இது தொடர்பாக எனது நண்பர் எரிக் சோல்கைமும் பாலசிங்கமும் ஆரம்ப ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதேசமயம் 9/11 தாக்குதலுக்கு பின் உருவான சூழலில் இம்முயற்ச்சிகளுக்குத் தடையாக இருந்தது. கில்லாரி கிளிண்டன் 9/11 சூழலில் இருந்து புலிகளுக்கு விலக்கு அழிக்கும் வகையில் பயங்கரவாதம் பற்றிய புதிய கோட்பாட்டு விளக்கத்தை வெளியிட்டார். அந்த விளக்கம் புலிகள் ஐ எஸ் ஐ போல ஒருபோதும் பயங்கரவாதத்தைக் கைவிட வாய்ப்பில்லாத சித்தாந்த பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் (பாரம்பரிய) பிரதேச யங்கரவாதிகள். தங்கள் பிரதேசம் மீட்க்கப்பட்டால் புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்பதாக அமைந்தது. இத்தனைக்குப் பின்னரும்கூட இயக்கத் தலமை இணைபாட்ச்சியுடன் ஆரம்பிக்கும் பாலசிங்கம் திட்டத்தின் அடிப்படையில் மேற்குடன் ஒத்துழைக்க மறுத்தது துர் அதிஸ்ட்டமே.
.
அன்று கஸ்றோவிடமும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடமும் பாலசிங்க தோற்றுப்போனதைப்போலவே எங்களைப்போன்றோரின் அழுத்தங்களும் தோற்றுப்போயின. இதன் பின்னர் மேற்க்கு நாட்டு இராசதந்திரிகளின் தொனி மாற ஆரம்பித்தது. எங்களோடு வரமறுத்தால் (1987 -90 காலக்கட்டத்தில் பிரேமதாசவுடன் சேர்ந்ததுபோல ) எதிரியுடன் சேர்ந்துவிடுவார்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர் இதுபற்றி நானும் வன்னிக்கு அறிவுறுத்தினேன். இறுதியில் வன்னியில் இருந்து என் தொடர்பாளர் ”நீங்கள் சொல்வது சரியானது ஆனால் கஸ்றோவின் சொல்தான் அம்பலம் ஏறுகிறது. எனினும் தொடர்ந்து எழுதுங்கள்” என்கிற கையறு நிலைக் குறிப்பை அனுப்பியிருந்தார்.
.
இவற்றை எழுதுவது வரலாறு திரும்பும்போது எமது அடுத்த தலைமுறை பிழையான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது என்பதற்க்காகவே. இந்த தருணத்தில் ஒன்றை கூறவேண்டும்.
அன்று கஸ்றோ ஒருசில புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் பாலசிங்கத்தை கவிழ்த்ததுபோல இன்று கஜேந்திரன் பொன்னம்பலம் அதே ஒருசில புலம்பெயர் அமைப்புகளின் ஆதரவோடு சம்பந்தரையும் தமிழர் விடுதலை கூட்டமைப்பையும் கவிழ்க்க முனைக்கிறார். இந்த வரலாற்றுத் தவற்றை மக்கள் இனம்காணவேண்டும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.