Jump to content

"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்


Recommended Posts

"பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல்

தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது.

என்னைத் தெலுங்கன் என முத்திரை குத்துவதா? - சீமானுக்கு வைகோ எச்சரிக்கை

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ, அந்தப் பயணத்தின் நடுவில் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூருக்கு சென்றார். கைரேகைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, பிறகு பேசும்போது "என்னைத் தெலுங்கன் என சிலர் பேசுகின்றனர். அப்பாவி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். வெளியில் நிற்கும் கட்சிக்காரர்களை நான் எச்சரிக்கிறேன்" என்று பேசினார்.

இந்த நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோ தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்து, அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, "வீர வணக்கம், வீர வணக்கம்" என்று கோஷங்களை எழுப்பினர்.

வைகோ பேசி முடித்துவிட்டு வெளியில்வந்தபோது, அங்கு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவரோடு மோதலிலும் ஈடுபட்டனர். இதனால், வைகோவுடனிருந்த ம.தி.மு.கவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இதற்குப் பிறகு, வேறொரு இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சீமான் மீது நேரடியாகவே குற்றம்சாட்டினார்.

"ஆறேழு ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். என்னைத் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்று சீமான் கீழ்த்தரமாக பேசுவதோடு, ஈரோடு ராமசாமிப் பயல் என்றும் பேசினார். இந்த அண்ணாத்துரைனு ஒருத்தன், இந்த நாட்டை கெடுத்துவிட்டான் என்று துவக்க காலத்தில் பேசினார். பெரியாரைத் தாக்குவது, அவரைக் காலி செய்ய அல்ல, என்னை காலி செய்ய என்று சினிமாத் துறையில் உள்ளவர்கள் சொன்னார்கள். பெரியாரை ஒழித்துவிட்டால், பிறகு தெலுங்கன் என்று என்னை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்" என்று கூறினார்.

என்னைத் தெலுங்கன் என முத்திரை குத்துவதா? - சீமானுக்கு வைகோ எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைNAAM THAMIZHAR

மேலும் தன்னைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் மீம்ஸ்களை நாம் தமிழர் கட்சியினர் உருவாக்கிவருவதாகவும் குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை மிகவும் களங்கப்படுத்தி ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன் உயிரோடு இல்லையென்று நினைத்துக்கொண்டு, புலிகளின் சின்னத்தை தன் கொடியாக்கிக்கொண்டார் என்றும், புலிகளோடு தான் வேட்டைக்குப் போனதாகவும் ஆமைக்கறி தின்றதாகவும் சீமான் பொய் சொல்வதாகக் கூறிய வைகோ, பிரபாகரன் மொத்தம் எட்டு நிமிடங்கள்தான் அவரைச் சந்தித்ததாகக் கூறினார். பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, புலிகளின் சீருடையை அணிய சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லையென்றும் ஆனால், தான் அந்தச் சீருடையை அணிந்து பிரபாகரனோடு ஒரு மாதம் இருந்திருப்பதாகவும் கூறினார். பிரபாகரனிடம் தான் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்றுகூறி பணம் வசூலிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தாலும் சமீப காலமாக தன்னையும் ஸ்டெர்லைட்டையும் தொடர்புபடுத்தி, ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டது. இப்போது நியூட்ரினோவுக்கு கிளம்பிவிட்டான் நாயக்கப் பய" என மீம்ஸ்களை வெளியிடுவதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் வைகோ கூறினார்.

வைகோவின் இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து நாம் தமிழர் கட்சியினரும் ம.தி.மு.கவினரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-43637129

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்கள் ipl போட்டிக்கு எப்படி ரியாக்ஷன் பண்றாங்கள் என்று முதலில் பார்க்க வேண்டி உள்ளது .

இரண்டாவது வைகோவை அங்கு அரசியல் வடிவேல் ரேஞ்சில்தான் மக்கள் பார்கிறார்கள் இவ்வளவு பெரிய தலைவர் உடுப்பு போட்டன் என்பவர்  இன்னும் 5ஆயிரம் பேருடன் தலைவர் வன்னிக்காட்டில் இருந்து சண்டை தொடங்குவார் என்று சொல்லிகொள்வது யாரை காப்பாற்ற?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கு மறை கழண்டுபோச்சு 
இல்லையேல் கருனாநிதிதியுடன் மீண்டும் போய்ச்சேருவாரா? இவர் கருனாவுடன் சேர்ந்ததன் காரணமாக அவரது நிறம் என்ன என்பது தெரிந்துவிட்டது.

இன அழிப்புச் செய்த காங்கிரசுடன் எதிர்காலத்தில் கூட்டுவைக்கவிருக்கும் கருனாநிதியின் மகனுடன்.

இனாழிப்பு நடக்கும்போது தனது மகளையும் அவருடைய அனபானவரையும் (ராஜா) காப்பாற்ற போலி உண்ணாவிரதமிருந்த கருனாநிதியுடன்.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என சிதன்பரத்துடன் சேர்ந்து பொய்கூறிய கருனாநிதியுடன்.

நோய்வாய்ப்பட்ட முதாட்டியை விமானநிலையத்தில்வைத்தே திருப்பி அனுப்பிய கருனாநிதியுடன்.

பிரபாகரனுடன் படுத்துகிடந்தேன் சாப்பிட்டேன் போர்ப்பயிற்சி பெற்றேன் என புழுகித்தள்ளிக்கொண்டு பொறுக்க்கித்தன அரசியல் செய்வது மிகவும் கேவலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ சோத்துக்குப் பதிலா தட்டில என்னாத்தப் போட்டுச் சாப்பிடுறாரு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.