Jump to content

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!


Recommended Posts

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!

 

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!

சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்களுக்காகவும் சிறந்த சமூக சேவைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வழிகளிலும் சமூகநலனையே நோக்காக கொண்டு சுவிஸ்நாட்டு மக்களோடு நல்லுறவைபோணும் அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்காகவும் உழைக்கும் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/world-affairs/Sri-lankan-swiss-adiswil-election

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குதான் ஒரு முருகன் கோவில் இருக்கு என்று நினைக்கிறன் 
அப்படியே அண்ணையை வெல்ல வைத்தால் .... வெளிசுவரும் கட்டலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இங்குதான் ஒரு முருகன் கோவில் இருக்கு என்று நினைக்கிறன் 
அப்படியே அண்ணையை வெல்ல வைத்தால் .... வெளிசுவரும் கட்டலாம். 

தமிழன் நல்லாய் வாறானெண்டு இவருக்கு பயங்கர எரிச்சல்.....:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • சுவிட்ஸர்லாந்து தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்!!
 
 

சுவிட்ஸர்லாந்து தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்!!

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.

சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

http://newuthayan.com/story/85126.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.