Jump to content

ஆலமரமும் அழியாத ஞாபகமும்


Recommended Posts

ஆலமரமும் அழியாத ஞாபகமும்

- சாந்தி நேசக்கரம் -

__________________________________

வேர்கட்டிய மண்ணின்
ஆழத்தை அழி(ரி)த்தது மழை.

ஊர்கட்டி வளர்த்த 
காலத்தின் க(வி)தை
இறுக்கம் தளர்ந்து
சரியத் தொடங்கியது.

வல்லியர் காலத்து வைரம் 
வசந்தம் காணாமல்
இரவடி(ழி)த்த
மழையின் பெயரால் 
பாறி வீழ்ந்தது.

எம்மூரின் பரம்பரை 
ஆல்விழுதின் கதை 
விடிய முதல் 
ஆயுள் முடிந்தது.

இருந்தவரை நிழல்
நாங்கள் ஊஞ்சலாட விழுது 
ஊர் மடியில் கனத்தோரின்
கதையறிந்து 
கண்ணீர் துடைத்த தோழமை.

சோளகக் காலம்
கால்நடைகள் உணவாக
ஆலிலைகள் தந்த 
உரம் பாய்ந்த மரம்.

எங்கள் பெரிய ஆலமரம்
ஓரிரவில் குடைசாய்ந்து
ஓய்ந்தது உயிர்.

பங்கு பிரித்து கோடரிகள்
பல்லாண்டுப் பலம் 
பக்கமக்கம் எல்லாம் 
பிரிந்து போனது
குளையாக விறகாக.

கூடு கட்டிய பறவைகள் 
இடம்பெயரும் கண்ணீரை
அறியாத மனிதர்களும்
ஒருநாள் இடம் பெயர்ந்தோம்.

பறவைகளின் துயரறியாக் 
கண்ணீர் போல 
உலகறியாத - எங்கள் 
துயர் வலிகள்
இன்னும் புரியாதவர்களாய்.

உலகெலாம் அலைகிறோம். 
வேர்களை அங்கங்கே நாட்டி
வந்த வழி மறந்து 
வாழ்கிறோம்.

பெருமையும் பேரமும் 
பேசியே தொலைகிறோம். 
அருமை என்பதன்
பெருமை அறியாப் 
பேதமைகளோடு.

19. 11. 2016

(என் கிராமத்தில் நான் வாழ்ந்த குறிச்சி பெயர் பத்தகல் சமாதி கோவிலடி.  எங்கள் குறிச்சியில் இருந்த வைரவர் கோவிலடியில் இருந்த பெரிய ஆலமரம் 88ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாறிவிழுந்தது. அந்த ஆலமரத்தின் நினைவில் இக்கவிதை. வல்லிபுரம் (வல்லியர்) எனது பூட்டனார். அந்த ஆலமரம் பற்றி பலகதைகளைச் சொல்லியிருக்கிறார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவுக் கவிதை சகோதரி....!

இதை வாசித்துக் கொண்டு வரும்போது நான் நினைத்தேன், இந்த நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நேரும்போது யந்திரங்களின் துணையுடன் அதை மீண்டும் அந்த இடத்தில் நிறுத்தி விடுவார்கள் என்பதை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கொரு ஆலமரம் அநேகமாய் நிக்கும்....அதிலை கட்டாயம் வைரவர் இல்லாட்டி முனியப்பர் இருப்பார்...
இருந்தாலும் கவிதை  இனத்தின் விடுதலையையும் அழிவையும் கண்முன்னே நிறுத்தி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒவ்வொரு   ஊருக்கும் ஒவ்வொரு பிரபலமான மரம் இருந்திருக்கும் புளியமரம் ஆல மரம் போன்றவை . சிலர்  அடையாளம் சொல்வதற்கும் அந்த மரத்தை குறிப்பிட்டு சொல்வார்கள் இந்த மரங்களின் வீழ்ச்சி  ஒரு வரலாறு கண்டதாயிருக்கும்.  இதன் கீழ் விலங்குகள் வழிப்போக்கர் உட்பட  பலரும் இளைப்பாறுவர்கள்.  இதன் வீழ்ச்சி ஒரு கெடட   சகுனமாக் கருதப்படும்.  ஊரின் நினைவுகளை சொல்லும் உங்கள் பதிவு அருமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

உலகெலாம் அலைகிறோம். 
வேர்களை அங்கங்கே நாட்டி
வந்த வழி மறந்து 
வாழ்கிறோம்.

நாங்கள் தான் அலைகின்றோம்.பிள்ளைகளின் காலத்தில் வந்த வழி என்று இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் வாழும் எம்மக்களின் நிலையைப் படம் பிடித்துக்காட்டும் உருவகக் கவிதையாய் இக் கவிதை என்னைச் சிந்திக்க வைக்கிறது. ஆலமரம் போல் வாழ்ந்த எம் குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமான பின் பங்காடப்பட்டு விட்டோம் அருமையான கவிதை நன்றிகள் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2018 at 5:03 AM, குமாரசாமி said:

ஊருக்கொரு ஆலமரம் அநேகமாய் நிக்கும்....அதிலை கட்டாயம் வைரவர் இல்லாட்டி முனியப்பர் இருப்பார்...

நான் இல்லை :11_blush:

ஆலமரம் தான் சாய்ந்தது கூடு கட்டி கூடி வாழ்ந்த பறவைகள் நிலமைதான் கண்டம் விட்டு கடல் கடந்து கரை தேடி சென்றுவிட்டன அக்காச்சிக்கு நேரம் இருக்குதோ எழுத  வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம்...சிந்திக்க வைத்த ஒரு கவிதை!

எங்கள் ஊரிலும் சந்தியில் ஒரு ஆலமரம் ஒன்று நின்றது!

அந்தச் சந்திக்குப் பெயரே...ஆலடிச் சந்தி என்று வந்து விட்டது!

ஊருக்குப் போன போது....அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சென்ற எனக்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சியது!

பரந்து கிடந்த அதன் கிளைகள் எல்லாம் துண்டாடப் பட்டு.... தலைகளை இழந்து விட்ட இராவணனாய்.....அதன் முள்ளந்தண்டு மட்டும்....குற்றுயிருடன்..நின்று கொண்டிருந்தது!

ஒரு வேளை...இந்தப் பெருமரங்களும்...எங்கள் வாழ்வின் நிலையைப் பிரதி பலிக்கின்றனவோ...என்னவோ?

நன்றி....சாந்தி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,   உங்கள் கவிதை 
எமக்கு அடிநாதமாயும், அரவணைப்பாயும் திகழ்ந்த லட்சியப் போராட்டம்  எப்படியெல்லாம் சிதைந்து , சின்னாபின்னமாகி மௌனமாகிப்போனதோ அதை மட்டுமே நினைவில் நிறுத்திப்  போனது...
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் இரு ஆலமரங்கள் வீதியோரம் இருந்தன. இப்போது இரண்டும் இல்லை. ஆனால் பஸ் தரிப்பிடம் இப்போதும் ஆலடிச் சந்தி என்றுதான் அழைக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.